ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
தமிழர்களின் வரலாற்றில் எத்தனையோ சோதனையான காலகட்டங்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறது இந்த இனம். “தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறோம்” என்று கூறியபடியே தமது பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சோரம்போன அரசியல் தலைவர்களையும் போராளித் தலைவர்களையும் கண்டவர்கள்தான் நாம். இந்த இனம் தமது விடுதலை குறித்து கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் வாழ்ந்த பொற்காலம்தான் புலிகளின் ஆட்சிக்காலம். இதை எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள். எந்த மிரட்டலும் விலைபேசலும் புலிகளை அடிபணிய செய்யவில்லை. மக்களினதும் புலிகளினதும் உளவியல் அலைவரிசை சீராக பயணித்த ஒரு அற்புதமான காலகட்டம் அது. புலிகளின் ஆட்சிக்கு முன்பும் சரி மே 18 இற்கு பின்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் சரி…
-
- 23 replies
- 1.8k views
-
-
இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவது தொடர்பில் இலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தமிழகத்தில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் ஒட்டுமொத்தமாக மன்மோகன் சிங் வருகையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில் கடைசியாக வருகின்ற இந்திய செய்திகளின்படி, இந்திய பிரதமர் இலங்கை வந்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார் என்றே தெரியவருகிறது. இந்திய மத்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக தமிழர்கள் தொடர்பாகவும் இந்திய பிரதமருக்கு பாரிய கடப்பாடுகள் உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கையுடனான நட்பை பேணுவதற்காக வரலாறு முழுக்க…
-
- 1 reply
- 476 views
-
-
November 3, 2013 சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை, சுப்ரமணியம் பரமேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார். இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அற…
-
- 12 replies
- 1.1k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்ற முடிவை எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்துள்ளன. இறுதித் தீர்மானம் எடுக்கப்படுவதற்காக நேற்று கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானம் எதுவும் எடுக்காது கலைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும், பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்ற முடிவையே எடுக்கவிருப்பதாக சில செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. எனினும், கலந்துகொள்வதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்வார் என்ற தீர்மானத்தை அறிவித்தால் தமிழகத்தில் பரந்தளவில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் முன்னெடுக்க…
-
- 2 replies
- 539 views
-
-
http://youtu.be/hZtjZixFNLI .... இதை இங்கே இணைப்பதற்கு மன்னிக்கவும். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
இராணுவத்திற்கு சவால் விடுத்து, புதிய கட்டமைப்பை கட்டியெழுப்பிய பிரபாகரன் திறமைசாலி!- கோத்தபாய [Thursday, 2013-11-07 07:29:09] ஒரு நாட்டின் பாரிய இராணுவம் ஒன்றுக்கு சவாலை ஏற்படுத்தி, கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்பும் வல்லமை திறமையாளருக்கே இருக்கும். இதனால் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை நான் பிரபாகரனிடம் காண்கிறேன். பிரபாகரன் ஒரு திறமைசாலி என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஜே.வி.பியின் ஸ்தாப தலைவர் ரோஹன விஜேவீர ஆகியோர் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். உண்மையில் இவர்கள் இருவரையும் ஒருவரோடு …
-
- 5 replies
- 980 views
-
-
நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைதுபோலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். ஜோதி தொடர் ஓட்ட பயணம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 8-ந் தேதி தொடர் ஓட்ட பயணம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்றடைய இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். …
-
- 0 replies
- 799 views
-
-
சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த மக்களோடு மக்களாக, வவுனியா, மாரம்பக்குளம் பகுதியில் செல்வராணி என்ற இளம்பெண் தனது கணவர் பிரான்சிஸ் சேவியர், மகள் திரானி, 1 ½ வயது மகன் தினேசுடன் தவித்துக் கொண்டிருந்தார். தினமும் செத்து.. செத்து.. எத்தனை நாள்தான் வாழ்வது என்று முடிவுக்கு வந்த செல்வராணி, இனி உயிர் வாழ வேண்டும் என்றால், அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் அடைவோம் என்ற எண்ணத்தில் படகில் ஏறி குடும்பத்துடன் இந்தியா வந்தார். இந்தியா வந்த அவர்கள் தமி…
-
- 3 replies
- 663 views
-
-
"தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது" தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது என கனடாவில் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனை சர்வதேச சட்டங்கள் கூறியிருக்கின்றன. இதேவேளை தமிழ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் இனப் படுகொலை என்பதனை சர்வதேசம் இதுவரை ஏற்க மறுக்கிறது. முழுமையாக காணொளியை பாருங்கள் கேளுங்கள்.
-
- 21 replies
- 1.4k views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும் என சிரேஸ்ட ராஜதந்திரியும் முன்னாள் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயலதிக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்காவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நிச்சயமாக இடைவெளி ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் அமர்வுகளை புறக்கணித்தால் அது குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கையில் பெரு விரிசலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமர்வுகளில் பங்கேற்காது தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தியாவின் முனைப்புக்களில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும்…
-
- 0 replies
- 364 views
-
-
தமிழ்ப் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தினர் பிரதமரை சந்தித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரி;த்தானிய அரசாங்கம் கனடாவை பின்பற்ற வேண்டுமென தமிழ்ப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். அமர்வுகளில் பங்கேற்றால், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானியா உதாசீனப் போக்கைப் பின்பற்றுவதாகவே வெளிப்படும் என தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அமைப்பின் தலைமைப் பதவிய…
-
- 0 replies
- 420 views
-
-
காணொளி : இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக BBC தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9918:-----bbc---&catid=1:latest-news&Itemid=18
-
- 2 replies
- 777 views
-
-
மேற்படி விடயம் தொடர்பில் என்னை மேற்கோள் காட்டி எனக்கு இணக்கம் இல்லாத சில செய்திகள் வெளிவந்து உள்ளமையால் இம் மாநாடு தொடர்பில் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்த விரும்பு விரும்புவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மன்னார் ஆயர் கூறி உள்ளார்:- 1. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையை ஒரு பொறுப்புள்ள நாடாகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே CHOGM மாநாடு கொழும்பில் கூட்டப்படுகின்றது. தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலை நடவடிக்கைகள் காரணமாக கொழும்பில் இம்மாநாடு நடத்தப்படுவது பொருத்தமில்லை என நான் கருதுகிறேன். கொழும்பில் இம்மாநாடு நடாத்தப் படுவது பொதுநலவாய நாடுகளின் பட்டயத்திற்கு (Commonwealth Charter) முரணானது எனவும் நான் கருதுகிறேன். பேராயர் தெச்மண்ட் டுட்…
-
- 2 replies
- 495 views
-
-
-
- 3 replies
- 685 views
-
-
செனல் - 4 தொலைக்காட்சியின் கெலம் மக்கரேக்கு இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கியமை அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும். இதனை எதிர்க்கின்றோம். மெக்கரே அத்து மீறி செயற்பட்டால் உடனடியாக அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் சேதப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றால் அது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், செனல் 4 தொலைக்காட்சியின் கெலம் மக்கரே இலங்கைக்கு எதிரான செய்திகளையே வெளியிட்டு எமது நாட்டை அகௌரவப்படுத்தியவர். அண்மையிலும் சோடித்த தகவல்களுடன் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சித்திரிக…
-
- 0 replies
- 635 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். இம்மூன்று குழந்தைகளையும் குறித்த தாய் நேற்று வியாழக்கிழமை பிரசவித்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பிரதேசத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் சபேஸ்கலா எனும் தாயே மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளார். இம் மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் எனவும் இக்குழந்தைகள் மற்றும் தாய் தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன் மேலும் தெரிவித்தார். கடந்த மாதமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் ஒரே சூலி…
-
- 0 replies
- 286 views
-
-
தென்பகுதி மீனவர்களின் வருகையை கண்டித்து மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராம மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் சௌத்பார் தென் பகுதி கடற்கரையில் தங்கி நின்று கடல் தொழிலில் ஈடுபட வருகை தரவிருக்கும் தென்பகுதி மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபபட்டது. . http://www.virakesari.com/?q=node/359026
-
- 0 replies
- 283 views
-
-
மாநாட்டை புறக்கணித்தால் பிரச்சினைகளை யாரிடம் பேசுவது: ஞானதேசிகன்:- இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இலங்கைத் தமிழர்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து யாரிடம் பேசுவது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் குறிப்பிடுகையில், இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என பல்வேறு கட்சிகளும் தமிழக அமைப்புகளும் போராடி வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. உயர்மட்டக் குழுவைக் கூட்டி, விவாதித்து மத்திய அரசு முடிவெடிக்கும். தமிழக மக்கள், அரசியல் கட்சித் தலைவர்…
-
- 0 replies
- 636 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் ஒதியமலைப் பகுதியல் உள்ள தமிழ் மக்களின் காணிநிலங்களை அபகரிப்பதற்காக அப் பகுதியை சிங்களவர்கள் சுற்றிவளைத்துள்ளனர். தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலப்பகுதி ஒதியமலை. இந்தப் பகுதியிலிருந்து 1982ஆம் ஆண்டில் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். இப் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டபோதும் சுமார் 200 ஏக்கர் வயல் நிலப்பகுதியை மக்களுக்கு வழங்காமல் இராணுவத்தினர் கையப்படுத்தி வைத்திருந்தனர். தமது வயல் நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பகுதியில் குடியே…
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கைக்கு எதிரான 12 ஊடகங்களுக்கு அனுமதி! கொழும்பு: இலங்கைக்கு எதிராகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த 12 பேருக்கு, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே இவர்களை அனுப்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது. இவற்றில் சேனல் 4 தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் வரவழைக்கப்படுவதாக இலங்கை அரச…
-
- 1 reply
- 555 views
-
-
காணொளி : கமலேஷ் சர்மாவிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் சணல்-4 காணொளி...
-
- 6 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வன்னியில் இருந்து - துவாரகா கலைக்கண்ணன் - 'நந்திக் கடலோரம் எங்கள் தமிழ் வீரம் வந்து நின்று ஆடியது நேற்று......' இது கவிஞர் புதுவையின் பாடல் வரிகள். அதே நந்திக்கரையில் நாதியற்று நடைபிணமாய் போனது தமிழ் இனம். விடுதலைப் போராளிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு மக்கள் தமது ஊரை இழந்து, உறவுகளை பிரிந்து, உணவின்றி, உடல் காயங்களுடன் இராணுவத்தின் ரவை மழையினுள் பாலஸ்தீனத்தின் நீண்ட பயணம் போல் பயணித்துக் கொண்டிருந்தனர். கரையோரங்களில் பல போராளிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தனர். ஆனால் அந்த வீரன் மிகத்தெளிவாக தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கான ஆயத்தங்களுடன் நின்றிருந்தான். 'சரணாகதி' என்பது சரித்திரத்தில் இல்லை என்பதே அவனது நிலையாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென தென் ஆபிரிக்காவின் பேராயரும், நோபள் சமாதான விருது வென்றருமான வணக்கத்திற்குரிய டெஸ்மன் டுட்டு ஆண்டகை தெரிவித்துள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்களுக்கு நியாயம் வழங்க, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒர் சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பது தெளிவாக புலப்பட்டால் உலக சமூகம் அழுத்தங்களை பிரயோகிப்பதில் தவறில்…
-
- 0 replies
- 233 views
-
-
சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலுயுறுத்த போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும், டேவிட் இது தொடர்பில் விவாதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழ் சமூகத்திடம் அவர் இந்த உறுதிமொழியை நேற்று வழங்கியதாக, ஏஎவ்பி, றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தும் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் நேற்று சந்தித்துப் பேசினார். அங்கு கருத்து வெளியிட்ட கமரோன், …
-
- 0 replies
- 439 views
-
-
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியப் பிரதமர் இன்னமும் தீர்மானிக்கவில்லையென புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரதமர் மன்மோகன் இலங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் பயணிக்கவுள்ளதாகவும் இலங்கையிலுள்ள சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி முடிவு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. அந்தத் தீர்மானத்தை இன்று எடுப்பதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்ஷீத் ஆகியோர் கூடி மந்திரலோசனை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து நேற்றைய…
-
- 3 replies
- 533 views
-