ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
வடமத்திய, மத்திய மாகாண சபைகளை எப்போது கலைப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் குழப்பம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் உள்ளிட்ட வடக்குத் தேர்தல் செப்டம்பர் 8,17,26ஆம் திகதிகளில் நடத்தப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=16977
-
- 1 reply
- 571 views
-
-
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கான வணக்க நிகழ்வு நேற்று (16-06-2013) லண்டனில் நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மிகக்குறுகிய அழைப்பில் லண்டன் மிச்சம் பகுதியில் இடம்பெற்ற இந்த வணக்க நிகழ்வில் மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர். அக வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வில், ஈகச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மேற்கு லண்டன் பிராந்தியப் பொறுப்பாளர் நவம் ஏற்றி வைத்தார். மலர் மாலையை பிரித்தானிய மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் சாஜஹான் அணிவிக்க, தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மணிவண்ணன் அவர்களின் நண்பருமான டாக்டர் சவுந்தரராஜன் …
-
- 0 replies
- 791 views
-
-
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதர் மணிவண்ணன் அவர்களுக்கு நேற்று மாலை 5 மணியளவில் கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Rd, Scarborough, Ontario ) கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாட்டில் வணக்க நிகழ்வு நடைபெற்றது . Share this posthttp://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15964:hello-mani-s-event-held-in-canada&catid=86:eezham&Itemid=104
-
- 0 replies
- 641 views
-
-
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது. அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது. 2ம் நாளாகிய நேற்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகைச்…
-
- 0 replies
- 501 views
-
-
மறைந்த மணிவண்ணன் உடல் சென்னை போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் பிரதான சீடர்களில், மணிவண்ணனும் ஒருவர். கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் ஆனார். நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல, வெள்ளி விழா படங்களை இயக்கியவர். பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி நடித்த, கொடி பறக்குது படத்தில், வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக, 400க்கும் மேற்பட்ட படங்களில், மணிவண்ணன் நடித்துள்ளார். இதய அறுவை ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடி கப்பல்கள்! [sunday, 2013-06-16 08:31:25] சிறிலங்கா தேசியக் கொடிகளை பறக்கவிட்டவாறு இந்தியாவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்க சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்று சிறிலங்கா முதலீட்டுச் சபையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாட்டை அடுத்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தனது பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிறுவனத்தின் மீன்பிடிப் படகுகள், சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பில், சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள…
-
- 1 reply
- 782 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் துமிந்த சில்வா என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தபோது ''நடந்தவை எவையும் தனக்கு ஞாபகத்தில் இல்லை'' எனத் தெரிவித்ததாக இவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது. நாளை நாடாளுமன்றம் செல்லும் இவர், நாடாளுமன்றமும் ஞாபகம் இல்லையெனக் கூறுவாரோ தெரியவில்லை. மேலும், http://tamilworldtoday.com/?p=16970
-
- 0 replies
- 614 views
-
-
13ஆம் திருத்தச் சட்டம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர். இன்று (16) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந…
-
- 3 replies
- 1.1k views
-
-
30 இலங்கையர்கள் இரகசிய கணக்குகளை பேணி வருகின்றனர் 17 ஜூன் 2013 30 இலங்கையர்கள் இரகசிய கணக்குகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடும் நோக்கில் இவ்வாறு இரகசிய முறையில் வங்கிக் கணக்குகளை பேணி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 30 இலங்கையர்களும் இரண்டு நிறுவனங்களும் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் இவ்வாறு கணக்குகளைப் பேணி வரும் 100,000 பேர் மற்றும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 30 இலங்கையர்கள் பற்றிய தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. புலனாய்வு செய்தியாளர்களின் சர்வதேச ஒன்றியத்தினால் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் அனுமதியின்றி இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை பேண முடியாது என்பது…
-
- 0 replies
- 401 views
-
-
அல்கய்தா, தலிபான்களுக்கு எதிராக இலங்கையில் தடை 17 ஜூன் 2013 அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவி;த்தல் ஒன்றை விடுத்துள்ளது. 250க்கும் மேற்பட்ட அல் கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் இந்தப் பட்;டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது, பாதுகாப்புச்…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கைக் கொடியின் கீழ் சீன மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடியில் ஈடுபடவுள்ளன இலங்கைத் தேசியக் கொடியின் கீழ், சீன மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விசேட ஒப்பந்தமொன்றின் மூலம் இவ்வாறு மீன்பிடிக்கப்பட உள்ளது. 90 வீதமான மீன்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதுடன், 10 வீதமானவை இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அளிக்கப்பட உள்ளது. இலங்கையின் தென் பகுதியில் நான்கு கப்பல்கள் மீன்பிடியில் ஈடுபடவுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92981/language/ta-IN/article.aspx
-
- 3 replies
- 730 views
-
-
இராணுவச் சிப்பாய்களின் சம்பளத்தில் இருந்து 500 ரூபாவை காப்புறுதி என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அறவிடுவதற்கு அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. http://tamilworldtoday.com/?p=16642
-
- 5 replies
- 923 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்க மடையச் செய்துள்ளது. இதை இலங்கை அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்சே வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கோட்டெலவாலா ராணுவ பல்கலைக் கழகத்தில் அவர் பேசியபோது, ‘’ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. சமீபகா…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்தியா நீலகிரியில் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி ஜூன் 16, 2013 இந்தியாவின் நீலகிரியில், இலங்கை அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பையும் மீறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றமையினால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், வெலிங்டன் இராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம், இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆய…
-
- 5 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் மத மோதல்-12 பேர் காயம் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும் இடையே நடந்த மோதலகளில் மதபோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார். அப்பகுதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக காலத்தின் காலை பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அங்குள்ள மெத்தடிஸ்ட் திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது திருச்சபையில் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவது தமது பூசைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்று பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் கூறியதை அடுத்து வாய்தகராறுகள் முற்றி மோதல்களாக வெடித்தன என்று அப்பகுதியிலுள்ள…
-
- 2 replies
- 736 views
-
-
13ம் திருத்தச் சட்டம் மாற்றப்படுவதனை விரும்பவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் 16 ஜூன் 2013 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனை விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் 13ம் திருத்தச் சட்டத்தை அதேவாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. உத்தேச திருத்தங்களை இன்னமும் பார்வையிடவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு பதிலீடாக 19ம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிந்து கொண்டதாகவும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.http…
-
- 0 replies
- 670 views
-
-
வாழ்விடம் கோரி சுனாமி குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) திருகோணமலை கோணேசபுரி சுனாமி குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கோணேசபுரி சுனாமி குடியிருப்பில் தற்போது 372 வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் ஆனால் இதில் 249 வீடுகளில் மட்டுமே மக்கள் குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் 123 வீடுகள் பூட்டப்பட்டுள்ளபோதும் 85 வீடுகளில் ஏற்கனவே வீடுகள் இல்லாத ஏழை மக்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றார்கள். இதனிடையே இந்த வீடுகளின் உரிமையானவர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு அறிவித்தல் விடுத்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் எதிர்வரும் 14 தினங்களுக்குள் வீடுகளைவிட்டு இந்த 85 குடும்பங்களையும் எழும்புமாறு அறிவித்தல் …
-
- 0 replies
- 466 views
-
-
ததேகூ உறுப்பினர்கள் இந்தியா மீது கடுமையான விமர்சனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண…
-
- 0 replies
- 937 views
-
-
http://soundcloud.com/ima-tamil/kajendrakumar-ponnambalam-on 13 ஆம் திருத்த சட்டமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும். கஜெந்திரகுமர் பொன்னம்பலம், ஊடகர் சந்திப்பு. கஜெந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 11/06/2013 நடாதிய ஊடகர் சந்திப்பு ஒலி வடிவில்; http://srilanka.imatamil.com/?p=310#.UbuBDdVA-64.facebook
-
- 1 reply
- 632 views
-
-
விபத்தில் படையினர் இருவர் பலி: ஒருவர் காயம் சனிக்கிழமை, 15 ஜூன் 2013 08:30 0 COMMENTS எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர புத்தளம், தபோவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இராணுவத்தில் கடமையாற்றும் படைவீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த கேணல் எச்.பி.ஆர்.ரவிந்திர ஹந்துன்பத்திரன மற்றும் கொப்ரல் சஞ்சிவ குமார ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மேஜர் ஜெயசுந்தர புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் பயணித்த வாகனம் கிளிநொச்சி படை முகாமிலிருந்து கனேமுல்ல பகுதிக்கு செல்லும்போதே இவ்…
-
- 0 replies
- 562 views
-
-
வடக்கில் தேர்தல் நடத்தப்படாவிடின் அந்தப் பிரதேசம் தனிநாடாகவே கருதப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=16646
-
- 0 replies
- 635 views
-
-
மத்திய, வட மத்திய மாகாண சபைகளை எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamilworldtoday.com/?p=16637
-
- 0 replies
- 633 views
-
-
13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராய்ப்பட்ட சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச தாக்கப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் விவகாரம் குறித்து கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவை மூத்த அமைச்சர் டியூ.குணசேகர தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறிலங்கா அரசாங்கம் அது வெறும் வதந்தி என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பியபோது, இது வெறும் கட்டுக்கதை என்றும், அத்தகைய சம்பவம் எதையும் தான் பார்க்கவில்லை என்றும் பதிலளித்து…
-
- 2 replies
- 644 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புணாணை கிழக்கில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை உடனடியாக நிறுத்த உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள கடிதம் வருமாறு ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் புணாணை கிழக்கு பகுதியில் உள்ள புணாணை கிராமத்தில் அங்குள்ள இராணுவத்தின் உதவியுடனும், அங்கு விகாரை அமைந்துள்ள பிக்குவின் ஏற்பாட்டி…
-
- 0 replies
- 434 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் ஜெர்மனியில் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார். உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முனவைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சமூக நிறுவனங்கள் என்ற போர்வையில் சில விடுதலைப் புலி ஆ…
-
- 0 replies
- 562 views
-