ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143452 topics in this forum
-
'புலிகள்' ஆட்டுக்குட்டிகள் போன்று மாறியது எப்படி? – ஓர் ஊடகத்தின் கண்ணோட்டம் [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 08:42 GMT ] [ நித்தியபாரதி ] புலிகள் தற்போது ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளனர் என்பது அடையாளங் காணப்பட்டு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்காகும். இவ்வாறு Huffington Post எனும் ஊடகத்தில் Jack Healey தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியன் வரையானதாகும். அதாவது இது உலகமெங்கும் வாழும் யூத சன…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக திமுக வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல. இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும் என்று இல்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைக் குழுவின் ஆணையர் நவநீதம்பிள்ளையே தனது அறிக்கையில் இலங்கை…
-
- 6 replies
- 721 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டு தொடரில் மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றவுள்ளார். இலங்கை தொடர்பிலான உலக நாடுகளின் அறிக்கை குறித்த விவாதத்தின் போது அவர் தமது உரையை நிகழ்த்தவிருப்பதாக அவரது அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இருந்த கடந்தவாரம் நாடு திரும்பி இருந்த அவர் மீண்டும் இதற்காக ஜெனீவா சென்றுள்ளார். ஏற்கனவே அவர் இந்த மாநாட்டில் உரையாற்றி இருந்த போது, இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 99 சதவீதமானை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=77886&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 530 views
-
-
பொதுநலவாய அமைப்பின் 54 உறுப்பு நாடுகளும் டிசம்பர் 14,2012 அன்று முதன் முதலாக தமது அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற அடிப்படை விழுமியங்களைக் கொண்ட பட்டயம் ஒன்றை ஏற்றுக்கொண்டன. ஜனநாயகம், மனித உரிமைகள், சமாதானம், பாதுகாப்பு மற்றும் கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற முக்கிய கோட்பாடுகள் இப்பட்டயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவது உறுதிப்படுத்தப்படாவிட்டால், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முழு அளவில் அடைந்து கொள்ளமுடியாது. இதேபோன்று கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் என்பது ஜனநாயக ஆட்சி நடைபெறும் போதே முழுஅளவில் சாத்தியமாகும். ஒரு நாட்டில் நல்லாட்சி என்பது நடைமுறையில் இல்லாவிட்டால் ஏனைய அனைத்தும் தோல்வியிலேயே முடிவடையும். இவ்வாண்டின் பிற்பகுதியில்…
-
- 0 replies
- 395 views
-
-
ஈழ விடுதலைப்போர் நடந்தபொழுது கூட நாம் உண்மையான ஈழச்சிக்கலை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை... ஈழ ஆதரவாக நின்றவர்கள் பலபேர் கூட அவர்களின் போர்த் திறனை பாராட்டிக்கொண்டிருந்தார்கள் திரைப்படத்தில் ரஜினியின் சண்டையை பாராட்டுவதைப்போலத்தான் புலிகளின் சண்டையை பாராட்டிக்கொண்டிருந்தார்களே தவிர அதன் பின்னால் இருக்கின்ற நியாயங்கள், தனி ஈழத்துக்கான தேவைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம். அத்தவறு நிகழாவண்ணம் இப்பொழுது நாம் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு என்ற நியாயத்தை உலகநாடுகளுக்கு கோரிக்கை வைப்போம் என்று கொளத்தூர் மணி தனது உரையில் தெரிவித்துள்ளார். நேற்று 11.03.2013 திங்கள் மாலை 7 மணியளவில் சென்னை தியாகராயநகர் சி.டி.நாயகம் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் வி…
-
- 0 replies
- 427 views
-
-
இலங்கை விவகாரம் மற்றும் நில மோசடி தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியை அடுத்து அமர்வு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் சபாநாயகர் மீராகுமார் தலைமையில் இன்று கூடியது. சபை பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர் வீரென்ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தக்கப்பட்டது. அதனையடுத்து தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவையின் மைய பகுதிக்கு வந்து பிரபாகரனின் 12 வயது மகன் பிணை கைதியாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என அவரது புகைப்படத்தை காண்பித்து கோஷமிட்டார். அதனை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதேபோல அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்பினார்…
-
- 0 replies
- 333 views
-
-
ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட்டமை நம் எல்லோருக்கும் கிடைத்த வெற்றி - பெல்லன் வெல விமலரத்ன தேரர் [Monday, 2013-03-11 18:50:13] இன்றைய நாள் வரலாற்றில் எழுதப்படவேண்டியதொன்று ஏனெனில் ஹலால் தொடர்பான தீர்மானமானது இலங்கையர் என்ற வகையில் நம் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியென பெல்லன் வெல விமலரத்ன தேரர் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனம், பௌத்த பிக்குமார்கள் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஆகியன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே பெல்லன் வெல விமலரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவ…
-
- 15 replies
- 938 views
-
-
இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 12:36 மலேசியாவில் தமிழ் மக்கள் நுதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர் . இலங்கை தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில் கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர். http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=22398:2013-03-11-12-38-40&catid=45:news&Itemid=67
-
- 0 replies
- 512 views
-
-
வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் உதயராசா சாளின் இனந்தெரியாத ஆறு பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டு படுகாயமடை ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே. அடிகாயத்தின் தாக்கம் காரணமாக அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் நிலையில், தாக்கப்பட்ட சம்பவத்திற்கு விசமத்தனமான காரணம் கற்பிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட் டுள்ளனர். இத்தகைய முயற்சிகள் போக்கிலித்தன மானவை. வலம்புரியின் உயிரைக் குடிப்பதற்கு பகீரத முயற்சி செய்து அது முடியாது என்று தோற்றுப் போனவர்கள், தமக்கு விழுகின்ற அடியில் தமிழ்த் தேசிய சாயத்தைப் பூசி, தாங்கள்தான் தமிழ்த் தேசியத் திற்காக குரல் கொடுப்பதாக பிரசாரமும் செய்கின்றனர். என்ன செய்வது! அப்பாவித் தமிழ்…
-
- 1 reply
- 669 views
-
-
லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமும் அதிகரித்தது! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமானது தான் விநியோகம் செய்யும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரித்துள்ளது. எனினும் டீசலின் விலையை அந்நிறுவனம் அதிகரிக்கவில்லையெனத் தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3166
-
- 11 replies
- 600 views
-
-
தீர்மானமில்லாத தீர்மானம்! First Published : 11 March 2013 02:31 AM IST ஐ.நா. மனித உரிமைகள் குழுமத்தில் இரு நாள்களுக்கு முன்பு அமெரிக்கா தாக்கல் செய்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. குழுமத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் வரைவுத் தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டபோது, அதில் இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக முன்னிறுத்துவதற்கான எந்தத் தடயமும் அந்தத் தீர்மானத்தில் காணப்படவில்லை. இவை ஏற்கெனவே, சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டபோது எவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினவோ, அதைப்போலவே இப்போதும் இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவம் நடத்திய கடைசிநேர அழித்தொழிப்புப் போரில், சரணடைந்…
-
- 0 replies
- 367 views
-
-
'என் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்' திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 18:08 -நவரத்தினம் கபில்நாத் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர். எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவை…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
பிரித்தானியாவில் அதிக அளவில் அகதி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு? மார் 11, 2013 பிரித்தானியாவில் எதிர்காலத்தில் அதிக அளவிலான இலங்கை அகதிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் துன்புறுத்தலுக்கு உட்படுகின்ற அல்லது உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்று பிரித்தானியாவின் குடிவரவுத்துறை அமைச்சின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதுடன், பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுகின்றவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்ப்படுகின்றமை ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையர…
-
- 3 replies
- 688 views
-
-
ஐ.நாவுக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம் ஏற்பாடு: 11 மார்ச் 2013 சிவில் படைகளில் இணைக்கப்பட்டவர்களை இதில் கலந்து கொள்ளுமாறு நிர்பந்திக்கலாம்? ஐக்கியநாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை எதிர்த்து வவுனியாவில் ஒரு ஆர்பாட்டத்தை நடத்த இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாளைய தினம் வவுனியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான தீவிர நடவடிக்கைகளில் இலங்கைப் படையினரும் அரச ஆதரவுக்கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக வன்னியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்நிலையில் இரணைமடுவில் படையினரின் தலமையகத்திற்கு அருகில் உள்ள பண்ணை, முழங்காவிலுக்கு போகும் வழியில் ஜெயபுரத்த…
-
- 2 replies
- 442 views
-
-
அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்த சிறீலங்கா மார் 11, 2013 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டுப் பிரேஇரணையொன்றை (Joint Resolution) சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சிறீலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது எனத் தெரியவருகிறது. இதனால், ஜெனிவா இராஜதந்திர சமர்க்களத்தில் கொழும்பு அரசு கடும் இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாமென அறியமுடிகின்றது. அதேவேளை, தமது கோரிக்கைக்கு சிறீலங்கா பச்சைக்ெகாடி காட்ட மறுத்ததாலேயே அந்த நாடு மீது தமது போக்கை அமெரிக்க வல்லரசு ஜெனிவாவில் இறுக்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் பிரேரணையொன்றைத் தாக்கல் செய்வதற்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்! [Monday, 2013-03-11 21:49:46] இந்த நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத உரிமைகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதையே அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் பௌத்த கடும் போக்காளர்களின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிரான்குளம் கணபதிப்பிள்ளையார் ஆலய மடப்பள்ளி மற்றும் அலுவலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆலய தலைவர் எ.குணலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அபிவிருத்திகளைச் செய்வதன் மூலம் நா…
-
- 1 reply
- 480 views
-
-
இந்திய மத்திய அரசுக்கு தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அந்த நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கவியலாது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீதும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வியும் கூறியிருப்பது தொடர்பிலேயே அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்விருவரின் கருத்துக்களும் தமிழ் மக்களிடையே மிகப்பெரியவருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடமுடியாது என்று மத்திய அரசா…
-
- 2 replies
- 669 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு திரட்ட முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது! [Monday, 2013-03-11 15:54:42] ஜெனிவா இராஜதந்திரச் சமரில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தொழில்நுட்பக் காரணிகள், காலதாமதம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே பாகிஸ்தானின் பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்க மறுத்துவிட்டது என அறிய முடிகின்றது. பாகிஸ்தானின் இறுதிக் கட்ட முயற்சி கைகூடாமையானது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, கியூபா, ரஷ்யா ப…
-
- 0 replies
- 706 views
-
-
மஹிந்த ராஜபக்ச நாளை ஜப்பான் பயணம் மார் 11, 2013 மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபகச நாளை 12ம் திகதி ஜப்பான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா தெரிவித்தார். இவ் விஜயத்தின் போது ஜப்பான் நாட்டின் பிரதமர் சின்கோ அபே உட்பட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் மஹிந்த ஈடுபடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார். இப்பேச்சுவார்த்தைகளின் போது இருபக்க உறவுகள் மேம்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையிலான இராஜதந்திர உறவின் அறுபதாண்டு நிறைவின் நிமித்தமே விஜயம் அமைந்துள்ளது. h…
-
- 2 replies
- 442 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி! மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடு…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் மனித உரிமை விடயங்களை கருத்திற் கொண்டு பிரித்தானிய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இலங்கை பாதிக்கப்பட்ட அல்லது சர்சதேச சமூகத்தால் தேர்வு செய்யப்பட்ட நாடு அல்ல என டேவிட் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சர் பேர்நாட் குச்சநாருடன் இலங்கை சென்று முகாம்களுக்கு விஜயம் செய்தபோது தமிழ் பெண்கள் காகிதத்தில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் பெயர்களை எழுதி கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் விட்டதை மறக்க முடியா…
-
- 0 replies
- 333 views
-
-
மும்பை ஆசாத் மைதானத்தில் வருகிற 20–ந் தேதி(புதன்கிழமை) அன்று காலை 11.30 மணிக்கு பா.ஜனதா கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி நடத்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா எம்.பி.சஞ்சய்ராவுத், மும்பை பா.ஜனதா தலைவர் ராஜ்புரோகித், மராட்டிய நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ.நந்காவ்ங்கர் மற்றும் மும்பையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை பாண்டுப் தமிழ்ச்சங்க தலைவர் எஸ்.எஸ்.தாசன் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93898
-
- 1 reply
- 612 views
-
-
பிரான்செஸ் ஹரிசன் : 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' நூலும் எதிர்வினைகளும் [ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 08:11 GMT ] [ நித்தியபாரதி ] பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இன மோதல் தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிடுவதானது அமைதியான வாழ்வொன்றை வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்காது. நான் எழுதி வெளியிட்டுள்ள 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூலில் சிறிலங்காவில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளேன். சிறிலங்காவின் கொலைக்களங்களில் அகப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறார்கள் தொடர்பாக நான் எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இந்த நூல் தொடர்பாக உ…
-
- 0 replies
- 304 views
-
-
புதுப்பொலிவுடன் மீண்டும் இணையவலையில் அருச்சுனா இணையம் கடந்த சில மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அருச்சுனா இணையம் மீண்டும் இணைய வலையில் புதுப்பொலிவுடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் போர் மற்றும் தமிழீழத் தாயகம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவுப் போராளிகளால் காட்சிப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஒளிப்பட ஆவணங்களைக் கொண்டுள்ள இந்த இணையம் கடந்த சில மாதங்களாக தவிற்க முடியாத சில காரணங்களால் தடைப்பட்டிருந்தது. இன்று புதுப்பொலிவுடன் இணையவலையில் மீளவும் தடம் பதித்துள்ள இத்தளத்தினை www.aruchuna.com மற்றும் www.aruchuna.net ஆகிய இணைய முகவரிகளில் பார்வையிடலாம்.
-
- 4 replies
- 913 views
-