Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேரூந்து ஒன்றில் பயணித்த தமிழ்ப் பெண் ஒருவருடன் இராணுவத்தினர் மதுபோதையில் சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பேரூந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அசௌகரியம் அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த 26ம் தேதி இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த பெண் பேரூந்தில் பயணிக்கும் பொழுது இரண்டு ஆசனங்களுக்கு கட்டணம் செலுத்தி பற்றுச்சீட்டை வாங்கியுள்ளார். ஒரு ஆசனத்தில் தான் அமர்ந்து கொண்டு மற்றைய ஆசனத்தில் தனது பொதிகளை வைத்துள்ளார். அப்பொழுது விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பிய சிவில் உடையணிந்த சில இராணுவத்தினர் மதுபோதையுடன் பேரூந்தில் ஏறிக்கொண்டனர். தாம் அந்த ஆசனத்தில் இருக்க போவதாக இராணுவத்தினர் குறித்த பெண்ணுடன் தகராறு ச…

  2. தமிழ் வாக்காளர்களின் ஆதரவை திரட்டவே கனடா, இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலாகொட் தெரிவித்துள்ளார். கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே தற்போதைய அரசாங்கம், பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் மாநாட்டை புறக்கணிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். உள்நாட்டு அரசியல் நோக்கங்களை இந்த விவகாரத்தில் மேலோங்கிக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு காலப் பகுதியில் கொலாகொட் இலங்கையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மனித உரிமை நிலைமைகள் மோசமாக காணப்படுகின்றது என்பதில் தமக்கு மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் மனித உரிமை நிலைமைகள்…

  3. 10 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறை யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது தீர்ப்பு. 10 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த குடும்பஸ்தருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ். மேல் நீதிமன்றம். புங்குடுதீவைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் என்பவருக்கே மேல் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்தது. இந்த வழக்கு தீர்ப்புக்காக யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2006 ஆம் ஆண்டு மே 7 ஆம் திகதி 10 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டில் புங்குடுதீவைச் சேர்ந்த…

  4. அவுஸ்திரேலிய முகாம்களில் தப்பிச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரை காணவில்லை என அவுஸ்திரேலிய தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், http://tamilworldtoday.com/?p=12822

    • 0 replies
    • 462 views
  5. PNP என்ற செய்திச் சேவையினால் வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும், இந்த அடையாள அட்டை 2011ஆம் ஆண்டுக்கு மாத்திரமே செல்லுபடியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=12861

    • 0 replies
    • 420 views
  6. பாலசுப்ரமணியம் ஜெகதீஸ்வரன் என்ற பிரபல விடுதலைப் புலி உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேரே தப்பிச் சென்றுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=12720

  7. "தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுபவர்கள் முடிந்தால் ஒரு பிரச்சினையையாவது சுட்டிக்காட்டட்டும். போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். மாறாக, வீரவசனம் பேசுவதில் பயனில்லை'' இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ளது அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர, அவர்களின் வாழ்வைக் கெடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களைக் கூட்டமைப்பு அதலபாதாளத்தை நோக்கி அழ…

  8. காணாமல் போன மசகு எண்ணெய் கப்பலால் இலங்கை அமச்சரவையில் தீபற்றியுள்ளது:- 28 மே 2013 காணாமல் போன மசகு எண்ணெய் கப்பல் காரணமாக அமைச்சரவையில் தீ பற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டமையானது படிப்படியான வேலைத்திட்டம் ஒன்றின் பிரதிபலன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் நோக்கம் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை அரபு நாட்டில் உள்ள அமெரிக்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாகும். இதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உடனடியாக நாட்டிற்கு விடயங்களை அம…

  9. மேர்வின் சில்வாவிற்கு புதிய அதிகாரம்! குரங்கின் கையில் பூமாலையா? செவ்வாய்க்கிழமை, 28 மே 2013 08:46 அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்படவுள்ளது. கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய பூரண அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கென பாராளுமன்றில் விசேட சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய சட்ட மூலத்திற்கான அனுமதி அமைச்சரவையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அமைச்சுக்களில் கடயைமாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பரி…

  10. 13வது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டால் கூட்டமைப்பு பாராளுமன்றை நிராகரிக்கும்- சிங்கள ஊடகத்திற்கு சிவாசிலிங்கம் பேட்டி!! மகிந்த அரசினில் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றை பகிஷ்கரிக்க நேரிடும் என ரெலொ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய தனிப்பட்ட நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார். இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.…

  11. வடமாகாண சபைத்தேர்தல்கள் மீண்டும் ஒக்ரோபர் வரை ஒத்திவைப்பு! வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், தேர்தலை ஒக்ரோபர் மாதத்தில் நடாத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மாகாணசபை சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்யயும், இடம்பெயர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும் இந்தக் கால அவகாசம் பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது. மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் அரசாங்கம் அவசர சட்டத் திருத்தங்களை செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் மாகாண முதலமைச…

  12. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபியாவிற்கு விற்பனைசெய்ய அரசு சூழ்ச்சி: திஸ்ஸ [Tuesday, 2013-05-28 18:21:52] சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபிய நிறுவனமான 'அரம்கோ' விற்கு விற்பனை செய்ய சூழ்ச்சிகள் இடம்பெற்றுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபிய நிறுவனமான 'அரம்கோ' விற…

  13. [ திங்கட்கிழமை, 27 மே 2013, 12:10 GMT ] [ நித்தியபாரதி ] விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பாக முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வடக்கு மாகாணசபைக்கு வழங்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் ஏற்படும் என்பதால் இந்த அதிகாரங்கள் பறிக்கப்படாமல் அப்படியே இருப்பதற்காக வடக்கு மாகாணசபை முதல்வராக தான் போட்டியிட விரும்புவதாக சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாரம் அறிவித்திருந்தார். மாகாணசபைகளிடமிருந…

  14. வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்! [saturday, 2013-05-25 21:04:22] கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் பிக்குவை மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்கான கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே பிக்கு சிகிச்சை பலனின்றி…

    • 24 replies
    • 2.6k views
  15. போகாவத்த இந்திரரத்ன தேரரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாளிகாகந்த சுதத்த தேரர் என்பவர் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். கொல்லப்பட்ட தேரரின் உடல் தொடர்பான இறுதி கிரியைகளை மேற்கொள்ள சென்ற இராவணா சக்தி அமைப்பினர், மலர் சாலைக்கு சென்றிருந்தனர் அப்போது, சடலம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்ற செய்தி அறிந்த அவர்கள் ஆத்திரமடைந்து குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களில் இருந்த மாளிகாந்த சுதத்த தேரர் பெட்ரோல் போத்தல் ஒன்றை கொண்டு வந்து தன் மீது அதனை ஊற்றி தீ குளிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். http://www.…

    • 7 replies
    • 561 views
  16. போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி 'கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

    • 13 replies
    • 1.5k views
  17. தம்புள்ளை: ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மே, 2013 - 15:08 ஜிஎம் பௌத்த வரலாற்று சிறப்புமிக்க தம்புள்ளை புண்ணிய பூமி பிரதேசத்தில் பாதெனிய பிரதேசம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர் இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது. இக்குடும்பங்களை திங்களன்று அழைத்துப் பேசிய மாதளை மாவட்ட அரசாங்க அதிபர், மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கேட்காமல் உடனடியாக இடத்தை விட்டு அகலவேண்டும் என்று தெரிவித்ததாக ஒரு சில …

  18. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, "13'இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவது ஜனாதிபதியே என்றும் சாடினார். வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சி முயற்சித்து வருகின்றது என்றும், ஆனால் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார். அரசமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய பங்காளிக்கட்சிகளும், அரசு சார்பான சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் இவ்விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் "உதய'னிடம்…

  19. இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் சில நாடுகள் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் ஆகியோரின் கூட்டுச் சதி தொடர்பில் அதிகரித்த ஆதாரங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை விரிவாக ஆராயவேண்டும். புலம்பெயர் மக்களின் சில பிரிவினர் மேற்கு நாடுகளின் அரச பிரதிநிதிகளாகவே 22ஆவது மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எவ்விதமான நன்மையயையும் அளிக்காமல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் தொடர்பான சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை இந்த பிரேரணை பாதகமாக பாத…

  20. இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் அறவே இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றுகூடி செயற்பட்டால் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோன்று, வட மாகாணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான சூழலே காணப்படுவதாக அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இலங்கை தொடர்பில் மேற்படி இயக்கம் விசேட அறிக்கையொன்றினை பேரவையில் சமர்ப்பித்து பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களால் ஒன்றுகூட முடியாத ந…

  21. இந்து சமுத்திரப் பகுதியில் அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளிக்கு இலங்கையை ஆண்ட அரசரின் பெயரை வைத்தமைக்காக வளிமண்டளவியல் திணைக்களம் மன்னிப்புக் கோரியுள்ளது. அழிவை ஏற்படுத்தும் சூறாவளிக்கு மகாசென் என பெயர் இட்டதை பொதுமக்களும் பௌத்த அமைப்புகளும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. இந்நிலையிலே வளிமண்டளவியல் திணைக்களம் மன்னனது பெயரை சூறாவளிக்கு வைத்தமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=4864

  22. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த உத்தேச பிரேணை நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தனிப்பட்ட நபர் பிரேரணையாக இந்த உத்தேச பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார். மாகாணசபைகளை உருவாக்குதவற்காக இயற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இந்த பிரேரணையில் கோரப்பட உள்ளது, உத்தேச பிரேரணையின் ஆங்கில, சிங்கள பிரதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்மொழிப் பிரதி இன்று தயாரிக்கப்பட்டு விடும் எனவும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உத்தேச பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்தன் பின்னர் சகல அரசியல் கட்சிகளுடனும…

  23. வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவங்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் கருத்துக்கள் பதிலளிக்காது இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை சில்வெஸ்டர் விடுதியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் தேர்தல் நடத்தப்…

  24. கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் வடமாகாண இலங்கை மின்சார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிளிநொச்சிப் பிரதேசத்தில் போரில் இறந்த விடுதலைப்புலிப் போராளிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. தமீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் இருந்து இருப தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் போரிட்டு மாண்டனர். இவர்களுக்கான துயிலும் இல்லங்கள் வடக்கு கிழக்கு எங்கும் அமைக்கப்பட்டிருந்தன. துயிலும் இல்லங்களை மிகவும் புனிதமான இடமாக பேணி வந்த புலிகள் ஆண்டு தோறும் மாவீரர் தினத்தில் அவ்விடத்தில் விசேசமாக தீபம் எற்றி வந்தனர். போரில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த இடம் பெரும் உணர்வுபூர்வமான இடமாக …

  25. இறைச்சி வெட்டுவதை நிறுத்தும் வேலையில் தாங்கள் ஈடுபடும்போது அதனை அதிகாரிகள் தடுக்கக் கூடாது என்று சிங்கள ராவய பிக்கு கூறுகிறார் இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்தரத்தன தேரரின் உடலை அவரின் சொந்த இடமான இரத்தினபுரி காவத்தைக்கு கொண்டுசெல்லக்கூடாது என்று பெளத்த பிக்குகள் இன்று காலை முன்னதாக போராட்டம் நடத்தினார்கள். உயிரிழந்த பிக்குவின் இறுதிச் சடங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.