ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ரவான பலயவின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைத் தலைமைக் காரியாலத்திற்கு எதிரில் நேற்றைய தினம் போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளாந்த ஊடக சந்திப்பின் போது கேள்வி எழுப்பபட்டிருந்தது. போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நவனீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் இருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் இந்தப் போராட்டத்தில் பங்…
-
- 1 reply
- 371 views
-
-
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழு அலுவலகத்துக்கு முன்பாக திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.நகரின் முக்கிய வீதியான ஸ்ரான்லி வீதியில் குறித்த கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால், வீதியின் இரு பக்கமும் வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீதித்தடை ஏற்படுத்தப் பட்டுள்ளமையால், குறித்த வீதியூடாக வேட்பாளர்கள் சென்று வரும் போது, அவதானிப்பதற்கும் ஏதேனும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் சாத்தியம் உள்ளதாக துவாரகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய …
-
- 0 replies
- 326 views
-
-
நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியான இரு விடையங்களே தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைஎன்பதனை தெரிவிக்க வேண்டும். 1. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை குறிப்பாக இறுதியுத்தத்தில் நடைபெற்ற பாரியஇனவழிப்பு பற்றி நேரடியாக போரால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏனைய தமிழ் மக்கள் அனைவரும்ஒன்றாக சேர்ந்து சர்வதேச நீதிவிசாரணை தேவை என்பதை தெரிவிக்க வேண்டும். 2. தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாக தென்சூடானில் நடைபெற்றது போன்றபொதுவாக்கெடுப்பே சரியான தீர்வாக இருக்கும் என்ற விடையத்தினை நவநீதம் பிள்ளை அவர்களிடம்முன்வைக்கவேண்டும். மேற்கூறப்பட்ட விடையங்களை நவநீதம் பிள்ளை அவர்களிடம் கொண்டு செல்லவதோடு இறுதிப்போரில…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கையில் மலையக மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நவி பிள்ளை பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை கொழும்பில் இன்று சந்தித்தபோது, மலையக மக்களின் உரிமைப் பிரச்சனைகள் பற்றி குரல்கொடுத்துவரும் அருட்தந்தை கீதபொன்கலன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார். பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பின்னரும் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் இன்னும் வம்சாவளிப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாமல் 'பதிவுப் பிரஜைகள்' என்றே கணிக்கப்படுவதாகவும் அருட்தந்தை கீதபொன்கலன் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மலையக மக்களின் நிர்வாகப் பிரதேசங்க…
-
- 0 replies
- 300 views
-
-
குறைந்த தொகை தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுகொடுக்க அரசியல் பேதங்களை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய தமிழின உணர்வுடன் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இணைந்து செயற்பட்டமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனக்கு தந்த பரிசுதான், கொட்டகலையில் என்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல். போதாமைக்கு இப்போது நமது பாரிய பங்களிப்புடன் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட தமிழின எழுச்சியால் பதவி பெற்ற ஒருவரும் என்னை தாக்கி அறிக்கை விடுத்து தன் எஜமான் விசுவாசத்தை காட்டுகிறார். இனவுணர்வுக்கும், நன்றியுணர்வுக்கும், பெருந்தன்மை அரசியலுக்கும் இதொகா என்ற கட்சியில் இன்று இடமில்லை. பெருந்தலைவர் சௌமியமூர்த்தியுடன் அந்த கால கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை ம…
-
- 0 replies
- 307 views
-
-
காணாமற் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணை மற்றும் நில அபகரிப்புக்கு எதிராக மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் தற்பொழுது யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இடம்பெறுகின்றது. காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும்குழு இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சுந்தரம் மகேந்திரம் தெரிவித்தார். காணாமற்போனோரின் உறவுகளை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்திக்கும் வேளையிலேயே இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. இறுதிக்கட்டப் போரில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் கடத்திச் செல்லப்பட்டும் காணாமற் போனவர்களின் உறவுகள் உள்ளிட்டவர்கள் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். அத்துடன் நில அபகரிப்புக்கு எதிராகவும், மீள்கு…
-
- 1 reply
- 554 views
-
-
விசேட அதிரடிப்படை - அரச புலனாய்வுச் சேவை யாருக்கு சொந்தம்? பாதுகாப்பு அமைச்சின் கீழான காவற்துறை பிரித்தெடுக்கப்பட்டது - விசேட அதிரடிப்படை - அரச புலனாய்வு சேவை யாருக்கு சொந்தம்? பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த காவற்துறை திணைக்களம் தனியாக பிரிக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியன இந்த இரண்டு அமைச்சுக்களில் எந்த அமைச்சுகளில் கீழ் உள்ளது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அரச புலனாய்வு சேவையின் தலைமை அதிகாரியான பிரதிக் காவற்துறை மா அதிபர் ஒருவர் பணியாற்றி வருகின்றார். அத்துடன் அதில் சேவையாற்றும் அதிகாரிகள் அனைவரும் காவற்துறை திணைக்களத்தின் அதிகாரிக…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள யு.என்.சி.எச்.ஆர் காரியாலயத்தில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.அனந்தியுடன் நவீப்பிள்ளை ஒரு நிமிடம் மட்டுமே கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரியாலயத்தில் வைத்து பல்வேறு சிவில் சமூக பிரதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன் காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடிதருமாறு தாயொருவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார். அவரை கட்டியணைத்த நவீபிள்ளை உங்களுடைய நிலைமைகளை …
-
- 1 reply
- 1.1k views
-
-
இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8822:2013-08-26-09-40-26&catid=1:latest-news&Itemid=18
-
- 11 replies
- 1.1k views
-
-
இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க நேற்று அங்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க முதல் முறையாக நேற்று முல்லைத்தீவுக்குச் சென்றார். அவர் முல்லைத்தீவுப் படைத்தலைமையகம், புதுக்குடியிருப்பில் உள்ள 68வது டிவிசன் தலைமையகம், ஒட்டுசுட்டானில் உள்ள 64வது டிவிசன் தலைமையகம், வெலிஓயாவில் உள்ள 59வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்றுக்குச் சென்று சிறிலங்காப் படையினருடன் கலந்துரையாடியதுடன், ஆயிரக்கணக்கான படையினர் மத்தியிலும் உரையாற்றியுள்ளார். நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னி…
-
- 0 replies
- 308 views
-
-
-எஸ்.கே.பிரசாத் 'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்தது. இன்று செவ்வாய்க்கிழமை யாழில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வடமாகாண பிரஜைகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்ட உறுதியினை வழங்கியதாக பிரஜைகள் குழு தெரிவித்தது. குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் கைதிகளின் விடுதலை மற்றும் உயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு…
-
- 0 replies
- 495 views
-
-
சிறிலங்கா வந்துள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை எதிர்கொள்வதற்குப் பயந்தே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பெலாரஸ் சென்றதாக, கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. நவநீதம்பிள்ளை கொழும்பு வருவதற்கு சில மணிநேரம் முன்னதாகவே, மகிந்த ராஜபக்ச பெலாரஸ் புறப்பட்டுச் சென்றிருந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், “நவநீதம்பிள்ளையை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அதிபர் பெலாரஸ் செல்லவில்லை. நவநீதம்பிள்ளை வரும் புதன்கிழமை திருகோணமலையில் இருந்து திரும்பியதும், வரும் வெள்ளிக்கிழமை மாலை 4.30…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த சந்திப்பு இன்றுக்காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையிலும் நடைபெற்றது. இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், காணாமல் போனோரின் சங்கத்தினர் தங்களுடைய உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு வாசிகசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த காணாமல் போனோர் சங்கத்தினரும் பங்கேற்றனர்.…
-
- 0 replies
- 704 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. கூட்டமைப்பின் ஐந்து கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டு குருமண்காடு சந்தியிலிருந்து கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. இக…
-
- 1 reply
- 674 views
-
-
இறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது குண்டுத்தாக்குதல்' இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்களன்று நடைபெற்ற அதேவேளை, மேலும், புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைகள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள…
-
- 15 replies
- 1.1k views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தேர்தல் பின்னர் மூன்றாவது கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கூறியுள்ளதாகவும் அந்த போராட்டம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் மெல்சிறிபுர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை சிறிய நாடு என்ற போதிலும் மிகவும் சிரேஷ்ட வரலாற்றை கொண்ட நாடு. போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலை நாட்டிய பின்னரே இந்த கௌரவமான வரலாற்றை பற்றி பேசுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொள்ள கூடிய…
-
- 8 replies
- 675 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1948ம் ஆண்டு ஸ்ரீலங்கா தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது ஆனால் நாம் எமத…
-
- 1 reply
- 550 views
-
-
வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச தரப்பினர் முன்வருன்றார்கள். அதன் பின் எங்களை மறந்து விடுகின்றார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது. நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் …
-
- 6 replies
- 673 views
-
-
அல்லைப்பிட்டி சருகுப்பிள்ளையார் அருகில் உள்ள இளைஞர்கள் விளையாடும் இடத்திற்கு எல்லையோரத்தில் மண்டையோடுகளும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகள் வெளித்தெரிவதினை அப்பகுதி இளைஞர்கள் அவதானித்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மேலும் சில மனித எலும்பு எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை 5 தொடக்கம் 8 வருடங்களுக்குள் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச் சப்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. http://www.sankathi24.com/news/32555/64//d,fullart.aspx
-
- 0 replies
- 485 views
-
-
ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அமையார் யாழ்.மாவட்டத்திற்றகு இன்று மாலை சென்று யாழ்.போதனா வைத்தியசாலையினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளதுடன், நாளை பல சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். இன்று காலை முதல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 7மணிக்கு சென்ற அமையார் சுமார் 20நிமிடங்கள் வைத்தியசாலையில் நின்று பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாடிய படியே, பார்வையிட்டார். இதன்போது வைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்துப் பேசியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை நாளை காலை 8மணிக் கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்திக்கும் அம்மையார், யாழ்.அரசாங்க அதிபரையும் தொடர்ந்து காணா…
-
- 2 replies
- 698 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார். முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் செல்லும் நவனீதம்பிள்ளை அங்கு மக்களை சந்திக்கவுள்ளார். அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜப…
-
- 8 replies
- 729 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இல்லாதிருந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போர் இருந்திருக்காது, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இல்லாதிருந்தால், வெற்றி சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க. கொழும்பில் நேற்றுமாலை இடம்பெற்ற சி.ஏ. சந்திரபிறேம எழுதிய, 'கோத்தாவின் போர்' என்ற ஆங்கில நூலின், சிங்கள மொழிபெயர்ப்பான 'கோத்தாபயகே யுத்தய' என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அதிபரின் தலைமையின் கீழும், கோத்தாபய ராஜபக்சவின் முயற்சியினாலும் தான் வெற்றி கிடைத்தது. கடந்தகாலத் தலைமைகள் பலவீனப்பட்டு, தோல்வியை சந்தித்த நிலையில் தான், சிறந்த தலைமைத்துவம் மூலம் கோத்தாபய ராஜபக்ச இதனை …
-
- 97 replies
- 4.5k views
-
-
நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள நிலையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டறிதல் தொடர்பாகவும், சிறைகளில்வாடும் தமிழ் அரசியல் கைதிகளதும், புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளதும் விடுதலை தொடர்பாகவும், இராணுவம் மற்றும் அரசினால் மே…
-
- 1 reply
- 572 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், அரசசார்ப்பு வேட்பாளர்கள் தொடர்ச்சியாக தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்ற போதிலும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம். தம்பிராசா தெரிவித்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என்றும் அவர்களை கைது செய்யுமாறு தான் கோரிய போது யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை அதிகாரி சமன்சிகார தன்னை அச்சுறுத்தியதாகவும், தலையை வெட்டி வீசுவேன் என தனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்றும் தம்பிராசா தெரிவித்தார். http://tamilworldtoday.com/?p=29526
-
- 1 reply
- 526 views
-
-
தமிழன் தன்னாட்சி கொண்ட நிர்வாகத்தை நடத்த வேண்டுமெனில் அரசுசார் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அனைவரும் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடும் இம்மானுவேல் ஆனல்ட். சாவகச்சேரி நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளும் கல்வியியலாளர்களும் பல்லைக்கழக மற்றும் மாணவர்களும் இந்த வடமாகாண சபைத் தேர்தலில் மிக அவதானமாகவும் நேர்த்தியாகவும…
-
- 1 reply
- 373 views
-