Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஏப்ரல், 2013 - 11:58 ஜிஎம்டி 23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நவம்பர் 15 முதல் 17 வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளது காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று காமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற காமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில், மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என்று கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி கூறினார். தொடர்புடைய விடயங்கள் 'ஆனால் மற்ற விடயங்கள் தொடர்பான விவாதத்தின் போது பல்வேறு நாடுகளைப் பற்றி ஒளிவுமறைவு இன்றி விவாதித்தோம…

    • 6 replies
    • 854 views
  2. தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம்: மிச்சேல் சிஷன் 2013-04-26 19:28:19 விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதிப் போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவது தாமதப்படுத்தப்படுமாயின், இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கொழும்பில் நடத்திய விசேட வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800 ஆம் ஆண்டு வரையான கால கட்டம்…

    • 6 replies
    • 830 views
  3. யாழ்ப்பாணம் உடுவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அன்னாரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரான வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.த.சித்தார்த்தன் அவர்களால் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியை நிறுவுவதற்காக தமிழ் கல்விச் சமூகத்திற்கு கோப்பாயில் நிலப்பரப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை நினைவுகூர்ந்து நிறுவப்பட்ட அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. மதகுரும…

    • 1 reply
    • 380 views
  4. ரரணில் - சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்திப்பு! - வடபகுதி நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வு!! யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள சிறிலங்காவின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனைச் சந்தித்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான சந்திப்பு நேற்றுக் காலை யாழில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தே…

  5. -ஒலிந்தி ஜயசுந்தர இன்புளுவென்சா ஏ வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் உயரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காசல் வீதி மகளிர் மருத்துவமை அறிக்கை தெரிவிக்கின்றது. குறித்த வைத்தியசாலையின் அதிகாரி டாக்டர் குமார விக்கிரமசிங்க இது தொடர்பில் தகவல் தருகையில் கூறியதாவது, 'விசேட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உட்பட, மேலதிக 8 நோயாளிகள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகின்றார்கள். வெகு விரைவில் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார்கள். இன்புளுவென்சா ஏ வைரஸ் கிருமி, கர்ப்பிணி தாய்மாருக்கு மட்டுமே அதிக பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டது. பிரசவ காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படுவதே …

  6. இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் …

  7. தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற அனுமதியோம்! – சுமந்திரன் யாழ். வலி. வடக்கில் தமிழ் மக்களது 6 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து, இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிராக தொடர் போராட்டங்களையும் நடத்துவோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இராணுவத்தினர் வடக்கில் அபகரிக்கும் காணிகளில், இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற நாம் இடமளிக்க மாட்டோம். இந்தக் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெ…

  8. இலங்கை மனிதவுரிமைகள் மற்றும் வெளிவிவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு தமக்கு அதிருப்தி அளிப்பதாக கிறீன்ஸ் கட்சி தலைவி கிறிஸ்டீன் மைலீன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கை மனித உரிமை நிலைமைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை அவுஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு அரசியலுக்காக மனித உரிமை மீறல் விடங்களை கவனத்திற் கொள்ளாமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மனித உரிமை…

  9. கொட்டகலையில் மனோ கணேசன் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அமைச்சர் ஆறுமுகனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜனநாயக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதான அங்கத்தவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். “மோதாதே மோதாதே மனோவு…

    • 2 replies
    • 641 views
  10. கட்சியில் நான் தொடந்து செயலாற்றுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயனால் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்து விட்டு ஒதுங்குவதற்குத் தயாராகவே உள்ளன். என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமின்றி மேற்கிலும் தெற்கிலும் மத்தியிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும். அரசுடன் முரண்படுவதற்காக அன்றி ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே , இதில் மாறுபட்ட கருத்துக்கே இடமில்லை. என்னையும் தமிழர் விட…

  11. ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டால் தான் விடிவுகாலம் வரும் - நீதியரசர் விக்னேஸ்வரன் [ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 01:18 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தினால் பல கட்சிகள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டால் தான் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலம் வரும் என்று ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில், நேற்றுமாலை நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்வில், ‘இலங்கைத் தமிழர்கள் செல்வது எங்கே?‘ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் நிகழ்த்திய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “தலைவரவர்களே! சிறப்பு விருந்தினர்களே, எனதருமைச் ச…

  12. கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சற்று முன்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய அவரை பொதுமக்கள் வரவேற்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - வருண வன்னியாரச்சி, அனுஷ காஞ்சன டி சில்வா) http://tamil.dailymirror.lk/--main/65244-2013-04-27-06-50-22.html

  13. முன்னாள் போராட்டக் குழுக்கள் உள்ளமையால் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது – கைவிரித்தார் சம்பந்தன்! — 23/04/2013 at 9:49 am | முன்னாள் போராட்டக் குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்புடன் பேசியபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், முன்னாள் போராட்ட குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது அதனை பதிவு செய்ய முடியாது எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்ட குழுக்கள் முன்னர் இழைத…

    • 14 replies
    • 1.1k views
  14. சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாடு - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை [ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 08:41 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகள் தொடர்பில் உடனடி, நம்பகமான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நவம்பர் 2013ல் சிறிலங்காவில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் மூத்த ஆலோசகர் குழு பரிந்துரைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. மனித உரிமைகள் உள்ளடங்கலாக பொதுநலவாய அமைப்பின் அடிப்படை அரசியல் கோட்பாடுகள் மீறப்படுவது தொடர்பாக ஆராய்கின்ற இதன் தலைவர்களைக் கொண்ட பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்க…

  15. தமிழர் உரிமைப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஒற்றுமை சிதறாது: சம்பந்தன் 27 ஏப்ரல் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வெளிவரும் செய்திகளை நேற்று திட்டவட்டமாக பகிரங்கமாக நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஜனநாயகக் கட்சியொன்றுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளே கூட்டமைப்புக்குள்ளும் இருக்கின்றன எனவும், தமிழர் உரிமைகளை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அவர்களுக்கு நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய தீர்வைப் பெறும் தற்போதைய பயணத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பங்குதாரர்களும் மிக உறுதியான ஒற்றுமையுடனும் தெளிவான நோ…

  16. இலங்கையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக ரோஹினி மாரசிங்க நியமனம் உயர் நீதிமன்ற நீதிபதியாக ரோஹினி பெரேரா மாரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று அலரி மாளிகையில் நியமனம் பெற்றுக் கொண்டார்.ரோஹினி பெரேரா மாரசிங்க மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 256 views
  17. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்: பொப் கார் இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிர…

    • 0 replies
    • 314 views
  18. யாழில் , 72 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிகளில் சென்ற இரு இளைஞர்கள் அவரிடம் முகவரி ஒற்றைக்காட்டி விசாரித்தனர். அவர் தனக்கு தெரியாது எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் சென்ற போது பின்னால் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞர் அவ் வயோதிபப் பெண்ணை இழுத்துச்சென்று வீட்டிலிருந்த சேலையால் கை, கால்கள் கட்டியதுடன் வாய்க்குள் துணிகளை அடைத்து விட்டு அவர் அணிந்திருந்த ஒரு சோடி காப்பு , சங்கிலி உட்பட 6 பவுண் எடையுடைய நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php

  19. ஜப்பானிய பிரதிப் பிரதமர் மே மாதம் முதலாம் திகதி இலங்கை பயணம்! [saturday, 2013-04-27 08:24:29] ஜப்பானின் பிரதிப் பிரதமர் டரோ அசோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட உப நிதி அமைச்சர் யுக்கோ ஒபுச்சி ஆகியோர் மே முதலாம் திகதி இலங்கை வரவுள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். கொழும்பு டொக்யார்ட்டின் 20 வது வருட நிறைவை முன்னிட்டு அதனை பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இலங்கை வரவுள்ளனர். ஜப்பான் அரசாங்கம் கொழும்பு டொக் யார்ட்டின் விஸ்தரிப்பு மற்றும் அதனை மேம்படுத்தும் திட்டத்துக்காக 80 பில்லியன் யென்களை வழ…

  20. ரோஹினி பெரேரா உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பு! [saturday, 2013-04-27 08:34:41] மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹினி பெரேரா மாரசிங்க உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று (26) அலரி மாளிகையில் நியமனம் பெற்றுக் கொண்டார். http://seithy.com/breifNews.php?newsID=81376&category=TamilNews&language=tamil

  21. இராணுவ நில அபகரிப்புக்கு எதிராக யாழில் நடைபெறவுள்ள தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுப்பு! [saturday, 2013-04-27 09:01:24] சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு நாம் அனுமதி வழங்க மாட்டோம் என காங்கேசன்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எக்கநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதன் போது எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை வலி.வடக்கு மக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக முன்றலில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு உள்ளனர். அதுபோல முன்னைய போராட்டத்தில் பல குழப்பங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே நடக்கவிருக்கும் போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவீர்களா என்று காங்கேசன்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி …

  22. விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் சீலன் இந்தோனேசியாவில்! கட்டளைகளை வழங்கிவரும் அவரை கைது செய்ய நடவடிக்கையாம்! - சிங்கள ஊடகம் [saturday, 2013-04-27 08:15:46] தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பின்னர் இரகசியமான முறையில் புலிகளுக்கு தலைமை வகித்து வருபவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை கைது செய்ய முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குறித்த நபர் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குமரன் பத்மநாதனின் பின்னர் தமிழ…

  23. தமிழீழ விடுதலைப் புலிகளிகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கைக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கொழும்பில் நடத்திய கூட்டம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800ம் ஆண்டு வரையான கால கட்டம் வரை நீண்டு செல்கிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் கொனசல் ஜெனரல் காலி கோட்டை விடுதியின் வரபேற்பறையில் இருந்தாராம். அவர் அங்கிருந்து அமெரிக்காவின் கப்பல்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது. எனினும் தற்போது நாம் …

    • 0 replies
    • 429 views
  24. யாழ். மக்களை ஐ.தே.க.வுடன் இணையுமாறு ரணில் அழைப்பு! [Friday, 2013-04-26 17:58:43] ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாண மக்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அங்கத்துவப் படிவம், யாழ் மக்களிடையே இன்று வெள்ளிக்கிமை விநியோகிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் யாழ். பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, பொதுமக்களிடம் சென்று இந்த படிவத்தினை விநியோகம் செய்தது. அத்துடன், யாழ் பேரூந்து நிலையத்திற்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்த இளைஞர் யுவதிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியில் அணைந்துகொண்டு கட்சியைப் பலப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார். …

    • 2 replies
    • 470 views
  25. தமிழின துரோகியின் பதவி பறிபோனது! வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013 16:03 ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்ததிலிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதன்போது அவருக்கு ஜனாதிபதி அவர்களினால் கட்சியின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக நியமனம் வழங்கி அவரை கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்படுத்தி வந்தார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.