ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. காலை 8.15க்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாணசபைத் தேர்தலின் த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்…
-
- 1 reply
- 657 views
-
-
சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை - 27 ஆகஸ்ட் 2013 குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை - வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயார் கதறியதைக் கண்ட நவநிதம்பிள்ளை அவரை அரவணைத்து ஆறுதல் படுத்தியுள்ளார். புலிச் சந்தேகநபர் என்று கருதப்பட்டு கணேசன் நிமலரூபன் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது திட்டமிட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நிமலரூபனின் தாயார் இன்றைய தினம் யாழில் நடந்த காணாமல் பொன உறவுகளின…
-
- 26 replies
- 1.9k views
-
-
"உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா"
-
- 0 replies
- 503 views
-
-
விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் அந்த வர்த்தக நிலையத்தின் தலைவரை கைது செய்து விசாரணைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன் பல அரசியல் வாதிகளுடன் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 8 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்ட இந்த கட்டடம் புலிகளின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இந்த வர்ததக நிலையம் புலிகளின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான கிட…
-
- 3 replies
- 772 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா ஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டு கொள்ளைக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வீட்டிற்குள் பிரவேசித்த கொள்ளையர்கள் மந்தனாவை அச்சுறுத்தியதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்த சம்பவத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில இணைய தளங்களில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமக்கு தொடர்பான ஆவணங்களை தேடியே கொள்ளையர்கள் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கத்தியை விடவும் பேனை ஆபத்தான ஆயுதம் எனவும், அதனை சரியான முறையில…
-
- 2 replies
- 481 views
-
-
கடாபி போன்றவர்கள் வீரமரணம் அடையத்தான் வேண்டும்ஆனால் அதை அமரிக்காவின் கை;கலிகள்தான் செய்தனர்என்று தெரிவித்த தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார இதையே இலங்கையிலும்அமெரிக்கா செய்ய நினைக்கின்றது என்றும் அதற்கு எதிராகமகிந்த ராஜபக்ச வீரத்துடன் போராட வேண்டும் என்றும்தெரிவித்துள்ளார். சூடான், ஸ்லோவாக்கியா நாடுகளில் அமெரிக்கா செயற்பட்டதைப் போன்று இலங்கையில் அமெரிக்காவினால் செயற்பட முடியவில்லை. காரணம் ரஷ்யா, சீனா போன்ற பலம்வாய்ந்த நாடுகள் எப்போதும் இலங்கைக்கு துணை நிற்கின்றன என்றார் அவர். நவிபிள்ளை மூலமாக இலங்கையில்பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் அதை ஒரு போதும்செய்ய முடியாது. கடந்த காலங்களில் தருஸ்மன் அறிக்கை மூலமாக இலங்…
-
- 2 replies
- 479 views
-
-
சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர். http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf
-
- 69 replies
- 10.6k views
-
-
வடமாகாண தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குழு ஒன்று எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளது. இந்த தகவலை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் ஆலோசகர் திருமதி எஸ்மா இன்று தம்முடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்ததாகஇ வடமாகாண சபைக்கான முதன்மை வேட்பாளர் டீ.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ தற்போது தேர்தல் பிரசாரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அரசியல் ஆலோசகர் தம்மிடம் விளக்கங்களை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.sankathi24.com/news/32642/64//d,fullart.aspx
-
- 0 replies
- 332 views
-
-
பௌத்த பிக்குமார்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறும் என தொலைபேசி அழைப்பு கிடைத்ததை அடுத்து ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. நேற்றிரவு தொலை பேசி அழைப்பு கிடைத்ததால் இன்று நண்பகலின் பின்னர் சந்திப்புக்களில் கலந்துகொள்ளவிருந்த பிரதிநிதிகள் இன்று 1.30க்கு முன்னர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டவாறு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் நடைபெறவில்லை. தொலைபேசி அழைப்பை அடுத்து 'ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. தும்முல்லை சந்தியில் இருந்து ஹவலொக் வீதி வெள்ளவத்தை வரையும் றீட் அவனியு பௌத்தாலோக மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்…
-
- 0 replies
- 412 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஒற்றுமைமிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவர் தொடர்ந்துரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.அவரின் வருகையானது இங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். இலங்கையில் மனித உரிமையும் மக்களுக்கான சுதந்திரமான சூழலும் சிறப்பாக காணப்படுகின்றத…
-
- 0 replies
- 226 views
-
-
இந்த நாட்டில் உண்மையான சமாதான சகவாழ்வு மலர வேண்டுமாயின் அதனை அரசு விசுவாசத்துடன் வெளிப்படுத்த வேண்டும். இனியும் தாமதிக்காமல் நல்லெண்ண நடவடிக்கையாக சிறையில் வாடும் எம் உறவுகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும், அல்லது அவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய முன்வர வேண்டும். இந்த வகையில் சிறீலங்கா அரசை வற்புறுத்தி சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு உதவி புரியுமாறு அரசியல் கைதிகளின் பெற்றோரும் உறவினர்களும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் சமர்ப்பித்த மகஜரில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். எமது பிள்ளைகள் கொழும்பு மகசின், வெலிக்கடை, கொழும்பு தடுத்து வைக்கும் சிறை, நீர்கொழும்பு மகர, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, கண்…
-
- 0 replies
- 431 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்கள் உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை கூறினார். நவநீதம் பிள்ளை ஒரு வார அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது, சிங்கள ராணுவத்தினர் நடத்தியதாக சொல்லப்படும் மனித உரிமை மீறல்கள், சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொன்றது, அகதிகள் முகாம்கள் மீது குண்டுகளை வீசி பலரைக் கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். நவநீதம் பிள்ளை செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்குப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ராணுவத்துக்கும…
-
- 0 replies
- 494 views
-
-
வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் செல்லும் ரயில் பாதையில் வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ரயில் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னோடியாக வியாழனன்று ஓமந்தையில் இருந்து கிளிநொச்சிக்கு பரீட்சார்த்த ரயில் சேவை நடைபெற்றது. இந்த பரீட்சார்த்த ரயில் பயணத்தை இலங்கையின் ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன, இர்கோன் இன்டநஸனல் கம்பனியின் தலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமாகிய மோகன் திவாரி உள்ளிட்ட இலங்கை இந்திய உயரதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டார்கள். தற்போது கொழும்பில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன.ஓமந்தையில் இருந்து 63 கிலோ மீற்றர் தொலைவி…
-
- 0 replies
- 691 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பி;ள்ளையின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்து கொள்ள நவனீதம்பிள்ளை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வார காலம் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பதாகவும், தம்மை சந்திக்க போதியளவு கால அவகாசம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தாம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளை மெய்யாகவே க…
-
- 1 reply
- 550 views
-
-
அனைத்து மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இன்று வியாழக்கிழமை (29.08.13) பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவவை பிறப்பித்தது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95878/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 625 views
-
-
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம்செலுத்தப்படும். அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது இவ்விடயம்குறித்து கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றும்இதேபோல்,காணாமல் போனோர் விடயம் தொடர்பிலும்உரிய அக்கறை செலுத்தப்படும் என்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதிவழங்கியுள்ளார். ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைநேற்று திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம்செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது சம்பூரிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கிளிவெட்டிமுகாமுக்கு நேற்று பிற்பகல் சென்ற நவநீதம்பிள்ளையிடம் தம்மை தமது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று …
-
- 0 replies
- 361 views
-
-
கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை பல்லப்பை பகுதியில் மனிதப்புதை குழிகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவற்றை அகழவும் மரபணுப்பரிசோதனை மூலம் மீட்கப்படும் எலும்புக் கூட்டுத்தொகுதிகளை அடையாளம் காணவும் கோரியுள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த பகிரங்க வேணடுகோளை முன்வைத்துள்ளார். குறித்த புதைகுழிகள் தொடர்பாக பருத்தித்துறை நீதிவானிற்கு மனுவொன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதற்கேதுவாக தனது சட்டத்தரணிகள் ஊடாக மனு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான முதலாவது மாபெரும் பிரச்சாரக்கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27-08-2013) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இதன் போது சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், இது ஒரு முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் என்ன? எதிர்பார்ப்புக்கள் என்ன? எதனை அவர்கள் தம்முடைய குறிக்கோளாக வைத்திருக்கின்றார்கள் என்பதையெல்லம் பிரதிபலிக்கும் ஒரு விதமாக எங்களுடைய இந்த தேர்தல் அமைகின்றது. அகவே உங்களுடைய வாக்கு மிக மிக முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் எமக்கு எதிர்க்கட்சியாகிய அரசாங்கத்துடன் சேர்ந்த கட்சிகள் சம்பந்தமாகவும் கூறவேண்டியுள்ளது. காரணம் அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுக…
-
- 2 replies
- 410 views
-
-
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என திருகோணமலை சிவில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் போது நவீபிள்ளையின் பிரதிநிதி ரோரி முங்கவன் நேற்று இந்த உறுதிமொழியை வழங்கினார். முக்கியமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த காலத்தில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்மை, சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டமை ஆகியன தொடர்பிலும் விசாரணைக…
-
- 2 replies
- 415 views
-
-
விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார். அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.com/view.php?20130829108959
-
- 0 replies
- 293 views
-
-
வடமாகாண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகள் மகிழ்ச்சி அளித்தாலும் அதனை மதிப்பீடு செய்வதற்காக நான் இலங்கை வரவில்லை. உள்நாட்டில் மனித உரிமைகளின் தற் போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதே இலங்கைக்கான எனது விஜயத்தின் நோக்கமும் கடமையும் ஆகும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். யாழ்.நூலகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்த ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தை பார்வையிட்டதுடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பிரதி செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோரின் தலைமையில் வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளித்தார்கள். இதன் போது உரையாற்…
-
- 1 reply
- 511 views
-
-
காணாமற்போனோர் விவகாரத்தில் தனது அதிகூடிய கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வடக்கு - கிழக்குக்கான பயணங்களின் போது காணாமற்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டங்கள், கையளிக்கப்பட்ட மனுக்கள் ஆகியவற்றை அடுத்து நாளை கொழும்பில் இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கான தனது பயணத்தின் போது 3 நாட்களை நவநீதம்பிள்ளை வடக்கு - கிழக்கில் செலவிட்டிருந்தார். இதன்போது காணாமற் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி நவநீதம்பிள்ளை செல்லும் இடமெல்லாம் பின்த…
-
- 0 replies
- 323 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடல்
-
- 0 replies
- 352 views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இரண்டு திடீர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படாத இரண்டு திடீர் சந்திப்புக்களை நவநீதம்பிள்ளை நடத்தியுள்ளார். இதன் முதலாம் சந்தித்து திருகோணமலை சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் திருகோணமலையில் இயங்கும், சட்டத்தரணி அருட்தந்தை லோகேஸ்வரன் தலைமையிலான மனித உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இரகசிய சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மூடிய அறைக்குள் இரகசியமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, திருகோணமலைக்குப் பயணித்திருந்த நவநீதம்பிள்ளை கிழக்கு மாகாண …
-
- 1 reply
- 1k views
-
-
நவனீதம்பிள்ளையை மணக்க விரும்புகின்றேன் - மேர்வின் சில்வா 27 ஆகஸ்ட் 2013 நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டைச் சுற்றி செல்வதற்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். நாட்டின் வரலாற்றை நவனீதம்பிள்ளைக்கு கற்றுக்கொடுக்க விரும்புகின்றேன். இராவண மன்னன் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விஜய குமாரனுக்கு இளவரசி குவேனியை மணம் முடித்துக் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.. அதேபோன்று, நவனீதம்பிள்ளை விரும்பினால் நாளை அவரை மணந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத…
-
- 13 replies
- 1.3k views
-