ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
பொதுநலவாய மாநாடு நடைபெறும் அதேசமயம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய வணிக அரங்கத்தில் பொதுநலவாயத்தில் அங்கத்துவம் இல்லாத சீனா வளைகுடா நாடுகள் ஆபிரிக்க நாடுகள் என்பவையும் கலந்துகொள்ள உள்ளன. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை பொதுநலவாய வணிக சேரவையின் பிரதம நிர்வாக அதிகாரி டாக்டர் மோகன் கவுல் சிறீலங்கா சென்றுள்ளார் முதலீட்டுக்கான வாய்ப்புகளை காட்சிப்படுத்தும் செயற்திட்டங்கள் 50 தொடக்கம் 100 வரை அமையலாம் என அவர் கூறினார். இந்த திட்டத்துக்கான நிதிபற்றிய வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ் ஒவ்வொரு வருடம் அமைச்சுக்கள்இ திணைக்களங்கள் தமது செயற்பாடுகளை விளம்பரப்படுத்த ஏராளமான பணத்தை வெளிநாடுகளில் செலவளிக்கின்றன. ஆயினும் இவ்வருடம் இப்படியான விளம்பரங்களை இலங்கையிலே செய்ய…
-
- 1 reply
- 360 views
-
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகளை அழைத்து பேசிய சுவிஸ் தூதுவர் Published on August 8, 2013-7:37 am · No Comments 2013 வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் சுவிஸ்ஸலாந்து தூதுவர் கௌ.தோமஸ் லிட்சர் அவர்களை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் சந்தித்து பேசினர். தூதுவரின் விஷேட அழைப்பின் பேரில் இச்சந்திப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சுவிஸ் தூதுவர் கௌ.தோமஸ் லிட்சர் சுவிஸ் தேசத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து சுருக்கமாக தெளிவுபடுத்தியதோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் சுவிஸ் தேசத்தில் வசிப்பதாக சுட்டிக்காட்டினார். இலங்கையில் அமைதி சமாதானம், அதிகாரப் பகி…
-
- 0 replies
- 197 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதுபற்றி எழிலனின் துணைவியார் பேட்டி! [Thursday, 2013-08-08 11:33:15] வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சசிகரன் ஆனந்தி அவர்களுடன் (திருமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் அவர்களின் துணைவி) தமிழ் 3 ஊடகம் மேற்கொண்ட செவ்வி கீழே தரப்பட்டுள்ளது. சரணடைந்த மற்றும் காணாமல் போன உறவுகள் பற்றியும் முன்னாள் போராளிகள், விதவைப் பெண்கள் ,குழந்தைகளின் இன்றைய நிலை குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் எழிலனின் துணைவியார். "http://www.youtube.com/embed/f6jU0Cq0d2s?feature=player_embedded" நன்றி -செய்தியிணையம்
-
- 0 replies
- 369 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தங்கள் தேவைகளை உணர்த்த முடியுமென புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார். http://www.thinakkural.lk/article.php?local/pcbac1hbox7210df308fd90615533kuxiw35b28d82558cf580c73ed9cdaqr
-
- 1 reply
- 395 views
-
-
விடுலைப்புலிகள் அமைப்புடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த 05 பேர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி ஒருவரே இவர்களை மீண்டும் அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அரசியல்வாதி புலிகளின் யாழ்ப்பாண கட்டளை தளபதியான தீபனின் நெருங்கிய உறவினர் எனவும் திவயின கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஆனந்தி என்ற பெண், புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95005/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 275 views
-
-
மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய பௌத்த மத குருவிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர் தொம்பே பகுதியைச் சேர்ந்த விகாராதிபதி ஒருவரான இந்தொலேபஞ்சாரதன ஹிமி என்பவருக்காகும். மஹவ பிரதான மஜிஸ்திரேட் ருச்சினி ஜயவர்தன முன் விசாரணைக்கு எடுக்கப்பட் வழக்கில் பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது- கடந்த 31ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மஹோதலதாகம என்ற இடத்தில் பொலிஸ் உத்தரவை மீறி வேகமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அச்சமயம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இருந்ததுடன் அதிக மது …
-
- 0 replies
- 241 views
-
-
வடக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் ரகசியமான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் இலாபத்தை அடைவதற்காக இந்த உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த உடன்படிக்கைக்கு அமைய அம்பாறையில் இருந்து செயற்படும் கிழக்கு மாகாண சபை தொடர்பான யோசனையை கைவிட முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டுள்ளது. காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் கூறிவரும் வேளையில், கிழக்கு மாகாணத்திற்கு அந்த அதிகாரங்கள் தேவை என தெரிவித்த…
-
- 0 replies
- 672 views
-
-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தின் மூலம் விநியோகிக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணபிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அப்பகுதிகளில் உள்ள கிராம அதிகாரிகள் மற்றும் தோட்ட அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளுமாறும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்திற்கு ஒப்பான இரண்டு புகைப்படங்களுடன் தோட்ட அதிகாரி அல்லது கிராம அதிகாரிடம் ஒப்படைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை,…
-
- 0 replies
- 365 views
-
-
கல்யாணப் பூரிப்பில் இருக்கிறார் சீமான்! 'வாழ்த்துகள்’ சொன்னால், ''அட, மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்... அதைக் கடைசியாப் பார்த்துக்கலாம்!'' என்று மடை மாற்றுகிறார். ''தர்மபுரி கலவரம், இளவரசன் மர்ம மரணம்...இந்த விவகாரத்தில் நீங்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளை வெளிப்படையாக அடையாளம் காட்டவோ, தாக்கிப் பேசவோ தயங்குவது ஏன்?'' ''சாதி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. எதிரில் நிற்பவனையும் குத்தும் எடுத்தவனையும் குத்தும். ஆனா, நாங்கள்பொது வான பிள்ளைகள். சாதி மத உணர்வைசாகடிச் சுட்டுதான் 'தமிழர்’ என்ற உணர்வோடுமேலெ ழுந்து வர்றோம். திவ்யாவுக்குச் சாதி வெறி இருந்திருந்தால், இளவரசனை மணந்து இருக்குமா? இளவரசன் மரணத்தைப் பா.ம.க-வில் உள்ளவங்க எல்லாரும் கொ…
-
- 0 replies
- 780 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லையென்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தமது காணிகளில் மகிந்த அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றது என்றும் மேற்படி காணி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல தரப்பினருக்கும் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிய போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென்றும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கில் கடந்த 1989 ஆம் ஆண்டு பல காணிகள் விமான நிலைய விஸ்தரிப்புக்காக சிறிலங்கா அரச…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கசினோ வர்த்தகத்தில் முதலீடு செய்யவுள்ள உலக பிரசித்திபெற்ற அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அச்சுறுத்தியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=26939
-
- 1 reply
- 454 views
-
-
'வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்திருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின் போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கும் என்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பட்டு வருகின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 'இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது. தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில…
-
- 11 replies
- 745 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாதென வலியுறுத்தி இன்று திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=26896
-
- 1 reply
- 395 views
-
-
அக்கால மன்னன் சிறி சங்கபோதியை அழிப்பதற்கு கோத்தா செயற்பட்டதைப் போன்று இன்று மஹிந்த அரசை அழிக்க ஒரு கோத்தா செயற்படுகின்றாரா என்று எண்ணத் தோன்றுகின்றது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலர் உள்ளார். ஏனெனில் இச்சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே. எனவே இதற்கு பொறுப்புக் கூறாது பாதுகாப்புச் செயலர் உள்ளமையானது அக்காலத்தில் சங்கபோதி மன்னனை அழிக்க கோத்தா செயற்பட்டதைப் போன்று தற்காலத்திலும் ஒரு கோத்தா …
-
- 1 reply
- 570 views
-
-
மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கு அரசாங்கம் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26934
-
- 0 replies
- 392 views
-
-
தமிழரசுக்கட்சியின் சிபார்சிலேயே ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைத்ததாக வேட்பாளர் முத்தையாபிள்ளை தம்பிராசா தினக்கதிருக்கு தெரிவித்தார். சங்கரிக்கு 50 இலட்சம் கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த தம்பிராசா என்ற தலைப்பில் தினக்கதிரில் வெளியான செய்தி தொடர்பாக தினக்கதிர் இணைய ஆசிரியரை தொடர்பு கொண்ட தம்பிராசா இந்த விளக்கத்தை தெரிவித்தார். வர்த்தகர் என்ற வகையில் தனக்கு அனைத்து கட்சிகள் அனைத்து தரப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பணம் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் தம்பிராசா தெரிவித்தார். லண்டனில் இருக்கும் தமிழரசுக்கட்சியை சேர்ந…
-
- 2 replies
- 459 views
-
-
வெலிவேரிய சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்யாது வெலிவேரியவிற்கு விஜயம் செய்யக் கூடுமென குறிப்பிட்டுள்ளார். வெலிவேரியவில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவம் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை கட்டுப்படுத்தக் கூடிய பல வழிகள் இருந்தும் அவற்றை தவிர்த்து படையினர் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்ணீர்ப் புகைக் குண்டு, நீர்த்தாரைப் பிரயோகம் போன்ற பல்வேறு வழிகள் இருந்தும் படையினர் அவற்றைப் பின்பற்றத் தவறியதாகக் குறிப்பிட…
-
- 5 replies
- 887 views
-
-
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசத்திடம் இந்திய அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26873
-
- 1 reply
- 443 views
-
-
ஜப்பானிய இளவரசி Tsuguko இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் ஜந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26887
-
- 1 reply
- 484 views
-
-
நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் முயற்சி செய்து வருவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=26870
-
- 0 replies
- 321 views
-
-
தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் கண்டி மாவட்டத்திலேயே அதிகமாக இடம்பெற்றள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்கவும் குரல் பதிவைக் கேட்பதற்கும்,http://tamilworldtoday.com/?p=26806
-
- 0 replies
- 312 views
-
-
வடபகுதிக்கான புகையிரதப் பாதையை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள், கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதிக்கு புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற புகையிரதமொன்றிலேயே இப் பொருட்கள் கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி மக்களுக்கு புகையிரத சேவையை விரைவாக வழங்குவதற்காக, இப் பாதை அமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள், கிளிநொச்சிக்கு புகையிரத சேவையை வழங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப் பாதை அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான புகையிரத வீதியில் காணப்படுகின்ற பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் மிகவிரைவாக நடைபெற்று வருகின்றன. இப் புனரமைப்புப் பணிகளில், உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலை…
-
- 3 replies
- 748 views
-
-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா 07ம் திகதி புதன்கிழமையன்று நடைபெறும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முருகப்பெருமான் அமர்ந்துள்ள ஆலயம் பெரும்பாலும் சிங்களமக்களால் பூஜைத்தட்டு வழங்கி ஆக்கிரமிக்கப்பட்டு வருவதையும் தெய்வானை அம்மன் ஆலய வளாகத்தில் தமிழ் மக்கள் பக்திபூர்வமாக வழிபட்டுவருவதையும் அவதானிக்கமுடிகிறது.முஸ்லிம் மக்கள் நேராகவே பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள். பூஜைத்தட்டு வழங்குவதற்கு காத்துநிற்கும் நீண்ட வரிசை நாளுக்குநாள் நீண்டுகொண்டு போகிறது. கதிர்காமக்கந்தன் ஆலயம் தற்போது ருகுணு மஹா கதிர்காம தேவாலயம் என அழைக்கப்படுகிறது. மூவின மக்களும் வழிபடும் புனித இடம் சங்கமமாகுமிடம் என அங்குள்ள ஒலிபரப்பு வர்ணனையாளர்கள் கூறுவது இதைத்தானோ …
-
- 0 replies
- 455 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச தரப்பினரால் தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முறைப்பாட்டினை செய்துள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து அழைக்கப்பட்ட கிராம சேவையாளர்களிற்கு மதிய விருந்து வழங்கிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள தமது தரப்பு வேட்பாளர்கள் கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் எழுப்பியுள்ளாராம். அவ்வேளை ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களான அன்பழகன் மற்றும் தவநாதனென பலரும் அங்கு சமூகமளித்திருந்ததாக கூறப்படுகின்றது. அதே வேளை மூத்த அரச அதிகாரிகள் சி…
-
- 0 replies
- 637 views
-
-
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக சிங்கள மாவட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர் வரையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இறக்கண்டி முதல் குச்சவெளி வரையிலான கடலோர காணிகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் தற்போது மூதூரில் இருந்து கிண்ணியா வரையான மேலும் 300 ஏக்கர் காணிப்பரப்பு இந்த புதிய மாவட்டத்துக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர…
-
- 0 replies
- 651 views
-