Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.டி.பி. ஏகமனதாக தீர்மானித்துள்ளது..... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22092

    • 16 replies
    • 1.5k views
  2. "இத்தால்... ஶ்ரீலங்கா சோசலிச ஜனநாயகக் குடியரசின் குடிமக்கள் யாவரும் அறிவது என்னவென்றால், வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்... ஏற்றுக்கொள்ளப்படும்!" மேலும், http://tamilworldtoday.com/?p=22377

    • 0 replies
    • 418 views
  3. இந்தியாவிடம் நாட்டை ஒப்படைக்க சில ஒப்பந்தக்காரர்கள் முயற்சித்து வருவதாகவும் இதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22374

    • 0 replies
    • 435 views
  4. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் ஆடையணித்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்தால், அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=22269

    • 9 replies
    • 714 views
  5. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலையே தொடர்கின்றது. http://tamilworldtoday.com/?p=22337

    • 5 replies
    • 878 views
  6. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் பௌத்த மாணவர்களின் வழிபாட்டு நலன் கருதி புத்த சிலையொன்று இன்று காலை பிரதிஷ்டை செய்யப்ட்டது. கௌதம புத்தர் சிலை ஏறாவூர் புளினதலாராம விகாரையிலிருந்து கொம்மாதுறை இராணுவ முகாமிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பிரதான வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பல்கலைக் கழக மாணவர்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்து. சுமார் 30 வருட காலமாக இயங்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த நான்கு வருடங்களாக பௌத்த சமய மாணவர்கள் கனிசமான அளவு கல்வி கற்கின்ற போதிலும் வழிபாட்டிற்கான தலம் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது. புத்தர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் ஜயந்திப…

    • 4 replies
    • 515 views
  7. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/?p=22333

  8. கெல்லம் மெக்ரே - "அந்த நாள் வெகு தொலைவில்" இல்லை எஸ். சிறிதரன் - கூறியதாக சிங்கள வார இதழ் கூறுகிறது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் நாளிலேயே தமக்கு நித்திரை வரும் எனவும் அப்போதே தாம் மகிழ்ச்சியடைவேன் எனவும் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான நோ பையர் ஷோன் என்ற படத்தை இயக்கிய கெல்லம் மெக்ரே கனடாவில் நடைபெற்ற தமிழ் கலாசார விழாவின் போது கூறியுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என கூறியதாக அரசாங்கத்தின் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது. தமிழ் கலாசார விழாவை புலிகளின் ஆதரவு அமைப்பான கனேடிய தமிழர் ஒன்றியம் நடத்தியது. மலேசியாவில், க…

  9. வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதியிடம் நேற்று முன்தினம் கோரியிருந்தார். மேலும்,http://tamilworldtoday.com/?p=22319

    • 0 replies
    • 644 views
  10. வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் யாழ் கொடிகாமம் பகுதியில் சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களால் மக்களின் பலத்த ஆதரவுடன் வரவேற்று அழைத்து வரப்பாட்டார். சாவகச்சேரி நகருக்கு வருகை தந்த அமைச்சர் பேரூந்து நிலையம், வர்த்தக நிலையம் என்பவற்றிக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தினையும் திறந்து வைத்தார். சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் அங்கு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட விடுதிகளைப் பார்வையிட்டதோடு …

  11. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னால் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரனை முன்னிறுத்துவதற்கு வடக்கு புத்திஜீவிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனினும், வடக்கு புத்திஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்களின் இந்தக் கருத்தானது யதார்த்தத்திற்கு புறம்பானது என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும்,...http://tamilworldtoday.com/?p=22130

    • 3 replies
    • 810 views
  12. 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு அமைய செயற்படப் போவதில்லையெனவும், நடுநிலையானதும் சுயாதீனமான தீர்மானங்களையே மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22259

    • 0 replies
    • 569 views
  13. வடக்குத் தேர்தலுக்காக ஆதரவு திரட்ட இன்று யாழ்.வருகைதந்திருந்த அமைச்சர் மேர்வின்சில்வாவின் அடிவருடிகள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டள்ளனர். யாழ்.நகரப்பகுதியில் மக்கள் மத்தியில் நின்ற அமைச்சர் மேர்வின்சில்வாவின் அடிவருடிகள் கால் செருப்புடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தினை வைத்துக் கொண்டு நின்றுள்ளனர். வடக்குத் தேர்தலுக்கு யாழ்.மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுடைய ஆதரவு திரட்டும் முயட்சியில் சிறிலங்கா அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக தற்காலத்தில் அதிகமான அமைச்சர் பட்டாளம் யாழ்ப்பாணத்தினை குறிவைத்து வருகைதருகின்றனர். அந்த வழியிலேயே அமைச்சர் மேர்வின்சில்வாவும் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள…

  14. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைந்துகொள்வதற்கு இலங்கையைச்சேர்ந்த 100 பெண் படையினர் காத்திருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். அவர்கள் அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைதி காக்கும் படையில் பெண் படையினரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பால் நிலை சார்ந்த வன்முறை சம்பவங்களின் போது ஈடுபடுத்துவதற்காகவே அமைதிப்படையில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.seithy.com/breifNews.php?newsID=87427&category=TamilNews&language=tamil

  15. அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுடன் சிறிலங்கா படைத்தரப்பின் சிறப்புப் படைப் பிரிவுகள் பயிற்சி! அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா படைத்தரப்பின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருகோணமலையில் கடந்த 02ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சி எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுடன் ஆண்டு தோறும் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இப்பயிற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி என்பனவும், சிறிலங்கா …

  16. வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், செல்வராஜா ஆ…

  17. வட மாகாண சபபை தேர்தலில் முதலமைச்சராக அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவரை நியமனம் செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என இந்து மகா சபைகேட்டுக்கொண்டுள்ளது.. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22202

    • 5 replies
    • 602 views
  18. கடத்துவோர் - வரி ஏய்ப்போர் - போதைப்பொருள் விற்பனையாளர் பாதாள உலக கோஷ்டியினர் அதிகளவானோர் முஸ்லிம்களே 13 ஜூலை 2013 கலகொட அத்தே ஞானசார தேரரரின் ஞான உபதேசம் தொடர்கிறது இலங்கையில் அதிக கடத்தலில் ஈடுபடுதல், வருமான வரி ஏய்ப்பவர்கள், போதைப்பொருள் விநியோகிஸ்த்தர்கள்;, பாதாள உலக ஜாம்பவான்கள்; பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா செயற்படுகின்றது என்ற கருத்து முற்றிலும் பிழையானதெனக் கூறிய அவர் தமிழ் மக்களுக்கெதிராகவோ, முஸ்லிம் மக்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்த குழுக்களுக்கு எதிராகவோ தாம் செயற்படவில்லை என வலியுறுத்தி உள்ளார். 'நாம் ஒ…

    • 3 replies
    • 524 views
  19. கேரளா செல்வதற்கு அஞ்சும் பசில் ராஜபக்ச – இந்திய ஊடகம் தகவல் [ சனிக்கிழமை, 13 யூலை 2013, 01:43 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவின் கேரள மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ள போதிலும், பாதுகாப்புக் காரணங்களால் அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவில் உள்ளூராட்சி சபைகளுக்கு எவ்வாறு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன, அவற்றின் நிர்வாக முறை தொடர்பாக ஆராயவே பசில் ராஜபக்ச கேரளா வர விருப்பம் வெளியிட்டுள்ளதாக, கேரள உள்ளூராட்சி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் பி.பி.பாலன் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி சபை…

    • 1 reply
    • 429 views
  20. தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் : எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார். ‘All is depend on need and respect. The human dignity is denied not the human rights’ நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூ…

  21. சிறுமியர் துஷ்பிரயோகம் இருவர் விளக்கமறியலில் சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்ற குற்றச் சாட்டில் இரு வேறு சம்பவங்களில் தொடர்புடைய இளைஞன் ஒருவனும், சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனும், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட் பட்ட சிறுமியொருத்தியின் 61 வயதான தந்தையுமே எதிர் வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/News_More.php?id=438952170513786799

  22. நினைத்ததை முடிப்போம்; 13 திருத்தம் தொடர்பாக சம்பந்தனிடம் ஜனாதிபதி திட்டவட்டம் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் "13' திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு முயற்சியிலும் அரசு முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை. நாங்கள் நினைத்ததை முடித்தே தீருவோம். இதனைத் தெட்டத் தெளிவாக இந்தியாவுக்கும் தெரிவித்துவிட்டோம். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறும். இதில் கூட்டமைப்பே வெற்றிபெறும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற முக்கிய சந்திப்பு ஒன்றின்போதே சம்பந்தனுக்கு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவச…

  23. புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்துக்குள்ளானது 13 ஜூலை 2013 புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன . இலங்கையர்கள் உள்ளிட்ட 97 பேர் இந்தப் படகில் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் பயணித்த 88 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்த குழந்தையொன்றின் சடலத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படகு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…

  24. புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார். 13 ஜூலை 2013 புத்தளம் உடப்பு ஆண்டிமுனையில் வைத்து தமிழ் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார். சொக்கலிங்கம் சேக ரூபன் என்ற வர்த்தகரே இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. . நேற்று வெள்ளிக்கிழமை இரவே இவர் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வர்த்தக நடவடிக்கையை நிறைவு செய்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சிவப்பு நிற காரில் சென்ற இனந்தெரியாதவர்களே அவரை கடத்திச்சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93975/languag…

  25. சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளது 13 ஜூலை 2013 சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்து அதற்கு ஆதரவாக பத்தாயிரம் கையொப்பங்களை திரட்டவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. இணையத்தின் ஊடாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 'உண்மையை வெளிப்படுத்த வேண்டும்' என்ற தொனிப்பொருளிலான மகஜர் ஒன்றை சர்வதேச மன்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.