Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமதி அனந்தி எழிலன் அவர்களின் பாதுகாப்பும் ,தமிழ் பெண்களின் தலைமைத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் அனந்தி அவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டுமென கிழக்குவாழ் தமிழ் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர். திருமதி.அனந்தி எழிலன் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட பங்கு வகித்தவர் என்ற வகையிலும் தமிழ் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தின் புதிய பரினாமமாக தற்போது அவர் தோற்றம் பெற்று இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று…

  2. வட மாகாண சபை: பிரிவினையின் மையமா? நல்லிணக்கத்தின் மையமா? எம்.எஸ்.எம்.ஐயுப் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளை வாக்கெடுப்புக்கு முன்னரே மக்கள் அறிந்திருந்தனர். வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்பதும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியை பெறும் என்பதும் முன்னரே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தமிழ் வேட்பாளர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட விக்னேஸ்வரனும் சிங்கள வேட்பாளர்களில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமரின் மகன் அனுராத ஜயரத்னவும் விருப்பு வாக்குகளில் முன…

  3. -நவரத்தினம் கபில்நாத், எஸ்.கே.பிரசாத் வடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு விக்னேஸ்வரன் கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கொழும்புக்கு திரும்பிகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வாகன சாரதி வவுனியாவிலுள்ள எரிபொருள் நிர…

  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 68ஆவது அமர்வில் இன்று உரையாற்றிய பின்னர் நியூயோர்க்கிலிருந்து டுவிட்டர் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். நாளை புதன்கிழமை நியூயோர்க் நேரம் மு.ப 9 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப. 6.30) டுவிட்டர் ஊடாக கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அரை மணித்தியாலம் நடைபெறும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின்போது நியூயோர்க்கிலிருந ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்த வார நடவடிக்கை பற்றியும் ஐ.நா. அமர்வு பற்றியும் கவனம் செலுத்தப்படும். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இந்த கேள்வி பதில் நிகழ்சியை நெறிப்படுத்துவார்.@PresRajapaksa என்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் ஊடாக இந்த கேள்வி பதில் நிகழ்வு நடைபெறும். ஜனாதிபதியிடம் கேள்வி க…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சியில் போட்டியிட்ட ஆனந்த சங்கரி 2796 வாக்குகளை மட்டுமே பெற்றதுடன் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 6 வது இடத்தில் இருந்தார். அந்த மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சங்கரிக்கு வழங்க தயா…

  6. சிறீலங்கா உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான படை பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளின் 40 படை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் படை பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன.மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில் நேற்று மாலையும் ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று காலையும் படை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொப்பிகல நரக்கமுல்ல திருகோணமலை வாகரை மற்றும் கதிரவெளி அடங்கலாக கிழக்கு மாகாண படை தலையகத்தின் கீழுள்ள முப்படைகளைச் சேர்ந்த சுமார் 2700 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன்போது தரை வான் மற்றும் கடல் மார்க்கங்களின் ஊடாக படை உபகரணங்களின் உதவியுடன் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. http://www.sanka…

    • 7 replies
    • 660 views
  7. வட மாகாண சபைக்கான முதலமைச்சரைத் தெரிவு செய்யும் சம்பிரதாய பூர்வமான கூட்டத்தில் வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் உரிய முறைப்படி பிரேரித்து அனுமதிக்கப்பட்டு வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் இருபத்தெட்டுப்பேரினாலும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு இடம் பெற்ற இந்த சம்பிரதாயக் கூட்டத்தில் சி.சி.விக்கினேஸ்வரனின் பெயரை வட மாகாண சபையின் ஒரே பெண் உறுப்பினரான அனந்தி சசிதரன் முன் மொழிய அதனை எம்.கே.சிவாஜிலிங்கம் வழி மொழிய ஏனைய உறுப்பினர்களும் அதனை முழுமையாக வழி மொழிந்து ஏற்றுக் கொண்டார்கள்.குறிப்பிட்ட தெரிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம் பெற்றதுடன் தம…

  8. மட்டக்களப்பில் கிபிர் நோட்டம்; மக்கள் பதற்றம் மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலை பிரதேசத்தில் இன்று (23) காலை தான் தோன்றீஸ்வர ஆலய நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வான் பரப்பில் தோன்றிய கிபீர் விமானங்களால் பக்தர்களும் மக்களும் அச்சமடைந்து காணப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலையும் தோன்றியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் கடல், ஆகாயம் நிலப்பரப்புகளில் வெளிநாட்டுப் படையினர் போர் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த போதே இந்த யுத்த விமானங்களும் இவ்வாறு பறக்கத் தொடங்கின. ஆறு நாடுகளைச் சேர்ந்த கூமார் 2500 பேர் இந்தப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்தப் பயிற்சி தொடர்பில் பிரதேச மக்களுக்கு அறிவுரைகள் வழங்காத நிலையில் இவைக…

  9. வட மாகாண முதலமைச்சராக சிவி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு- யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவுசெய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சிவி.விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவுசெய்தார்கள். இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா சரவணபவன் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன் சிறீதரன் சிவசக்தி ஆனந்தன் விநோ நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார…

  10. ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பார் விக்னேஸ்வரன்! தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை வடமாகாணசபை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் விரைவில் உத்தியோகபூர்வமாக சந்தித்துப் பேசவுள்ளார். வடமாகாண முதலமைச்சரின் வெளிநாட்டு அரச தலைவர்களுடனான முதல் உத்தியோகபூர்வ சந்திப்பாகவும் இது அமையவுள்ளது. தமிழகம் மற்றும் வடக்கு மாகாண சபைக்கிடையில் உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தச் சந்திப்பு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள மொழி, கலை, காலசார, பண்பாட்டு உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தச் சந்திப்பு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=02f…

  11. இரசாயன அயுதங்கள் குறித்த சிரியாவின் தீர்மானத்திற்கு இலங்கை வரவேற்பை வெளியிட்டுள்ளது. சிரிய இரசாயன ஆயுதக் களைவு தொடர்பில் ரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இரசாயன ஆயுத பயன்பாடு குறித்த சர்வதேச பிரகடனத்தின் பங்குதாரர் என்ற ரீதியில், இரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டியது அவசியமானது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இரசாயன ஆயுதங்களை களைவதற்கு சிரியா எடுத்த முடிவு வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96883/language/ta-IN/article.aspx

  12. சவுதி அரேபியாவில் இருந்து 8ஆயிரம் பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி சவுதி அரேபிய அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. மேலும் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்காக இதுவரை சுமார் பத்தாயிரம் பேருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எண்ணாயிரம் இலங்கையர்களே நாடு திரும்பியுள்ளளர். எனினும் மீதமாக உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்புமாறும் அவர்களை இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய சுட்டிக்காட்டினார். எவ்வ…

  13. வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் சிறீலங்காவில் உள்ள வெளிநாட்டு அதிகரிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சிறீலங்காவில் உள்ள வெளிநாட்டு அதிகரிகள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வடக்கு தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றுள்ளமை தொடர்பான விளக்கங்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33528/64//d,fullart.aspx

  14. கெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் சிறீலங்காப் படையினன் ஒருவர், ஹெய்டி பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என சிறீலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது. மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கொண்ட இராணுவ விசாரணை நீதிமன்றத்தை நியமித்துள்ள சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக அவர்களை கெய்டிக்கு அனுப்பியுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து கெய்டியில் உள்ள ஐ.நா அமைதிக்காக்கும் படைப் பிரிவின் சிறீலங்கா படையினருக்கான இராணுவ பொலிஸ் பிரிவு கட்டளை அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் சிறீலங்கா இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மேஜர் …

  15. TNA தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் - ஜாதிக ஹெல உறுமய 23 செப்டம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் ஈட்டிய வெற்றியை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்க பயன்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை ரத்து செய்ய உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். வடக்கில் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த வேறு எந்த கட்சியும் அரசியல் நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக வடக்கு…

  16. நொந்துகொள்கிறார்கள் அரசாங்க ஆதரவு தமிழ்கட்சிகள் தமிழித்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தோ்தல் விஞ்ஞாபனம் தொடா்பாக கடும்போக்கு தமிழா்களுக்கு கோபம் இருந்தது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்திய தோ்தல் பிரசார கூட்டத்தில் கூட்டமைப்பின் தோ்தல் விஞ்ஞாபனம் தமிழ் ஈழத்துக்கு ஒப்பானது என கூறியிருந்தார். அத்துடன் இலங்கையில் சிறுபாண்மை தமிழா்கள் என்று எவரும் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த பேச்சுக்களும் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தது என யாழ்ப்பாணத்தில் சிலா் பேசிக்கொள்கின்றனா். கூட்டமைப்பின் தோ்தல் விஞ்ஞாபனத்தை வட்டுக்கோட்டை தீா்மானத்துக்கு ஒப்பிட்டு ஜனாதிபதி பேசியதால் அதில் ஏதோ இருக்கின்றது என்று நினை…

  17. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி பிரிவினைக்கு வழிவகுக்கும் என எவரும் அஞ்சத் தேவையில்லையென ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று கூறினார். இந்த நாட்டில் பிரிவினைக்கு இடமில்லை தமது இருப்புக்காக இனவாதத்தை தழுவியுள்ள தென்பகுதி அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் பிரிவினைப் பூச்சாண்டியை ஊட்டி வளர்ப்பதாக அவர் கூறினார். சகல இனக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் இனைந்து வேலை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது எனவே மக்கள் தமது மனதில் தேவையில்லாத பயத்தை கொண்டிருக்க தேவையில்லையென அவர் கூறினார். ஐ.ம.சு.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தயாசிறி ஜயசேகர ஐ.தே.க விலிருந்து விலகி சென்றதனால் தனது ஜனனாயக கட்சி பின்னடைவை கண்டதாக அவர் கூறினார். ஜனநாயக கட்சியில் இணையவிருந்த ஐ.தே.க உ…

  18. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்- தமரா குணநாயகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை விஜயம் செய்து நாட்டில் இருந்து வெளியேறும் போது வெளியிட்ட கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்வதாக, ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியும், கியூபா தூதுவருமான தமரா குணநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளை இலங்கையின் பௌதீக அபிவிருத்தி பற்றி அவதானிக்க வரவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கவே வந்தார். போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது. மனித உரிமை…

  19. போதியஅதிகாரமுள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டவரை சிவில்சமூகத்தில் இருந்து ஆளுநராக நியமிக்க கோருவோம் 23 செப்டம்பர் 2013 ஆளுநராக சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி அனுப்பவுள்ளதாக கேள்வியுற்றுள்ளோம்! சீ.வி.விக்னேஸ்வரன் “இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆளுநராக இருக்கும் பட்சத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிவில் சமூகத்தில் இருந்து போதிய அதிகாரம் உள்ள மக்களின் பிரச்சினைகளை புரிந்து தெரிந்து கொண்ட ஒருவர் ஆளுநராக நியமிக்க தொடர்ந்தும் வலியுறுத்துவோம்” என வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்ற முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.09.13) யாழ். ரில்கோ சிற்றி விடுதியில்ஊடகவியலா…

  20. அதிகாரங்கள் மக்களுக்குரிய இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து!! வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதை மற்றும் கௌரவத்துடன் போதிய சுயாட்சியினை தமிழர்கள் பெறுவதுடன், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகளை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களுக்கு பல்வேறுபட்ட துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்ட போதும் மிகவும் தெளிவாகவும் துணிவுடனும் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எனவே மக்களுடை…

  21. ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மூன்றாம் சக்தியாக உருவாகியுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலின் மூன்றாம் சக்தியாக ஜனநாயகக் கட்சி மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி தமது அரசியல் கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் வடமேல் மாகாணத்தில் மூன்று ஆசனங்களையும், மத்திய மாகாணத்தில் இரண்டு ஆசனங்களையும் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. தேர்தலில் தமது கட்சி அடைந்த வெற்றி திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் சுயாதீனமானதும், நீதியானதுமான முறiயில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தத்தேர்த…

  22. நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எத்தனை இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெரிகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளமையையும் காட்டுகிறது. மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக இருந்தும் அங்கு ஆளுங்கட்சி ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளதன் மூலம் அவரது கட்சி வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவாமல் அ…

  23. தமிழ் மக்கள் அசியல் சுதந்திரத்தையே கோரி நிற்பதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இதனை பறைசாற்றி நிற்பதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் படையினரின் நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மெய்யான அரசியல் சுதந்திரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதன் வெளிப்பாடாக வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுமனே உட்கட்டுமான அபிவிருத்தியும், புனரமைப்புப் பணிகளும் மட்டுமே தமிழ் மக்களின் அபிலாஷை அல்ல என்பதனை இப்போதாவது ஜனாதிபதி மஹிந்…

  24. வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வுக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதனை இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வுக்கே ஆணை வழங்கியுள்ளனர். அது பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல் அல்லது வேறு எந்த தேர்தலானாலும் சரி வடகிழக்கு தமிழர்கள் தங்களு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.