ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
சர்வதேசத்தின் சிறீலங்கா மீதான கடினமான பார்வையும், ஈழப்போரின் போதான ஐக்கிய நாடுகளவையின் தவறுகளை அதன் உள்ளகக் குழுவே சுட்டிக்காட்டிய ஆண்டாக 2012ம் ஆண்டு மனிதவுரிமைக்கான நம்பிக்கை தரும் ஆண்டாக அடையாளம் காட்டிச் செல்லும் அதேவேளை, 2013ம் ஆண்டில் மனிதவுரிமை விவகாரங்களில் ஈழத்தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளிற்கு விடை கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகளைச் செய்வதற்காக கனடிய மனிதவுரிமை மையம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என அதன் சமூக உறவுகளிற்கான ஆலோசகர் சுரேஸ் தர்மா தனது தமிழர் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வுகள் முன்னெப்பொழுதுமில்லாத அளவு பொதுநோக்குக் கொண்ட தொண்டார்வ நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுவது மிகவும் ஆரோக்கியமானது எனத் தெரி…
-
- 0 replies
- 342 views
-
-
கடந்த ஆண்டில் 71,458 சிறிலங்காப் படையினர் தப்பியோட்டம் [ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 00:11 GMT ] [ தா.அருணாசலம் ] கடந்த ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தை விட்டு 71,458 பேர் தப்பியோடியுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தரப்பை மேற்கோள்கோட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய சிறிலங்காப் படையினரின் எண்ணிக்கையே 71,458 பேராகும். இவர்களில் 33,532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், சிறிலங்கா இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ள சிறிலங்காப் படையினரைத் தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி…
-
- 3 replies
- 448 views
-
-
சிறிலங்காவில் கறுப்பு மழை பெய்துள்ளது. முன்னர் சிகப்பு, மஞ்சள், நீல நிற மழகள் பெய்துள்ளன.உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். . இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கரை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். . குறித்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர். அந்த மழைகளில் அல்கா வகை உயிரினம் இருந்தமை கண்டு பிடிக்கபட்டது. நேற்று ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று (11) கருப்பு மழை பெய்துள்ளது. இந்த சூழலில் இந்த வர்ண மழையினை ஆராய நாசாவில் இருந்து சுயாதீனமாக விஞ்ஞானி ஒருவர் வருகின்றார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%…
-
- 6 replies
- 787 views
-
-
-சுபுன் டயஸ் பிரித்தானிய பிரஜையின் சடலம் தங்காலை, சீனிமோதர கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 60 வயதான ஜோன் ரொபர்ட் சிமித் எனும் பிரித்தானிய பிரஜையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் தங்காலை, சீனிமோதர கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் குளிக்கும் வழமையை கொண்ட இவர் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஹோட்டலிலிருந்து வெளியேறி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது இரவு 9.40 மணியளவில் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இவரின் சடலத்தை கடற்படையினர் மாவேல பகுதியிலிருந்து மீட்;டு தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இத…
-
- 5 replies
- 565 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி; வெறிச்சோடியது வளாகம் யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கபட்ட போதும் மாணவர்களது வருகை காணப்பட்டதனால் பல்கலைக்கழகம் வெறிச்சோடி காணப்படுகின்றது. சுமார் நாற்பது நாட்டளுக்கு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என துணைவேந்தருக்கும் அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவப் பிரதி நிதிகளுக்கும் இடையில் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள…
-
- 0 replies
- 494 views
-
-
பொங்கலுக்கு முன்னர் மாணவர்கள் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னர் இவர்கள் விடுவிக்கப்படுவர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரி வித்திருந்தபோதும், அவர்கள் அவ்வாறு விடுதலை செய்யப் படும் சாத்தியம் இல்லை என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் உதயனுக்குத் தெரிவித்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 …
-
- 0 replies
- 322 views
-
-
அடுத்து வரும் நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்க இலங்கை ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது. இதன்போது சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அதேவேளை, பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. http://nerudal.com/nerudal.54470.html
-
- 0 replies
- 361 views
-
-
'சவூதி மன்னர் கடந்த புதன்கிழமை இலங்கையைச் சேர்ந்த ரிஸானாவை கழுத்தை வெட்டிக் கொலை செய்தார். வெள்ளிக்கிழமை எங்கள் இலங்கை நாட்டு அரசன் எங்கள் நாட்டு அரசியலமைப்பின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்.' இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையைக் கண்டித்து எதிரணிக் கூட்டமைப்பால் நேற்று முன்தினம் களுத்துறையில் நடாத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், களுத்துறை மாவட்ட ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா, அசாத்சாலி, சரத் மனேந…
-
- 0 replies
- 463 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது, பதவி விலகாவிட்டால் நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகிறதென அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் தமது வழக்கை தம்மால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் தமக்கேற்ற தீர்ப்பை பெற்றுள்ளார். அவரது பதவியை பயன்படுத்தி பாராளுமன்றத்தின் செயற்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். பாராளுமன்ற நிலையியல் கட்டளை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டாலும் எவரும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் மோதலை ஏற்படுத்தி…
-
- 11 replies
- 760 views
-
-
பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவிலிருந்து 1500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதில் 7500 இலட்சம் ரூபாய் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. என்று தேசிய சங்க சபையின் நிதிச்செயலாளர் தின்னியாவல பாலித தேரர் தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் பால் கறக்காது. ஏனென்றால் அந்த மாடுகள் சினை மாடுகளாகவே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதிலும் பல மாடுகள் நோய்வாய்பட்டுள்ளன. நாட்டில் இருந்த மாடுகளை கொன்…
-
- 3 replies
- 715 views
-
-
By Kavinthan Shanmugarajah 2013-01-13 15:45:12 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான மேர்வின் சில்வாக்கு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவியொன்று வழங்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலையின் பின்னர் மேர்வின் சில்வாமீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில் தனக்கு வெளிநாடொன்றுக்கான உயர் ஸ்தானிகர் பதவியொன்றை வழங்குமாறு மேர்வின் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் மு…
-
- 4 replies
- 730 views
-
-
இலங்கை இளைஞருக்கு கட்டாரில் மரண தண்டனை தீர்ப்பு By General 2013-01-12 18:00:36 இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குறித்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது. கந்தானை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், 2010ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொழில்வாய்ப்புப் பெற்று கட்டார் சென்றுள்ளார். இனினும் இக் கொலை சம்பவம் தொடர்பில் 2011ஆம் ஆண்டின் ஜூன் மாதமளவில் அந்த இளைஞர் கட்ட…
-
- 3 replies
- 662 views
-
-
அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம் Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு , திருக்கோவில் பிரதேசசெயலர் பிரிவுகளில் டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ நேசக்கரம் நிதியுதவியிலும் வெள்ளத்தால் பாதிப்புற்ற 156 குடும்பங்களுக்கான நிவாரணம் 03.01.2013 அன்று வழங்கப்பட்டது. வாச்சிக்குடாவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 96குடும்பங்களில் 60விதவைப்பெண்களுக்கும்;. திருக்கோவில் கள்ளியந்தீவிலும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்குமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது. டென்மார்க் அன்னை அறக்கட்டளை நிதியுதவியில் குழந்தைகள் சிறுவர்களுக்கான பாலர் பொதியில் போர்வை , பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவ…
-
- 5 replies
- 635 views
-
-
அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் செயற்படக் கூடாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான நடவடிக்கைகள் மிக நிதானமாக எடுக்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகவும் பாரதூரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமேன கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். http://www.seithy.com/bre…
-
- 2 replies
- 550 views
-
-
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் வலுவிழந்து செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதன்படி இலங்கையின் சுயாதீனமான நீதித்துறைக்காக தொடர்ந்தும் தாம் போராடப் போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு மூன்று விதமான ஆயுதங்கள் உள்ளன. நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம் மற்றும் சிவில் அதிகாரம் என்பதாகும். அதில் நிறைவேற்று அதிகாரத்தையும் நீதித்துறை அதிகாரத்தை தீர்மானிப்பது சிவில் அதிகாரம் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விடயத்தில் அரசாங்கத்துக்கு துணைபோனதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் எரான…
-
- 0 replies
- 645 views
-
-
நாடு முழுவதிலுமுள்ள போலி வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரை வலியுறுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போலி வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன் பின்னதாக விசேட பொலிஸ் குழு ஒன்றை அமைத்து போலி வைத்தியர்கள் குறித்து கவனம் செலுத்த இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் நவீன் த சொய்சா தெரிவித்தார். நாடு முழுவதிலும் 40,000 போலி வைத்தியர்கள் உள்ளதாக தமது சங்கத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php…
-
- 0 replies
- 438 views
-
-
கோவை பல்கலைக்கழக மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சிறிலங்கா துணைவேந்தர் [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 09:56 GMT ] [ அ.எழிலரசன் ] தமிழ்நாட்டில், கோவையில் நடந்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட இரண்டு பேர், தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஊவாவெல்லச பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சித் பிறேமலால் டி சில்வா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையைச் சேர்ந்த சந்திரானி எதிரிசூரிய ஆகியோரே தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நாசாவின் துணையுடன் ஏற்பாடு செய்…
-
- 7 replies
- 1k views
-
-
மகிந்த திறந்த கிளிநொச்சி பொதுச்சந்தை மூடியே இருக்கிறது – 13 ஜனவரி 2013 கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவினால் பொதுச்சந்தை திறந்து வைக்கப்பட்டு மூன்று மாதங்களைக் கடக்கும் நிலையில் குறித்த சந்தை இன்னும் திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடந்த பொழுது பிரசாரத்திற்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சி சந்தைக்கான அடிக்கலை நாட்டினார். ஆமை வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட சந்தையை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் ஜனாதிபதி வருகை தந்து திறந்து வைத்தார். …
-
- 1 reply
- 259 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/56793-2013-01-12-12-29-36.html
-
- 23 replies
- 1.5k views
-
-
எமது அரசு பல்வேறுபட்ட சவால்களுக்கு தினம் தினம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சவாலில் நேற்று (நேற்று முன்தினம்) வெற்றியைப் பெற்று விட்டோம். ஏனைய சவாலிலும் வெற்றியைப் பெற்றுக் கொள்ளுவோம். இவ் வாறு பெருமிதத்துடன் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுதந்திர பட்டதாரிகள் மாநாடு, சுகதாஸ விளையாட்டரங்கில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு: பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் அரசியல் யாப்பிற்கு உட்பட்டே எமது அரசு செயற்பட்டது. நீதிமன்றத்தின், சுயாதீனத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க அனைவரும் கடமைப்…
-
- 1 reply
- 418 views
-
-
By Farhan 2013-01-13 13:19:57 சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார். காத்தான்குடிக்கு நேற்று விஜயம் செய்த அவர் சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2534
-
- 2 replies
- 536 views
-
-
By General 2013-01-13 16:01:44 சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசின் பலதரப்பட்ட வேண்டுகோள்களையும் மீறி சவூதி அரேபியாவில் பணிப்பெண் ரிசான நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டுக்கான தூதுவர் அஹமட் ஜவாத் உடனடியாக திருப்பியழைக்கப்பட்டிருந்தார். சவுதி அரேபியாவிற்கு தமது அதிருப்தியை தெரிவிக்கும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பித்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அஹமட் ஜவாதின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடனே நிறைவடைந்து விட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் திருப்பி அழைக்கப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இ…
-
- 0 replies
- 384 views
-
-
By General 2013-01-13 13:47:38 நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அறிக்கை தொடர்பாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்த நிலையிலேயே இவ்வறிவித்தல் வெளியிட்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இக் கடிதம் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை பிரதம நீதியரச…
-
- 0 replies
- 269 views
-
-
கழிப்பறை வசதிகளுடனான சொகுசு பஸ் சேவை அறிமுகம் By General 2013-01-13 10:19:48 இலங்கையில் முதல் தடவையாக கழிப்பறை வசதிகளுடனான அதி சொகுசு பஸ் சேவையினை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சகல சொகுசு பஸ்களின் தரம் பற்றிய சோதனையினை நடாத்தி ஒருவார காலத்திற்குள் அது பற்றிய அறிக்கைகளை பெற்றுத் தருமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.வி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2530
-
- 3 replies
- 521 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html
-
-
- 16 replies
- 1.5k views
-