Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இல­ங்கைக்கு எதி­ரான மூன்­றா­வது பிரே­ர­ணையை நேற்­றைய தினம் சமர்ப்­பித்­துள்ள அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன. அத்­துடன் இல­ங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்­நுட்ப உத­வியும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் இலங்­கை­யா­னது பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் மனித உரிமைப் பேர­வை­யுடன் ஒத்­துழைப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. வட மாகாண சபையும் வட ம…

  2. இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று டெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் மாகாண சபை அங்கத்தவரும், மூத்த உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள், மக்களின் நலன் கருதியே இந்த முடிவை தமது அமைப்பு எடுத்துள்ளதாகக் கூறினார். வடமாகாணத்தின் 5 மாவட்டங்களான, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றின் மையமாக மாங்குளம் அமைந்துள்ளதாலேயே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தமது கட்சியின் இந்த முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், வடமாகாண முதல்வரினதும் ஆதரவைத் தேடப் போவதாகவும் தெரிவித்த அவர், இப்படியான ஒரு விருப்பத்தை மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் …

  3. யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு புத்தர்சிலைகள்! - அஸ்கிரிய பீடாதிபதி திறந்து வைத்தார். [Thursday, 2014-02-27 07:53:19] யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை நேற்று கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அஸ்கிரிய பீடாதிபதி, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார். அதனையடுத்து நாகவிகாரைக்குச் சென்று புத்தர் சிலை ஒன்றைத் திறந்து வைத்து பிரித்ஓதி வழிபாட்டில் ஈடுபட்டார். மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. …

    • 36 replies
    • 2.2k views
  4. ஜெனீவாவில் பெரும் அதிசயங்கள் நடந்துவிடப்போவதாக தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை அரசியல் சோர்வு நிலைக்கு தள்ளிவிட வேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார் சட்டத்துறை விரிவுரையாளரும் சிவில் சமூக பிரமுகருமான குமாரவடிவேல் குருபரன். யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பினில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ஜ.நாவின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சர்வதேச போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏதும் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. அவை தொடர்பில் தன்னை தானே மீண்டும் விசாரித்துக்கொள்ள மூன்றாவது தடைவையாகவும் இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக உள்ளது. இதனில் சர்வதேச விசாரணை என்பது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவேயில்லை. …

  5. டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 தமிழரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இது குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை எதிர்த்த…

    • 0 replies
    • 858 views
  6. இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் 25 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு வலுவான மற்றும் செயற்பாட்டு ரீதியான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று திகதியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு கிழக்கில் திருப்பணியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மதகுருமார் இதற்கு முன்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் 19 ம…

    • 3 replies
    • 736 views
  7. (ஆதவன்) இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார். சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்த…

    • 7 replies
    • 556 views
  8. வடபகுதி மீனவர்களை வைத்து மத்திய, மாகாண அரசுகள் அரசியல் பிழைப்பு நடத்துவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனால் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் இந்திய மீனவர்களால் எமது கடல் வளம் அழிக்கப்படவில்லையென்றும் எமது தொப்புள்கொடி உறவுடன் வாழ்பவர்கள் அவ்வாறு நடக்க மாட்டார்களெனவும் மாறாக தென்பகுதி மீனவர்களும் வெளிநாட்டு மீனவர்களுமே எமது வளங்களை அழிக்கின்றனரென்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு ஒரு படி மேலே மத்திய கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.02.2014 அன்று வழங்கிய …

    • 0 replies
    • 550 views
  9. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்துக்கான முதல் அமர்வு இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளிலேயே இலங்கைக்கு எதிராகக் காட்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஜெனிவா செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான தமது இறுக்கமான நிலைப்பாட்டை ஆரம்ப உரையிலேயே வெளிப்படுத்துவர் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் உரையாற்றுவர். அமெரிக்க நிலைப்பாடு அதையடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின…

  10. அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் பிரதிநிதி அல்ல அவர் முஸ்லிம் இனவாதிகளின் பிரதிநிதி என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு யார் வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை, ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்று அதனை மதிக்க வேண்டும். அமைச்சர் ஹக்கீம் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே அவரை நாங்கள் விமர்சித்தோம். ஹக்கீம் தனது அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மாத்திரம் கையளிக்கவில்லை, அவர் மிகவும் துஷ்டத்தனமாக அந்த அறிக்கையை குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியதுடன், இது மிகவும் பாரதூரமான செயல். காரணமாக குவைத் மற்ற…

  11. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதற்காக சந்திக்கின்றார் என்பது குறித்த விளக்கத்தை அந்நாட்டு மத்திய அரசாங்கம் அளித்துள்ளது. நாளைய தினம் மியன்மாரில் நடைபெறவுள்ள பிம்டெஸ்க் மாநாட்டிற்கு சமாந்திரமாக இரு நாடுகளினதும் தலைவர்கள் சந்தி;க்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சந்திபிற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த சந்திப்பானது பிரத்தியேகமான சந்திப்பு அல்ல என இந்திய மத்திய அமைச்சர் வீ.நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சி;ங் சில வேளைகளில் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்திய பிரதமர், இலங…

  12. ஐ.நாவுடன் அரசாங்கம் இரகசிய உடன்பாடு – படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று மிரட்டுகிறது ஐதேக! [Monday, 2014-03-03 07:54:34] ஐ.நா மனிதஉரிமைப் பேரவையுடன் இலங்கை அரசாங்கம் இரகசிய உறவுகளை பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. இதனால் படையினரும் நாட்டு மக்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். வரலாற்றில் மிகவும் தேசப்பற்றுடைய அரசாங்கம் என தம்மை பெருமைப்படுத்திக் கொள்ளும் இந்த அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் சில இரகசிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை என்ற அடிப்படையில் படைத்தரப்பினரு…

  13. நவிபிள்ளையின் அறிக்கையுடன், தமது பதிலையும் இணைத்து வழங்காதது ஏன்? – கேள்வி எழுப்புகிறது இலங்கை அரசாங்கம். [Monday, 2014-03-03 07:37:35] ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமை நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உயர் ஸ்தானிகர் நவிபிள்ளையின் அறிக்கையுடன் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பதிலறிக்கையினை இணைத்து வழங்காதது ஏன் என ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் தொடரவுள்ளது. இலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள நவி பிள்ளை இலங்கைக்கு சர்வதேச விசாரணை அவசியமென வலியுறுத்தி 18 பக்க அறிக்கையினை சமர்ப்பி…

  14. முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தைப் பார்த்து ஜனாதிபதி கெட் அவுட் 'வெளியே போ' என்று சொல்லியும் வெட்கமில்லாமல் கூனிக் குறுகி அந்தக் கதிரையிலேயே இருக்கின்றதொரு தலைமைத்துவத்தையே நாம் காண்கின்றோம் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மீராணியா வீதியில் நேற்று (02) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் தலைமைத்துவம் ஒரு தன்மானம் உள்ளதொரு தலைமைத்துவமாக இருந்தது. அந்த தலைமைத்துவத்தை கண்டால் அன்று இருந்த ஜனாதிபதியோ, பிரதமரோ மிகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டனர். அவரைக் கண்டால் எழும்பி மரியாதை கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் செல்…

    • 0 replies
    • 398 views
  15. ஜனாதிபதியை மின்சார கதிரையில் அமர்த்த மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முடியாது: அஜித் பெரேரா ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­னது தனது கட்சி சின்­னத்தை தேர்­த­லுக்கு தேர்தல் மாற்றி வரு­கி­ றது. இந்­நி­லையில் இம்­முறை மாகாண சபை தேர்­தலில் ஆளும் கட்சி தமது சின்­னத்தை வெற்­றி­லைக்கு பதி­லாக மின்­சார கதி­ரை­யாக மாற்­றி­யுள்­ளது. ஜனா­தி­ப­தியை மின்­சார கதி­ரையில் அமர்த்­தவோ இலங்­கைக்கு எதி­ரான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளவோ ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் முடி­யாது என்று ஐ.தே.க.வின் களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பீ பெரேரா தெரி­வித்தார். இதே வேளை தேசத்­திற்கு மகுடம் கண்­காட்­சியின் போது மக்­களின் வரிப்­ப­ணத்தை உப­யோ­கித்து மகளிர் விவ­கார…

  16. ஜெனிவாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி மைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தலை­மையில் ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ள­துடன் இதன்­போது உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் சில நாடுகள் தொடர்பில் பிரே­ர­ணை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. அந்­த­வ­கையில் இம்­முறை இலங்­கை­ககு எதி­ரா­க­வும்­அ­மெ­ரிக்­கா­வினால் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான ஏற்­பா­டு­களில் அமெ­ரிக்க , பிரிட்டன் தரப்பும…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு https://www.facebook.com/tamilnaduhungerstrike

    • 32 replies
    • 2.4k views
  18. சென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்! [sunday, 2014-03-02 10:04:27] ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். நாம் தமிழர்கள், யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை, தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார். நாம் தமிழர்களை என்றும் எதிர்த்ததில்லை நானும் தமிழருக்காகப் போராடுவேன் என இலங்கையில் ஏற்பாடாகியிருந்த சுப்பர் சிங்க…

    • 11 replies
    • 973 views
  19. ஒரு மாதம் முன்பாக தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீன்பிடியை நிறுத்திவைப்பது என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை இந்திய மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இருநாட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாட்டை மீறும் வகையில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் சனிக்கிழமை இரவு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது பற்றி தகவல் தெரிவித்த மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவரும், இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக் குழுவில் இடம்பெற்றிருப்பவருமாகிய ஜஸ்டின் சொய்ஸா, தலைமன்னார் மீனவர்கள் சிலர் இது …

    • 0 replies
    • 533 views
  20. இந்தியாவே எமது முதல் எதிரி! – என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். [saturday, 2014-03-01 19:00:47] இந்தியாவுடனான உறவை உடனடியாக முறித்துக் கொண்டு சீனாவுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்-கத்தின் பொது செயலாளர் வசந்தபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது- இதுவரை நாம் பரிந்துரைத்த எல்லாவற்றையும் அரசாங்கம் கேட்காமையாலேயே இன்று எமக்கு ஜெனிவா வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது நாம் கூறுவதை அர…

  21. ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் கடைசி முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஈடுபடவுள்ளார். ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்காது என்றே பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில் விரைவில் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக, ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. நேற்று முன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்த போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதனை ஒப்புக்கொண்டிருந்தார். எனினும், இறுதி முயற்சியாக இ…

  22. இலங்கையில் ஊடக சுதந்திரம் முடக்கப்படுவது குறித்து பான் கீ மூனுக்குத் தெரியாதாம்! – அவரது பேச்சாளர் சொல்கிறார். [sunday, 2014-03-02 08:32:51] இலங்கையில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். இணைய ஊடகங்கள் மற்றும் சில ஊடக நிறுவனங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து, எழுப்பிய கேள்விக்கே அவர், ஊடகத் தணிக்கை பற்றித் தமக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ரெலிகிராப் இணைய தளம் முடக்கப்பட்டமை பற்றி தகவல் கிடைக்கவில…

  23. அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இருவரும் மேற்க…

  24. 15வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கைது! – திருநெல்வேலியில் சம்பவம். [sunday, 2014-03-02 17:18:24] யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே நேற்றிரவு கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினமான கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலியின் பாற்பண்ணை என்ற பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் இருந்தவேளை, யாரும் இல்லாத …

  25. நட்புடன் கைகொடுத்த முதல்வருக்கு குதர்க்கமாக பதில் கொடுத்த டக்ளஸ்! [sunday, 2014-03-02 08:49:59] அரசியல் ரீதியாக இணையமாட்டோம், ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று, ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கைலாகு கொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதற்கு, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் குதர்க்கமாகப் பதில் கொடுத்தார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடைபெற்ற போதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.