ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143519 topics in this forum
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிராக, ஆதரவு திரட்டும் நோக்கில், புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், கொழும்பில் தூதரகத்தை கொண்டிராத நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு கோரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுடனான இந்தச் சந்திப்புக்கு, புதுடெல்லியில் உள்ள பெரும்பாலான நாடுகளின் தூதரகங்களில் இருந்து, இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை அதிகாரிகள் தான் கலந்து கொண்டனர். …
-
- 1 reply
- 604 views
-
-
'எம்மை கைது செய்யட்டும், கைது செய்தால் நாம் சிறையில் ஆறுதலாக இருப்போம்' என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று சனிக்கிழமை (01.02.14) தெரிவித்தார். அமெரிக்க, பிரதி; இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலிற்கும் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (01.02.14) காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பினைத் தொடர்து யாழ் ஆயர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இதன்போது 'தென்பகுதி அமைப்புக்கள் பல யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களைச் கைது செய்யுமாறு வலியுறுத்துகிறார்களே இது தொடர்பான உங்கள் கருத்து என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே ஆயர் இதனைத் தெரிவித்தார். மேலும் 'வடபகுதி ஆய…
-
- 3 replies
- 827 views
-
-
'பனைமரங்களைக் கொண்டு வேலியையை அமைப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு யானைகள் வருவதை நிரந்தரமாகத் தடுக்க முடியும்' என்று யானைகள் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட இலங்கையின் ஜனதாக்ஷன் எனும் அமைப்பும் பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிராக்டிகல் ஆக்ஷன் எனும் அமைப்பும் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 'முட்கம்பி வேலிகள், மின்சார வேலிகளைவிட இயற்கையாக பனைமரங்களைக் கொண்டு அமைக்கப்படும் வேலி மிகவும் செலவு குறைந்தது, பராமரிப்பு செலவுகள் அற்றது மற்றும் நூறு ஆண்டுகள் வரை நீடித்திருக்கக் கூடியது என்று இந்த முன்னெடுப்பின் திட்ட இயக்குநர் லாஃபிர் மொஹமட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கையில் நான்கு இடங்களில் சோதனை முறைய…
-
- 0 replies
- 285 views
-
-
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக மொனராகலை மாவட்டத்தில் தற்போது அரச அதிபராக கடமையாற்றும் ஏ.பத்திநாதர் நியமிக்க பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வடக்கு மாகாண சபையின் தற்போதைய பிரதம செயலர் விஜயலட்சுமியை பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ள நிலையில் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் புதிய பிரதம செயலாளரை நியமிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது. இதன் அடிப்படையில் தற்போது மொனராகலையில் அரச அதிபராக கடமையாற்றிவரும் ஏ.பத்திநாதரை வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
- 0 replies
- 295 views
-
-
கனிமொழி நலம் பெற வேண்டும். --------------------------------------------- விஷம் அருந்திய செய்தி உண்மைதான். ஆழ்வார் பேட்டையில் இருக்கும் தனியார் இருத்துவமனையில் இருக்கிறார். அண்ணன் தம்பிகள் அனைவரும் சென்று வந்தபடி உள்ளார்கள். அழகிரி நீலாங்கரையில்தான் இருக்கிறார். அவரும் வந்து பார்க்க இருக்கிறார்...இப்போது பரவாயில்லை.செய்தி வந்தபோது வதந்தியோ என்ற குழப்பம். அவருடைய செல்பேசி தொடர்புக்கே சென்றேன். பதிலில்லை..... எப்படியிருந்தாலும் பத்திரிகையாள நண்பர்களிடம் நன்றாக பேசக்கூடியவர். நா...ன் எப்போது தொலைபேசி எடுத்தாலும் பதிலை தருவார். பேட்டி என்றால் அப்பாவை கேட்டு சொல்லட்டுமா என்பார். சொன்னபடி பதிலையும் தருவார். மற்றவர்களை போல் இருக்கவில்லை..... எந்த பிரச்சனை என்றாலும் அது ஒரு …
-
- 14 replies
- 7.2k views
-
-
மன்னார் திருகேதீஸ்வரம் புதைகுழியில் மீட்கப்பட்ட 55 எலும்புக்கூடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்த வேண்டுமெனக்கோரி இவ்வாரம் மன்னாரில் மாபெரும் ஆர்பாட்டமொன்று நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களுடன் நாளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102805&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 158 views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவ தளபதி ஜங்பஹதூர்ரணாவும் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். யாழ். சென்ற அவர் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி உதய பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பினை அடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார். அத்துடன் யாழ். கோட்டை மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றிற்கும் நேபாள இராணுவ தளபதி விஜயம் செய்தார். இந்த விஜயத்தில் அவரின் பாரியார் ரோகினி ரணாவும் கலந்துகொண்டார். (படங்கள்:சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்) http://tamil.dailymirror.lk/--main/98794-2014-02-02-08-42-15.html
-
- 10 replies
- 782 views
-
-
காணாமல் போனவர்களை மரணித்துவிட்டதாகத் தெரிவித்து அவர்களிற்கு மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளினை இலங்கை அரசு மும்முரம் காட்டிவருகின்றது. அவ்வகையில் தொலைபேசி ஊடாகக் காணாமல் போயுள்ளோரது குடும்பங்களை அச்சுறுத்தி வரும் இலங்கைப் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்தவர்கள் தலா ஒரு இலட்சம் நஸ்ட ஈடு மற்றும் வேலை வாய்ப்புப் போன்றவற்றினை சலுகைகளாகக் கூறி வருவதாகத் தெரியவருகின்றது. அண்மையில் மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு வன்னியினில் விசாரணைகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மறுபுறத்தே அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கு விசாரணைககென சமூகமளித்திருந்த மக்களை அருகாகவுள்ள கட்டமொன்றில் வைத்து காணாமல் போனோர் உயிரிழந்துவிட்டதாக மரணச்சான்றிதழைப் பெற…
-
- 0 replies
- 818 views
-
-
ஏ.எவ்.பி செய்தி நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊடகவியலாளரான 46 வயதுடைய மெல் குணசேகர பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றோர்கள் தேவாலயத்திற்கு சென்று வீடு திரும்பிய போது மெல் குணசேகர வீட்டில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெற்றோர் பத்தரமுல்லை பொலிஸாருக்கு அறிவித்தனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மெல் குணசேகர தனிமையில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார். கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகை தந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்…
-
- 0 replies
- 476 views
-
-
சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கோருவதனை வழங்கியிருந்தால், மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உறுப்பினர்களின் உணர்வுகளே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண பிரதம செயலாளர் தெரிவின் போது முதலமைச்சரின் கருத்துக்களை கோரியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் கூட தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை தடுத்திருக்கல…
-
- 0 replies
- 427 views
-
-
கடந்த இரண்டு நாட்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரச உயர்மட்ட பிரமுகர்களையும் -எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கொழும்பில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.சகல தரப்பினருடனும் நேரடியான, அதாவது வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகக் கூறிய நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலானது மட்டுமல்ல, '…
-
- 0 replies
- 584 views
-
-
இந்தியா தமிழ் மக்களின் நண்பன் அல்ல, எதிரி என்பதை சம்பூரிலிருந்து மக்களை வெளியேற்றி அக்காணியை அபகரித்ததன் மூலம் நிரூபித்துள்ளது என ஜே.வி.பி. யின் அரசியல் சபை உறுப்பினரும் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யுமான அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஷோகத்தைக் காட்டி சம்பூரை பறித்தது போன்று ஐ.நா. மாநாட்டை காட்டி இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக விழுங்கி “ஏப்பம்” விடும் “சீபா” உடன்படிக்கையை செய்து கொள்ளப்போகின்றது என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அநுர திஸாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்க…
-
- 3 replies
- 612 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது என "எக்கணமிக் ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை புது டில்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது, ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதமர் மன்மோகன் சிங…
-
- 8 replies
- 775 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து இந்தியா இன்னமும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு கசெற் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராக, சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்க இந்தியா மறுத்து விட்டதாக இன்று இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஊகமே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானத்தில் அனைத்துலக போர்க்குற்ற விசாரணை, கோரப்படாது என்பதை உறுதிப்படுத்த, உதவுமாறு மன்மோகன்சிங் அரசாங்கத்திடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் உதவி கோரியதாகவும், அதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித…
-
- 10 replies
- 733 views
-
-
தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று லண்டனில் (UCL) இல் இடம்பெற்றது. தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது. நிகழ்வின் முதல் அம்சமாக தமிழ் மகா பிரபாகரனின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட 'திஸ் லான்ட் பிலோங்ஸ் ரு ஆமி ' எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன. தொடர்ந்து உரை நிகழ்திய இஸ்ரேலிய நாட்டு பேராசிரியர் ஒரின் - நி…
-
- 0 replies
- 466 views
-
-
ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் பெற்றோர் தேவாலயத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே இவர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்த வீட்டின் சமையலறையிலிருந்தே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகைதந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர், பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாக கடைமாற்றியுள்ளார்.…
-
- 2 replies
- 500 views
-
-
யாழ்.குடாநாட்டிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசியுள்ளார். யாழ்.நகரில் உள்ள கிறீன் கிராஸ் விடுதியில் நேற்றுக்காலை 11மணி தொடக்கம் 12 மணி வரையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் குடும்பமாக ஒப்படைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர் .மிக இரகசியமாக நடைபெற்ற மேற்படிச் சந்திப்பில் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டுள்ளார். சந்திப்பு தொடர்பாக அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில், போரின் நிறைவில் படையினரிடம் …
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் மத்திய மற்றும் தென் ஆசிய உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் நாளைய தினம் இலங்கையில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்கிறார். அங்கு விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் சந்திப்பு ஒன்றை அவர் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜெனீவா மாநாட்டின் போது அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அமெரிக்காவும் அந்த வகையிலான பிரேரணை ஒன்றையே தயாரித்துள்ளது. இந்த நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புக்களுடனான தொடர்புகளை கவனித்து வருகின்ற அந்நாட்ட…
-
- 4 replies
- 657 views
-
-
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் தலைமையிலான குழுவினரை யாழிலுள்ள கிறீன்கிறாஸ் விடுதியில் வடமாகாண சபை உறுப்பினரான திருமதி.அனந்தி தலைமையிலான காணாமல் போனோரின் உறவினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இச் சந்திப்பு இன்று சனிக்கிழமை யாழ். கிறீன்கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் திருமதி. அனந்தி சசிதரனுடன் காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கத்தின் சார்பில் மூவர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக திருமதி. அனந்தி சசிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் தமிழ் மக்களிடம் நல்லிணக்கத்தினைக் காட்டுவதாக இருந்தால் போர் முடிவடைந்துள்ளது என சர்வதேசத்திற்குச் சொல்லுகின்ற பொழுதாவது சரணடைந்தவர்களையும் அரசியல் கைதிகளையும் விடுவித…
-
- 0 replies
- 533 views
-
-
சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா விசேட அதிகாரி ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து இந்த அதிகாரியை நியமிக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அத்துடன் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கும் பிரேரணையின் பிரதான நோக்கம் இந்த விசேட விசாரணையாளரை நியமிப்பதே என ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னி இறுதிக்கட்ட போரின் இறுதி வாரத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த அதிகாரிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=102698…
-
- 2 replies
- 548 views
-
-
இறுதிப் போர் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் என்று அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் தாம் வலியுறுத்தியதாக யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ்.மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தார். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, அமெரிக்கக் குழு தாமும் ஜெனீவாவுக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் அங்கு எவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட…
-
- 1 reply
- 383 views
-
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கொம்பு சீவி விட்டுள்ள கோத்தா [ சனிக்கிழமை, 01 பெப்ரவரி 2014, 06:08 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வடக்கில் படையினர் மூலோபாய நிலைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய சவால் என்றும், இதனைச் சமாளித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இராணுவப் புலனாய்வுத்துறையின் பொறுப்பே என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கரந்தெனியவில் நேற்றுமாலை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் தலைமையகத்தையும், போரில் மரணமான இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கான நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “போர் முடிந்த பின்னர் வடக்கில் பிரதான மூலோபாய நிலையங்களுக்குள் மாத்திரம் இராணுவம்…
-
- 0 replies
- 731 views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றல்லாமல் இம்முறை மிகக் கடுமையான பிரேரணை கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயன்றளவு முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர…
-
- 4 replies
- 736 views
-
-
இறுதிப் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான- பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் நடத்தப்போவதில்லை. எனவே சர்வதேச விசாரணையே அவசியம் என்று இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் சந்தித்து பேசினர். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணி முதல் 8 மணிவரையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இச்சந்…
-
- 0 replies
- 366 views
-
-
சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருபது பேருக்கு சிபிஐ எனப்படும் இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை பயிற்சிகளை அளித்துள்ளது. சிபிஐ பயிற்சி அக்கடமியில் இவர்களுக்கான பயிற்சிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. பயிற்சி நிறைவுபெற்றதை அடுத்து, நேற்று நடத்தப்பட்ட பிரியாவிடை விழாவில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கலந்து கொண்டார். நான்கு வாரங்களுக்கு சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐயினால் பரந்துபட்டளவில் – பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி நிறைவு விழாவில், 'குற்றப்புலனாய்வு மற்றும் விசாரணை நடைமுறைகள் 'என்ற தொனிப்பொருளில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா உரையாற்றியிருந்தார். இதன்போது இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடை…
-
- 0 replies
- 600 views
-