Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. யாழ்.மாவட்டத்தில் படையினரால் கோரப்பட்ட பெருமளவு தனியார் காணிகளைச் சூவீகரிக்கும் பகிரங்க அறிவித்தல்கள் இந்த மாதம் யாழ்.மாவட்டக்காணி சூவீகரிப்பு அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. மக்களின் பார்வைக்காக இந்த அறிவித்தல்கள் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் அதன் யாழ்.மாவட்ட காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது. …

  2. பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன் இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார். ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவு…

  3. அண்மையில் பட்டப்பகலில் இலங்கை இராணுவத்தினரும் காவல்துறையினரும் செறிவாக இருக்கக்கூடிய கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருந்தது. இச்சம்பவம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் அதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் உள்ள உதயன் அலுவலகம்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தொடங்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் கிளிநொச்சியிலும் தொடரப்படுகிறது. இதனால் கிளிநொச்சி பெரும் அச்ச சூழ்நிலையில் இருக்கிறது. தமிழர் தேசத்தை மௌனமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள்தான் இன்று தமிழ் மக்களுக்கு எதிராக எத்தகைய அநீதி நடக்கிறது என்பதை உலகத்திற்குத் தெ…

    • 1 reply
    • 502 views
  4. குருநாகலில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி 41 பயணிகள் பலியான சம்பவ வழக்கில் பஸ்ஸின் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் குருநாகல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி குருநாகல், அளவ்வவில் யான்கல்மோதர என்னும் இடத்தில் உள்ள ரயில் கடவையில் பஸ் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் 41 பயணிகள் கொல்லப்பட்டார்கள். அந்த விபத்து குறித்த வழக்கிலேயே அந்த பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது குருநாகல் உயர்நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாக தொடர்ந்த இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனையும், அதற்கு மேலதிகமாக 270 வருடங்கள் சிறைத்தண்டனையும் தலா ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. http://w…

  5. விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 00:19 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித்துள்ளார். இவரது இந்தக்கருத்து, இதுவரை ஒன்றுபட்ட சிறிலங்காவை வலியுறுத்தி வந்த பாஜக, தற்போது அந்தக் கொள்கையை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. தமிழக பாஜக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜஸ்வந்த் சின்ஹா- …

  6. கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி 55ம் கட்டை பகுதியில், விசுவமடுவில் இருந்து வந்த பேருந்தும் இரணைமடுவில் இருந்து வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் நெடுங்கேணியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தெய்வேந்திரகுமார் (வயது 66), அவரது மனைவியான ஸ்ரீரதி தெய்வேந்திரகுமார் (வயது 58) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான…

  7. மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்தநிலையில் சாவகச்சேரி முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினர். புதுகுடியிருப்பு வல்லிபுனம் பகுதியை சேர்ந்த பி…

    • 6 replies
    • 791 views
  8. கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல் 03 ஏப்ரல் 2013 கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கட்டடத்திற்கும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்திரிகைகளை விநியோகத்திற்காக அனுப்பும் நோக்கில் வானிலிருந்து இறக்கிய தருணத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காமயடைந்த இரண்டு பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது, இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து …

    • 4 replies
    • 599 views
  9. LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதென அமைச்சரவையில் தீர்மானம் 04 ஏப்ரல் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 22 அமைச்சர்களும் சில நிறுவனங்களும் கால வரையறைகளை நிர்ணயித்து பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகளும், சர்வதேச சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை சமாளிக்கும் ராஜதந்திர முனைப்பாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில் உண்மையை…

    • 4 replies
    • 884 views
  10. மிக முக்கியமான தருணங்களில் பாகிஸ்தான் உதவிகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலாளர் அப்பாஸ் ஜிலானி இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பாகிஸ்தான் தேர்தல்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற 2005ம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்ததனை விடவும் தற்போது பாரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலவுவதாகவும் ஜிலானி தெரிவித்துள்ளார். யுத்த நிறைவு மட்டுமன்றி அபிவிருத்…

  11. -கெலும் பண்டார வர்த்தக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியாவிடமிருந்து 44.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறவுள்ளது என டெய்லிமிரருக்கு தகவல் கிடைத்துள்ளது. யுத்தத்தின்போது உண்டான சேதங்கள் காரணமாக பல தசாப்தங்களாக அது முழு அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட கப்பல்களின் பகுதிகளும் இங்கு உள்ளன. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் இந்தியா வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த துறைமுகத்தை புனரமைக்க உதவி செய்வதாக உறுதியளித்திருந்தது. இந்தியா இந்தத் திட்டத்துக்கு நன்கொடை மற்றும் சலுகை அடிப்படையிலான உதவியை வழங்கப்போவதாக கூறியிருந்தது. இது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 21ஆம் திகதி ஜுலை மாதம் 2011ஆம் …

  12. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் பாதுகாப்பு நிலைகளை பார்வையிட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் அமைந்துள்ள டொக்யார்ட்டுக்கு சென்ற இந்தக் குழுவினர், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். படகு மூலம் இவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், அங்குள்ள சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சென்றனர். கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்த சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வியப்புத் தெரிவித்துள…

    • 1 reply
    • 1.5k views
  13. கடனுக்கு மகுடமாகிப் போன தேசத்திற்கு மகுடம்; எதிர்க் கட்சி குற்றச்சாட்டு தயட்ட கிருள எனும் பெயரில் அரசாங்கம் நடத்திய தேசத்திற்கு மகுடம் இன்று நயட்ட கிருள எனும் கடனுக்கு மகுடம் என்றாகி விட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உலகிற்கு கடனாளியாகி விட்டு இவ்வாறான கண்காட்சிகளை நடத்தும் அரசு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்காது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநோமா கமகே தெரிவித்துள்ளார். இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று கஸ்டத்தின் மத்தியில் பணம் உழைத்துவரும் நிலையில் அரசாங்கம் வரிப்பணம் செலுத்தாது மதுசாரத்தை இறக்குமதி செய்வதாகவும், அவ்வாறு இற…

  14. - சுபுன் டயஸ் சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 'டொப் மவுண்டன்' ரக சிகரெட்டுகள் அடங்கிய கண்டேனர் ரக வாகனமொன்று இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, புத்தாண்டுக் கால விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய நெத்தலிக் கருவாடுகள் அடங்கிய கண்டேனர் ரக வாகனம் ஒன்றும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. டுபாயிலிருந்தே இந்த நெத்தலிக் கருவாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களையும் நெத்தலிக் கருவாட்டினையும் சுங்கப் பிரிவு அதிகாரிகளையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – குஷான் பதிராஜ) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/62824-12-.html

  15. 4ம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு துண்டுப் பிரசுரம் மட்டக்களப்பு, தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 4ம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப் பிரசுரம் ஒன்று மட்டு.நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “விழித்தெழுவீர், தமிழ், சிங்கள சமூகம், சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்” எனும் தலைப்பில் இந்த துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, (விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.) 1. மதி கெட்ட சோனகனே .சிந்திக்கா விட்டால் மாணவ சமூகத்தில…

  16. அனைத்துலக அழுத்தங்களுக்கு முடிவுகட்ட ஒரே வழி - சரத் பொன்சேகா கூறும் ஆலோசனை [ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 02:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அனைத்துலக விசாரணை பற்றிய அழுத்தங்களுக்கு முடிவுகட்ட, பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொருத்தமான உள்ளகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தினால் சீனா போன்ற நாடுகளைச் சார்ந்திருந்து ஏனைய நாடுகளை ஓரங்கட்ட முடியாது. சீன அரசாங்கம் கூட அதனை விரும்பும் என்று நான் நினைக்கவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரங்கள் சிறிலங்காவின் மதிப்பைச் சேதப்படுத்தி விட்டது. எனது கட்சி அதிகாரத…

  17. தமிழன் காலை செய்திகள் http://youtu.be/XiaehNe882U

    • 0 replies
    • 547 views
  18. மாத்தளையில் காணாமல் போனோர் பற்றிய தகவல் சேகரிப்பில் ஜே.வி.பி மாத்தளையில் 1988-90ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை திரட்ட உள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. விசேட கமிட்டி ஒன்றை நிறுவி அதன் மூலம் குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜே.வி.பி. மாகாணசபை உறுப்பினர் கமகெதர திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கமிட்டி இவ்வாறு தகவல்களை திரட்டவுள்ளது. வீட்டுக்கு வீடு சென்று காணாமல் போனோர் பற்றிய தகவல்களை திரட்ட உள்ளதாக ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அண்மையில் மாத்தளை வைத்தியசாலை பகுதியில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாகவும், அவை ஜே.வி.பி உறுப்பினர்களின் உடல் எச்சங்கள் என்பதனை உற…

    • 0 replies
    • 407 views
  19. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தற்போது ஏற்பட்;டுள்ள பதற்றமான நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், இன்னும் 30, 40 வருட காலங்களில் இலங்கை தீப்பிடித்து எரியும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் இருக்கும் தொடர்புகள் மற்றும் உரிமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த சந்தர்ப்பத்திலும் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மீள்குடியேற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரே மொழியை பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகள் கடந்த 30 வருடகால போர் காரணமாக அழிந்து போயின. இதனை மீண்டும் கட்டியெழுப்பும் நிலைமைக்கு நாம் வந்துள…

  20. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட புலகிடக் கோரிக்கையாளர்கள் 20 பேர் இன்று காலை 6 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானமொன்றிலேயே அவர் இங்கு வந்தடைந்துள்ளனர். அவர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார் http://www.virakesari.lk/article/local.php?vid=3823

  21. உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் மூலம், வடபகுதி மக்கள் வேறு நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடபகுதி மக்கள் வேறு நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் உரிமையான மீண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அண்மைய உதாரணமாகும். இனந்தெரியாத வன்முறையாளர்கள் தடையின்றி சென்று, தாக்குதல் நடத்தி விட்டு, தப்பிச் செல்லக் கூடிய சூழ்நிலை யாரால் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி இங்கு எழுகிறது. கடந்த ஜனவரி மாதம் உதயன் பத்திரிகை மீது இவ்வாறான தாக்க…

  22. "உதயன்' பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய காடையர்கள் அணிந்திருந்த ஆடைகள், தாக்குதல் நடத்திய விதம் என்பவற்றைப் பார்க்கும்போது அவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். அரசுக்குத் தெரியாமல் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் இவ்வாறான அராஜகங்கள் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "உதயன்' பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது 7 பேர் கொண்ட காடையர் கும்பலொன்று நேற்று அதிகாலை மிலேச்சத்தனமான முறையில் நடத்திய தாக்குதலில் அலுவலகம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அத்துடன் கிளை முகாமையாளர் உட்பட பணியாளர்கள் நான்கு பேர் காயமடை…

  23. யாழ்ப்பாண மாவட்டத்தின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தின் பிரதான இணைப்பதிகாரியான பணியாற்றிய வட மாகாண சபையின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசாமி, பதவியேற்று ஒரு மாதம் பூர்த்தியாகாத நிலையில், அந்த பதவியில் இருந்து விலகி கொண்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்கள் காரணமாக அவர் பதவியில் இருந்து விலகியிருக்கலாம் என சந்தேகிப்பதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக அரசாங்கம், காணி அமைச்சின் இரண்டு அலுவலகங்களை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை…

  24. உலக நாடுகளிடம் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறப்படுகின்ற நிலையில் தென்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தில் மீன்களுமே பிடிக்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை உலக நாடுகளிடம் கடன் எடுத்து அபிவிருத்தி செய்வதாக அரசாங்கம் கூறித்திரிகின்றது. ஆனால் நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச துறைமுகத்தில் மீன்களும் சர்…

  25. இலங்கைத் தமிழர்களை ஆதரித்து சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சி தீர்மானம் இலங்கையில் தமிழர்களை அடக்கி வைப்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நல்லிணக்க முயற்சியும் பலனளிக்காது என்று சி.பி.ஐ. (எம்.எல். விடுதலை) கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் 9ஆவது மாநாடு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ÷இலங்கையில் தமிழர்களை அடக்கி வைப்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நல்லிணக்க முயற்சியும் வெற்றி பெறாது. அங்கு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் அனைத்தும் கடுமையான மனித உரிமை மீறல்களாகும். இவை முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவதை சர்வதே…

    • 0 replies
    • 541 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.