ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
செய்தி ஆய்வு - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளதும் திட்டமிட்ட கூட்டுப் படு கொலைகளே புலிகளின் முன்னாள் போராளிகளது மரணங்கள் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. கோபி, தெய்வீகன், அப்பன் ஆகியோரை இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தேடப்படும் பட்டியலில் இணைத்து சுவரொட்டிகளை ஒட்டியதில் இருந்து அவர்கள் பதவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும்வரை நிகழ்ந்தவை ஒரு திட்டமிட்ட நாடகம் என ஆரம்பத்தில் இருந்தே குளோபல் தமிழ்ச் செய்திகள் தெரிவித்து வந்தது. உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல ஊடகங்களும், சில தரப்புகளும் தத்தமது நலன்கள் இருப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை வியாக்கிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்ற காலங்களில் இந்தியப் படைகள் சிறிலங்காவில் இருந்தன என்பதை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினருடன் இணைந்து இந்தியப் படையினர் செயற்பட்டதாக, இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத, பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, “இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவை எப்போதும் உடைக்க முடியாது. 1948ம் ஆண்டு சிறிலங்காவும், 1947ம் ஆண்டு இந்தியாவும் சுதந…
-
- 5 replies
- 542 views
-
-
மற்றொரு யுத்தம் மூளுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தேசிய சமாதானப் பேரவை கோருகிறது. [saturday, 2014-04-19 18:53:37] நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்கக் கூடிய வகையிலான ஓர் பொறிமுறைமையை உருவாக்க அசராங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்ட வேண்டும். வட மாகாணசபை உருவாக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், தேவையற்ற அழுத்தங்கள் இன்றி சுயாதீனமான இயங்கக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், வட மாக…
-
- 0 replies
- 288 views
-
-
புலிக் கதை அரசின் நாடகமே - விக்கிரமபாகு news இந்தியாவின் உதவி இல்லாமல், தமிழர் தரப்பால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாது. இது அவர்களுக்கும் நன்கு தெரியும். எனவே, மீண்டும் புலி உருவாக்கம் என்று அரசு அச்சம் கொள்வதானது அரசியல் நோக்கங்களுக்காக அரங்கேற்றப்படும் நாடகமாகும் என்று கூறுகின்றார் நவசம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண. புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அரச தரப்பிலிருந்து கூறப்படுவது தொடர்பில் நேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறும்போது, "புலிப்பூச்சாண்டி காட்டிதான் இந்த அரசு இதுவரைகாலமும் ஆட்சிபீடத்தில் இருந்து வந…
-
- 1 reply
- 387 views
-
-
முன்னாள் போராளிகளை குடும்பமாக பஸ்களில் ஏற்றிச் சென்றது இராணுவம்! - முல்லைத்தீவு எல்லைக்கிராம மக்கள் பதற்றம். [saturday, 2014-04-19 18:20:15] முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்று மாலை சென்ற இராணுவத்தினர் அங்கு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைச் சந்தித்திருந்தனர். இதன்போது விடுவிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் தமது குடும்பங்களுடன் பதவியா, ஐனகபுர பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு கட்டாயம் வர வேண்டுமென மிரட்டும் வக…
-
- 0 replies
- 382 views
-
-
புதுடெல்லியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், வெளிவிவகாரக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது என்று பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விருதுநகரில், மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து பரப்புரை செய்த அவர், கூட்டமொன்றில் உரையாற்றும் போது, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும். ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். பாஜக அரசு அமைந்தவுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேசிய மீனவர் நல வாரியம் அமைத…
-
- 0 replies
- 236 views
-
-
கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் சாள்ஸ் ஹெவிலன்ட்டுக்கு நுழைவிசைவு நீடிப்புச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளதுடன், அவரை நாட்டைவிட்டு வெளியேறும் படியும் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம், சிறிலங்காவில் பிபிசி முகவராகச் செயற்பட்டு வரும் சாள்ஸ் ஹெவிலன்ட்டின், நுழைவிசைவு இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வெளிவிவகார அமைச்சின் ஊடாக, மேலும் ஒரு ஆண்டுக்கு நுழைவிசைவு நீடிப்புச் செய்யக் கோரி அவர் விண்ணப்பித்திருந்தார். எனினும், ஒரு ஆண்டு நுழைவிசைவு நீடிப்புச் செய்ய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளதுடன், அவரை சிறிலங்காவில் இருந்து சில நாட்களில் வெளியேறும்படியும் கேட்டிருந்தது. எனினும் கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கொடுத்த அழுத்தத்தின் …
-
- 0 replies
- 310 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் கிரகநிலைப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் நாளுக்குப் பின்னரே, அவருக்கு நற்பலனையும், பலத்தையும் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, வரும் செப்ரெம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. எனினும், 2016ம் ஆண்டு வரை அதிபர் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்மையில் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். எனினும், ஐ.நா விசாரணைகளை முன்வைத்து அரசியல் நல…
-
- 0 replies
- 321 views
-
-
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார். தேரர் மீது கடந்த மாதம் 15ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர் பின்னதாக கராப்பிட்டய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கும் அதிக காலம் சிகிச்சை பெற்று வந்த தேரர் காலமாகியுள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=803622892920897174
-
- 1 reply
- 347 views
-
-
உலகில் மிகவும் மோசடியான அரசாங்கம் என்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசியாவின் ஆச்சரியம் தென்பட ஆரம்பித்து விட்டது. மதுவுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக கூறி 10 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் உலகில் மது பாவனையில் உள்ள நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தை எட்டியுள்ளது. இருப்பினும் ஏனைய மூன்று நாடுகளும் குளிரான காலநிலையை கொண்ட நாடுகள். வெப்ப வலய நாடான இலங்கை மது பாவனையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்பது ஆச்சரியப்பட வைப்பதாகத்தான் உள்ளது. இன்னும் கொஞ்ச நாட்களில் தரகுப்பணம் பெறுதல், கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவதிலும…
-
- 0 replies
- 195 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி நிலைமையிலிருந்து பழப்பயிர்ச் செய்கைகளை விவசாயிகள் பாதுகாத்து கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராசா வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். விவசாய நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக சிறுபோகப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளமுடியாத நிலைமை காணப்படுகின்ற போதும், வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வரவேண்டும். குறிப்பாக தற்போதைய வறட்சியினால் பழப்பயிர்ச்செய்கை அழிவடைந்து வருகின்றது. இந்த நிலையில் பழப்பயிர்செய்கையில் ஈடுபடுகின்றகின்ற விவசாயிகள், மண்ணின் ஈரத்தன்மையை பேணும் வகையில் பழப்பயிர்களின் அடி…
-
- 1 reply
- 463 views
-
-
கடந்த 16.04.2014 அன்று வேணாவில், இரணைப்பாலை, சிவநகர், ஆனந்தபுரம், வலைஞர்மடம் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்புகளின் போதே, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமை, அதனால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு வறுமையால் தாம் பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் குமுறியுள்ளனர். குறித்த சந்திப்புகளின் போது மக்கள், காணி தொடர்பிலான முரண்பாடுகள், வீட்டுத்திட்டம் இழுபறிநிலை, வீதி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், மின்சாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை, குடிநீர் தட்டுப்பாடு, உணவு உற்பத்தி, சுயதொழில் மற்றும் தொழில் வாய்ப்புகள் இல்லாமை உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் பற்றி…
-
- 0 replies
- 552 views
-
-
சிவகங்கை: இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தம் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். சிவகங்கை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து காரைக்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரு கட்சிகள் தான் ஆட்சி அமைக்க முடியும். மூன்றாவது கட்சி பற்றியோ, இது குறித்த அரசியல் சிந்தனையோ இது வரை இருந்தது இல்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ள கூட்டணி அலை மூலம் மத்தியில் ஆட்சியை பிடிப்பதோடு, 2016-ல் தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளன. ஆனால் தமிழ்நாடு எந்தளவுக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
எம்.இஸட். ஷாஜஹான் நீர்கொழும்பில் 45 வருட காலமாக வர்த்தகம் செய்த தமக்கு தற்போதைய நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை நகரில் அதிகரித்துள்ளது என்று நேற்று வியாழக்கிழமை இரவு ஆயுத முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட புஸ்பா ஜுவலரி உரிமையாளர் எம்.ஏகாம்பரம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று மோட்டார்; சைக்கிள்களில் ஜெக்கட் மற்றும் ஹெல்மட் அணிந்து வந்த ஆறு பேரை கொண்ட கொள்ளை கோஸ்டியினர் நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கொள்ளையிட்டதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் புஸ்பா ஜுவலரி உரிமையாளரின் நீர்கொழும்பு இல்லத்திற்கு சென்று விசாரித்தார்…
-
- 1 reply
- 603 views
-
-
தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை வசிப்பிடமாக பயன்படுத்தி வரும் வைத்திய அதிகாரி: 19 ஏப்ரல் 2014 தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை, அதன் தலைமன்னார் வைத்திய அதிகாரி தனது வசிப்பிடமாக 2009ம் ஆண்டு முதல் பாவித்து வருகின்றதாக தலைமன்னார் பியர் ஸ்ரேசன், கிராமம் ஆகிய கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,, தலைமன்னார் வைத்தியசாலையில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வைத்திய அதிகாரி கடமையாற்றி வருகின்றார். இவருடைய அட்டசாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தலைமன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி உடைந்து விழுந்து கொண்டிருக்கும் நிலையிலும், மழைக்கு ஒழுகிக்கொண்டிருக்கு…
-
- 0 replies
- 481 views
-
-
சுயாட்சியைக் கொடுங்கள்; தேசிய சமாதானப் பேரவை அரசுக்கு அவசர வேண்டுகோள் news போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகின்றது என்று அரசு கூற ஆரம்பித்துள்ளது. பொலிஸார் ஒருவரின் காலில் சுட்டார்கள் என்று தெரிவித்து சந்தேகநபர்களான மூன்று பேரை படையினர் சுட்டுக் கொன்றிருப்பதை அடுத்து நிலைமை மோசமடைய ஆரம்பித்துள்ளது. தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது தேசிய சமாதானப் பேரவை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடனான பேச்சுக்களை மீள வும் ஆரம்பிக்கும் படியும் அது கோரியுள்ளது. நாட்டில் அ…
-
- 0 replies
- 484 views
-
-
கிளிநொச்சியில் 64 வயதுடைய தாய் கைது ! ஏப் 19, 2014 திருமதி பத்மாவதி , 64 வயதுடைய தாய் இன்று காலை கிளிநொச்சியில் சிங்கள அரசின் குற்றப்புலனாய்வு ப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.சில வாரங்களாக இலங்கை அரசால் நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சியின் நடவெடிக்கையே திருமதி பத்மாவதி கைதின் காரணம் என அறிய முடிகின்றது . தற்பொழுது புலிகள் கதை கூறி அவர்களுடன் தொடர்ப்பு என்று பல அப்பாவி மக்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைக்க சிங்கள பேரினவாத அரசு பெரும் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது . http://www.sankathi24.com/news/40587/64/64/d,fullart.aspx
-
- 0 replies
- 464 views
-
-
ஐ.நா பொதுச்சபை தலைவர் அடுத்த மாதம் வருகிறார் சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014 09:32 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஹம்பாந்தோட்டையில், மே மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்ற 2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107328-2014-04-19-04-02-32.html
-
- 0 replies
- 293 views
-
-
தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்மானம் ஒன்றினை நாங்களும் சில புலம்பெயர் அமைப்புக்களும்கொண்டுவருதற்கு எடுத்த முயற்சியை முறியடித்த கூட்டமைப்பினர் மறுபுறத்தில் தமிழ் மக்களுடன் சம்பந்தப்படாத பிற சக்திகளின் நலன்களை பேணிக்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கண்மூடித்தனமாக ஆதரித்திருந்தார்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ! கேள்வி:-உங்களுடைய ஜெனிவா பயணம் வெற்றியளித்திருக்கின்றதா? பதில்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் நானும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய மூவரும் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக ஜெனிவாவிற்குச் சென்றிருந்தோம். முதலா…
-
- 2 replies
- 486 views
-
-
யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை யாழ்.ஆயர் இல்லம் மறுதலித்துள்ளது. யாழ்.ஆயர் சார்பில் குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாhர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மதகுருமார் மீது சுமத்தப்பட்;ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்காது விசாரணைகளிற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில் 'யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெறோமி கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் க…
-
- 17 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கருமங்கள் மற்றும் யுத்த காலத்திற்கு பின்னர் வடகிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவக் கெடுபிடிகள், இனவிகிதாசாரத்தை மாற்றும் செயற்பாடுகள் நல்லிணக்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை உயர் மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் போது நாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன் தென்னாபிரிக்க அரசில் இலங்கை விவகாரங்களை கையாளும் விசேட பிரதிநிதி சிறில் ராமபோஷா உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர் வெகுவிரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என தமி…
-
- 3 replies
- 465 views
-
-
நெல்லியடி மகா வித்தியாலையத்தில் வடமராட்சிக்கான இராணுவ ஆட்சேர்பு - விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்:- முதற் பதிவேற்றம்:- 16-04-2014 - 14:42 இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக வடமராட்சிப் பகுதிக்கான ஆட்சேர்ப்பு இன்று வியாழக்கிழமை (17.04.14) இடம்பெறவுள்ளது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று படையினரால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கான சாரதி மற்றும் மின்னியலாளர்கள் மற்றும் சங்கீத விரிவுரையாளர்கள் என ஆட்சேர்ப்பு நிகழவுள்ளதாக அவ் விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய ஆட்சேர்ப்பில் சந்தர்ப்பத்தினை தவறவிட்டவர்களிற்கான சந்தர்ப்பமும் நேர்முகத்தேர்வும்…
-
- 3 replies
- 539 views
-
-
புத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டைஅண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை விபசாரம் சட்டப்படி குற…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனிக்கு புதிய தூதர்களை நியமித்தது இலங்கை அரசாங்கம்! [Friday, 2014-04-18 18:46:49] இந்தியா, அமெரிக்க, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான புதிய தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதராக பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்னவும், இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்த பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான தூதராகவும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஜேர்மனிக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=107757&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 499 views
-
-
மாத்தளையில் மினி சூறாவளி: 50 வீடுகள் சேதம் வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014 21:00 மாத்தளை,ஹதுன்கமுவையிலுள்ள மாரகருதுன்னே கிராமத்தை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பிரதேச செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/107320--50-.html
-
- 0 replies
- 644 views
-