ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
வட மாகாண சபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=24526
-
- 0 replies
- 416 views
-
-
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவகையில் கழிவறைகளை அமைக்கவில்லை என்று கூட சில மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாக அந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24508
-
- 0 replies
- 508 views
-
-
அவுஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரொட்டின் புதிய புகலிடக் கொள்கை சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24446
-
- 0 replies
- 303 views
-
-
பந்தயத்தில் தோல்வியடைந்ததால் உள்ளாடையுடன் வீதியில் வலம் வந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று தெரனியாகல நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சி தாவ மாட்டார் என பந்தயம் கட்டியுள்ளார். அவ்வாறு தாவினால் உள்ளாடையுடன் மாத்திரம் தெரனியாகல நகர் முழுவதும் வலம் வரப்போவதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர் நேற்றுக் கட்சித் தாவியதால் பந்தயத்தில் தோல்வியடைந்த குறித்த நபர் இன்று வீதியில் தனது உள்ளடையுடன் மாத்திரம் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அவரைக் கைதுசெய்த தெரனியாகல பொலிஸார் அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தான் பந்தயத்தில் தோல்வியடைந்த காரணத்த…
-
- 2 replies
- 519 views
-
-
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளை அமெரிக்கா விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மெடலீன் அல்பிரிட் தலைமையிலான குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பதற்கான உரிமை என்ற முக்கிய பொறுப்பை சர்வதேச நாடுகள் உதாசீனம் செய்துள்ளதாகக் அல்பிரிட் குற்றம் சுமத்தியுள்ளார். இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைகள் போன்ற விடயங்கள் குறித்து ஆர்2பீ எனப்படும் பாதுகாப்பதற்கான உரிமை அறிக்கை கவனம் செலுத்துவது வழமையானதாகும். ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் ஆயிரக் கணக்கான …
-
- 11 replies
- 1.1k views
-
-
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுகட்சியின் சார்பில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பிலான இறுபறிகளின் தொடராக தமிழரசுக்கட்சியின் மூத்த தூண்களாக கருதப்படுகின்றவர்களில் ஒருவர் கட்சிஅங்கத்துவத்திலிருந்து விலகியிருப்பதாகவும் மற்றொருவர் விலகுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது. அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து வரும் பிரதே சபை அங்கத்தவர் பதவி என்பவற்றை இன்று ராஜினாமாச்செய்துள்ளார். மற்றொரு அங்கத்தவரான குலநாயகமும் ராஜினாமாச் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மாவை சேனாதிர…
-
- 2 replies
- 489 views
-
-
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் தீருவில் வயலூர் முருகன் ஆலயத்துடன் இணைந்த வெளியில் பொதுப் பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவம் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நகர பிதா திரு.நடராஜா அனந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதே வேளை அன்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் நகராட்சி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட் மர நடுகைத் திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சியைத் தடை செய்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டுமென்ற மனு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால்; கையளிக்கப்பட்ட பொழுது, நீதிமன்றில் சமுகமளித்திருந்த அனைத்துச் சட்டத் தரணிகளும் ஒருமித்த குரலில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால்; கையளிக்கப்பட்ட ம…
-
- 0 replies
- 563 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் நிலைமைகள் குறித்து பிரி;த்தானிய நிலைப்பாடு எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் வெளியிடப்படும் என பொதுநலவாய நாடுகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற சிரேஸ்ட அமைச்சர் பாரோநெஸ் செய்யடெ தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் இலங்கையில் நடைபெறவுள்ள அமர்வுகளின் போது கேள்விகள் எழுப்புவார்கள் என குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் மதிக்கப்படுகின்றமையை இலங்கை அரசாங்கம் நிரூபிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நல்லிணக்கம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்காமை, பொதுநலவாய ந…
-
- 0 replies
- 348 views
-
-
தென் லண்டனில் மூன்று கார்களில், பெரும் தாக்குதல் திட்டத்துடன் வந்த, இலங்கைத் தமிழ்க் கூட்டத்தினைக் கண்டு தப்பி ஓடிய இளைஞர் கூட்டத்தில், விரைவாக ஓடித் தப்ப முடியாத காரணத்தினால், அந்த வெறி கொண்ட மிருகங்கள் போல் நடந்து கொண்ட மனிதர்களின் ( Behaved like a pack of wild animals - London Evening Standard) கைகளில் இருந்த, பேஸ் பந்து மட்டை, கிரிக்கட் மட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களினால் தலையில் தாக்கப் பட்டு, மூளை வெளி வந்து மரணித்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி தமிழ் மாணவரின் (Thierry Christian-Gnanakumar, 22) கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொலைக் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ள 8 பேரில் இருவர் சிங்களவர்களாக பெயரில் தெரிகின்ற போத…
-
- 17 replies
- 2.7k views
-
-
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] « ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? » என்னும் தலைப்பில் வெளியாகும் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதி இது. இதனை குணா. கவியழகன்* எழுதுகின்றார். எதற்காக எழுதுகிறேன்? மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு. சிறிலங்காவில் தேசிய இனப்பிரச்சினையை ஒப்புக் கொண்டு அனைத்துலகத் தலையீட்டோடு தீ…
-
- 25 replies
- 3k views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை, கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24294
-
- 7 replies
- 885 views
-
-
கறுப்பு யூலையினை நினைவேந்தி தபால் அட்டை பிரச்சாரம்: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [Thursday, 2013-07-25 20:02:40] இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள இனவாத அரசினது திட்டமிட்ட இனவழிபின் ஒர் அங்கமாக அமைந்த கறுப்பு யூலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாட்களை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் நினைவேந்தி வரும் நிலையில் கறுப்பு யூலையினை மையப்படுத்தி தபால் அட்டை பிரச்சாரமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. அனைத்துலக அரச மற்றும அரசியல் மையங்களை நோக்கி இத்தாபல் அட்டையினை அனுப்பி வைக்குமாறு அனைத்து தமிழ்உறவுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சகம் கோரியுள்ளது. 1958ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு கறுப்ப…
-
- 0 replies
- 367 views
-
-
பொதுநலவாய அமைப்பின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி - நவம்பர் 17ஆம் திகதி முதல் நடைபெற இருக்கும்பொதுநலவாய அமைப்பின் மகாநாடு சிறிலங்காவில் நடைபெற இருக்கிறது. 1991ஆம் ஆண்டு ஹராரே தீர்மானம் ஊடாக பொதுநலவாய அங்கத்துவ நாடுகள், மதித்து நடக்கவேண்டியஅடிப்படை தீர்மானங்கள் வரையறுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பாகிஸ்தான், கென்யா போன்ற நாடுகள் விலக்கி வைக்கப்பட்டது, ஜிம்பாவேநீக்கப்பட்டது, இன்று வர பிஜி விலக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று 21ஆம் நூற்றாண்டின் மிகக்கொடிய இனப்படுகொலையை செய்த நாடும், மனிதவுரிமைசபையில் சிறி லங்காவிற்கு எதிராக 2 தீர்மானம் முன்வைக்கப்பட்ட போதும், அதை மதியாமல் தொடர்ச்சியாகஇனப்படுகொலையை செய்யும் நாடாகிய சிறி லங்காவில் பொதுநலவாய அமைப்பின் மகாநாட்டை நடாத்தி, அ…
-
- 0 replies
- 752 views
-
-
பிரதேச ஊடகவியலாளர்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு என்ற பெயரில் சிறிலங்கா அரச தகவல் திணைக்களத்தால் கடந்த செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கின் மூலம் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களைவிட தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் இராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அதனை விட இராணுவ ஊடகவியலாளர்களும் இராணுவப் புலனாய்வாளர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர். யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கிற்கு இராணுவத்தினரும் இராணுவ ஊடகவியலாளர்களும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் அழைக்…
-
- 0 replies
- 348 views
-
-
யாழ்.வடமராட்சிப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த சிவில் உடை தரித்த படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 4 மணியளவில் கரவெட்டி இராஜசிங்கம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே நுழைந்த படையினர் அங்கு நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இன்னொரு இளைஞரை நிர்வாணப்படுத்தி ஆண் உறுப்பில் தாக்கியுள்ளனர். அதனை அவரது பேத்தியார் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட சாதனங்களையும் அடித்து நெருக்கி விட்டு அவர…
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றிய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்திய பிரதமர் டொக்டர் மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை, அதிகாரப் பகிர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உள்ளக ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம், அரசியல் தீர்வுத் திட்டம் போன்ற விவகாரங்களில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 14ம் திகதி அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளித்த போது அவர் இதனைக் க…
-
- 2 replies
- 785 views
-
-
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துபவர்களை தடுக்கும் வகையில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய இரவு நேரங்களில் பொலிஸார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏல்.துஸமிந்தா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24362
-
- 0 replies
- 553 views
-
-
வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வகையில் மன்னார் மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அலுவலகத்தில் சுயேட்சைக்குழு ஒன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24378
-
- 0 replies
- 363 views
-
-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள காணியில் 1.4 பில்லியன் டொலர் செலவில் 'நகர வளாகம்' ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் சிறிலங்கா அரசு சீன நிறுவனம் ஒன்றுடன் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு தெற்கு புதிய துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை துறைமுக அதிகாரசபை பெற்றுக்கொண்டு அதில் சீன நிறுவனத்துக்கு முதலீட்டு வாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகரின் கரையோரத்தை நவீனமயப்படுத்தும் விதமாக சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் இந்த 'துறைமுக நகரை' உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியாத் பண்டு விக்ரம குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் தற்போது துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தை துறைமுக அதிகாரசபையின் …
-
- 0 replies
- 425 views
-
-
வடமாகாண சபை தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுத்தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அதன்படி தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தொழில் கட்சி யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் 1.05 மணிக்கு முதலாவது கட்சியாக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சிகளில் இலங்கை தொழில் கட்சியின் முதன்மை வேட்பாளர் தயானந்த யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று முதலாவது கட்சியாக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் குறித்த கட்சியின் முதன்மை வேட்பாளர் தயானந்த உட்பட 19 பேர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.ph…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையின் அரசியலமைப்பு சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான, இனவாத அரசியலமைப்பாகும். இதனை தற்போதைய அரசாங்கம் முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது. உரிய உரிமைகள் உள்நாட்டில் வழங்கப்படாத நிலையில், தமிழர்கள் இந்தியாவிடமோ, ஏனைய சர்வதேச நாடுகளிடமோ செல்வதை குறைகூற முடியாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். இந்தியாவிற்கு உரிய பாடம் புகட்ட வேண்டுமாயின் இந்தியா வலியுறுத்துவதைவிட ஒருபடி மேல் சென்று தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அப்போது சர்ச்சைக்குரிய இலங்கை - இந்திய ஒப்பந்தமும் தானாக இரத்தாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய பிரச்சனை தீர்வுக்கான அணுகுமுறை முன்மொழிவுகள் என்ற தலைப்பில் ஜே.வி.பி. வெளிய…
-
- 0 replies
- 407 views
-
-
வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது. செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற பொலிசார், சம்பவம் நடைபெற்ற கடைக்கு அடுத்த கடையில் பணியாற்றுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். கொள்ளையிடப்பட்ட வர்த்தக நிறுவனம் வவுனியா நகரில் பழைமை வாய்ந்தது என்பதுடன், பொலிஸ் நிலையத்திற…
-
- 0 replies
- 338 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேர் உட்பட 208 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 28 குழந்தைகள் உட்பட 51 பேர் காணாமற்போயுள்ளனர். நேற்று மாலை 4 பேரின் சடலங்கள் கரையொதுங்கியதாகவும் அதில் இருவர் குழந்தைகள் எனவும் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள புதிய கொள்கையின் பின்னர் இடம்பெற்ற படகு விபத்து இதுவாகும். இந்தோனேஷியாவிலிருந்து 208 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் படகு ஒன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுள்ளது. இதில் 180 தமிழர்களும் மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த 28 பேரும் பயணித்துள்ளனர். படகு புறப்பட்டு நான்…
-
- 0 replies
- 335 views
-
-
பண்டாரவன்னியனின் நினைவிடமாக ஒதுக்கப்பட்டிருந்த, முல்லைத்தீவு கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில நாள்களாகக் குறித்த பகுதியில் "பைக்கோ' இயந்திரங்களைக் கொண்டு பெரும் மரங்கள் வேரோடு சரிக்கப்பட்டுத் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் 4 ஆம் கட்டைப் பகுதியில் கற்பூரப் புல்வெளி என்ற இடத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியை ஆண்ட கடைசி மன்னனான பண்டார வன்னியன், வெள்ளையர்களுடன் போரிட்டு வெற்றி கொண்ட இடமாகக் கற்பூரப் புல்வெளி பிரதேசம் காணப்படுகின்றனது. இந்த 10 ஏக்கர் காணி யாருக்கும் வழங்கப்படாமல்…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையேயான பங்கீடு முடிவுக்கு வந்துவிட்ட போதும் தமக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் உட் கட்சி இழுபறி தொடர்கின்றது. அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து வரும் பிரதே சபை அங்கத்தவர் பதவி என்பவற்றை இன்று ராஜினாமாச்செய்துள்ளார். மற்றொரு அங்கத்தவரான குலநாயகமும் ராஜினாமாச் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மாவை சேனாதிராசாவின் வலது இடது கரங்களான இத்தரப்புக்களது ராஜினாமாவை மாவை ஏற்றுக்கொள்வாரா என்பது தெளிவாகவில்லை. இதனிடையே தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழ…
-
- 0 replies
- 433 views
-