ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் இராணுவத்தினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல்களை அவர்கள் எதிர்நோக்கியிருப்பதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது. யாழ்ப்பாணம் நகரில் ரோந்தில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்- படம் செப்டெம்பர் 2013 அண்மையில் இலங்கைக்கு நேரடியாகச் சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர் ஃபர்கல் கீன் நேற்று முன்தினம் வெளியிட்ட தொலைக்காட்சி செய்திப் பெட்டகத்தில் பேசிய முன்னாள் பெண் போராளி ஒருவர் தான் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் இராணுவத்தினரிடம் சிக்கினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படலாம் என்று அஞ்சிக் கொண்டிருப்பதாகவும் கூறியிர…
-
- 0 replies
- 591 views
-
-
கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு - இரா.துரைரெட்னம் 26 அக்டோபர் 2013 கிழக்கு மாகாணசபையின் நடப்பாண்டிற்கான நிதி ஒதுக்கீடுகளிலும், அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களிலும், பாரபட்சமானதும் ஒருபக்கச்சார்பானதும் இனரீதியானதும் பிரதேச ரீதியானதுமான முறையில் இனவிகிதாசாரப் பரம்பலை கவனத்தில் கொள்ளாமல் முறைகேடான முறைமையில் ஆளும்தரப்பு நடந்துகொண்டுள்ளதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் பிரதேசங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட கிழக்கு மாகாண சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது தேர்தலின் பின் மக்கள் பிரதிந…
-
- 0 replies
- 352 views
-
-
நாட்டின் ஆன்மாவை விலைபேசி விற்று அரசாங்கம் சர்வதேச கசினோ மாபியா யுகத்தை ஆரம்பிக்கின்றது மனோ கணேசன் 26 அக்டோபர் 2013 பெளத்த விகாரைகளில் ஒலிக்கும் "சாது, சாது" என்ற மந்திரத்தை ஓதி, பெளத்த மதத்தை முன்னிலைபடுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று "சூது, சூது" என்ற சர்வதேச கசினோ மன்னன் ஜேம்ஸ் பெக்கரின் மந்திரத்தை வேதவாக்காக ஓதுகிறது. கொல்லப்படுவது தமிழர் தானே என்றும், அடிபடுவது முஸ்லிம் தானே என்றும் இந்த அலங்கோல அரசாங்கத்தின் அனைத்து அட்டகாசங்களுக்கும் துணையாக சிங்கள பெளத்த மக்களை உசுப்பி விட்டு அழைத்து சென்ற படுபாதக பாவச்செயல்களை, சம்பிக ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுன, குணதாச அமரசேகரவின் தேசி…
-
- 0 replies
- 313 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன், நா.நவரத்தினராசா வடமாகாண சபை என்னும் தேரை மக்களுக்காக இழுத்துச் செல்வதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று காலையில் நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னியமர்வு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வடமாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி எதையாவது செய்ய வேண்டுமென பரீட்சித்துப்பார்க்க போகின்றோம். அனைவரும் மதிக்கின்ற அமைச்சரவையொன்று இங்கு உருவாக்கப்பட்டுள்ளதுடன் உறுப்பினர்களிற்கும் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டவை வெறுமனேவே காகிதத்தில் இருக்காது எதையாவது செய்யக்கூடியத…
-
- 0 replies
- 282 views
-
-
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டின் ஏனைய முதலமைச்சர்களைப் போன்று செயற்பட வேண்டுமே ஒழிய மாறான விடயங்களில் ஈடுபடக் கூடாது என போர்க்குற்றவாளி கோத்தபாய எச்சரித்துள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது எனவும்தெரிவித்துள்ளார்.. அதன்படி நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளே தீர்மானம் எடுப்பார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன்படி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டின் ஏனைய முதலமைச்சர்களைப் போன்று செயற்பட வேண்டுமே ஒழிய மாறான விடயங்களில் ஈடுபடக் கூடாது என்றார். இதேவேளை, பொலிஸ் சேவையை துண்டுகளாக பிரிக்க அர…
-
- 0 replies
- 519 views
-
-
தமிழர்களின் மொழி, கலை, கலாசாரத்தைப் புரிந்துகொள்ளாத பொலிஸார் வடக்கில் நிலைகொண்டிருப்பது தமிழர்களின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், 13ஆவது திருத்தத்தை முற்றுமுழுமையாக நடைமுறைப்படுத்துவற்கும் ஆவண செய்யவிருப்பதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். http://tamilworldtoday.com/home வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். வட மாகாண சபையில் லஞ்ச ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் சீ.வீ.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார். தமிழ்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள மிகக்கொடுரமான பாதிப்புக்களை சிங்கள மக்களும் உலக மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போத…
-
- 6 replies
- 1k views
-
-
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வலியுறுத்தியே மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர் - அனந்தி [saturday, 2013-10-26 09:50:21] தமிழனை தமிழனே ஆளவேண்டும், அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனபவற்றை வலியுறுத்தியே மக்கள் மீண்டுமொரு முறை திரண்டு வந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தப்பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தின் கீழாக மாகாணசபை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரியும். அத்தகைய மாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி, எதையாவது செய்யலாமாவென இப்போது நாம் பரீட்சித்துப்பார்க்க போகின்றோம் என்றும் அவர் குறிப்பி…
-
- 1 reply
- 566 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் எமது பிரச்சினைகளை சர்வதேச தலைவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர் - அரியநேத்திரன் [saturday, 2013-10-26 06:55:38] இலங்கையில் ஏற்பட்ட கொடூர யுத்தம் காரணமாக எமது இனத்தின் சகோதர சகோதரிகள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்று தங்களது உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகியது. இதன் நிமிர்த்தம் இந்ந நாடுகளுக்குச் சென்று குடியேறிய மக்கள் அந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொண்டு எமது நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டின் தலைவர்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். இன்றைய உலகில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து நேற்று கல்முனையில் British college திறப்பு விழா நிகழ்…
-
- 0 replies
- 371 views
-
-
முள்ளிவாய்க்காலில் இரசாயனத் தாக்குதல்! ஆய்வுகளில் உண்மை கண்டறியப்பட்டது - சர்வதேசம் விசாரணையில் இறங்குமா..? தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவம், தமிழர்கள் மீது இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக, 2009ம் ஆண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. அத்துடன், இதுவரை அதனை ஆராய்வதற்கு எந்தவொரு தரப்பும் அல்லது நாடும் முயலவில்லை. சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானவுடன், உடனடியாகத் தமது ஆய்வாளர்களை அங்கு அனுப்பிவைத்த ஐ.நா. கூட, போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்டதன் பின்னர் கூட முள்ளிவாய்க்கால் மண்ணிற்குச் சென்று, அங்கு எவ்வாறான அழிவு நடந்தது என்பதற்கான ஆய்வுக…
-
- 0 replies
- 717 views
-
-
தமிழ்நாடு சட்டசபைத் தீர்மானம்: ஈழத் தமிழர்களை மறந்த செயல் என்கின்றது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய புறக்கணிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசாங்கம், இலங்கை தமிழர்களை மறந்து செயற்பட்டிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் பெயர் குறிப்பிடாத உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழக சட்ட சபையில் நேற்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இந்திய மத்திய அரசாங்கத்தில் இருந்து உடனடியான பதில்கள் எவையும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கு, பிரதமர் மன்மோகன் …
-
- 0 replies
- 413 views
-
-
காகிதக் கப்பலும், ஆழ ஊடுவுரும் சிங்களமும் - சேரமான் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு முன்னரான ஈராக்கிலும், ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு முன்னரான எகிப்திலும் அடிக்கடி ஓர் அரசியல் கோமாளித்தனம் அரங்கேறுவதுண்டு. சதாமோ அன்றி முபாரக்கோ மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அன்று. மாறாக ஆயுதப் படைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் கொலுவிருந்தவர்கள். ஆனாலும் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அடிக்கடி அதிபர் தேர்தல்களை நிகழ்த்துவார்கள். இத்தேர்தல்களில் இவர்களை எதிர்த்து போட்டியிடுவதற்கு எவரும் துணிவதில்லை. விளைவு: தேர்தல் இன்றியே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாக தம்மைத்தாமே இவர்கள் அறிவித்துக் கொள்வார்கள். இப்பொழுது இதனையத்த அரசியல் கோமாளித்தனம் புலம்பெயர்தேச…
-
- 0 replies
- 305 views
-
-
'முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய விருப்புவாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்புபாராட்டவல்ல' - அனந்தி சசிதரன் - எழிலன் 25 அக்டோபர் 2013 'தனிப்பட்ட ரீதியில் போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது' எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை கேட்கின்றேன் - அனந்தி சசிதரன் - எழிலன் எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக, மூன்று குழந்தைகளது தாயாக, காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன் எனத்தெரிவித்துள்ளார் திருமதி .அனந்தி சசிதரன் - எழிலன் வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது முதல் உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கைய…
-
- 5 replies
- 900 views
-
-
இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கசினோ சூதாட்டத்தை சிறந்தவொரு விளையாட்டு என பரிந்துரை செய்துள்ளார். கசினோ சூதாட்டத்தை ஓர் மோசமான விளையாட்டாக சிலர் சித்தரிப்பதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். கசினோ சூதாட்டம் ஓர் மோசமான விளையாட்டு கிடையாது. இவ்வாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தான் கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இரண்டு அமெரிக்க டொலர்களுக்கு சூதாடியதாகவும், அங்கிருந்த பெண்கள் தன்னை 140 டொலர் வைத்து ஆடுமாறு கோரியதாகவும் கூறினார். எனினும், தான் பெண்களின் தூண்டுதலை கண்டு கொள்ளாது நிதானமாக ஆடியதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் அதிகளவு பணத்தை இதற்காக செலவிடுகின்றனர் எனவும் இது நாட்டுக்கு நன்மை ஏற்படுத்து…
-
- 8 replies
- 767 views
-
-
எம் மக்களின் விடிவிற்காக குரல் கொடுத்த, போராடச் சென்ற அனைவரும் எமக்குள் இருந்த வேறுபாடுகளைக் களைந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஓரணியில் நின்று குரல் கொடுக்கிறோம். எனவே எமது மக்களுக்காக நாம் அனைவரும் ஒற்றுiமாக உழைக்க வேண்டும். எம் தேச விடுதலைக்காக போராடிய மாவீரர்களை எம்மிடமிருந்து எந்த சக்தியாலும் பிரித்து விட முடியாது என வடமாகாகண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் முதல் அமர்வு இன்று கைதடியில் நடைபெற்றபோது கன்னியுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில், இப்பூமிப்பந்திலே தனித்துவமான இன அடையாளங்களுடனும் , மிக நெடிய வரலாறு கொண்ட மொழி வளம் மற்றும் கலாச்சாரக் கட்டமைப்புடனும் வாழுகின்ற தமிழ…
-
- 7 replies
- 939 views
-
-
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, அதேபோல வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதையும் நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே வட மாகாண ஆளுநராக வர வேண்டும் என நாங்களும் மக்களும் விரும்புகின்றோம் என வட மாகாண சபையின் முதலாவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை காலை உரையாற்றும்போது தெரிவித்தார். இன்று காலை கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடமாகாணசபை கட்டிடத்தை வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் திறந்து வைத்தனர். வடமாகாண கொடியினை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சிறிலங்கா தேசிய கொடியினை ஆள…
-
- 3 replies
- 841 views
-
-
காணொளி : கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் (24-10-2013) காணொளியை பார்க்க.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9733:2013-10-25-22-20-25&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 550 views
-
-
வட மாகாண சபைக் கட்டிடம் திறப்பு - வட மாகாண சபையின் தவிசாளராக சிவஞானம் தெரிவு - படங்களுடன் இணைப்பு 2 25 அக்டோபர் 2013 வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியில் 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினாகளான எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வட மாகாண சபையின் தவிசாளராக சிவஞானம் தெரிவு வட மாகாண சபையின் தவிசாளராக கந்தையா சிவஞானம் ஏகமனத…
-
- 1 reply
- 674 views
-
-
வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது. இந்த முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. கன்னியமர்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா) http://tamil.dailymirror.lk/--main/87054-2013-10-25-08-29-10.html
-
- 0 replies
- 451 views
-
-
காணொளி : இலங்கை தொடர்பாக பீ.பீ.சி வெளியிட்ட புதிய காணொளி.. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HQtzDNM_-Tk http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9713:2013-10-24-13-28-08&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 532 views
-
-
5 க்கு 1 என வடக்கில் பிரசன்னமாகி இருக்கும் படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் 25 அக்டோபர் 2013 முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் ஆரம்பரையின் சுருக்கம்:- மாகாண சபைக் கட்டடத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று ஆளுனர் சந்திரசிறியின் பிரகடணத்துடன் ஆரம்பமாகியது. சபைத் தலைவர் பிரதி தலைவர்கள் தெரிவு நிறைவடைந்து முதலமைச்சரின் உரை ஆரம்பமாகியது. வடக்கு தேர்தலில் மக்கள் வாக்களித்த விகிதத்தின்படி பார்க்கும் பொழுது அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மாகாண சபைத் தேர்தலைக் கருதியுள்ளனர் என்பது வெளிப்படை என தனது உரையில் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படுவதனை தனது உரையில் முக்கியமாக சுட்டி…
-
- 1 reply
- 463 views
-
-
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த மதகுருவை கைதுசெய்யுமாறு போராட்டம் 25 அக்டோபர் 2013 குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் வவுனியா சிறுவர் இல்லம் ஒன்றில் பௌத்த மதகுருவால் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குறித்த மதகுருவை கைது செய்யுமாறு கோரி போராட்டம் ஒன்று கொழும்பில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையில் முன்னால் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் சிறுவர்களின் உரிமை தொடர்பில் தேசிய பாதுகாப்புச் சபையின் அக்கறையீனத்தை போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதியை வழங்கும் வகையில் குறித்த மதகுருவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த மதகுரு அரசிய…
-
- 1 reply
- 345 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார் 25 அக்டோபர் 2013 ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டாலீ வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த வாரம் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றி டாலீ நேரில் பார்வையிட உள்ளதாகக் குறி;ப்பிடப்படுகிறது. உதவித் திட்டங்களில் நன்மை பெற்றுக் கொண்டவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…
-
- 0 replies
- 217 views
-
-
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் போன்ற முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச பிரகடனங்களிலி; இலங்கை கைச்சாத்திட்டுள்ளதகாவும் இதன் அடிப்படையில் இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சுபினாய் நென்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏ…
-
- 1 reply
- 696 views
-
-
யாழ்.குடாநாட்டினை கலக்கி வரும் நாகர் படையணி எச்சரிக்கை கடிதங்கள் அரச ஆதரவு தரப்புக்கள் பலவற்றையும் அதிர்ச்சியினில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையுள்ளிட்ட சில பகுதிகிளினல் நேரடியாக தனித்தனி முகவரியிட்டு இத்தகைய எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் அரசகைக்கூலிகளாக இனியும் செயற்பட்டால் கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அரச ஆதரவு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்களிற்கு பரவலாக ‘நாகர் படையணி” என்ற அமைப்பால் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடக்குமாகாண சபைத்தேர்தல் தந்த மோசமான தோல்வியால் விரக்தியில் இருந்த ஈ.பி.டி.பியினருக்கு ‘நாகர் படையணி’ என்ற அநாமதேயக் கடிதம் இன்னும் கலக்கத்தை ஏற்…
-
- 27 replies
- 2.4k views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மா…
-
- 2 replies
- 952 views
-