ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி;வி விக்கினேஸ்வரன் வலி.வடக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுடனும் கலந்துரையாடினார். உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடி எதிர்காலத்தில் இராணுவ வெளியேற்றம், உயர்பாதுகாப்பு வலையம் இல்லாது செய்தல் , மீள்குடியேற்றம் என்பவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். போராட்டத்திற்கு ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய வடக்கு நிலமைகள் குறித்து தெளிவு படுத்தியதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவு படுத்தினார். - See mo…
-
- 0 replies
- 446 views
-
-
பொது நலவாய மாநாட்டு அரச தலைவர்கள் இன்று மட்டக்களப்புக்கு செய்யவிருந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார். குறித்த விஜயம் இரத்துத் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேறு இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாலேயே குறித்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் இருபது நாடுகளின் அரச தலைவர்கள் மட்டக்களப்புக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்து இரண்டு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிடவிருந்தனர். இவ்வாறிருக்கையிலேயே குறித்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மட…
-
- 0 replies
- 450 views
-
-
ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின் செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது. அவர் பொதுநலவாய கொள்கைகளை காப்பாற்ற விளைகிறாரா அல்லது இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் பதினாறு அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான விதிகளான ஜனநாயகம், மனித உரிமைகள், மத சுதந்திரத்தை வலியுறுத்தும் சகிப்புத்தன்மை, பேச்சு சுதந்திரம், நீதி-பாராளுமன்றம்-நிர்வாகம் ஆகியவற்றின் பரஸ்பர சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, சுகாதாரம்-கல்வி-குடிநீர் ஆகிவற்றுக்கான உரிமை ஆகிய எட்டு விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் கறை படிந்த வர…
-
- 1 reply
- 461 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்லப் போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக்கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர்களிடம் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர் மேலும் தெரிவிததிருந்;தார். சர்வதேச நாடுகளது விருந்தினர்களுடனான இராப்போசன நிகழ்வொன்றில் கலந்து கொள்ளுவதற்கான அழைப்பொன்று மஹிந்தவினால்…
-
- 3 replies
- 778 views
-
-
இலங்கையில் சுமார் மூன்று வருடங்கள் தான் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி 43 வயதுடைய ரோய் சமாதானம் என்ற கனேடிய தமிழர் ஒருவர் ஐநா மனித உரிமை குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தான், பிளாஸ்டிக் குழாய் மற்றும் ரி-56 ரக துப்பாக்கி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமை குழுவில் தான் செய்த முறைப்பாடு குறித்து டொரொன்டோவில் இன்று (13.11.13) ஊடக சந்திப்பு நடத்தி ரோய் சமாதானம் தெளிவுபடுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனக்கு நடந்தவை என்னவென்று உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நபரே கூறுவது சிறந்தது என ரோய் சமாதானத்திற்கு சட்ட உதவி…
-
- 0 replies
- 370 views
-
-
இரண்டாம் நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் வலிகாமம் வடக்கு மக்களது உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்த மக்கள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வடமராட்சியின் உடுப்பிட்டி மற்றும்; பொலிகண்டி இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மீதே இன்று காலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை நேற்றைய தினம் போன்று போராட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி புறப்பட தயாராக இருந்த வேளையில் தரித்து நின்ற வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்தவாறு சென்ற சிலரே கற்களை வீசிய பின்னர் தப்பித்து சென்றுள்ளனர். தாக்குதலில் பொதுமக்களிற்கு சேதங்கள் ஏதும் ஏறபட்டிராத போதும் வாகனங்கள் சேதமட…
-
- 0 replies
- 357 views
-
-
செனல்4 ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. நேற்றைய தினம் சினமன் கிரான்ட் ஹோட்டலிலிருந்து வெளியேறிய போது, ஜனாதிபதி; மஹிந்த் ராஜபக்ஷவை, செனல்4 ஊடகவியலாளர்கள் நெருங்கி கேள்விகள் சிலவற்றை கேட்டனர். யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நிலைப்பாடு என்ன, சந்திக்க முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர். செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தனர். சந்திக்க முடியும் எனவும், தம்முடன் தேனீர் அருந்த வருமாறும் ஜனாதிபதி பதிலளித்திருந்தார். யுத்தக் குற்றச் செயல் குறித்த கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை. ஜனாதிபதியை நெ…
-
- 0 replies
- 380 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்லவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளமை உறுதியாகியுள்ளது. அவரது யாழ். விஜயத்துக்கான முன்னேற்பாடாக கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவினர் இன்று (13.11.13) யாழ் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர். இந்தக் குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். யாழ். பொது சன நூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக யாழ். பொது சன நூலகத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொ…
-
- 0 replies
- 353 views
-
-
A hospital run by President Mahinda Rajapaksa’s brother and Secretary to the Ministry of Defence Gotabaya Rajapaksa in Colombo is offering illegally trafficked kidneys by an international organ dealer, the UK based Times of London has revealed in an investigation. The organ dealer promises to arrange surgery at Lanka Hospitals of which is chaired by Gotabaya Rajapaksa, the report reveals. The government-controlled hospital in Colombo is being recommended to patients from Britain and elsewhere a suitable place to receive an organ purchased for tens of thousands of pounds on the black market. Lanka Hospitals was previously Apollo Hospitals. https://www.colombo…
-
- 4 replies
- 1.1k views
-
-
காணொளி : நந்திக் கடற்கரைக்கு சென்ற பிரித்தானிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய பெட்டகம்... காணொலியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9985:2013-11-13-08-43-57&catid=1:latest-news&Itemid=18
-
- 2 replies
- 734 views
-
-
நவம்பர் 12, 2013 வலி.வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் படைத்தரப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடுகள் இடிப்பினை தடுத்து நிறுத்தக்கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்கதும் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுமான மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பான இன்று காலை முதல் ஆரம்பமாகி இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலி.வடக்கு மக்கள் தம்மை மீள்குடியமர…
-
- 4 replies
- 642 views
-
-
'நெஞ்சு கொதிக்கும் அளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும், ஓராயிரம் செய்திகள் வருகின்றன இலங்கைத் தமிழர் படும் அவதிகள் பற்றி' நெஞ்சு கொதிக்கிறது மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'நெஞ்சு கொதிக்கும் அளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும், ஓராயிரம் செய்திகள் வருகின்றன இலங்கைத் தமிழர் படும் அவதிகள் பற்றி' என்று 1958 ஆம் ஆண்டே குறிப்பிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், உலகில் தமிழர்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளானாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு என்ற கருத்தையும் நமக்கு வழிகாட்டியாக விட்டுச் சென்றுள்ளார். தமிழர் நலன் காக்க குரல் கொடுக்கும் அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் கரு பொருளாதாரத் தடை கோரினோம் இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை வித…
-
- 1 reply
- 514 views
-
-
அமர்வுகளில் பங்கேற்காமைக்கு மன்மோகன் விளக்கம் அளிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ் 13 நவம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறித்து பிரதமர் மன்மோகன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுவும் பங்கேற்காமல் விடுவதும் அவரவர் விருப்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்ற காரணத்தினால் அமர்வுகள் தோல்வியடைப் ப…
-
- 0 replies
- 393 views
-
-
புதுச்சேரியை ஸ்தம்பிக்க வைத்த காமன்வெல்த் எதிர்ப்பு கடையடைப்பு போராட்டம்! 13 நவம்பர் 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று (12.11.13) நடந்த வர்த்தகர்கள் முழு கடையடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது. தமிழகத்தை விட புதுவையில் மக்களும் சரி, வியாபாரிகளும் சரி, இந்த போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். புதுச்சேரியில் இயல்பு நிலை கிட்டத்தட்ட முழுமையாகவே பாதிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98931/lang…
-
- 1 reply
- 428 views
-
-
பிரித்தானிய பிரதமருடன் சந்திப்பு நடாத்த ஜனாதிபதி மஹிந்த இன்னமும் இணங்கவில்லை? 13 நவம்பர் 2013 பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் சந்திப்பு நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் இணங்கவில்லை என பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றை நடாத்த பிரதமர் கமரூன் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அறிவித்திருந்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பொதுமக்கள் படுகொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் ஊடக அடக்குமுறைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்…
-
- 0 replies
- 404 views
-
-
No Fire Zone App ShareNo Fire Zone App The No Fire Zone app - including an interactive version of the critically acclaimed feature length film, No Fire Zone: The Killing Fields of Sri Lanka, is a forensic investigation into the final weeks of the bloody civil war in Sri Lanka. While watching the film, app users will be encouraged to interact with the rich content including news reports; United Nations and Red Cross reports and analysis of the atrocities; a timeline chartering key events from 1956 to the present day; biographies, location maps; video from key contributors and film makers; and live links to the latest opinions, online content and further reading. In 2…
-
- 0 replies
- 489 views
-
-
யாழ். : உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது என்று மரண அச்சுறுத்தல் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 நவம்பர், 2013 - 16:12 ஜிஎம்டி வலிகாமம் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீள்குடியேற்ற வேண்டும் என்றும் கோரி நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருந்தவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவருக்கும் உபதலைவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி ம…
-
- 0 replies
- 312 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி : நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர் தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்ய…
-
- 28 replies
- 2.7k views
-
-
இன்று (13.11.2013) அதிகாலை நெடுஞ்சாலைத் துறையினர், காவல்துறையினர் உதவியோடு தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்ற சுற்றுச் சுவரை இடித்துவிட்டு, அங்கு வேலி ஒன்றை அமைத்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழ. நெடுமாறன் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். வைகோ சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது இந்நிலையில் தஞ்சையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு வைகோவும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 463 views
-
-
கொழும்பில் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிப்பதாக மொரிஷியஸ் தலைமை அமைச்சர் நவீன் சந்திரா ராம்கூலாம் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காவின் ; மனித உரிமை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய அனைத்து விடயங்களை விடவும் மனித உரிமைகள் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;. சிறீலங்காவுக்கு அடுத்தபடியாக எதிர்வரும் 2015ம் ஆண்டு மொரிஷியஸில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1968ம் ஆண்…
-
- 7 replies
- 841 views
-
-
-
-எஸ்.ஜெகநாதன், குணசேகரன் சுரேன, எஸ்.கே.பிரசாத் வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்வைக்க வடமாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் அந்தப் பிரேரணையினை வழிமொழிய தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆரம்பப் பாடசாலையில் தங்கியிருக்கும் விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுவதற்கு கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனினால் வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப…
-
- 14 replies
- 918 views
-
-
காணொளி: மகிந்தவிடம் கேள்வி கேட்கும் சணல் -4.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9976:-----4-&catid=1:latest-news&Itemid=18
-
- 12 replies
- 1.3k views
-
-
கனேடியப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியிலிருந்து யாழ்.ரில்கோ சிற்றி விடுதியில் இடம்பெற்றது. பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற கனேடியப் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு பயனித்திருந்தனர். அங்கு சென்ற கனேடியப் பிரதிநிகள் முதலமைச்சரை சந்திப்பதற்கு முன்னதாக யாழ்.ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தனர். ஆயருடனான சந்திப்பிலும் முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலையில் முதலமைச்சருடனான சந்திப்பில் யுத்தத்திற்கு பின்னரான வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பிலும் அவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும் கனேடியப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டதாக ம…
-
- 4 replies
- 568 views
-
-
தான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ள செனல் -4 தொலைக்காட்சியின் தயரிப்பாளர் கெலும் மெக்ரே தான் புலிகளின் ஆதரவாளன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கெலும் மெக்ரேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான நிலைய வாயிலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதெ கெலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்துக்கு வந்த கெலும் மெக்ரே ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடவும் முற்பட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த கெலும் மெக்ரே, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லவெனவும் அந்த அமைப்பிடமிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம…
-
- 6 replies
- 919 views
-