ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
நாசி வதைமுகாமில் நவநீதம்பிள்ளை அஞ்சலி – முள்ளிவாய்க்காலில் அனுமதி மறுப்பு [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 00:59 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் போரின் போது, மரணமான அனைவருக்காகவும், முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம் செலுத்த, தனது சிறிலங்கா பயணத்தின் போது, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார். ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பினால், அந்த முடிவை அவர் கைவிட நேர்ந்தது. தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில், இவ்வாறு அஞ்சலி செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்த, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்தநிலையில், ஜேர்…
-
- 0 replies
- 386 views
-
-
தென்னாசியாவில் பட்டினி - இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா சிறந்த இடத்தில் [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 08:29 GMT ] [ நித்தியபாரதி ] தென்னாசியப் பிராந்தியத்தில் சிறிலங்காவில் மிகக் குறைந்தவர்களே பட்டினியில் வாழ்வதாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பூகோள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக உணவுக் கோட்பாடு ஆய்வு நிறுவனத்தால் the International Food Policy Research Institute - IFPRI வெளியிடப்பட்ட பட்டினி நாடுகள் தொடர்பான சுட்டியில் 2013ல் சிறிலங்காவானது 43வது இடத்தில் உள்ளதாகவும் தென்னாசியாவில் உள்ள இதன் ஏனைய அயல்நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறிலங்காவானது சிறந்த இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் 120 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்…
-
- 0 replies
- 399 views
-
-
காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறுகின்றது : 16 அக்டோபர் 2013 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டன. காணாமற் போன சுமார் 1000 பேர் பற்றிய விவரங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. இந்தப் பதிவு நடவடிக்கை தொடர்ச்சியாக இன்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். காணமற் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருந்தது. இதற்…
-
- 0 replies
- 272 views
-
-
தந்தை செல்வாவை வணங்கும் ராஜபக்ச 16 அக்டோபர் 2013 புகைப்படம்: மயூரப்பிரியன் யாழ்ப்பாணத்தில் கண்டி வீதியில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு சதுக்கத்திற்கு முன்னால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கை துகூப்பி வணங்கும் படியான பாரிய பாதகை ஒன்றை அரச ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். தந்தை செல்வாவின் சிலை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து குறித்த பதாகையை பார்க்கும்பொழுது ஈழத் தமிழர்களின் அரசியல் தந்தை எனப்படும் தந்தை செல்வாவை வணங்குவதைப்போல காணப்படுகின்றது. இந்தப் பதாகை கடந்த அக்டோர் 11 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பதவி ஏற்பில் ஈடுபடும்பொழுதே அமைக்கப்பட்டிருந்தது. புகைப்படம்: மயூரப்பிரியன் http://www.globaltamilnews.net/…
-
- 0 replies
- 426 views
-
-
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இந்தியாவிற்கு வருமாறு இந்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பாக உத்தியோகபூர்வ அழைப்பினை எதிர்வரும் வாரத்தில் இந்திய அரசினால் விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. விக்னேஸ்வரனை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையானது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வது குறித்து வடக்கு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காகவும், வடமாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான நிதியினை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக மேன்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா பகிஷ்கரி…
-
- 0 replies
- 513 views
-
-
வட மாகாணசபையின் முதல் அமர்வு எதிர்வரும் 25ம் திகதி 15 அக்டோபர் 2013 வட மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. அமர்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாத உறுப்பினர்கள் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிசாளர்இ பிரதி தவிசாளர் தெரிவுஇ வட மாகாணசபையின் ஆரம்ப அமர்வுகளின் போது நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் அமர்வுகளில் வட மாகாண ஆளுனர் பங்கேற்பாரா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை http://www.globaltamilnews.…
-
- 3 replies
- 490 views
-
-
இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: "இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள். சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு க…
-
- 71 replies
- 3.6k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கைக்கு உதவியது? 15 அக்டோபர் 2013 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடஅயர்லாந்து காவல்துறை சேவையைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கு பிரித்தானியா இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. இரும்புப் பெண் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதமர் அமரர் மார்கிரட் தச்சர் காலம் முதலே பிரித்தானிய காவல்துறையினர் இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களைய…
-
- 13 replies
- 789 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருப்பது தொடர்பில் எழுந்திருக்கும் உணர்வலைகள், ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்குமா என்பதான விவாதங்கள், பலவும் உணர்ச்சிகரமான உரையாடல்களாகவே முடிந்து போவதை அவதானிக்க முடிகிறது. இந்த உணர்ச்சிகர உரையாடல்களில் ஈழத் தமிழினத்தின் மீது தொடர்ந்து கட்டமைக்கப்படும், நுண்ணரசியல் ஆளுமை குறித்த அவதானிப்பு அற்றுப் போவதையும் காணமுடிகிறது. வெளியாகியுள்ள பாலச்சந்திரனின் கொலை தொடர்பான படங்கள் நடந்த கொடுமையைச் சொல்லும் அதேவேளை, இதே காலப் பகுதியில் வெளியாகியுள்ள மற்றுமொருபடம் நடக்கவிருக்கும் அரசியற் கொடுமையை விளக்குவதாக அமைந்திருக்கிறது. ஆனால் உணர்ச்சிகர உரையாடல்கள் எவற்றிலும் அந்தப் படம் உணர்ந்தும் அச…
-
- 2 replies
- 843 views
-
-
அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு சம்மந்தன் கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடமாகாண மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான முழுமையான தீர்வு கிடைப்பதற்காகவும் அபிவிருத்திகள் கிராமிய ரீதியாக சென்றடைவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கையின் பொருட்டும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கா…
-
- 32 replies
- 2k views
-
-
-
- 30 replies
- 2.3k views
-
-
பாலச்சந்திரன் படுகொலை குறித்து சுட்டிக்காட்டிய எக்கொனமிஸ்ட் ஆசிரியர் மீது சிறிலங்கா பாய்ச்சல்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய மகனான 12 வயதுடைய பாலச்சந்திரனை சிறிலங்கா படைத்தரப்பினரே படுகொலை செய்ததாக புதுடில்லிக் கருத்தரங்கில் சுட்டிக்காட்டிய தி எக்கொனமிஸ்ட் சஞ்சிகையின் தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர் அடம் ரொபேர்ட்ஸ் மீது சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. புதுடில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச செஞ்சிலுவைக் குழு, ஏஜேகே தொடர்பாடல் ஆய்வு நிலையம் மற்றும் அமைதிக்கும், முரண்பாட்டுத் தீர்வுக்குமான நெல்சன் மண்டேலா நிலையம் என்பன இணைந்து கடந்த வாரம் நடத்திய ஊடகவியலாளர்களுக்கான இ…
-
- 3 replies
- 869 views
-
-
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக வஞ்சக அரசியல் துணையானது – 01 [ செவ்வாய்க்கிழமை, 15 ஒக்ரோபர் 2013, 08:34 GMT ] [ புதினப் பணிமனை ] மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன - குணா.கவியழகன்*. 01. ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு. பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது?…
-
- 0 replies
- 513 views
-
-
கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ரணில் ஒப்புக்கொண்டார் – தேசிய பிக்குகள் முன்னணி 15 அக்டோபர் 2013 கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரணில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. அதி உயர் பீடமொன்றை அமைத்து அதன் மூலம் கட்சியை வழிநடத்துவதாக பௌத்த பிக்குகளிடம் ரணில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97709/language/ta-…
-
- 0 replies
- 419 views
-
-
சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான குறம் சேய்க் Khuram Shaikh தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டைத் தலைமை தாங்குவதற்காக சிறிலங்காவுக்கு வரவுள்ள பிரித்தானியாவின் இளவரசரான சாள்ஸ், 2011ல் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியரும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருமான சேய்க் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக கேள்வியெழுப்புவார் எனக்கூறப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூனும் சிறிலங்காவுக்கு வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதே. சேய்க் மற்ற…
-
- 0 replies
- 270 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் முதல் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் வரையில் தமிழ்க் கூட்டமைப்புக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. நேற்று வரை நீடித்த இந்த முரண்பாடுகள் தற்போது சுமூக நிலைக்கு வந்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்த போதிலும், தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை உடனடியாக அறிந்துகொள்ள முடியாமலுள்ளது. எவ்வாறாயினும், மக்களின் உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் அன்றி வேறு எந…
-
- 1 reply
- 753 views
-
-
காமன்வெல்த் மாநாடு : 'தமிழ் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 அக்டோபர், 2013 - 09:07 ஜிஎம் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் தான் பங்கேற்பது குறித்த எந்த முடிவும் தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேற்று திங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்து இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட உள்நாட்டு போரின்போது ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமான இலங்கை அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து க…
-
- 0 replies
- 447 views
-
-
வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் நேற்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சபை அமர்வுகள் ஆரம்பமானபோது , குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் சிறிரஞ்சன் முன்மொழிந்தார். "எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதியுத்தத்தின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர். தற்போது எங்களுக்கென வடமாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்கவேண்டும்" என்று த…
-
- 0 replies
- 302 views
-
-
மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:- 14 அக்டோபர் 2013 நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மணிவண்ணன் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 32 replies
- 1.5k views
-
-
ஹலால் எதிர் போராட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது 15 அக்டோபர் 2013 முஸ்லிம் மக்களின் ஹலால் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மீள ஆரம்பித்துள்ளன. ஹலால் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எனவே, மீண்டும் ஹலால் தரச் சான்றிதழுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி கொழும்பிலிருந்து, கண்டி தலதா மாளிகை வரையில் வாகன பேரணியொன்றின் மூலம்; போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது. ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் மற்றும் மாநாயக்கத் தேரர்கள் வாக்குறுதி அளித்த போதிலும் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்ப…
-
- 0 replies
- 564 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 இலங்கையர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 15 அக்டோபர் 2013 அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 இலங்கையர்கள் இன்று (15.10.13) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 40 பேர் நேற்று (14.10.13) திங்கட்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு கடலில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருந்த யாழ்ப்பாணம், …
-
- 0 replies
- 378 views
-
-
நவம்பர் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்களும் இந்திய உயர்ஸ்தானிகர் பிரிவினருக்கும் பேச்சு நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தினத்திற்காக மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது தமது வாக்குறுதிகளில் ஒன்றாக இதனையும் குறிப்பிட்டிருந்தது என இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த மாவீரர் தின நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தோராவிலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நடத்தவுள…
-
- 0 replies
- 875 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை பொலிஸ் நிலையத்தில் அவரது சட்டத்தரணி ஊடாக சரணடைந்தார். மங்கள சமரவீர உள்ளிட்ட 11 பேரை கைதுசெய்வதற்கான பிடியாணையை மாத்தறை மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்திருந்தது. கடந்த 05அம் திகதி மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையின் போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், தான் சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைவதாக மங்கள சமரவீர நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று முற்பகல் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் மங்கள சமரவீர சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சர…
-
- 2 replies
- 470 views
-
-
ஊழல், மோசடியால் நாட்டை சீரழித்துள்ள தற்போதைய அரசாங்கம் கெசினோ வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கி விபசாரத் தொழிலையும், போதைப் பொருட்களை நாட்டிற்குள் உத்தியோகபூர்வமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தினியாவல பாலித்த தேரர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நடைமுறைப்படும் தினத்தில் இலங்கையருக்கு இறுதி அஞ்சலி பிரார்த்தனை செய்யவேண்டி ஏற்படுமென அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் எவ்வாறான சட்டவிரோத செயல்களைச் செய்தாலும், நாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் கண், காதுகளை மூடிக்கொண்டு, கண்டும் காணாதவர் போல இருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு நாடு அழிவை நோக்கிச் செல்லும் போது அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியவர்கள் அவ்வாறு ந…
-
- 0 replies
- 502 views
-
-
முல்லைக்கே அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு முல்லை. மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு எதுவும் கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையிலேயே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக இதனை அறிவித்துள்ளார். யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெகநாதனுக்கு புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம…
-
- 17 replies
- 787 views
-