Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தை எடுத்த கெலம் மெக்ரே , விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும், இந்த ஆவணப் படத்தை எடுப்பதற்காக யாருக்கும் தாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்தின் உண்மைத் தன்மையால், உலக நாடுகளின் மீதான பார்வை தற்போது இலங்கையின் மீது விழுந்துள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அடக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெறும் நாட்டில், தகவல்கள் கிடைக்கப் பெற்ற விதத்தை கொண்டு அரசாங…

  2. துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவி அவசியம் - அரசாங்கம் 05 மார்ச் 2013 செனல் 4க்கு உதவும் இலங்கையர்கள் குறித்து தகவல் தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவிகள் அவசியமானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை வெளிநாட்டவர்களிடம் காட்டிக் கொடுக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. நாட்டுக்கு துரோகம் இழைக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கோரியுள்ளார்.தனிப்பட்ட நன்மைகளுக்காக சில நபர்கள் நாட்டுக்கு பாரியளவில் துரோகம் இழைப்பதாகவும், வெளிநாட்டவர்களுடன் இணைந்து சதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அம…

  3. ஓமந்தை சோதனை சாவடியில் படையினர் கடுமையான சோதனை! மார் 6, 2013 வவுனியா மாவட்டத்திலுள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் நேற்றிரவு தொடக்கம் சிறிலங்கா படையினரின் கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ் மக்களின் சகல வாகனங்களும் மேற்படி சோதனைச் சாவடியின் வழிமறிக்கப்பட்டு கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. இளைஞர்,யுவதிகள் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யுத்தம் நிறைவுக்கு வந்து சில ஆண்டுகளின் பின்னர் ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாகப் பயணிக்கும் வாகனங்கள் சோதனைய…

  4. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் உள்ள உறவுகள் தற்போது முறிவடைந்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க இந்த கருத்தை வெளியிட்டார். அதற்கான முதல்கட்ட பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கடிகள் தற்போது வலுப்பெற்றுள்ளன. இந்தநிலையில், உள்நாட்டு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு இலங்கை எவ்வாறு அந்த நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கப் போகின்றது. அவற்றை போக்கிக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதில்லை. தமிழ்நாட்டுடனான குரோதங்களை கலையாத பட்சத்தில் எதிர்காலத்தில் அயல் பிராந்தியங்களுடன் எதிர்மறையான மனப்பான்ம…

  5. தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் இன்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. தூதரகத்தை முற்றுகையிட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதை கண்டித்தும், சிங்கள இனவாத தலைவர் ராஜபக்ச மீது போர் குற்றங்களுக்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் சென்னையில் இன்று சிங்களத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, வ…

  6. ஜெனிவா குழுவில் இராணுவ அதிகாரி நீக்கம்; கோத்தாமீது சிறிலங்கா குழு விசனம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறுத்து விட்டநிலையில் அது சிறிலங்காக் குழுவில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னைய கூட்டங்களில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பங்கேற்று, அரசகுழுவினருக்கு உதவியிருந்தனர். ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கும் சிறிலங்கா அரசகுழுவில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை. சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு முறியடிக்க, இராணுவ அதிகாரி ஒருவர் பங்கேற்பது அவசியம்…

  7. யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். கடந்த 3ஆம் திகதி பிற்பகல் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக சென்றவர் வீடுதிரும்பாதமையினால்மனைவி பொலிஸ் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 39 வயதுடைய ப. இராஜேந்திரன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போனவராவார். எனினும் இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=28563187800651551…

    • 0 replies
    • 361 views
  8. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற் அமைவாக 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவிருப்பதை யாரும் மாற்ற முடியாது என்று நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் உறுதிபடத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் சந்திப்பொன்றையும் நடத்தப்போவதில்லை என்பதை அதற்கு ஆதாரமாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 23 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின்கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பேராசிரியர் பீரிஸ் இந்தக் கருத்தை வெளியிட்டார். பொதுலவாய அமைச்சர்கள் மட்டத்திலான…

    • 0 replies
    • 275 views
  9. சுப்பிரமணிய சாமி வீடு மீது தாக்குதல்- வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று (05.03.2013) காலை மதுரை சட்டகல்லூரி மாணவர்கள் 35 பேர் மதுரையில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதனை அறிந்த போலீசார் சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி டெல்-யில் இருப்பதால், புகார் கொடுக்க முடியவில்லை. இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய…

    • 6 replies
    • 1.2k views
  10. A Canadian government survey found that over 70% of Sri Lankan Tamil refugees have gone back to Sri Lanka for holidays raising concerns over the legitimacy of their refugee claims.[ http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_people

  11. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை கொண்டுவரப் படும் தீர்மானம் கடந்த முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை விட கடுமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மனித உரிமைபோர் குற்றம் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் கேட்பதாகவும், இறுக்கமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார். அதே நேரம் மனித …

    • 3 replies
    • 830 views
  12. பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/60019-2013-03-05-05-58-33.html

    • 8 replies
    • 837 views
  13. நீதிக்கான வேட்கையுடன் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இருந்து ஜெனீவா ஐ.நா முன்றல் வரை நடைப்பயணத்தினை மேற்கொண்டு நேற்று (04-03-2013) திங்கட்கிழமை நிறைவினைச் செய்திருந்த திரு சக்தி அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார். நீதிக்கான நெடும்பயணத்தில் ஐ.நா முன்றில் அணிதிரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் மத்தியில் தன் நடைப்பயணத்தினை நிறைவு செய்து கொண்ட சக்தி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மாணிக்கவாசகர் அவர்கள் மதிப்பினை வழங்கினார். http://www.seithy.com/breifNews.php?newsID=77417&category=TamilNews&language=tamil

  14. மாத்தளை மனித புதைக்குழி எலும்புகளை பாதுகாக்குமாறும் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை:- 05 மார்ச் 2013 சாட்சியங்களை அழிப்பதற்கு முன்னர், சுமார் 200 பேருடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கருதப்படும் மாத்தளை மனித புதைக்குழியில் இருந்த எடுக்கப்பட்ட எலும்புகளை பாதுகாக்குமாறும், அது குறித்து விசாரணை நடத்துமாறு ஆசிய சட்ட வள மத்திய நிலையம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனித புதைக்குழி, மாத்தளையில் அல்லாது, கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்த இதனை விட சர்வதேச கவனம் செலுத்தப்பட்டிருக்கும் எனவும் அனைத்து குற்றங்கள் குறித்தும் ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில்…

    • 1 reply
    • 382 views
  15. நேற்று மலை ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தராஜாபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்…

  16. First Published : 05 March 2013 08:43 PM IST இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி மார்ச் 12-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடத்த டெசோ அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் மார்ச் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் காலை 6 ம…

  17. ஈழத்தமிழினத்தை கொன்றழித்த கொலைகாரன் இராஜபக்சே அரசை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க கோரியும் ஐ.நா மேற்பார்வையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த கோரியும் ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட பொதுவாக்கெடுப்பு நடத்த வலி உறுதியும் விழுப்புரத்தில் கறுப்புக்கொடி ஏந்தி அறப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. திங்கள் மாலை மூன்று மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன அழிப்புக்கு நீதி கேட்டு கருப்பு கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க தமிழக வாழ்வுரிமை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் மனிதநேய மக்கள்கட்சி மக்கள் உரிமை கூட்டமைப்பு மனித உரிமை இயக்கம் போர் குற்றம் இன படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு மற்றும் தமிழிளைஞர் கூட்டமைப்பு ஆகிய…

    • 2 replies
    • 411 views
  18. இந்திய காங்கிரசு அரசு இலங்கைக்கு அளித்து வரும் தொடர் ஆதரவை நிறுத்தக்கோரியும், இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்து உடனடியாக ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தொடர் முழக்க பட்டினிப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பெருந்தமிழர் பழ.நெடுமாறன், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். அப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சென்னை பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஒரு நாள் தொடர் முழக்க பட்டினி போராட்டத்தல் கட்சியின் தலைமை ஒர…

    • 4 replies
    • 653 views
  19. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றினாலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையினால் மட்டுமே பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சீனாவும் ரஸ்யாவும் அதனை எதிர்க்கும். வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு புலி ஆதரவாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கோரியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின…

  20. சர்வதேச போர்க்குற்றம் குறித்த நீதிமன்றம் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டுக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடிய எந்தவொரு பிரகடனத்திலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் எந்தவொரு நாடும் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இந்தியா கூட இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்த பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென சிலர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். சில நாடுகளின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதியளிக்குமாறு மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில நாடுகள் தங்களுக்கு தேவையான வகையில் வ…

    • 1 reply
    • 512 views
  21. இலங்கையில் நடந்த போரின் போது, அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளி என்று உலகம் உணரச் செய்யும் வகையில் டெசோ இயக்கம் சார்பில் இன்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- சர்வதேச போர்க் குற்றவாளி இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சேவை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் 05.03.2013 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த முற்றுகை அறப்போருக்கு தி.மு.க.பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் முன்னிலை வகிக்கிறா…

    • 1 reply
    • 299 views
  22. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் பான் கீ மூன் உத்தியோக பூர்வ அறிக்கை இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஐநா பொதுச் செயலாளரின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் கருத்து தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இவ்விவகாரம் தொடர்பிலேயே ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.adaderana.lk/tamil/ne…

    • 0 replies
    • 873 views
  23. மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு! மார் 5, 2013 மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் தமிழகம் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உ…

    • 2 replies
    • 2.5k views
  24. சர்வதேச விசாரணையை இலங்கை தவிர்க்க முடியாது: இரா.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013 10:24 'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி, தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது நம்பகமான, சுயாதீனமான விசாரணை அல்ல. எனவே ஒரு சர்வதேச விசாரணைக்கு இது வழிசமைத்துள்ளது. அவ்வாறான சர்வதேச விசாரணையொன்று வருவதை எவராலும் தவிர்க்க முடியாது' தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்ல…

  25. முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார உடைக்கு பாடசாலையில் தடை! [Tuesday, 2013-03-05 10:42:17] பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=77374&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.