ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மெய்யா எனக்கு இந்த டவுட் இருக்குது. வடக்கிலயும் கிழக்கிலயும் கடந்த இரண்டு நாட்களில நடந்த சில சம்பவங்களை வைச்சுப் பாக்கேக்குள்ள வடக்கு கிழக்கில ஆர்தான் முதலமைச்சர் எண்டு கேக்க வேணும் போல கிடக்குது. அதுமட்டுமே மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் எண்டு நடக்குதுதானே. அங்க போய் பாத்தன். அதென்னவோ பாராளுமன்றம் மாதிரி எல்லோ இருக்குது. எப்பிடி எண்டு கேக்கிறியளே? அங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான் முதலமைச்சர். அங்க நடக்கிற சண்டைள தடுத்து நிறுத்தி வாயை முடப் பண்ணிக் கொண்டு இருக்கிறார் அவர். சில நேரங்களில மனுசன் பாராளுமன்றத்தில சபாநாயகர் போல நிக்குது. சில நேரத்தில பள்ளிக்கூட பிரின்சுப்பல் போல நிக்குது. எப்பிடியோ அரசாங்கத்திற்காக என்ன என்ன விஸ்வரூபங்களையும் அவர் எடுப்பார். நேற…
-
- 0 replies
- 478 views
-
-
யாழ்.துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். tamilmirror
-
- 4 replies
- 540 views
-
-
தனக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளிலும் சொகுசு வீடுகள் உள்ளன என பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா குறிப்பிடுகிறார். நேற்று முன்தினம் அவர் அமெரிக்காவுக்குச் சென்றவேளை, 100 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அந்நாட்டு வீடொன்று வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட செய்தியின் நம்பகத் தன்மை தொடர்பில் வினவியபோதே அவர் அவ்வாறு பதிலளித்துள்ளார். ஐந்து நாடுகளில் வீடுகள் வாங்கக் கூடிய அளவு பணம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? என சிங்கள ஊடகமொன்று அவரிடம் வினா தொடுத்தபோது, அந்நாட்டில் வாழ்கின்ற தனது உறவினர்களும், நண்பர்களும் எனது பாதுகாப்பில் அக்கறை காட்டியே அதனை வாங்கித் தந்தனர் எனக் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 678 views
-
-
16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததார்களெனக் கூறப்படும் சம்பவம் ஒன்று கட்டானை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றது. இது தொடர்பில் சந்தேகத்தில் கைதான ஆண், பெண் கிராம சேவகர்களை நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரட்ண பண்டார பிணையில் விடுதலை செய்ய உத்தர விட்டார். சந்தேக நபர்கள் இருவரும் தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 30 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டதுடன் வழக்கின் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தால் பிணை இரத்தச் செய்யப்படும் எனவும் நீதிபதியால் எச்சரிக்கப்பட்டனர். சந்தேக நபரான ஆண் கிராம சேவகர் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிப்பதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்…
-
- 0 replies
- 782 views
-
-
இரணைமடு குடிநீர்த் திட்டம்: நிபந்தனையுடன் ஆதரவு தெரிவிக்கிறது கூட்டமைப்பு! [Wednesday, 2014-05-28 09:42:57] கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, திருத்தங்கள் செய்யப்படுமானால் யாழ்ப்பாணத்துக்கான இரணைமடு குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் ஒப்புக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் வளங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் 2 ஆம் அமர்வு நேற்றுயாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் …
-
- 2 replies
- 676 views
-
-
விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில், ஐ.நா. அகதிகள் அந்தஸ்து பெற்றிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டபோது, மலேசிய பொலிஸார் அவர்களை சட்டரீதியாக கையாளவில்லை என மலேசியாவின் சுவராம் என்ற மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த மூன்று இலங்கையர்களும் மிகவும் இரகசியமாகவும், அவசரமாகவும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக கோலாலம்பூரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய அந்த அமைப்பின் பேச்சாளர் ஆர். தேவராஜன் கூறும்போது, மலேசியாவிற்கு அதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களை கைதுசெய்து, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட செயல் கண்டித்தக்கது எனத் தெரிவித்துள்ளார். ''மலேசிய…
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கை தொடர் கண்காணிப்புக்குள் – நவிப்பிள்ளை அலுவலகம் அறிவிப்பு! இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை. கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐ.நா.சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தலைமையில் இயங்கும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலய செயலகம்,…
-
- 1 reply
- 770 views
-
-
இலங்கை, சீனாவிடமிருந்து கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளது 28 மே 2014 இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளது. வழமை போன்று சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு இந்தக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. இரண்டு சரக்குக் கப்பல்களை இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய உள்ளது. கடற்படைத் தளபதியும், கப்பற் கூட்டத்தாபனத்தின் தலைவருமான வைஸ் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே மற்றும் மக்கள் வங்கியின் பொதுமுகாமையாளர் வசந்தகுமார் ஆகியோர் கப்பல் கொள்னவு குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். நேற்றைய தினம் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 2015 ஒக்ரோபர் மாதத்தில் ஒரு கப்பலும் 2016ம் ஆண்டு ஜனவரி மற்றைய கப்பலும் கொள்வனவு செய்யப்பட உள்ளது. பாரியளவில் …
-
- 1 reply
- 334 views
-
-
சாவகச்சேரிப் பகுதியில் தொலைக்காட்சி நாடகம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி தலையில் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். தனது குழந்தைக்கு உணவு கொடுக்காது தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட கருத்து மோதல் பின்னர் மனைவி மீது தாக்குதலின் பின் முடிந்துள்ளது. இதே வேளை தனது அக்கா தலையில் காயமடைந்ததால் கோபம் கொண்ட தம்பி சாவகச்சேரிப் பொலிசாரிடம் முறையிடச் சென்றதாகவும் பின்னர் அவனை மனைவியின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவருகின்றது. நேற்று இரவு சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ் செயலகத்தில் குறித்த கணவர் வேலை செய்வதாகவும் மனைவியும் அரசாங்க உத்தியோகத்தர்…
-
- 12 replies
- 1.1k views
-
-
வட மாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையின் வீடு, இன்று புதன்கிழமை (28) இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரங்களாக சோதனையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி, திருநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டினை இராணுவத்தினர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை 4 மணியிலிருந்து காலை 8.45 மணிவரையிலும் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். மேலும், தனது வீட்டிலிருந்தவர்களின் விபரங்களை பதிவு செய்த பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தினைவிட்டு அகன்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சுற்றிவளைப்பின் போது, 20இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தனது வீட்டின் வளாகத்தினைச் சூழ நின்றிருந்ததாக அவர் தெரிவித்தார். இருந்தும், தான் கிளி…
-
- 0 replies
- 333 views
-
-
-ற.றஜீவன் யாழ்.வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (28) நில அளவையாளர் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். ஜே - 400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அறிந்ததினையடுத்து, தானும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வி.சிவயோகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று காணி அளவிடுவதினைத் தடுத்து நிறுத்த முயன்றோம். எனினும் இராணுவத்தினர் எங்களை உள்ளே …
-
- 0 replies
- 423 views
-
-
இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை (28) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - சுப்பிரமணியம் பாஸ்கரன்) tamilmirror
-
- 0 replies
- 251 views
-
-
யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகளிற்கு பிரதேச செயலர்கள் தரகர்களாக இருக்கத் தேவையில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் கூற அதனை மௌனமாக ஏற்றுக்கொண்டார் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்;.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கணைப்புக் குழுக்கூட்டத்தின் இரண்டாவது நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே சுரேஸ் பிறேமச்சந்திரன் யாழ்.மாவட்ட அரச அதிபர் முன்னிலையில் பிரதேச செயலர்களிற்கு இவ் ஆலோசனையினை வழங்கியிருந்தார். முன்னதாக வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகளிற்கான முகவர்களாக அரச அதிபரும் பிரதேச செயலர்களும் ஈடுபடுகின்றனரா என வடக்கு விவசாய அமைச்சர் …
-
- 1 reply
- 554 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். குறித்த சிறுமியின் தாயும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://virakesari.lk/articles/2014/05/28/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0…
-
- 0 replies
- 336 views
-
-
காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அநாகரிகமானவையாகவும் சட்டத்துக்கு முரணானவையாகவும் இருக்கின்றன. ஐம்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரையில் இலஞ்சம் பெறப்படுகின்ற அதேவேளை அப்பாவிப் பெண்களில் பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகளிலும் அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்க தெரிவித்தார். பதுளை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று பதுளை அரச செயலகத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளது சட்டவிரோத செயற்பாடுகள் தொட…
-
- 0 replies
- 414 views
-
-
இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் – திக்குமுக்காடினார் யாழ்.அரச அதிபர்! இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் பங்கெடுப்பது தொடர்பில் யாழ்.அரச அதிபர் ஒப்புதல் வழங்கிய சம்பவம் ஒன்று நேற்று யாழ்.ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முன்னதாக வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகளிற்கான முகவர்களாக அரச அதிபரும் பிரதேச செயலர்களும் ஈடுபடுகின்றனரா என வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார். இக்கேள்வியால் நெருக்கடியை எதிர்கொண்ட அரச அதிபர் யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போர்; தொண்டர் சேவை அடிப்படையில் இராணுவத்தில் இணைத்துக் கொ…
-
- 0 replies
- 584 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் பெண்களின் அரசியல் பிரவேசம் மற்றும் ஜனநாயகம், பெண்கள் வேட்பாளர்களாக தேர்தலில் பங்கு கொள்ளுதல் பற்றிய திறந்த கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பு மற்றம் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது, 'என்னைப் பெண்ணென்று நினையாதே' (ஒரு தேர்தல் கதை) எனும் திரைப்படமொன்று திரையிடப்பட்டது. இதன்பின்பே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இத்திரைப்படம் 2011ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிண்ணியா பிரதேசத்தில் முதல் தடவையாக போட்டியிட்ட ஐனுல் வீவி எனும் பெண் வேட்பாளரின் தேர்த…
-
- 0 replies
- 304 views
-
-
தனது தாயின் சங்கிலியை அடைவு வைத்து தனது நண்பர்களுக்கு பிரபல விடுதியில் மது விருந்து கொடுத்துள்ளான் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன். 2016ல் க.பொ.த. உயர்தரப்பரீட்சை எடுக்கும் 17 வயது மாணவனே நேற்று இந்தத் திருவிளையாடல் புரிந்துள்ளார். தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர். இம் மாணவனின் தந்தை ஒரு கிராம சேவகராகவும் தாயும் அரச அலுவலராகவும் இருப்பதாகத் தெரியவருகின்றது. நேற்று இரவு 8 மணியளவில் கொக்குவில் பகுதியில் உள்ள இம் மாணவனது வீட்டுக்கு ஆட்டோ ஒன்றில் நிறை வெறியில் வந்து இறங்கிய இம் மாணவனின் நண்பர்கள் ஆட்டோவினுள் மது போதையில…
-
- 17 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனாக சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். அவர் தம்மை வடக்கு மாகாண ஆளுனநராக நியமித்தால், அரசியல் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். தம்மீதான தடையை நீக்கி, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தால், தாம் நாடு திரும்பி வடக்கிலுள்ள மக்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நெதர்லாந்தில் தங்கிலுள்ள ராஜா றெமிஜியஸ் கனகராஜா இன்னமும் அரச நடைமுறைகளையே பின்பற்றுகிறார். இவர் கடந்த மாதம் நெதர்லாந்து சென்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியி…
-
- 22 replies
- 1.9k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில…
-
- 24 replies
- 1.7k views
-
-
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இரணைமடுக் குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்றுக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் மேற்கண்டவாறு கூறினார். கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கமக்காரர் சம்மேளனச் செயலர் முத்து சிவமோகன், யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் வழங்குவதன் அடிப்படையில் இரணைமடு குளத்தை புனரமைக்க வேண்டாம…
-
- 94 replies
- 5.3k views
-
-
புதுடெல்லியில் இன்று நடக்கும் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு, பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மாலை நடக்கவுள்ள நரேந்திர மோதடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன. வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே, அழைப்புகள்…
-
- 14 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பார் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் இந்தியாவின் புதிய பிரதமர் பாதுகாப்பார் என்று இந்தியாவின் புதிய மாநில அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு கவலையடைகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112014-2014-05-27-06-24-12.html
-
- 5 replies
- 677 views
-
-
மலேஷியாவில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் யாந்தே ஸ்மாயில் தெரிவித்துள்ளார்.இதே வேளை மலேசியாவிலிருந்து கொழும்பிற்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் சிலர் நேற்றிரவு கொழும்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சிதறியுள்ள அகதிகள் பதிவு செய்துள்ளனர். டோகோ என்ற ஆபிரிக்க நாட்டில் ஐந்து வருடங்களாக வாழும் பெண்போராளி ஒருவர் இந்த நிறுவனத்தின் ஐந்து வருடப் பதிவின் …
-
- 5 replies
- 1k views
-
-
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் -நீதிமன்ற தீர்ப்பும்! -தேவசகாயம். சமத்துவம் என்பது சமமாக நடாத்தப்படுவது அல்ல. சம வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது. -ஏங்கெல்ஸ் மிகவும் போலித்தனமாக பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வெளிக்குள் இயங்கும் சூழலில்ää நிலவுடமை சமூகத்தின் இறுகிப்போன அசைக்க இயலாத இருண்ட பக்கமாகத் துரத்தி வரும் சாதிய குறியீடுகளையும்ää அன்றாட பேச்சுமொழி கதையாடல்களில் இருந்து இழவுவீட்டு விளம்பரங்கள் வரை தவிர்க்க இயலாத வகையில் சாதியம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே வந்து கொண்டிருக்கிறது. சாதியம் பற்றி அம்பேத்கர் குறிப்பிடுகையில் படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமற்ற சாதியானது தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும்ää தனக்கு கீழ் இருப்பவர் மீது இழிவையும் சு…
-
- 0 replies
- 714 views
-