Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 08 AUG, 2024 | 11:06 AM ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) புதன்கிழமை காலை இடம்பெற்ற “ 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பில்” ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 1970ஆம் ஆண்டு அரசியலிற்கு…

  2. 07 AUG, 2024 | 06:53 PM (எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் வருமான வழிகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையைச் சரியாக முன்னெடுத்தால் அரச துறைகளில் இடம்பெறும் மோசடிகளைக் குறைக்கலாம் என்பதுடன் அரச வருமானத்தையும் அதிகரிக்கலாம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்வைத்துள்ள அரையாண்டு அரசிறை அறிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் காணப்படுகின்ற ப…

  3. அழிவின் விளிம்பில் கௌதாரிமுனை! பணிப்பாளரின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு! adminAugust 6, 2024 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளை இலக்கு வைத்து மீண்டும் பாரிய மணல் கொள்ளை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (06.08.24) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்கள் போராட்ட அமைப்புக்களது போராட்டத்தையடுத்து கடந்த நான்கு வருடங்களிற்கு மேலாக நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டிருந்த மணல் அகழ்வு தற்போது கனியவள திணைக்கள அதிகாரிகளது பங்கெடுப்புடன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப…

  4. யுத்தம் இல்லாத காரணத்தால் மதப்பிரச்சினையை ஏற்படுத்த வடக்கிலும், தெற்கிலும் சதி! - அநுரகுமார முப்படைகள் முன்னிலையில் அநுரகுமார குற்றச்சாட்டு! யுத்தத்தால் நீண்டகாலமாக தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்ட ரணிலும் மஹிந்தவும், யுத்தம் இல்லாமல் போனதால் இப்போது சோர்வடைந் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்கள் மீண்டும் ஒரு மதப் பிரச்சினையை ஏற்படுத்த வடக்கிலும் தெற்கிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற முப்படையினர் கூட்டமைப்பின் தேசிய மாநாடு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெ…

  5. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்பு! எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில் ” அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்களே தீர்மானிக்கவுள்ளனர். ஆனால் மக்கள் அதனை தீர்மானிப்பதற்கு பொதுவான கொள்கை ஒன்று அறிவிக்கப்படவேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இதனை அறிவிக்கவேண்…

    • 2 replies
    • 358 views
  6. பிரபல பெண்கள் பாடசாலையில் பிள்ளையானின் சகாவினது சேட்டைகள்...! மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி : சாணக்கியன் MP ! By kugen பிரபல பெண்கள் பாடசாலையில் பிள்ளையானின் சகாவினது சேட்டைகள்...! மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி என பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளமன்றில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். , பல மாணவிகளுடன் சேட்டை விட்டுள்ளார். துணிந்த ஒர் மாணவியே வெளிகொனர்ந்துள்ளார். பெற்றோர்கள் இவ் விடயத்தில் மிகுந்த அவதானமாக செயல்பட வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பிள்ளைகளை பாதுகாக்கவேண்டிய நிர்வாகமும் உடந்தை.. இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான் ) கட்ச…

  7. Published By: DIGITAL DESK 7 07 AUG, 2024 | 08:36 PM (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சீன இராணுவத்தின் பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற 'அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மன்னார் வ…

  8. மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும், நியாயமும் கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் (V.S.Sivakaran) வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் நேற்று (06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் மற்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மு…

  9. பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு! August 6, 2024 மருத்துவர் ஒருவர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். …

  10. Published By: DIGITAL DESK 7 07 AUG, 2024 | 06:48 PM இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்ததை நடைமுறைபடுத்துங்கள் அதுமட்டுமன்றி இந்திய மீனவர்கள் வடபகுதிக்கு நேரில் வந்து எமது வாழ்கை முறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கு விரைவான ஏற்பாடுகளை செய்யுமாறு யாழ்.மாவட்ட கடற்மொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் முன்னாள் தலைவரும் அகில இலங்கை மீனவ மக்கள் தொழில் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தொரிவித்தார். இலங்கை இந்திய பிரதிநிதிகள் இடையே சந்திப்பை ஏற்படுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் என்.ஜெய்சங்கர் உறுயளித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை த…

  11. 07 AUG, 2024 | 12:52 PM நாட்டில் இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 197 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 73 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 479 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைகளின் தாக்குதல்களினால் 169 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190487

  12. ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிட்டுக் காட்டவேண்டும் என்றும், சில ஆவணங்களை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட கொழும்பு விலாசம் ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வை…

  13. விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்! விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா். தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒர…

  14. 07 AUG, 2024 | 12:01 PM 2022 அரகலயவின் போது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இராணுவபுரட்சிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் அது மீண்டும் இடம்பெறுவதற்கு அனுமதிக்க கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2022 இல் இராணுவதலைவர்களாலும் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத்தினராலும் நாட்டின் தலைவரை பாதுகாக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவ்வேளை இராணுவதளபதியாக பதவிவகித்த சவேந்திரசில்வாவை விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே 2022 இல் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு சவேந்திர சில்வா பாத…

  15. ஒரு நாட்டிற்கு பலவந்தமாக தலைவர்களை நியமிக்க முடியாது! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடுகம்பொல அலுவலகத்தில் 4 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டச் சபைக் கூட்டத்தில் இந்தக் குழு இந்த உறுதிமொழியை வழங்கியது. கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 13 பாராள…

    • 0 replies
    • 281 views
  16. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கா?; தமிழ் பொது வேட்பாளரின் பின்புலம் என்ன? ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற பின்புலத்தில் அந்த விடயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ”தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக பேசிவரும் பிரச்சினையை தோல்வியில் முடிவடைய செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.” தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். என்றாலும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.…

  17. காங்கேசன் துறைமுகத்தில் கண்வைக்கிறது இந்தியா! 30 ஆண்டு குத்தகைக்கு இலங்கையிடம் கோரிக்கை காங்கேசன்துறை துறை முகத்தின் அபிவிருத் திக்காக 62 மில்லியன் அமெரிக்க டொலரை மானியமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் துறைமுகத்தை 30 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளவும் இந்தியா முயற்சிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . ஆரம்பத்தில், காங்கேசன்துறை துறை முகத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் கடன் வழங்க எண்ணியது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஆயினும், இந்தியாவின் மானிய உதவியின் கீழ் குறித்த துறைமுக அபிவிருத்திக்கான முன்மொழிவுக்கு இ…

  18. சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையில் இதுவரை கொழும்புக்கு மட்டுமே விமான சேவை காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வருகை இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்ற நிலையில் இவ் ஆண்டு ஜூன் மாதம் …

  19. வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பாெலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/ar…

  20. சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை 11 MAY, 2024 | 04:38 PM (எம்.மனோசித்ரா) சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போ…

  21. 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். அந்த வாக்கினை இன்னாருக்கு அளியுங்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத…

  22. பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த ஊடக அறிக்கையில்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம். 2700 நா…

  23. யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது! யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா். குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிச…

  24. ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இருவர் சுயாதீன வேட்பாளர்களாக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் இதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் தம்மிக்க ரத்நாயக்கவினால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் கட்டுப்பணம்…

  25. திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி திருக்கோணமலை மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றது. இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.