ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143481 topics in this forum
-
தமிழின துரோகியின் பதவி பறிபோனது! வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013 16:03 ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்ததிலிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதன்போது அவருக்கு ஜனாதிபதி அவர்களினால் கட்சியின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக நியமனம் வழங்கி அவரை கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்படுத்தி வந்தார்…
-
- 23 replies
- 2k views
-
-
தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருபாலை கிழக்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு வழிபாட்டு ஸ்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இந்தப் பெண் ஊருக்கு வரும் போது திருமணம் முடித்து புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதினால் இவர் உயிரை மாய்த்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் கூறினர். யாழ். பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாண…
-
- 27 replies
- 2.3k views
-
-
தடை செய்யப்பட்ட 30 கிருமி நாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் கிருமிநாசினிப் பதிவாளர் ஆகியோருக்கு தெரிந்த இந்த கிருமிநாசினிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளே இவ்வாறு இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. சட்டத்தின் அடிப்படையில் குறித்த 30 கிருமி நாசினிகளும் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பல்வேறு விற்பனைக் குறிகளின் ஊடாக இந்த கிருமி நாசினிகள் இலங்கையில் தொடர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://vannimedia.com/site/news_detail/13307
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்துவேறுபாடு? - தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் சம்பந்தன் விளக்கம் [ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 15:59 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் ஓர் அரசியல் அமைப்பு ஆகும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை சேதப்படுத்த முயற்சிக்கும் எதிராளிகளின் சதிக்குள் சிக்காது எம் உள்விவகாரங்களை, வேறுபாடுகளைக் களையும் தகுதியும் அர்ப்பணிப்பும் எம்மிடம் உண்டு என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று வெள்ளிக்கிழமை 26.04.2013 மாலை கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் ந…
-
- 1 reply
- 745 views
-
-
தமிழரே இப்படி செயற்பட்டால் பின் எப்படி மற்றையவர்கள்...? April 26, 2013 04:34 pm மன்னார் - உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (கொமினிக்கேசன்) சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கையடக்கத்தொலைபேசிக்கு மீள்நிரப்பு (றிலோட்) செய்து விடுமாறும் பணத்தை பின்பு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு குறித்த நிலையத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கஞ்சா பொதியினை தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது …
-
- 5 replies
- 967 views
-
-
கொமன்வெல்த் மாநாடு ஸ்ரீலங்காவில் இடம்பெறக் கூடாது என லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்! [Friday, 2013-04-26 20:52:07] இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என பிரித்தானிய தமிழர் பேரவையால் இன்று 11 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Commonwealth Secretariat, Marlborough House, PallMall, London SW1Y 5HX என்னும் முகவரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனடா இலங்கையில் கொமன்வெலத் மாநாட்டை நடத்த இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் பிரித்தானியா இன்னும் மெளனம் சாதித்து வருகிறது. இதனை கனடாவுடன் இணைந்து பிரித்தானியாவும் எதிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடு்க்குமுகமாக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகி…
-
- 1 reply
- 581 views
-
-
ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். 25க்கும் அதிகமானோர் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அவர்களது கோரிக்கை தஞ்சம் வழங்குவதற்கு பொருத்தமானவை அல்ல என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் காரணம் கூறியுள்ளது. அதேவேளை, ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தும் சில முகவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இலங்கையில் இருந்து ஆட்கள் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்வதற்கு இலங்கைப் படையின் சில பிரிவினர் உதவுவதாக வந்த தகவல்கள் குறித்து புலனாய்வு செய்யப்படுவதாக முன்னதாக சில செய்திகள் வந்திருந்தன. ஆனால், அப்படியான நடவடிக்கைக எதுவும் மேற்கொள்…
-
- 1 reply
- 482 views
-
-
அரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமாக முடிவினை எடுக்கும் காலம் வரும். அக்காலம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்காது' என்று நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர், யாழில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 'தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார் சாத்தியமானவற்றை சாதித்துக்காட்ட வேண்டும் என்பதில் அவர் கு…
-
- 2 replies
- 538 views
-
-
வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களின் நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தால் ஆளும் கட்சியின் உள்ள இடதுசாரிகள் போர்க்கொடி தூக்குவோம். 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க கூடாது என்பதனை ஜனாதிபதியிடம் கண்டிப்பாகவே கூறியுள்ளோம் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். வடக்கில் காணிகள், உரிமைகள் உள்ளவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். மக்கள் காணிகளில் இராணுவம் நிலை கொண்டிருப்பதும் அரச காணிகளில் பொதுமக்கள் இருப்பதும் அனுமதிக்க முடியாது. எவ்வாறாயினும் நிலையான தீர்வொன்றிற்காக அனைத்து தரப்புகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதே முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில், …
-
- 2 replies
- 453 views
-
-
இலங்கையின் வட மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கு வலிகாமம் அதியுயர் பாதுகாப்பு வலய பிரதேசத்துக்கு சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழன் மாலை வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நேரடியாகப் பார்வையிட முயன்றச் சென்ற ரணில் குழுவினரை இராணுவத்தினர் திருப்பியனுப்பிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பிரதேசங்களில் இராணுவ தேவைக்காக காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள காணிகளை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. வல…
-
- 1 reply
- 392 views
-
-
தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் …
-
- 8 replies
- 1k views
-
-
பூநகரிப் பிரதேசத்தில் தாம் வாழும் வளமான பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரச அதிகாரிகள் துணைபோகின்றனர். இவ்வாறு பூநகரிப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பூநகரிப் பிரதேச மக்கள் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து பூநகரிப் பிரதேசம் ஒரு சூனிய பிரதேசமாகவே காணப்பட்டது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தாம் இடம்பெயர்ந்து செல்லொணாத் துயரங்களை அனுபவித்து தற்போது மீளக்குடியேறியுள்ளோம். அடிப்படை வசதிகள் இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை, போக்குவரத்து, சுகாதார, கல்வி மேம்பாடுகள் இல்லை, தொழில் முயற்சிகளுக்கான வளவாய்ப்புக்களை முழுமையா…
-
- 2 replies
- 456 views
-
-
வடக்கில் தேர்தலுக்கு முன்னர் சிவிலியன் ஆளுநர் தேவை: ரனில் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஏப்ரல், 2013 - 17:22 ஜிஎம்டி ரணில் விக்ரமசிங்க இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தலுக்கு முன்னர் அங்குள்ள இராணுவத்தைச் சேர்ந்த ஆளுநர் மாற்றப்பட்டு இராணுவத்தினர் அல்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கோரியுள்ளார். அப்படி நியமிக்கப்படுபவர் வட மாகாண மக்களால் மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைவராலும் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும். அது மிகவும் அவசியம் எனவும் ரனில் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க "தேர்தல் நேர்மையாக நடந்தால் சர்வதேசம் இலங்கையை நம்பும்" வட மாகாண தேர்தல் 2009 ஆம் ஆண்டு மற்ற மாகாண ச…
-
- 2 replies
- 546 views
-
-
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸி. மாஜி பிரதமர் வலியுறுத்தல்வரும் நவம்பரில் இலங்கையில் காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடக்கிறது. ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர், 2700 பேரின் கையெழுத்திட்ட மனு ஒன்றினை ஆஸ்திரேலிய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து அந்நாட்டில் வரும் நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே கனடா புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகள் புறக்கணிக்கும்படி வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14276:commonwealth-countries-to-boycott-the-con…
-
- 0 replies
- 273 views
-
-
பிரபாகரன் சிறந்த போராளி. போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் கே.பி., தயா, மாஸ்டர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். எனவே தமிழ் மக்கள் ஒரு போதும் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் காணி அதிகாரங்களை ரத்து செய்துவிட்டே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை நாம் எதிர்ப்போம். அத்தோடு இத் தேர்தலை நடத்தினால் அமைச்சர்கள் சிலர் அரசை விட்டு வெளியேறுவார்கள். இதுவே அரசாங்கத்திற்கு சாவு மணியாக அமையும் . அதேவேளை கே.பி., தயா மாஸ்டர் போன்றோரை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கி எப்படியாவது வெற்றி …
-
- 1 reply
- 394 views
-
-
இலங்கை நிலைமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமளவில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றுக் கொள்கையாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் எவ்வாறும் அடக்குமுறைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது என்பது குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மாற்றுக் கொள்கை மீதான தாக்குதல் என்ற தலைப்பில் இந்த அறிகை வெளியிடப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டத்துறையை சேர்ந்தவர்கள், மனித உரிமை செயற்…
-
- 0 replies
- 320 views
-
-
ஈழவாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்: மகிந்த ராஜபக்சவின் அச்சமும் தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கமும் ! http://tamil24news.com/news/?p=62921 ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என உணர்ந்த ஈழம் வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்.தீவிரவாதத்தை தோற்கடித்த நாட்டின் தலைவர் என்ற வகையில், கூறுகிறேன், இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சமீபத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உதிர்த்த இந்த வார்தைகள் செய்தியூடகங்களில் பத்தோடு பதினொன்றாக கடந்தவிட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச கூறிய கூற்றின் உள்ளுள்ள சிங்களப் பேரினவாத்தின் அச்சம் குறித்து தமிழர்கள் அனைவரும் கவனத்தில் கொள…
-
- 0 replies
- 371 views
-
-
மங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறி 68 இலங்கை தமிழர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரில் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், பவானிசாகர், கும்மிடிப்பூண்டி ஆகிய அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 68 பேர், ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கர்நாடக மாநிலம் மங்களூர் சென்றனர். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன், கண்ணன், நிக்சன், டார்வின் உள்பட 5 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட …
-
- 0 replies
- 562 views
-
-
கூருகல பள்ளியில் இந்த அரசாங்கம் கைவைக்குமானால் இன்னும் 40 நாட்களுக்குள் சின்னாபின்னமாகுமென முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இல்லை. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே போகின்றன. இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுக்காக கூருகல பள்ளிவாசல் இருக்கும் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்விடத்தில் அரசாங்கம் கைவைக்குமானால் 40 நா…
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் சுன்னாகம் நகரப் பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அவருடன் வந்தவரை இறக்கிவிட்டு அப் பகுதியில் பல தடவைகள் சுற்றியுள்ளார். இதனை அப்பகுதியில் ரோந்தில் ஈடுப…
-
- 5 replies
- 786 views
-
-
வடமத்திய மாகாணப் பெண்களுக்கு மாப்பிள்ளை கொடுப்பதற்கு அஞ்சுகின்றனர்: காரணம் கூறும் ஐ.தே.க. By General 2013-04-25 12:31:12 வடமத்திய மாகாணப் பெண்களுக்கு மாப்பிள்ளை கொடுப்பதற்கு அஞ்சுகின்றனர்: காரணம் கூறும் ஐ.தே.க. வடமத்திய மாகாணப் பெண்களுக்கு ஏனைய மாகாணங்களில் உள்ளோர் மாப்பிள்ளை கொடுப்பதற்கு அஞ்சுகின்றனர். ஏனென்றால், அந்தளவுக்கு அங்கு சிறுநீரக நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. பி. ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரையில் வடமத்திய மாகாணத்தில் 1,96,000 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நான்கு சட்டமூல திரு…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கையில் ஆழக் காலூன்றும் சீனாவின் அடுத்த திட்டம் தயார் இலங்கையுடன் இருபக்க வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் சந்தித்துப் பேசிய போதே, சீனாவின் உதவி வர்த்தக அமைச்சர் சென்ஜியான் இந்த விருப்பத்தை நேரில் வெளியிட்டுள்ளார். சீன உதவி வர்த்தக அமைச்சருடன் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட சீனக் குழுவொன்றும் ஜனாதிபதி மஹிந்தவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. இலங்கை உற்பத்திகள் சீனா வில் வேகமாகப் பிரபலமாகி வருவதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல இலங்கை உற்பத்திப் பொருட்கள் சீனாவில் சந்தைப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ள…
-
- 2 replies
- 629 views
-
-
இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த பிரபா தலைமையிலான 40 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் காவல்நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். மைதானத்தில் போராட்டம் நடக்க அனுமதிக்காத நிலையில் காவல் நிலையத்தில் அவர்கள் ஈழக்கொடியுடன் உள்ளனர். கைது தொடர்பான செய்தி : சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த மாணவர்கள் கைது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14260:eelam-flag-the-students-with-the-police-station&catid=36:tamilnadu&Itemid=102
-
- 2 replies
- 664 views
-
-
பொதுநலவாய அமைப்பின் இன்றைய கூட்டத்தில் இலங்கை விவகாரம்! – பீரிஸின் கோரிக்கை நிராகரிப்பு!! இலண்டனில் இன்று (26.04.13) வெள்ளிக்கிழமை நடைபெறும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயத்தை உள்ளடக்க வேண்டாமென சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோளை பொதுநலவாயத்தின் செயலாளர் நிராகரித்துள்ளமையானது இலங்கைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாயத்தின் கொள்கைப் பிரகடனங்கள், சம்பிரதாயங்களை இலங்கை மீறிச் செயற்படுவதால் அங்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை நடத்தக்கூடாதென சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், கனடா உள்ளிட்ட நாடுகளும் பொதுநலவாய செயலகத்திடம் கோரிக்கை விடுத்து வ…
-
- 1 reply
- 1.5k views
-
-
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் நல்ல முடிவெடுத்தால் அனைத்து பிரச்சனையையும் சுலபமாகத் தீர்ப்பாராம் 25 ஏப்ரல் 2013 டக்ளஸ் தேவானந்தா.... குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு முடிவினை எடுப்பார்களேயானால் பலாலியில் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை் சுலபமாக தீர்க்கப்பட்டுவிடக் கூடியதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலமைந்துள்ள யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது என்றும் அதன் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் ஊடகங்களும், ஊ…
-
- 3 replies
- 859 views
-