ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை நோர்வே பாராட்டியுள்ளதாக, இலங்கை அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள நோர்வே தூதுவர் கிரீட் லொச்சின் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். இதன்போது வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தியதை அவர் பாராட்டியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சமூக, பொருளாதார விடயங்களில் வடமாகாணசபை நிர்வாகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட தாம் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=97949&category=TamilNews
-
- 0 replies
- 278 views
-
-
"வடமாகாணத்தைக் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்" 'எமது பெண்கள்; பாலியல் பலாத்பாரங்களுக்கு உட்படுத்தப்படகின்றனர் இவற்றை காவற்துறையினர் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்கிறது' என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன், 'அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை சட்ட விரோதமாக எங்கள் மக்கள் அங்கு செல்வதேயாகும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1) முதலில் எங்கள் வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்ட…
-
- 11 replies
- 876 views
-
-
இலங்கையில் 31 இலட்சம் தமிழர்கள்! - புதிய சனத்தொகை மதிப்பீட்டில் தகவல். [saturday, 2013-11-30 08:18:26] இலங்கையில், 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 தமிழர்கள் வசிப்பதாக, புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 6372 ஆகும். இதில் ஒரு கோடி 51 லட்சத்து 73820 பேர் சிங்களவர்களாவர். 18 லட்சத்து 69820 பேர் முஸ்லிம்கள். 33,061 பேர் பறங்கியர்கள். 40189 பேர் மலே இனத்தவர்களாவர். 2011 – 2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சனத்தொகை மதிப்பீட்டிற்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளது. இந்த சனத்தொகை மதிப்பீட்டின்படி, இலங்கையில் பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 42 லட்ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவரைச் சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் கடந்த 26ஆம் திகதி காலையில் அவர் தனது வீட்டில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் வெளியில் சென்று வந்திருந்தார். அதன்படி தற்போது பொலிஸாரினால் குறித்த நபரைக் கைது செய்வதற்க…
-
- 5 replies
- 731 views
-
-
Annonces Google தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை ஒரு சுதந்திரப் போராளி என நாடாளுமன்ற உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். அதனை கட்சியின் நிலைப்பாடில்லை. அத்துடன், சிறீதரன் அவ்வாறு பேச முடியாது என சம்பந்தன் தெரிவித்திருந்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப எந்தக் கட்டத்திலும் இத்தகைய நிலையை எடுத்ததுமில்லை, எடுக்கவும் மாட்டாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக கருத்து தெரிவித்துள்ள சிறீதரன், 'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய எனக்கு நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான சிறப்புரிமை உண்டு. எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை கேள்வி கேட்பதற்கு சபாநாயகருக்கும் மட்டுமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் நான் ஆற்…
-
- 0 replies
- 942 views
-
-
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதயில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கி பிரயோகத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மூன்று பேர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் ஏனைய இருவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/?q=node/359538
-
- 1 reply
- 400 views
-
-
தனியே நின்றிருந்தால் பெருவெற்றி அடைந்திருப்போம். அரசாங்கத்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டி இட்ட படியால், மக்களுக்கு, கூட்டமைப்பு தான் ஒரே ஒரு போட்டியிடும் தமிழ் கட்சி என கருதி வாக்குகளை அதற்கு போட்டு விட்டார்கள். நான் முதலமைச்சர் பதவிக்கு போட்டி இடாதது எனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் மிகவும் கவலையுற வைத்தால், அவர்கள் கோபத்தில் வாக்குகளை கூட்டமைப்புக்கு போட்டு விட்டார்கள் என்று நினைக்கின்றேன். நான் இப்போது அமைதியாக, எமது தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்கிறேன். கூட்டமைப்பு பெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஆனால் அது இனத்துவேச உணர்வுகளைத் தூண்டி அடைந்த வெற்றி. புலிகள் காலத்தில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை. இன்று இருப்பதால் அவர்கள் எதுவும் சொல்லி, எழு…
-
- 6 replies
- 902 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.யின் உரைக்கு ஆளும்தரப்பு எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதிக்கட்ட மோதலின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றது. குறித்தும் சனல் 4 வீடியோக்கள் தொடர்பாகவும் சம்பந்தன் எம்.பி. தொடர்ந்து பேசினார். இதற்கு ஆளும் தரப்பு பிரதம கொடரா அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், பீ.எச்.பீ.பியசேன ஆகியோர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். ஒழுங்குப் பிரச்சினையொன்றை ஏ. எச்.எம்.அஸ்வர் மனித உரிமை மீறல் குறித்து பேசும் சம்பந்தன் எம்.பி. அரந்தலாவ பிக்குகள் கொலை, காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் என்பன குறித்து மறந்து பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.சனல்-4 அலைவரிசையை விமர்சித…
-
- 4 replies
- 627 views
-
-
"விக்னேஸ்வரன் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருகின்றார் – ஆனந்தி சசிதரன்" என தலைப்பிட்டு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாக வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார் என சிலோன் ருடே வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறு என அனந்தி சசிதரன் எழிலன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு காலை தெரிவித்தார். தமிழ் தெரியாத சிங்களப் பெண்மணி செவ்வியை எடுத்ததாகவும் தான் குறிப்பிடாத விடயங்களை கூறியிருப்பதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்த போதிலும் சேவைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் நிலவி வருவதாகவும், சேவைகளை பெற்றுக்கொ…
-
- 4 replies
- 866 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தைரியம் பாராட்டுக்குரியது என பொதுபல சேனா அமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது. பாராளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போற்றியும் மாவீரர் தினத்தை பற்றியும் பேசிய சிறீதரனின் தைரியம் பாராட்டுக்குரியது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பிரபாகரனை ஓர் சுதந்திரப் போராட்ட வீரராகவும் தமிழ் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவராகவும் சிறீதரன் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறெனினும், தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான மொனரவில கெப்பிட்டிப்பொலவை எந்தவொரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் நினைவு கூர்ந்து பேசவில்லை என ஞானசார தேரர் தெரிவித்…
-
- 2 replies
- 521 views
-
-
அது ஒரு தொலைபேசி அழைப்பு... முள்ளிவாய்க்கால் தின்ற லட்சக்கணக்கானவர்களில் ஒருவரது குரல்... தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து என்னை அழைத்த குரல்... அண்ணை எனக்கு ஒரு உதவி செய்வீர்களா... ஒரு கொஞ்சக் காசு அனுப்பி விடுவீங்களா? ஒரு சின்ன கொட்டில் வீடு ஒன்று அமைத்து வாழ்வதற்கு.... எனக்கு இடுப்பிற்கு கீழ் இயங்காது... மிகுந்த கஸ்ரத்திற்கு உள்ளாகி இருக்கிறேன்... என்று கூறியவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு போராளி... தன்னை புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் என்று அழைப்பார்களாம்.. அவருடைய மனைவியும் போராளி.... முகம் எரிந்து தழும்புகள் காணப்படுகின்றன. அந்தப் போராளி கேட்ட பணம் 6 -7 பக்கற் சீமெந்தும் தகரமும் வாங்கக் கூடிய தொகைப் பணம் மட்டுமே... அவர் கேட்ட பணத்தை…
-
- 1 reply
- 539 views
-
-
இறுதிக்கட்டம் என்ற பெயரிலான இலங்கை அரசசார்பு ஆவணப்படம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டுள்ளது. பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. இதன்போது இராஜதந்திரிகள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சிலர் மற்றும் இலங்கையின் நண்பர் குழுவினர் பிரசன்னமாயிருந்தனர். இந்த ஆவணப்படத்தில் ஜெயவதனி என்ற முன்னாள் போராளி ஒருவர் செஞ்சோலையில் வளர்ந்த விதம் பின்னர் போராளியாக உருவானமை போன்ற அம்சங்கள் காட்சியாக்கப்பட்டிருந்தன. ஜீவன் சந்திமல் என்பவர் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.இந்த ஆவணப்பட காட்சியின் பின்னர் கருத்துரைத்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வான் ஓர்டன் என்ற உறுப்பினர், இலங்கையில் படையினரின் நடவடிக்கைகளை கா…
-
- 0 replies
- 407 views
-
-
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த மாகாணங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக கைவிட்டுள்ளமை கவலைதரும் விடயமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார் . வரவு – செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது; யுத்தத்தினால் உயிர்களையும் உடைமைகளையும் இழந்த இந்த மக்கள் யுத்தம் முடிவடைந்து நான்கரை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நடுத்தெருவிலேயே நிற்கின்றனர். யுத்தத்தில் விதவைக…
-
- 0 replies
- 368 views
-
-
பிரான்ஸின் தலைநகர் பரிஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வடகிழக்குப் பிராந்தியமான ஸ்ரார்ஸ்பேர்க்கில் நேற்று இரவு உலக ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த ஒரு நிகழ்வில் வைத்து இந்த விருது உதயனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இந்த நிகழ்வில் உதயன் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன், உதயன் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் ஆகியோர் கூட்டாக இந்த விருதினை பெற்றுக்கொண்டனர். http://www.e-jaffna.com/archives/20631
-
- 0 replies
- 416 views
-
-
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளரினை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலக வீதியில் இன்று நடமாடியதனால் இப்பிரதேசத்தில் இன்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தேரரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், வீதியில் டயர்களை போட்டு எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சுமணரத்ன தேரர் மட்டக்களப்புக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தேரரை பொலிஸார் தங்களுடைய வாகனத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் மண்முனைத் துறை வரை கொண்டு சென்று விட்டனர். இதே நேரம், இன்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்றுவருகின்றது. மட்…
-
- 1 reply
- 373 views
-
-
ரி.பாருக் தாஜுதீன் 'இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போது நான் சுமார் 5 நிமிடங்கள் வரை வாகனத்துக்குள்ளேயே கதவை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் என்னை அம்புயுலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்' என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாட்சியமளித்த போது குண்டு வெடித்த பின்னர் தான் 5 நிமிடங்கள் வரை வாகனத்தின் கதவை பிடித…
-
- 0 replies
- 644 views
-
-
அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆவணப்படமொன்று ஐரோப்பிய பாராளுமன்றில் திரையிடப்பட்டுள்ளது. 'இறுதிக் கட்டம்' என இந்த ஆவணப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் பங்கேற்ற பெண் தற்கொலைதாரி ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. பிரசஸ்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றில் முதல் தடவையாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நட்பு குழுவினால் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் சொல்லப்படாத துரயங்களே இந்த ஆவணப்படு…
-
- 0 replies
- 457 views
-
-
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு, அமைச்சர் டக்களஸ் வேதானந்தா அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவில்; முதலமைச்சர் இணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார். இதற்கு முன்னார் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறியுடன் இணைந்து செயற்பட்டதாகவும், தற்போது முதலமைச்சருடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி பேதங்களை களைந்து மாவட்ட மற்றும் மாகாண மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஊடாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் சேவையாற்ற முடியும் என என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 492 views
-
-
"போர்க்கால இழப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை" இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார் புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டபிள்யு.டி.குணவர்த்தன. போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சொத்தழிவு, உயிரிழப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை புள்ளிவிவரவியல…
-
- 0 replies
- 497 views
-
-
••••• எங்கள் ஐக்கியம்-எங்கள் வாக்கு-எங்கள் பலம் ••••• உணர்வுள்ள அனைவருக்கும் அழைப்பு > அணிதிரண்டு வருக! ஆதரவு தருக! கம்பஹா மாவட்ட தமிழர் ஒன்றுகூடல் - நீர்கொழும்பு - சனிக்கிழமை - மனோ கணேசன் - விக்கிரமபாகு <<தலைப்பு - எதிர்வரும் மேல் மாகாணசபை தேர்தலில் கம்பஹா மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம்>> <<காலம் - சனிக்கிழமை மாலை 6.30மணி>> <<இடம் - நீர்கொழும்பு, எதுகல, இல.74, பொருதொட்ட வீதி, செரிலேன்ட் மண்டபம்>> இன்றைய புதிய சமாதான காலகட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்மை நாம் ஜனநாயக அரசியல்ரீதியாக பலப்படுத்தி கொள்ளவேண்டும் என்ற எமது தலைவரின் கொள்கைக்கு இணங்க நடைபெறும் இந்த கலந்துரையாடலில், நேரத்தை ஒதுக்கி கலந்து…
-
- 0 replies
- 372 views
-
-
பயங்கரவாத விசாரணைப் பிரிவு ( TID) என்ற கோத்தபாயவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும்.. சிங்கள இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அடங்கிய கொடூரக் கும்பலே.. அண்மையில் வடமராட்சியில் உள்ளூராட்சி மக்கள் பிரதிநிதிகளின் இல்லங்கள் மீதான தாக்குதலில் பங்குபற்றி இருப்பதாக அவர்கள் பயன்படுத்திய வாகனங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே பிரிவினர் தான் ஐயா ஜெயபாலனையும் கைது செய்திருந்ததாக அவர் கூறி இருந்தார். ஆனால் அவர்கள் தன்னை கண்ணியமாக நடத்தியது போன்றும் சிங்களப் பொலிஸார் தான் மோசமாக நடந்து கொண்டது போலவும்.. அவரின் முதல் அறிக்கை கூறியுள்ளது. மேலதிக விபரங்கள்... Sri Lankan TID involvement in attacks on Tamil councilors exposed [TamilNet, Wednesday, 27 November 20…
-
- 0 replies
- 667 views
-
-
தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும், புலத்திலும் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டது. ஆனால் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர புலம் பெயர தேசங்களில் மாத்திரமே மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புலம் பெயர்த் தமிழரகள் …
-
- 18 replies
- 1.7k views
-
-
அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் ஏற்பட்ட உயிர், உடல், சொத்து அழிவுகள், பாதிப்புகள் தொடர்பான முழுமையான விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இன்று தொடக்கம் சிறிலங்காவில் இதுதொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 1983ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடுமுழுவதிலும் இடம்பெற்ற போர் மற்றும் வன்முறைகளினால், மரணமானவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வீடுகள் மற்றும், சொத்துகளை இழந்தவர்கள், காணிகளை பறிகொடுத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளன. இந்தக் கணக்கெடுப்பு…
-
- 3 replies
- 509 views
-
-
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் [ புதன்கிழமை, 27 நவம்பர் 2013, 12:45.16 PM GMT ] தமிழ்வின் யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார். குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன், இளைஞர்களின் நடமாட்டமும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கும் கடுமையான பாதுகாப…
-
- 10 replies
- 1.2k views
-
-
27.11.2013 மாவீரர் நாள் அறிக்கை 2013 அன்பான தமிழீழ மக்களே ! இன்று மாவீரர் நாள். வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும் நாள். பிறப்பு ஒன்று இருக்குமானால் இறப்பு என்பது நிச்சயமானது. இது இயற்கையின் நியதி. ஆனால் எமது மாவீரர்களின் மரணம் இயற்கையின்பாற் பட்டதல்ல. இது ஒரு இலட்சியத்திற்கானது. அர்த்தமுள்ளது. போற்றுதற்குரியது. எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்க…
-
- 7 replies
- 1.1k views
-