ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமையில் தேசிய மட்டப்போட்டிக்கு செல்லும் மல்யுத்த வீரர்கள் நேற்று நுவரெலியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். மாகாண மட்ட மல்யுத்த போட்டிகளில் வெற்றியீட்டி அகில இலங்கை மட்ட போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் முல்லைத்தீவை சேர்ந்த அவ் 5 மாணவர்களுக்கும் சில கருத்துக்களை வழங்கியும் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வழியனுப்பி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன். இது தொடர்பில் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுகையில், மிகவும் குறைந்தளவு மக்களை கொண்ட எமது மாவட்டத்தில் விளையாட்டுக்களில் அர்ப்பணிப்புடனும் செயல்திறனுடனும் பங்குகொள்ளும் இளைய சமூகத்தை எண்ணும் போது பெருமையாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் இது முன்னேறிச்செல்லவேண்டும். உங்க…
-
- 3 replies
- 706 views
-
-
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பா? காவல்துறைக்கு சந்தேகமாம்:- 14 ஜூன் 2014 இலங்கையின் போதைப்பொருள் சாம்ராஜயத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருப்போர் ஆளும் தரப்பு முக்கியஸ்த்தர்களே! ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பு காணப்படுகின்றதா என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் 85 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர். வர்த்தகர்களைப் போன்று தோன்றி குறித்த நபர்கள் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான வருமான வழிகளில் ஒன்றாக ஹெரோயின் போதைப் பொருள் க…
-
- 4 replies
- 492 views
-
-
மண்முணை தென் மேற்கு பிரதேச செயலகமும், கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் பாரம்பரிய கொம்புமுறி விளையாட்டின் 1ஆம் கொம்புமுறி விளையாட்டானது இன்று சனிக்கிழமை(14) முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக் கழக மைதாணத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. 17 வருடங்களின் பின் இவ் வருடம் இப் பிரதேசத்தில் நடைபெறும் இவ் விளையாட்டின் இரண்டாவது நிகழ்வு முதலைக்குடா ஸ்ரீ பாளையடி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கொம்புவரிதல் நிகழ்வு இடம்பெற்று கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பூசைகளும் ஆரம்ப நிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்று கொம்புமுறி நிகழ்வு இராமகிருஸ்ண விளையாட்டுக் கழக மைதாணத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. மி…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜனவரியில் தேர்தல் நடத்தவே முடியாது; அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு news 18 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்த முடியாது என்று ஜே.வி.பி. கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்பின் அடிப்படையில் இரண்டாம் தவணைக் காலத்தில் மட்டுமே, பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளின் பின்னர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும். எனினும், 18 ஆம் திருத்தச் சட்டத்தில் மூன்றாம் தவணைக்காக எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. 18 ஆம் திருத்தச் …
-
- 1 reply
- 300 views
-
-
யுத்தக்குற்றச் செயல் விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – புலம்பெயர் தமிழர்கள்:- 15 ஜூன் 2014 யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட உள்ள யுத்தக்குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான புகைப்பட, வீடியோ, எழுத்து மூல ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் விசாரணைகளின் போது ஒப்படைத்துள்ளதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசார…
-
- 0 replies
- 605 views
-
-
வவுனியாவில் ஈ.பி,ஆர்.எல்.எப். மூடிய அறைக்குள் மத்தியகுழு கூட்டம் ஊடகவியலாளாகள் செல்ல தடை:- 15 ஜூன் 2014 ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியா புலேஸ் கோட்டலில் மூடிய அறையில் இடம்பெற்று வருகின்றது. காலை கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றும் இக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினாகள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட கட்சியின் மத்தியகுழுஉறுப்பினர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக அறிய முடியாகின்றது. இதன்போது தற்கால அரசியல் நிலைமைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்…
-
- 0 replies
- 636 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போருக்கு எச்சரிக்கை:- 15 ஜூன் 2014 அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போர் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்கும் தரப்பினர் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஓர் பாரதூரமான நிலைமை எனவும் சாட்சியமளிப்போர் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேச…
-
- 1 reply
- 638 views
-
-
பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியமையை அடுத்து இலங்கையில் அகதிகளாகப் பதிந்துவிட்டு இங்கு தரித்திருக்கும் சுமார் ஆயிரத்து 475 பாகிஸ்தானியர்களைச் சுற்றி வளைத்து மடக்கும் நடவடிக்கை ஒன்றை இலங்கை குற்றவியல் புலனாய்வுப் பொலிஸாரின் (சி.ஐ.டியினரின்) உதவியுடன் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழனன்று சத்தம் சந்தடியின்றி ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையின் கீழ் குறிப்பிடப்படாத எண்ணிக்கை பாகிஸ்தானியர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் பதிந்துவிட்டு இங்கு தங்கியிருக்கும் 1,475 பாகிஸ்தானியர்களை வளைத்துக…
-
- 0 replies
- 546 views
-
-
இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.eelanatham.net/articles/2014/06/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0…
-
- 4 replies
- 640 views
-
-
இலங்கையில் தலிபான்கள் இன்டர்போல் எச்சரிக்கை:- 14 ஜூன் 2014 இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக சர்வதேச காவல்துறையான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் களமாக பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைகுள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இவர்கள் சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. …
-
- 2 replies
- 644 views
-
-
அமெரிக்காவின் அயனமண்டல பிரதேசத்தில் உருவாக்கம் பெற்ற பப்பாசி செய்கை இன்று பல்ேவறு நாடுகளிலும் பயிரிடப்பட்டு வரும் நிலையில் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் தற்போது பப்பாசி செய்கை சிறப்பு பெற்று விளங்குவதுடன் மீள்குடியேறிய பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாகவும் காணப்படுகின்றது என வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு தெரிவித்தார். வவுனியா மாவட்டதின் பப்பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து ெதரி விக்கையில், வவுனியா மாவட்டத்தில் மீள்கு டியேறிய பகுதிகளை இலக்காக கொண்டு நாம் பப்பாசி செய்கை …
-
- 2 replies
- 771 views
-
-
கீரிமலை, கருகம்பனை, கவுணாவத்தை ஆலயத்தில் இம்முறை நடைபெறவிருந்த மிருகபலிக்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடா வெட்டுவதாக இருந்தால் பிரிவு 4 இன் கீழ் பிரதேச சபையிடம் முன் அனுமதி பெற்று வர்த்தமானி மூலம் பொது அறிவித்தல் விடுத்…
-
- 39 replies
- 3.3k views
-
-
மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்தும் பிரசாந்த் குமார் மனிதர்களுக்கும் மரங்களுக்கும் உள்ள பிணைப்பை உணர்த்துவதற்காக 2 மாத தீவிர பிரச்சாரத்தில் இறங்குகிறது மதுரையில் உள்ள ’யூத் லீடு இந்தியா’ என்ற இளைஞர் அமைப்பு. மதுரையைச் சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரி பிரசாந்த் குமார். இளைஞர்கள் மூலம் சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவர் உருவாக்கிய அமைப்புதான் ’யூத் லீடு இந்தியா’. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பிரசாந்த் குமாருடன் முகநூலில் இணைந்திருக்கிறார்கள். இவர்களை வைத்து சாதித்ததும் சாதிக்கப்போவதும் என்ன? அதுகுறித்து பிரசாந்த் குமாரே விளக்குகிறார். ’’நீர் நிலைகளை சுத்தப்படுத்த…
-
- 4 replies
- 565 views
-
-
ஐ.நா.விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது காலம் கடந்த விடயமாகும். பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று நீங்கள் யுத்தத்தை நடத்தவில்லை. இதேபோல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 3 தடவைகள் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் ஆலோசனை நடத்தவில்லை. இந்தநிலையில் தற்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பயனற்ற விடயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு எதிரான விசாரணையினை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரி பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்…
-
- 4 replies
- 832 views
-
-
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறைகளை ஸ்திரப்படுத்தவேண்டும்!- பான் கீ மூன் தெரிவிப்பு news இலங்கையில் இறுதி சமாதானத்துக்காக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதித்தல் உட்பட்ட உள்நாட்டு பொறிமுறைகளை ஸ்திரப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்று நியூயோர்க்கில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டார். இதேவேளை இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பான் கீ மூன் ஆதரிப்பதாகவும் பர்ஹான் ஹக் தெரிவித்தார். இலங்கையின் போருக்கு பின்னரான நடைமுறைகள் கஷ்டமானவை. எனவே சர்வத…
-
- 1 reply
- 601 views
-
-
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் வடக்கில் அதிக இராணுவப் பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வடக்கில் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘இந்து’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாணத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கில் ஜனநாயக நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். எனினும் அதற்குப் பதிலாக …
-
- 1 reply
- 761 views
-
-
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
புலி ஆதரவாளர்கள் ஐவருக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்! - நெதர்லாந்து நீதிமன்றில் அரச சட்டத்தரணிகள் வாதம். [saturday, 2014-06-14 08:48:58] நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16 வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. நெதர்லாந்து ஹேக் நகரிலுள்ள உள்ளுர் நீதிமன்றம் ஒன்றில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கும் 10 முதல் 16 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அரசதரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். இவர்கள் 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட குற்றங்களுக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். குறித்த ஐந்து பேரும் விடுதலைப் புல…
-
- 1 reply
- 472 views
-
-
சர்வதேச விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தயார்: பொன்சேகா வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 13:06 யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தாம் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி இணையதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறியுள்ள அவர், 'இலங்கை மீதான விசாரணை தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. இலங்கைக்கு விஜயம் செய்தவுடன் முதலில் அக்குழு என்னிடமே விசாரணையை மேற்கொள…
-
- 5 replies
- 987 views
-
-
கெட்டகாலம் கழிந்த பின்னர் 29ம் திகதி நாடு திரும்புகிறார் சந்திரிகா! - தீவிர அரசியலில் குதிப்பாராம். [saturday, 2014-06-14 08:36:07] சோதிடரீதியாகத் தமக்குக் காலம் கூடாது எனக் கருதி அதனைத் தவிர்ப்பதற்காகக் கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்புகிறார். அதற்குப் பின்னர் தமது அரசியல் வாழ்வு மிகப்பிரகாசமானதாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்ற சோதிடக் கணிப்பில் நம்பிக்கை கொண்டுள்ள அவர், நாடு திரும்பியதும் மீண்டும் தீவிர அரசியலில் குதிப்பார் என்று கொழும்புச் செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது …
-
- 0 replies
- 451 views
-
-
அனுமதி கோரி கடிதம் அனுப்பினார் நவிப்பிள்ளை! சபையில் சமர்ப்பிக்கிறது அரசு!? சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான ஐ.நா விசாரணைக் குழுவை, அனுமதிக்கக் கோரி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரும் தீர்மான வரைவு ஒன்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்த…
-
- 1 reply
- 815 views
-
-
யாழ். அரியாலை பகுதியில் கடந்த இரு வாரங்களிற்கு முன்பு 74 வயது தாயை கொலை செய்து தங்க தோடுகள் இரண்டு களவாடப்பட்ட சம்பவம், யாழ் மற்றும் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்:- இந்த சம்பவங்கள் தொடர்பில் மக்களிற்கு பெரியளவில் சந்தேகங்கள் இருந்தன பொலிஸ், இராணுவத்தினர் இருக்கின்றார்கள் யார் இதை செய்கின்றார்கள் இது எங்களிற்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த நிலையில் அரியாலை பகுதியில் கொலை இடம்பெற்ற வீட்டில் தேடுதல் மேற்கொண்ட போது ஒரு கைவிரல் அடையாளம் மாத்திரம் எமக்கு கிடைத்தது. அதனை கொழும்பிற்கு அனுப்பி அதன் மூலம் ஒரு சந்தேகநபருடைய விபரம…
-
- 1 reply
- 937 views
-
-
ரஷ்யாவில் இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை! மற்றொரு அதிகாரி படுகாயம்! ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகச் நடந்த சம்பவத்தில், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார். ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொஸ்ரொவ் நகரில், ரஸ்யாவில் சிறிலங்காவின் நாட்கள் என்ற நிகழ்ச்சிக்காக ரொஸ்ரொவ் நகருக்கு வந்த சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா துதரகத்தில் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனும…
-
- 4 replies
- 962 views
-
-
இந்து ஆலயங்களில் நடைபெறும் மிருகபலியை நிறுத்துமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ். மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இடம் பெறும் மிருகபலியை நிறுத்தக்கோரி 12 மணித்தியாலம் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று அறவழிப்போராட்ட குழுவினரால் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டமானது இன்று காலை 6மணிக்கு தெல்லிப்பழை துர்கையம்மன் ஆலயத்துக்கு முன்னால் ஆரம்பமாகியது. இதில் அறவழிப் போராட்டக் குழுவின் அமைப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம், யாழ்ப்பாணம் சின்மய மிஷன் சிவனேந்திரா சைத்தனிய சுவாமி, அறவழி போராட்டக்குழுத் தலைவர் ஸ்ரீ.சக்திவேல், செயலாளர் எஸ்.தங்கராசா, சிவ மானிட மேம்பாட்டு நிறுவனத் தலைவரும் சைவ மகா சபைத்தலைவருமான க.கலயுகவரதன் உட்படப் பலர் க…
-
- 1 reply
- 568 views
-
-
கே.பி- கருணாவை விசாரிப்பதன் மூலம் அரசாங்கம் பொறுப்பு கூறலை தொடங்கலாம் – றணில் தலைமையிலான ஐதேகவின் பலே ஐடியா! இலங்கை அரசாங்கம்- கே.பி என்றளைக்கப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் மற்றும் கருணா எனப்படும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக் கூறலை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை கூறியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்டவர்களர்கள் எனவும் ஐக்கியதேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 5 replies
- 920 views
-