ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
வடிவேல் சக்திவேல் 'இலங்கையில் தற்போது ஒன்பதினாயிரம் பாடசாலைகள் உள்ளன. அவற்றுள் 224 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளில் 50 சதவீதமானவை வட மாகாணத்தினைச் சேர்ந்தவை. அத்துடன், மட்டக்களப்பிலும் 11 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். 'தற்போதைய கல்வி நிலையினைப் பார்க்கின்றபோது போட்டித்தன்மை காணப்படுகின்றது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இந்நாட்டில் போட்டி நிலைக்குரிய கல்வி என்பது சரிவராத ஒன்றாகும்' என்றம் செல்வராசா எம்.பி சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு கோட்டைக்கல்லறு கிராமத்தில் அமைந்துள்ள ச…
-
- 1 reply
- 638 views
-
-
சிறிலங்கா விவகாரத்தைத் திசைதிருப்பிய கமலேஸ் சர்மா [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 10:59 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக லண்டனில் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து வட்டமேசை மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக லண்டனில் உள்ள உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும், சிறிலங்காவில் இருந்து மாநாட்டை இடமாற்றம் செய்யும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையிலேயே, கொமன்வெல்த் செயலர் க…
-
- 0 replies
- 831 views
-
-
இலங்கை பெண் ஒருவர் சென்னையில் வாழும் தனது கணவனிடமிருந்து 20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பெண்ணின் கணவனான காஜா மொகைதீன் என்பவரை நீதிமன்றுக்கு அழைத்து இந்த வழக்கை இணக்க சபைக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த பெண் 2002 ஆம் ஆண்டில் மருத்துவ மாதாக சவூதியில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது சாரதியாக பணியாற்றிய காஜா மொகைதீனை காதலித்துள்ளார். இருவருக்கும் அம்பாறையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய மகளுக்கு மூன்றரை வயதாக இருந்தபோது காஜா மொகைதீன் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு போய்விட்டார். இந்நிலையில் காஜா மொகைதீனை தேடி றிஸ்மியா சென்னைக்கு சென்றுள்ளார். அவரை தேடிப…
-
- 1 reply
- 600 views
-
-
அரசியல் நடத்துவதற்காக இராணுவப் பிரதேசங்களுக்குள் அரசியல்வாதிகளை அனுமதிக்க முடியாது என யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துரசிங்க தெரிவித்துள்ளார். இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களையும், கூட்டமைப்பு எம்.பிக்களையும் சில இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களுக்கு காணிகள் சுவீகரிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் பிரசுரங்கள் கடந்த வாரம் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளிலும் பொது இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. யாழ் விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்…
-
- 1 reply
- 736 views
-
-
சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வடக்கே, யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆறாயிரத்து முன்னூற்றி எண்பத்தொரு (6381) ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிறி லங்கா அரசின் இச்செயற்பாட்டிற்கெதிராகத் தாயகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. - சிறிலங்காவின் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கெதிராகவும் - தாயத்தில் பல ஒடுக்குமுறைகளுக்குள்ளும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாகவும். கனடியத் தமிழர் தேசிய அவையால்…
-
- 0 replies
- 346 views
-
-
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்கள் ஸ்தம்பிதமடைந்திருப்பதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைபே ஏற்றுக் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் செவ்வியொன்றை வழங்கிக் கருத்து வெளியிட்ட ஜானாதிபதி, பேச்சுகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும், ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாமல் வீணாக அரசை குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார். முன்னதாக கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தீர்வுப்பேச்சுக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான முழுப்பொறுப்பையும் இலங்கை அரசே ஏற்…
-
- 1 reply
- 405 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் புரியப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இட்டுச் செல்வதாக அமையுமென்பதே அமெரிக்காவின் எண்ணமாகும் என சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதவர் மிச்செல் சீசோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். 2013 ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலுள்ள முக்கிய விடயமாகவிருப்பது சுதந்திரமாக கருத்துக…
-
- 0 replies
- 460 views
-
-
உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் தலைமறைவாகியுள்ளதாக முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவொன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்துள்ள அசாத் சாலி, என்னை கைதுசெய்வதற்கு முயற்சிக்கின்றனர். குறுந்தகவல் அனுப்பியதாக குற்றஞ்சுமத்துகின்றனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றனர். அல்கைதா என என்னைக் கூறுகின்றனர். பல பெயர்களில் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். பல வழிகளிலும் என்னைக் கைதுசெய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. சரியானதைத் தான் எப்போதும் அரசாங்கத்திற்குக் கூறுகிறதும். நீங்களே வாக்குறுதி வழங்கிய 13 + அதிகாரத…
-
- 0 replies
- 436 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் கீ இதனை உறுதி செய்துள்ளார். பிரித்தானியா மஹாராணி அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் இலங்கை அமர்வுகளில் பங்கேற்பார் எனவும், இந்த அமர்வுகளில் பங்கேற்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்…
-
- 0 replies
- 269 views
-
-
திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி! சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா இவ்வாறு பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இந்த நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இதன்போது அமெரிக்க - சிறிலங்கா கடலோரக் க…
-
- 1 reply
- 756 views
-
-
காத்தான்குடி பள்ளிவாசல் நிருவாகிகள் தெரிவு கூட்டத்திற்கு சென்றது யார் ? காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்காக இன்று (28) நடைபெற்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் கைகலப்பு ஏற்பட்டதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேற்படி பள்ளிவாசல் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (28) அஷர் தொழுகையின் பின் பள்ளிவாசலின் மேல் மாடியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட் நழீமி மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தல…
-
- 1 reply
- 515 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் - யஸ்மீன் சூகா 29 ஏப்ரல் 2013 எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான யாஸ்மீன் சூகா கோரியுள்ளார். யாஸ்மீன் சூகா, இலங்கை தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாருஸ்மான் தலைமையில் இந்த நிபுணர் குழு அறிக்கை தயாரித்திருந்தது. இலங்கையில் தொடர்ந்தும் சொந்த மக்களுக்கு எதிராக உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் தொடர்ந்தும் காணாமல் போவதாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் ச…
-
- 0 replies
- 533 views
-
-
அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவதால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்: ஜனாதிபதி அமைச்சர்களுக்கு இடையில் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் அமைச்சர்களுக்கு இடையில் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்க்கட்சிகள் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடும். அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு பாதகத்தன்மை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 484 views
-
-
Written by tharsan // April 28, 2013 // தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013). அறவழியில், அமைதிவழியில் போராடிக்களைத்து, கண்டபலன் ஒன்றுமில்லை. மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தங்கள் கிழித்தெறியப்பட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லாக்காசாக கிடப்பில் போடப்பட, இனி ஆண்டவன்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஆற்றாமையின் வெளிப்பாடே புதிய இளம் தலைமுறை போராட்ட வழிமுறையை மாற்றக் காரணமாக அமைந்தது. தனித் தமிழ் ஈழமே தீர்வு’ என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்…
-
- 0 replies
- 2.6k views
-
-
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் கனடா மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்னாள் புலிகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் பணம்வாங்கிக் கொண்டு வேலை செய்வதாக இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் கூறினார். தம்மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் பேச வேண்டிய தரப்பினருடன் பேசி முடிந்துவிட்டது என்றும் இலங்கையில் மாநாட்டை நடத்தும் விடயத்தில் தடைகள் ஏதும் இல்லை என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தம்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கும் அமைப்புகள் பக்கச்சார்புடன் செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலத…
-
- 0 replies
- 384 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் உகண்டா பயணம்! [sunday, 2013-04-28 09:13:20] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் உகண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். உகண்டாவுக்கான சிறிலங்கா அதிபரின் குறுகிய பயணம் எப்போது இடம்பெறும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உகண்டா அதிபர் யொவேரி முசேவேனி கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்ச கம்பாலா செல்லவுள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 13 நாடுகளில் உகண்டாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.http://seithy.com/breifNews.php?newsID=81458&c…
-
- 3 replies
- 391 views
-
-
லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்காவுக்கு ஆதரவாக – ‘செல்வாக்குமிக்க‘ நாடு ஒன்று செயற்பட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, வெள்ளிக்கிழமை கூட்டத்தில் சிறிலங்காவில் இருந்து கொமன்வெல்த் உச்சி மாநாட்டை இடமாற்றம் செய்யும் விவகாரம் குறித்து ஆராயாமல் தடுப்பதில் இந்த நாடே செல்வாக்குச் செலுத்தியுள்ளது. கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் இந்த நாடு அங்கம் வகிக்கவில்லை என்றும், எனினும் சிறிலங்காவுக்காக அந்த நாடு பரப்புரை மேற்கொண்டிருந்ததாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவுக்கும…
-
- 1 reply
- 794 views
-
-
நாளை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பு: புகையித தொழிற்சங்கங்கள் அறிவிப்பு சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி. ஜயசேன கூறுகையில், புகையிரத ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடை கடந்த பல வருட காலமாக நீடித்து வருகின்றது. தற்போது பல்வேறு வகையிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெளிவுபடுத்தியபோதும் அது போதிய பயனை எட்டவில்லை. இந்நிலையில் எமது சம்பள …
-
- 1 reply
- 465 views
-
-
ஸ்ரீலங்காவின் உள்ளக விடயங்களில் அமெரிக்கா தலையீடு - குற்றம் சுமத்தியது ஆங்கில ஊடகம்! [sunday, 2013-04-28 09:28:14] இலங்கையின் உள்ளக விடயங்களில் அமெரிக்கா தலையீடு செய்து வருவதாக தெ நேசன் என்ற இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மிச்செய்ல் சிசன், முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 20 அமைப்புக்களுடன் கலந்துரையாடியுள்ளார். 45 நிமிடயங்கள் நீடித்த கலந்துரையாடலில் இலங்கையின் நிலவரம் குறித்தும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள அமைப்புக்களின் வன்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலையில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் அமெரிக்கத்தூதுவ…
-
- 1 reply
- 828 views
-
-
மே தினம் முடிவுற்றதும் வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு - அரசு அறிவிப்பு மே தினம் முடிவுற்றதும் வட மாகாணத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது கட்சியின் மே தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர்; ஓரிரு வாரங்களில் வேட்புமனுக்கான விண்ணப்பங்களை கோரவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் வடக்கிலுள்ளோர் இணைத்துக் கொள்ளப்படுவர். அதற்கென அவர்கள் விண்ணபிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஸ்…
-
- 0 replies
- 654 views
-
-
துமிந்த சில்வாவின் விடுதலை இலங்கையின் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலே: ஹிருனிக்கா துமிந்த சில்வாவின் விடுதலையானது இலங்கையின் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிக்கா குற்றம் சுமத்தியுள்ளார். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலையானது இலங்கையின் நீதித்துறையினை பிழையாக வழிநடத்தப்படுகின்றமைக்கான சான்றாக அமைந்துள்ளது. அரசின் இத்தகைய செயற்பாடு ஆனது அசாங்கத்தின் சட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே துமிந்த சில்வாவினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமது தந்தையான பாரத லக்ஸ்மனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து…
-
- 0 replies
- 601 views
-
-
மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே பொறுப்பு; பவித்ரா வன்னியாரச்சி கூறுகிறார் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே தற்போதைய மின்சாரக் கட்டண உயர்வுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 1993 ஆம் ஆண்டில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொள்கை அடிப்படையில் தனியார் துறையினருக்கு மின்சார உற்பத்திக்கான சந்தர்ப்பத்தை வழங்கியது என்று அவர் குறிப்பிட்டார். தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதனால் இலங்கை மின்சாரசபை நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டது என்ற…
-
- 2 replies
- 651 views
-
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான ஆயுதக் குழுவொன்று செயற்படுவதாகவும் அவ்வாறானதொரு குழுவே உதயன் அலுவலகத்துக்கு தீ வைத்திருக்க முடியும் என்றும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார். ஜனரல என்ற சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ். உதயன் பத்திரிகை அலுவலகம் தீவைக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மேலும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதங்களைப் வைத்திருக்கும் அதிகாரம் பொலிஸாருக்கும் ஏனைய முப்படையினருக்குமே உள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்தில் ஆயுதக் குழுவொன்று இயங்…
-
- 2 replies
- 573 views
-
-
''எம்மை நாமே வெற்றியடைதல் ஆயிரம் யுத்தங்களில் வெற்றியடைவதிலும் சிறப்பானது" என்ற தொனிப்பொருளில் ஒருமைப்பாட்டுக்கான பேரணியால் இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் அமைதிப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இப்பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மூவின சமய தலைவர்கள் மற்றும் பல்லின பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி மார்க்கஸ் பெர்னாந்து மாவத்தை வரை சென்றடைந்தது. இப் பேரணியில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள இலங்கை குடிமக்களிடையே பகைமையைத் தூண்டுதலையும் வன்முறைகளையும் இப்பொழுது இங்கேய…
-
- 1 reply
- 423 views
-
-
பல ஆண்டுகளாக தமிழின விடுதலைக்காக போராடிவருகின்ற தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மதிப்புக்குரிய திரு மணிவண்ணன் அவர்களுடனான சந்திப்பு 28.04.13 சனிக்கிழமை காலை 10 மணியளவில் அன்னைபூபதி தமிழ்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய துறைசார்ந்து சில வியாபார நிறுவனங்களின் அழைப்பில் வந்திருந்தபோது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழீழமக்களையும் பார்பதே தன்னுடைய முதற்பணியாக கொண்டதால் மக்களை சந்திப்பதர்க்கான ஏற்பாடுகளை மிக குறுகிய நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் கலந்து கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவுசெய்ததோடு அவரின் …
-
- 0 replies
- 608 views
-