Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்திற்கு விசாரணை அதிகாரம் கிடைத்தது இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா, வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கையை ஆதரித்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட மற்ற 12 நாடுகளும் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிகொண்டன. ஒதுங்கிக் கொண்ட நாடுகளில் எதியோப்பியா, குவைட், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும…

  2. ஈழத்தீவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதே ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்பதும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணத்துடன் இத்தீர்மானம் கொண்டு வரப்படவில்லை என்பதையும் தனது அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் மிகவும் பூடகமான முறையில் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இறுதிப் போரில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்திற்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதையிட்டு அறிக்கை ஒன்றை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி வெளியிட்டுள்ளார். அதில் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளுக்கான மதிப…

  3. இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக ஊடகங்களின் ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம்! [Thursday, 2014-03-27 20:06:17] இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தயில், தமிழக ஊடகங்களில் சிறிலங்காவினை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்குமா என்ற கேள்வி தமிழக ஊடகங்களில் கேள்வியாக்கப்பட்டிருந்த நிலையில் , வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமை ஊடகங்களில் வாதப்பொருளாகியுள்ளது. தமிழக மக்களிடத்திலும் ஈழத் தமிழர் தொடர்பிலான பரிதவிப்புக்கு தமிழக ஊடகங்கள் ஆற்றி வருகின்ற பங்கிற்கு நன்றி தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊ…

  4. இருபத்தைந்தாவது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இடம்பெற்ற, ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளை அவர்களின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது, செல்வராசா கஜேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை, உண்மையை கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்குமான சிறீலங்காவின் தேசிய பொறிமுறைகள் அனைத்தும் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததுள்ளது எனக் குறிப்பிடும் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் முடிவுரையின் 72 ஆவது பந்தியை நாம் வரவேற்கிறோம். அத்துடன், போதிய கால அவகாசமில்லை என்றோ தொழில்நுட்ப ஆற்றல் இல்லை என்றோ இனியும் காரணம் கூறமுடியாது. ஏனெனில், இது அரசியல் விருப்பு தொடர்பான கேள்வி என்றும் குறிப்பிட்டுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளிரின் முடிவுரையை நாம் வரவேற்கிறோம். அரசியல் விருப்பின்மை …

  5. நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகித்தே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும் என சில நாடுகளை அமெரிக்கா எச்சரி;த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சில நாடுகள் மாற்று வழியின்றி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் சில நாடுகள் மிகச் சிறந்த பொருளாதார உறவுகளைப் பேணி வருவதாகவும் இதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முயற்சிக…

  6. கொழும்பில் ஒபாமாவின் படத்துக்கு செருப்படி! [Thursday, 2014-03-27 08:53:38] ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இலங்கைக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன் ஒபாமாவின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து வந்த அவர்கள் அதற்கு செருப்பால் அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். http://seithy.com/breifNews.php?newsID=106553&category=TamilNews&language=tamil

  7. இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2014 - 12:53 ஜிஎம்டி இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்ல…

    • 25 replies
    • 2.7k views
  8. சிரியா, எகிப்து போன்ற நிலையை இலங்கையில் உருவாக்க சர்வதேச சூழ்ச்சி! – பதிலடி கொடுக்கச் சொல்கிறார் அமைச்சர் நிமால். [Thursday, 2014-03-27 18:58:01] சிரியா, மற்றும் எகிப்து போன்றதொரு நிலையை உருவாக்க சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் ஒன்றிணைந்து பதில் கொடுக்கும் தருணம் இது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மாத்தறையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உள்நாட்டில் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் பலம் எந்த சக்திகளுக்குமில்லை. அதனால்தான் வெளிநாடுகளின் பலத்தோடு காலைவாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஜெனீவாவில் நாட்டை நேகிக்கும் 5000 இலங்கையர் இலங்கை மீது கைவ…

  9. http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-inquiry-doctor-varatharajah-thariajah

  10. இலங்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என பாகிஸ்தான் சமர்ப்பித்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 16 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன. எதிராக 25 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஆறு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானால் மற்றுமொரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. தீர்மானம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கோரியது. இந்நிலையில் போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளது. இந்த யோசனைக்கு கியூபாவும், ரஸ்ய…

  11. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இன்றைய தினம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடாத்தி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மூலம், யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்ப…

  12. பாம்பு போன்ற பெருமளவு உயிரினங்கள் கிண்ணியா ஆற்றில் படையெடுப்பு! – பொதுமக்கள் அச்சம். [Thursday, 2014-03-27 19:02:48] திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பாம்புகளை ஒத்த அரியவகையான உயிரினங்கள் மீண்டும் நேற்றிரவு படையெடுத்துள்ளன. கிண்ணியா பிரதேசத்தின் காக்காமுனை, குட்டிக்கராச் குறிஞ்சாக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆற்றிலேயே இவ்வகையான உயிரினங்கள் படையெடுத்துள்ளன. இது இவ்வாறிருக்க, கிண்ணியா பிரதேச காக்காமுனை, அரை ஏக்கர் பகுதியிலுள்ள வாவியொன்றிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் பாம்பு போன்ற அரியவகையான உயிரினங்கள் படையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அரியவகை உயிரினங்கள் மீண்டும் படையெடுத்துள்ளதால் இயற்கை அனர்த்தம் ஏற்படுதவற்கான சமிக்ஞையாக …

    • 1 reply
    • 568 views
  13. மகிந்த ராஜபக்ச செய்யத் தவறியதால் தான் நாம் செய்கிறோம்! – என்கிறார் டேவிட் கமரூன். [Thursday, 2014-03-27 08:48:28] கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரிக்க தாம் மேற்கொண்டிருக்க வேண்டிய பணிகளை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொள்ள தவறிவிட்டதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நிலையிலேயே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இதில் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், இலங்…

    • 1 reply
    • 499 views
  14. ஜெனிவாவில் தோற்றாலும் தேர்தலில் வெற்றி தமக்கே என்கிறார் மஹிந்த ராஜபக்ச! [Thursday, 2014-03-27 09:04:38] தாய்நாட்டை மீண்டும் சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை என்ற செய்தியை எதிர்வரும் 29 ஆம் திகதி உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 28 ஆம் திகதி ஜெனீவாவில் நாம் தோல்வியுற்றாலும் 29 ஆம் திகதி நாட்டில் வெற்றி பெறுவோம் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வெற்றி நாட்டினதும் மக்களதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார். அக்குறஸ்ஸவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாத்தறையில் திரண்டிருக்கும் சனத்திரளை நோக்கும் போது மக்கள் கருத்தை எம்மால் சரியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. நான் இன்று எனது நண்பரான மஹிந்த விஜேசேக…

  15. அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு நன்றி : தமிழ் தேசியக் கூட்டமைப்பு [Thursday, 2014-03-27 08:42:41] அனைத்துலக விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு அழுத்தங் கொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்றையதினம் ஜெனஜவாவில் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்றிருந்த விவாதத்தினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியிருந்த ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்துலக நாடுகளது பெரும்பான்மை வாக்கினை அமெரிக்கத் தீர்மானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென தாங்கள் எதிர்பார்பதாகவும் தெரிவிக்கப்ப…

  16. மன்னிப்பும் கோரமாட்டோம், நட்டஈடும் கொடுக்க முடியாது! – அமைச்சர் ரிஷாத்துக்கு பொதுபல சேனா பதில். [Thursday, 2014-03-27 18:54:01] எவருக்கும் ஐந்து சதமேனும் நஷ்டஈடாக வழங்கப் போவதும் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதுமில்லையென பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்றும் எனவே, தேரர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அதற்கான சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்…

  17. போர் தவிர்ப்பு வலயத்தில் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டன! – பிரித்தானிய நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு. [Thursday, 2014-03-27 16:38:04] போரின்போது இலங்கைப் படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சியோபாயின் மெக்டொனாஹ் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே, போர் தவிர்ப்பு வலயத்தில் கொத்தணி குண்டுகள் போடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 150,000 தமிழர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மத வழிபாட்டுத் தலங்கள் அடிக்கடி தாக்குதல்களுக்கு இலக்காவதாகவும்,இலங்கை ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக …

  18. இலங்கை தமிழ் அகதிகளை வைத்து - அமெரிக்காவின் குவாண்டனாமோ முகாமைப் போன்ற ஒரு சிறைக்கூடத்தை, அவுஸ்திரேலியா அரசாங்கம் நடத்தி வருவாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [Thursday, 2014-03-27 11:34:15] த நிவ்யோர்க் டைம்ஸ் செய்தித்தாள் இதனைத் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட போர் கைதிகளை தடுத்து வைப்பதற்காக 2002ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ்ஸினால் கியுபா – குவாண்டநாமோ விரிகுடாவில் இந்த தடுப்பு முகாம் உருவாக்கப்பட்டது. இதில் சர்வதேச சட்டங்களை மீறிய பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்ற ஒரு முகாமை அவுஸ்திரேலிய அரசாங்கம் விளாட்வுட்டில் நடத்தி வருவதாகவும், அதில் இலங்கைத…

  19. இலங்கை மீது சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான மிகமோசமான மீறல்கள், துஷ்பிரயோகங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணை அவசியம் என்று கோரும் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடாவின் எதிர்க்கட்சி சார்பான வெளிவிவகார விமர்சகரும், ஒட்டாவா மத்தி. நாடாளுமன்றத் தொகுதியின் புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினருமான போல் டிவர் இந்தப் பிரேரணையை முன்மொழிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியும் மற்றும் லிபரல் கட்சியும் முழு ஆதரவு வழங்க தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஜெனீவாவ…

  20. இலங்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என பாகிஸ்தான் சமர்ப்பித்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 16 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன. எதிராக 25 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஆறு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானால் மற்றுமொரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. தீர்மானம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கோரியது. இந்நிலையில் போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளது. இந்த யோசனைக்கு கியூபாவும், ரஸ்ய…

  21. ஜெனீவா தீர்மானத்துக்கு 23இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிக்க வாய்ப்பு! [Thursday, 2014-03-27 08:58:55] ஜெனீவா மனிதஉரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இன்று அந்த விவாதம் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலசமயம் அது நாளைக்கும் தள்ளிப் போக வாய்ப்புண்டு என ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று ஜெனீவாவில் காலை, மதியத்துக்குப் பின், மாலை என மூன்று அமர்வுகள் இடம்பெற்றன. அதில் இரண்டாவது அமர்வின் போது மட்டுமே இலங்கை தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. அதேவேளை, இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 23 முதல் 25 நாடுகள் ஆதரவு வழங்கும் என்றும், 12 மு…

  22. ரூ.100 கோடி கேட்டு பொன்சேகா வழக்கு வியாழக்கிழமை, 27 மார்ச் 2014 10:36 பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடமிருந்து 100 கோடி ரூபா நட்டஈடுகேட்டு ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா கஸ்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். இராணுவ தலைமையகத்தில் வைத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தனியார் வானொலியொன்றுக்கு பிரதியமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார். பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பிஸ்கல் ஊடாக நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட நீதவான் நிஹால் சந்திர ரணவக்க பணித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104…

  23. சனல்-4 மீண்டும் ஒரு அதிர்ச்சிக் காணொளியை வெளியிட்டது: - மகிந்தராசபக்ச மற்றும் மருத்துவர் ஒருவரது சாட்சியம் ஆகியன உள்ளடக்கம் [Thursday, 2014-03-27 08:38:27] இறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலையங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம் காலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியரின் வாக்குமூலங்களும் இக்காணொளியில் காண்பிக்கப்படுகின்றது. இலங்கை அதிபர் மகிந்தவின் விளக்கங்களும் வைத்திய அதிகாரி முன்னர் இராணுவ ஊடக மையத்தில் தெரிவித்த கருத்துக்களின் உண்மை தன்மைகள் தொடர்பிலும் விளக்கமாக விபரிக்கப்படுகின்றது. இலங்கை அரசால் நடாத்த…

  24. அரிப்புத்துறையில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவம் 27 மார்ச் 2014 கடந்த இரு வாரங்களாக அரிப்புத்துறையில் ஊரின் மையப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவம் தனியார் வீடுகளுக்குள்ளும், தனியார் வளவுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து அச்சத்தை ஏற்ப்படுத்துவதாக ஊர் மக்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் தேவைக்கேற்றவாறு வீதி விளக்குகளை அணைத்து இருளை ஏற்ப்படுத்துவதாகவும் இதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் பெண்கள் சிறுவர்கள் வீடுகளில் தனியாக இருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சிலாவத்துறை வைத்திய சாலையில் கடமையாற்றும் தனது மனைவியுடன் இரவில் வீடு நோக்கி வந்த குடும்பஸ்தரை 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கடையொன்றிற்கு சென்று வரும் படி இர…

  25. ஓமந்தையில் மீண்டும் சோதனை ஆரம்பம் : 27 மார்ச் 2014 வடக்கிலிருந்து வெளியேறுவோர் மற்றும் உள்நுழைவோருக்கான சோதனைகள் மீண்டும் ஓமந்தையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களினில் கைதுகள் கடத்தல்களினில் பிரபலமான ஓமந்தை சோதனை சாவடி கடந்த வடமாகாண தேர்தலை முன்னிட்டு கைவிடப்பட்டிருந்தது. இதனிடையே கிளிநொச்சி பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை புதன்கிழமை சுற்றிவளைக்கப்பட்டுத்தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுப் புதன்கிழமை அதிகாலை முதல் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.