ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
அரச காணிகளின் அதிகாரம் வடக்கு ஆளுநரின் கையில் வடமாகாணத்தில் உள்ள அரசகாணிகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந் திரசிறி. நாவற்குழியில் புதிதாக சிங்களக் குடியேற்றமொன்று அமைக் கப்பட்டுவரும் நிலையிலும், அரச காணிகளை படையினரின் பாவனைக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற்று வரும் நிலையிலும் அவசர அவசரமாக அரச காணிகளின் அதிகாரத்தை ஆளுநரின் கைகளில் ஒப்படைத்தமை தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தி லுள்ள அரச காணிக ளின் பயன்பாடு தொடர் பாக நடவடிக்கைகளை முற்றுமுழுதுமாகத் தீர் மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாத…
-
- 2 replies
- 577 views
-
-
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறு;திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற…
-
- 7 replies
- 642 views
-
-
தென்னாபிரிக்காவின் விஜயத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. முரண்பாடு தீர்த்தல், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க மற்…
-
- 4 replies
- 591 views
-
-
'தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்' : முஸ்லிம் கவுன்ஸில் தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார அம்சங்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரும் வகையில் நடத்தப்பட்ட அந்த செய்தியாளர் சந்திப்புக்கு அந்த கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன் தலைமை தாங்கினார். இப்படியான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதன் ம…
-
- 16 replies
- 879 views
-
-
ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென…
-
- 5 replies
- 492 views
-
-
சுதந்திர தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்! தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சுதந்திர தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இன்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதிமுக பொதுக்குழு கூட்டம்,சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மஹாலில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, நாசேதுரை, பொருளாளர் மாசிலாமணி மற்றும் மாநில நிர்வாகிகள், அப்துல்லா பெரியார்தாசன், வழக்கறிஞர் தேவதாஸ், மலர்மன்னன், உயர்நிலைக்குழு உறுப…
-
- 5 replies
- 970 views
-
-
Brightfuture Nesakkaram நடாத்தும் மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டி. போரால் பாதிப்புற்ற மாணவர்களின் கல்வித்தரத்தை மேலுயர்த்தும் முகமாக “Brightfuture Nesakkaram”அமைப்பானது பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எமது கல்விச்சேவையை மேம்படுத்தும் முகமாக மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியினை நடாத்த எமது விளையாட்டுக்துறையினர் தீர்மானித்துள்ளனர். எமது கல்விச்சேவையை அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் வழங்குதவற்கான நிதிசேகரிக்கும் முகமாக MERGENT BANK (MBSL) )அனுசரணையோடு நடாத்த திட்டமிட்டுள்ளோம். இப்போட்டிகளில் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்ற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி தங்கள் ஆதரவினை தமிழ்…
-
- 0 replies
- 631 views
-
-
கூகுளும் சுதந்திரதினத்தை கொண்டாடியது திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 11:25 இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் முகமாக கூகுள் தனது முகப்பு சின்னத்தில் சிங்கம் ஒன்றுக்கும் தேசியக் கொடியில் காணப்படும் 3 வர்ணங்களுக்கும் இடம் கொடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திரதினத்தை கருத்தில் கொண்டு கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு கூகுள் படத்தை வரைய வேண்டும் என கூகுளை பயன்படுத்தும் புத்திக நுவான கேட்டிருந்ததாக கூகுள் கூறியுள்ளது. இந்தப் படத்தை google.com மற்றும் google.lk ஆகிய பக்கங்களில் காணலாம். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58268-2013-02-04-05-57-14.html
-
- 9 replies
- 990 views
-
-
மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஓட்டமாவடி மீராவோடையை சேர்ந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீயான்குள பகுதியில் இன்று அதிகாலை 04 மணியளவில் மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி மீராவோடை - ஹாஜியார் வீதியைச் சேர்ந்த எம்.எம்.சீனிமுகம்மது என்ற விவசாயியே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கிளை முகாமையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற இவர் வாகரை – மீயான்குளப் பகுதியில் வேளான்மைச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.மின்னல் தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கைளிக்கப்பட்டது. http://www.sankathi…
-
- 0 replies
- 434 views
-
-
அரசுக்கு எதிராக யாழில் 15 இல் உண்ணாவிரப் போராட்டம் -அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு பிப் 3, 2013 யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை படையினர் அழிப்பதைக் கண்டித்தும், மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் விரைவில் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசை வலியுறுத்தியும் எதிர்வரும் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை தெல்லிப்பழை தூப்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள என்று இதனை ஏற்பாடு செய்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெறயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய…
-
- 1 reply
- 505 views
-
-
காணி தகராறு காரணமாக பௌத்த பிக்கு ஒருவர் குத்திக்கொலைச்செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவ, எகடஉயன பகுதியிலுள்ள விஹாரையின் பிக்கு ஒருவரே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் பிரதேசவாசிகள் குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு தீ மூட்டி கொளுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தையடுத்து தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவரும் பொரல்லஸ்கமுவ பகுதியில் வைத்து இன்றுக்காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58255-2013-02-04-03-30-52.html
-
- 4 replies
- 500 views
-
-
போரை முன்னிறுத்தி நாட்டை சுரண்டுகின்றது அரசு - பொன்சேகா! [Monday, 2013-02-04 09:49:13] போரைக்காட்டி நாடு சுரண்டப்படுவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர் காரணமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் சீனாவிடமிருந்தே ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந்த அனைத்து ஆயுதங்களும் கடன் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கடன்களை நான்கு தலைமுறைகள் வரையில் செலுத்த நேரிடும். 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் கடன் செலுத்த வேண்டியுள்ளது. போரைக் காட்டி நாடு சுரண்டப்பட்டது, தற்போது உலக சமூகத்திடம் கடன் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் ஒரு பீரங்கி தோட்டாவின் விலை 250 டொலர்களாகு…
-
- 0 replies
- 930 views
-
-
தேயிலை ஏற்றுமதி செஸ் வரி அதிகரிப்பால் ஏற்மதியாகும் தேயிலை அளவு வீழ்ச்சி By General 2013-02-03 09:24:53 தேயிலை ஒரு கிலோவை ஏற்றுமதி செய்வதற்கான செஸ் வரி நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாகும் தேயிலையின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் இலங்கை தேயிலை தொழில்துறை பாரிய சிக்கலை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு, இலங்கை தேயிலைச் சபை ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல் செஸ் வரியை உயர்த்தியுள்ளதாகவும் இதேபோல் பலமுறை செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 300 மில்லியன் கிலோ தேயிலை கடந்த வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் 16200 கோடி ரூபா வருமானமாக பெறப்பட்டது. தேயிலை ஏ…
-
- 1 reply
- 319 views
-
-
நினைக்கவும் வெளியில் சொல்லவும் முடி யாத அருவருப்புச்சம்ப வங்கள் எங்களிடம் மலிந்து போயுள்ள துயரத்தை சிந்திக்கும் போதெல்லாம் எத்தனை இழிவுத்தனங்கள் என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு மிருகங்கள் கூட வெறுக்கின்ற மிக மோசமான சம்பவங்களில் மனிதர்கள் ஈடுபடுகின்ற மகாபாதகம் நடந்தேறுகின்றது. சர்வேசா...! கண்ணீரால் காத்த எங்கள் குருத்துக்களை கருக்கிவிடுகின்ற ஒரு பெரும் கொடூரம் எப்படித்தான் எங்கள் மண்ணில் உருவெடுத்தது! நம்பவும் கற்பனை செய்ய முடியாத அளவில் காரியங்கள் நடப்பதனை நினைக்கும் போது எங்கள் பிள்ளைகளை எப்படித்தான் வளர்த் தெடுக்கப் போகின்றோம் என்ற ஏக்கம் பெற்றோர் களை ஆக்கிரமிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு முற்பட்டகாலம், விடு தலைப் புலிகளின் காலம், புலிகளுக்கு பிற்பட்ட காலம் …
-
- 1 reply
- 452 views
-
-
புற்றுநோய் காரணிகள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் மெனிங் சந்தையில் கண்டுபிடிப்பு By General 2013-02-02 14:15:46 கொழும்பு மெனிங் சந்தையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவற்றை விற்பனைசெய்து வந்த சுமார் 8 கடைகள் மீது வழக்குத் தொடர கொழும்பு மாநகரசபை முடிவு செய்துள்ளது. மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கையொன்றை கொழும்பு புறக்கோட்டை பகுதியில் முன்னெடுத்த போதே இவை இணங்காணப்பட்டுள்ளன. மஞ்சள் தூளில் 'மெடனில்' எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் நிறப்பொடி கலக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிளகாய்த்…
-
- 7 replies
- 921 views
- 1 follower
-
-
2 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியே குறித்த பாதிரியார். அப்பாவி மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றிவந்த நிலையிலேயே பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இருபாலை,நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற பகுதிகளிளைச்சேர்ந்தவர்களையே இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றிய பாதிரியார் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தா பொலிஸார். அவர் தொடர…
-
- 1 reply
- 517 views
-
-
நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல். நேசக்கரம் இணையம் மீதான சைபர் தாக்குதலினால் நேசக்கரம் இணையம் செயலிழந்துள்ளது. பதிவேற்றப்பட்ட சகல தரவுகளும் ஆவணங்களும் அழிக்கப்பட்டு இணையம் முடக்கப்பட்டுள்ளது. மீளவும் ஒழுங்கமைக்கும் வரை நேசக்கரம் இணையம் இயங்காதென்பதனை அறியத்தருகிறோம். இணைய வழங்கிச் சேவையினர் விரைவில் வழங்கியை சீர்படுத்தித் தந்த பின்னர் அனைத்து விபரங்களும் மீள தரவேற்றப்படும் என்பதனை அறியத்தருகிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :- Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone:(Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org
-
- 44 replies
- 3.5k views
-
-
எங்களை எதிர்ப்பவர்களுடைய தலையை வெட்டவும் தெரியும், வெட்டியவனை காவல்துறையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் எமக்குத் தெரியும். இது எங்களுடைய அரசாங்கம் இங்கு நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்று இன்று காலை ஊர்காவற்றுயில் இடம்பெற்ற கூட்டுறவுத் திணைக்கள பொதுச் சபை நிர்வாகத் தெரிவில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கமல் பொதுச் சபை உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் தமக்கு ஏற்ற அடிவருடிகளை புதிய நிர்வாக சபைக்கு தெரிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுச் சபை உறுப்பினர்கள் மேற்படி விடையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். இன்று காலை ஊர்காவற்றுறை பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பொதுச் சபை நிர்வாகத் தெரிவுக் சுட்டம் …
-
- 0 replies
- 372 views
-
-
பாடசாலைகளில் இடம் பெறும் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விருந்தினர்களாக அழைக்க முடியாத இக்கட்டு நிலையில் முல்லைத்தீவுப் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது இல்ல மெய்வன்மைப் போட்டிகள், கால்கோள் விழாக்கள் உட்பட பல்வேறு வகையான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடா ளுமன்ற உறுப்பினர்க ளையோ அல்லது அந்தக் கட்சி சார்ந்த பிரமுகர்க ளையோ விருந்தினர்களாக அழைக்க முடியாத நிலை உள்ளதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பாடசாலையுடன் எந்த வித தொடர்பும் இல்லாத அரசு சார்பான பிரமுகர்களையே இந்த நிகழ்வுக்கு அழைக்க வேண்டிய சூழல் தமக்கு ஏற்பட்டு…
-
- 0 replies
- 323 views
-
-
துண்டுக் காணி கூட இன்றி 11,500 தமிழ்க் குடும்பங்கள் யாழ். குடாநாட்டில் ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11 ஆயிரத்து 500 தமிழ்க் குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என்று, வடமாகாணப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரமே இது எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் தமிழ் மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் பொருட்டு காணிக் கச்சேரிகளை வடமாகாண காணி ஆணையாளர் அலுவலகம் நடத்தவுள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலுமுள்ள காணியற்றோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய…
-
- 4 replies
- 469 views
-
-
மட்டக்குளியில் மரம் எரிகிறது ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013 21:44 0 COMMENTS கொழும்பு-15, மட்டக்குளியில் மரம்மொன்று தற்போது எரிந்துக்கொண்டிருக்கின்றது. அந்த மரத்தை பற்றியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகளில் தீயணைப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். சென்மேரிஸ் தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள மரமே இவ்வாறு தீப்பிடித்து ஏரிந்துக்கொண்டிருக்கின்றது. அந்த மரத்தில் சுற்றியிருக்கும் கொடியை யாராவது பற்றவைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58250-2013-02-03-16-14-39.html
-
- 0 replies
- 346 views
-
-
ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிராக 209 யோசனைகள்! - 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானம்! [sunday, 2013-02-03 11:14:44] ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள 209 யோசனைகளில் 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு நிராகரிக்கப்படவுள்ள விடயங்களில் யுத்தக் குற்றம், சர்வதேச நீதிமன்ற விசாரணை, பாதுகப்புத் தரப்பு ஆகியனவும் உள்ளடங்கும் என அந்தச் செய்திகள் கூறுகின்றன. ஏனைய 111 யோசனைகளையும் சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில் கலந்து கொள்ளும் நாடுகளில் 24 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக அம…
-
- 4 replies
- 663 views
-
-
இலங்கை தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை அவர்களது நாட்டுக்கு வழமையாக திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரித்தானியா மறுத்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுவது போன்று, அப்படியாக திருப்பி அனுப்பப்படுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கொழும்பில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புல…
-
- 14 replies
- 1.1k views
-
-
இளம் பௌத்த பிக்குகள் ஊர்வலம் சென்று வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு பொருந்தாத செயற்பாடுகள் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த சமயத்திற்கு அமைய பௌத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். பௌத்த தேரர்கள் அரச ஆட்சியில் பங்கு கொள்ள சந்தர்ப்பம் இல்லை எனவும் அரசன் தவறு செய்தால், அவருக்கு ஆலோசனைகளை மாத்திரமே பௌத்த தேரர்கள் வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு ஏற்படும் விதத்தில் பௌத்த பிக்குகள் செயற்பட வேண்டும் எனவும் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTy…
-
- 3 replies
- 480 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளன. இது குறித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை பிரதிநிதி பெர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து சில உறுப்பு நாடுகள் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http:/…
-
- 1 reply
- 524 views
-