Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவிடம் விசாரணைக் குழு நுழைவு விசா கோரவில்லை: நவநீதம் பிள்ளை விளக்கம் [Tuesday 2014-08-12 20:00] இலங்கை இனப் படுகொலை குறித்து விசாரிக்க இலங்கைக்கோ, வேறு எந்த நாட்டுக்கோ சென்று விசாரிக்கும் வகையில் விசாரணைக் குழுவினர் நுழைவு விசா கோரி விண்ணப்பிக்கவில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய மின்னஞ்சலில், இலங்கை இனப் படுகொலை குறித்து விசாரிக்க இலங்கைக்கோ, வேறு எந்த நாட்டுக்கோ சென்று விசாரிக்கும் வகையில் விசாரணைக் குழுவினர் நுழைவு விசா கோரி விண்ணப்பிக்கவில்லை. விசாரணைக் குழு இணைப்பாளர் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மீது சில இலங்கை ஊடகங்களில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் தொடு…

  2. இலங்கையில் சுனாமி நிவாரண நிதியில் மோசடி செய்த கனேடிய நிறுவனம்! [Tuesday 2014-08-12 17:00] இலங்கையில் சுனாமி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து பல மில்லியன் டொலர்களை மோசடி செய்த கனடா நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா அரசாங்கத்தை ஏமாற்றி, குறித்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கனேடிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகின் 50 நாடுகளில் கிளைகளைக் கொண்ட அந்நிறுவனம் இலங்கைக்கு சுனாமி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் ஒப்பந்தத்திலேயே மோசடி செய்துள்ளது. இந்த நிதி மோசடி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பொறுப்பாளர் டக்மெத் ஆதர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114778&cat…

  3. இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலை 9 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக இந்திய துணைத் தூரகத்தின் இணைப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=469923320212434162

  4. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கியமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவித்தமை தொடர்பாக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://virakesari.lk/articles/2014/08/12/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%…

  5. யாழ்.மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 637 மெற்றிக் தொன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்திலுள்ள 21 ஆயிரத்து 268 மீனவர்களினாலேயே மேற்படி எடையுள்ள மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 திட்டங்களின் கீழ் 407 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் மீனவர்களின் மீன்பிடித்தல் முறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்படும் மீன்கள், உள்ளூர் நுகர்வினைத் தவிர்ந்த ஏனையவை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுபவற்றில் நண்டு, இறால், கணவாய் என்ப…

  6. மஹிந்தவுக்கு மட்டுமன்றி, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் நெருக்கமானவன்! - என்கிறார் இந்திய மனித உரிமை ஆர்வலர் கௌஷல் [Tuesday 2014-08-12 10:00] காணாமல்போனோர் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரசு ஆணைக்குழு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புவதாக, இந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வல்லுநர்களில் ஒருவரான, இந்திய மனித உரிமை ஆர்வலர், அவ்தாஷ் கௌஷல் கூறியிருக்கிறார். இந்த நியமனம் குறித்து தன்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் 15 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், பின்னர் இந்திய அரசின் உளவுத்துறையும் தன்னிடம் தொடர்பு கொண்டு இந்த செய்தியை அறிவித்ததாகவும், இந்த நியமனத்துக்கு த…

  7. இலங்கையிடம் இருந்து போர் இரகசியங்களைப் பெறும் 20 நாடுகள்! [Tuesday 2014-08-12 11:00] இலங்கையிடமிருந்து போர் இரகசியங்களை 20 நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொடிய பயங்கரவாதிகளை இலங்கை படையினர் தோற்கடித்துள்ளனர். போர் தந்திரோபயங்கள் மற்றும் போர் இரகசியங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்கு விஜயம் செய்த வண்ணம் இருக்கின்றார்கள். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பாடங்களை கற்றுக்கொள்ள பல நாடுகள் விரும்புகின்றன. சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு புறம்பாகாத வகையில் போர்த் தந்திரோபாயங்களை படையினர் பயன்படுத்தியிருந்தனர். …

  8. துர்கிஸ்தானில் படையினரிடம் சிக்கியுள்ள 39 மட்டக்களப்பு இளைஞர்கள்! மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை. [Tuesday 2014-08-12 11:00] வேலைவாய்ப்புக்காகச் சென்ற போது துர்கிஸ்தானில் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்த சுமார் 39 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று நேரடியாக கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பல்வேறு தொழில் வாய்ப்பினைப்பெற்று துர்கிஸ்தானில் தொழில் புரிந்துவந்த நிலையில் அண்மையில் இராணுவத்தினரால் அங்கு தொழில் புரிந்து …

  9. இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டார் என மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்டதாலேயே காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பல்கலைக்கழகத்திலேயே தங்கியுள்ளனர் எனவும் பல தமிழ்மாணவர்களை விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது …

  10. தேச துரோக செயல்­களில் ஈடு­படும் கூட்­ட­­மைப்­புக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை உடன் எடுக்க வேண்டும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறி தேசத்­து­ரோக செயல்­களில் ஈடு­படும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்தும் அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய விடு­த­லைப்­பு­லிகள் செய்த கொலைகள் தொடர்­பான சாட்­சி­யங்­களை கூட்­ட­மைப்­பினர் முதலில் தயார்­ப­டுத்த வேண்டும் என்றும் தெரி­வித்­தது. ஐ.நா. மனித உரிமைஆணைக்­கு­ழுவின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­புவோர் தம்மை நாடினால் அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து கொடுக்க தயா­ராக இருப்­ப­தா­கவும் ச…

    • 2 replies
    • 331 views
  11. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடந்துமுடிந்த 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவின்போது விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கிடையிலான கருத்தரங்கொன்று நடந்தது. முப்பது ஆண்டு கால போருக்குப் பின்னர் இலங்கை விளையாட்டுத்துறை ஊடாக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைவதாக இலங்கை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த கருத்தரங்கில் விளக்கமளித்திருந்தார். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்து விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருவதாக 71 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலக விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மத்தியில் இலங்கை அமைச்சர் பெருமைப்பட்டுக் கொண்டார். ´முன்னாள் போர் வலயங்களைச் சேர்ந்த இளைஞர்களை உள்வாங்க…

    • 0 replies
    • 557 views
  12. மட்டக்களப்பு கெவிலியா மடுவில் சிங்களக் குடியேற்றம் : புதிதாக புத்தவிகாரையும் முளைத்தது! ஆக 12, 2014 மட்டக்களப்பில் தமிழ் மக்களின் பூர்விக கிராமமான கெவிலியாமடுவில் 300 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள 22 தமிழ்க் குடும்பங்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் மீண்டும் மீண்டும் சிங்களவர்கள் வந்து குடியேறிக் கொண்டேயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் குடிநீர் எடுப்பதற்குக்கூட கிணறு இல்லை. அந்த ஊருக்குள் செல்வதற்கு ஒழுங்கான தெரு இல்லை. ஆனால் சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்காக மக்களே இல்லாத நடுக்காட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு பௌத்த விகாரைக்காகவும் நவீன மயப்படுத்தப்பட்ட வீதி இப்போதுத…

  13. தமிழ் மாணவர்களின் மண்டையில் தொழில் பழகும் சிறிலங்காப் படையினர்! ஆக 12, 2014 மட்டக்களப்பு பெரியவெட்டுவான் பகுதியிலுள்ள பாடாசலைக்குச் சென்ற சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து முடிவெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த சிறார்கள் அழுது கொண்டே பாடசாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் கற்றல் செயல்பாடும் பாதிக்கப்பட்டது சிறிலங்காப் படைகளின் 23 வது டிவிசனின் 2 பிரிகேட் படையினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த படைப்பிரிவினர் முடிவெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.http://www.sankathi24.com/news/45247/64//d,fullart.aspx

  14. மன்னார் ஆயரை கைதுசெய்யுமா சிங்கள அரசு?! மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கும் ராயப்பு ஜோசப்பை கைது செய்வதற்கு அரசாங்கம் ஏன் பின்னிற்கின்றது என்றும் தேரர் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைகள் குழு மீது நம்பிக்கை இல்லையென்றும் எனவே அக் குழுவிற்கு சாட்சியமளிக்க தயாரில்லை என்றும் எனவே அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய போதே …

    • 0 replies
    • 319 views
  15. காணாமல் போனோரில் அதிகமானோர் வெளிநாடுகளிலாம் – மன்னாரில் கதை சொன்னார் மஹிந்தவின் பிரதிநிதி! காணாமல் போனோரில் அதி­க­மானோர் வெளி­நா­டு­களில் அக­தி­க­ளாக தஞ்சம் புகுந்­துள்­ளனர். வெளி­நாட்டு அமைச்­சுக்கு இது தொடர்பில் அறி­விக்­கப்­பட்­டுள்ளது. அவர்களின் பெயர் விப­ரங்­களை தரும் பட்­சத்தில் வெளி­நா­டு­களில் சட்­ட­மு­றைப்படி விப­ரங்­களை பெற முயற்சிக்­கலாம் என்று காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரி­க்கும் ஆணைக்­கு­ழு என்ற பெயரில் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின்தலைவர் மெக்ஷ்வல் பர­ண­கம மன்னாரில் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும் வெளி­நா­டு­க­ளுக்கு இந்த விவ­காரம் தொடர்பில் அவர்­க­ளுக்­கென ஒரு சட்டம் உள்­ளது. அவர்­களின் சட்­டங்­க­ளுக்­க­மைய அங்கு அக­தி…

    • 0 replies
    • 409 views
  16. -எஸ்.றொசேரியன் லெம்பேட் எனது மூத்த மகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இரண்டாவது மகனை பிடித்து சித்திரவதை செய்தனர் என தாய் ஒருவர், காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று திங்கட்கிழமை (11) சாட்சியமளித்தார். மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன இந்த சாட்சியமளிப்பின் போது அந்த தாய் தொடர்ந்து கூறுகையில், இரணை இலுப்பைக்குளம் மாங்கண்டி கிராமத்தில் உள்ள எனது வீட்டில் வைத்து கடந்த 04.04.2008 அன்று இரவு, எனது 14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றனர். நாங்கள் உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் சென்று கேட்டோம். ஆனால் அவர்கள் தாம் பிடிக்கவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் 3 நாட்களுக்கு பின்னர் 20 …

  17. ரணிலைப் பொது வேட்பாளராக ஏற்க முடியாது! - சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவிப்பு. [Monday 2014-08-11 10:00] அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதை ஏற்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. ரணில், பொதுவேட்பாளராக போட்டியிட்டால் ஆதவரளிக்க முடியாது என இரண்டு சந்திப்புக்களின் போதும் சம்பந்தன் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற சந்திப்புக்களி…

  18. சிறிலங்காவுக்குச் செல்லாமலேயே, அங்கு நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த மின்னஞ்சல் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “சிறிலங்காவுக்கு வெளியே ஏராளமான தகவல்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே விசாரணைகளை நடத்த முடியும். அறிக்கையின் நம்பகத்தன்மை விசாரணைக் குழு நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதில் தங்கியிருக்கவில்லை. சரியான தரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஆதாரங்களை உறுதிப்படுத்துவதிலேயே அது தங்கியுள்ளத…

  19. வடமாகணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கம்! அரசாங்கத்தின் அரசியல் வியூகம்! வடமாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டமையின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒன்றை அரசாங்கம் அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பாதுகாப்பை அரசாங்கம் அண்மையில் நீக்கி இருந்தது. இதன்பின்னணியில் கோட்டாபயராஜபக்ஷவே செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வடமாகாண சபை உறுப்பினர்களை பின்தொடர்வதற்கானப் புலனாய்வு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் அனைத்தும் வடமாகாண சபை உறுப்பினர்களை அச்சுறுத்துவதன் மூலமும், அவர்களின் பலவீனங்களை கண்டறித்து அதனை தமக்கு சாதகமாக பயன்படுத…

  20. மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்தை மேசையில் காத்­தி­ருந்தும் அர­சாங்கம் சமு­க­ம­ளிக்­க­வில்­லை : சம்­பந்­தன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை முறி­வ­டை­வ­தற்கு அர­சாங்­கமே பொறுப்பு. மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்­தைக்­காக சென்று நாம் காத்­தி­ருந்த போதும் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை மேசையை தவிர்த்­தி­ருந்­தது என பி.பி­.சி­.யிடம் தெரி­வித்­துள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், அர­சாங்கம் தெளிவுத் தன்­மை­யு­டனும் இத­ய­சுத்­தி­யு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கு முன்­வந்தால் நாம் அதற்கு தயா­ராகவே இருக்­கின்றோம் என்றும் ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் எந்த வித­மான குந்­த­கமும் ஏற்­ப­டா­து ந…

    • 2 replies
    • 562 views
  21. சுப்பிரமணியன் சுவாமி.... பார்ப்பனியத்தின் ஒரு வக்கிர முகம்! [Tuesday 2014-07-22 11:00] பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி என்று பெரியார் சொன்னார். அதற்கான அர்த்தத்தை நாம் எங்கள் நாட்களில் வெகுவாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழர்கள் மத்தியிலேயே, தீர்க்க முடியாத பெரு வியாதியாக... அகற்ற முடியாத பெரு வினையாக... தவிர்க்க முடியாத பெரும் வலியாக பார்ப்பனீயம் கறையான் புற்றாகப் புரையெடுத்து நிலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பேரவலங்களுக்கும், பேரிழப்பிற்கும் பார்ப்பனிய சதி வலையும் ஒரு முக்கிய காரணமாகவே தொடர்கின்றது. ஒரு மதம் என்ற வகையில் இந்து மதம் தமது மக்களான தமிழர்களைக் காப்பாற்றவும்,…

  22. சிறிலங்கா வெளிவிவகா அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போது, மியான்மரின் நே பி டோ நகரில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட, சீன வெளிவிவகார அமைச்சர், சீன - சிறிலங்கா உறவு, ஒலியின் வேகத்துடன் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருதரப்பும், உயர்மட்டத் தொடர்புகளைப் பேணி வரவேண்டும் என்றும், பொருளாதார, வர்த்தக, உட்டகட்டமைப்பு கட்டுமான, ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், சோதனையான காலகட்டங்களையும் தாண்டி…

  23. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களால் உள்வாங்கப்படுகின்றார்களா, ஈழத் தமிழர்கள்? [Tuesday 2014-07-15 12:00] மாமனிதர் சிவராம் அவர்கள் ஒருமுறை கூறியிருந்தார் 'விடுதலைப் புலிகளை இந்தியா அழிக்க முயலுமானால், அது குளவிக் கூட்டிற்குக் கல் எறிந்த கதையாகிவிடும். போர் நிபுணத்துவமும், ஆயுதங்ளைக் கையாளும் ஆற்றலும் உள்ள அவர்களால் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்' என்று. இந்த யதார்த்தம் இந்திய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் எண்ணத்திற்கு முன்னால் எடுபடாமலேயே போய்விட்டது. இந்தியாவே, ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அத்தனை பேரழிவுகளுக்கும் மூல காரணம் என்பதை அத்தனை தமிழர்களும் தெரிந்தே வைத்திருந்தாலும், தமிழகத்தின் உறவினைத் தாண்டி அவர்களால் இந்தியாவுக்கு எதிராக எதனையும் ச…

    • 0 replies
    • 564 views
  24. வடக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசு சந்தேகம் கொண்டுள்ளதாக அரச அமைச்சர் ஹெகலிய அண்மையில் கருத்து தெரிவித்திருக்க அந்த ஊடகவியலாளர்களிற்கு கற்பிப்பிப்பதற்கு நேரடியாகவே களமிறங்கியுள்ளார் மற்றொரு அமைச்சரான அஸ்வர். அத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவர் மஹிந்த என்று பான்கீமூன் தம்மிடம் கூறினாரெனவும் ஊடகவியலாளர்களிடம் அஸ்வர் தெரிவித்திருக்கிறார். யாழ்.மாவட்ட செயலகத்தினல் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி நெறி எனும் பெயரில் இன்று (11.08.14) பட்டறையொன்று நடத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறுவதே இப்பயிற்சி பட்டறையின் நோக்கமாகும். தமிழ் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி பட்டறைகளை தடுத்து வரும் அரசு மறுபுறத்தே இத்தகைய மூளை சலவை கருத்தரங்குகளை அண்மைக்காலமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.