Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள நாட்டில் சிங்கள நீதியரசரைப் பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார்? – விமல் வீரவன்ச கேள்வி [ திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிங்கள நாட்டில் சிங்கள நீதியரசரைப் பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச. கொழும்பில் நேற்று தேசிய சுதந்திரமுன்னணியின் பணியகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தமது வரையறைக்கு அப்பால் சென்று நாடாளுமன்றத்துக்கு சவால் விடுத்துள்ளன. விளக்கமளிப்பதற்காக அரசியலமைப்பில் தமக்குத் தேவையானதை மட்டுமே அவை எடுத்துக் கொண்டுள்ளன. இதுதா…

  2. நாட்டின் சில பகுதிகளில் நீல மழை! By General 2013-01-07 11:11:46 அனுராதபுரம் சாலிய புர உட்பட சில பிரதேசங்களில் நீல நிறத்தில் மழை பெய்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சிகப்பு, மஞ்சள், பச்சை, நிறங்களில் மழை பெய்த சம்பவங்கள் பதிவாகின. இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாத்தளை, அம்பாறை உட்பட சில பிரதேசங்களில் பச்சை நிறத்தில் மழை பெய்திருந்தது. இந்நிலையில் தற்போது நீல நிறத்தில் மழை பெய்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2419

  3. தமிழர்களை அவுஸ்திரேலிய சிறையிலாவது வாழ விடுங்கள் - MIA (மாதங்கி) ஜன 7, 2013 பிரபல றப்பர் (றப் பாடகி) மயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் தமிழ் ஏதிலிகளுக்காக குரல் கொடுத்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து, லண்டனில் சிறு அகவை முதல் வாழ்ந்துவரும் மயா, இள அகவையில் எதிர்நீச்சல்போடும் வல்லமை படைத்தவர் என பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகை வர்ணித்திருந்தது. தமிழ் மக்களிற்காகவும், தமிழ் மக்களின் போராட்டத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் மயா, தற்பொழுது அவுஸ்திரேலியா அரசாங்கம் தமிழ் மக்களை அந்த நாட்டில் வாழ ஏதிலித் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள மயா, உள்ளுர் பத…

  4. பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது - ஜனாதிபதி [Monday, 2013-01-07 09:51:12] பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையை எதிர்நோக்கியுள்ளதால், பதில் நீதியரசர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவுக்குமிடையில் தொலைபேசி ஊடாக குற்றப் பிரேரணை வ…

  5. 1998ஆம் ஆண்டு 2ஆம் மாதம் மட்டக்களப்பைச் சேர்ந்த முத்துச்சாமி காத்தாயி என்ற தாய் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு ஆதரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.இவர் வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.தனது முதுமைக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு உடலில் படுக்கைப் புண்களும் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வருடமும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். அண்மையில் வாந்தியெடுக்கத் தொடங்கியதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத்தாய்க்கு புற்றுநோயென அறியப்பட்டது. இன்று வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். http://nerudal.com/nerudal.54337.html

    • 8 replies
    • 879 views
  6. அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுவில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்பது எப்படி?; குற்றப் பிரேரணை விவகாரத்தை சுட்டிக்காட்டி ஜ.ம.மு. கேள்வி பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்து ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கியுள்ளது தெரிவுக்குழு. இந்த நிலையில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கட்சிகள் எப்படிப் பங்கேற்க முடியும்? அந்தத் தெரிவுக்குழுவும் கேலிக்கூத்தான குழுவாகவே அமையும் என்பதை இப்போதைய தெரிவுக்குழு நிரூபித்துள்ளது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாள…

  7. இந்திய மீனவரின் அத்துமீறலை நிறுத்துங்கள் இல்லையேல் பாரிய போராட்டம் வெடிக்கும்; யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை இந்திய மீனவர்களது அத்துமீறலினைக் கண்டித்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெறாத விடத்து இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்களது ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுவதனால் யாழ். மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் எமது கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு நாள் தோறும் எமது மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்ப…

  8. சிறிலங்காவின் 'கொலைக்களங்களில்' கட்டப்படும் 'மனதிற்கு மகிழ்வைத் தராத' சுற்றுலா விடுதி தொடர்பில் மனித உரிமைக் குழு ஒன்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. சிறிலங்காவின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் நீரேரியில் 2009ல் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படைகள் தமது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா கருதும் அதே இடத்தில் தற்போது சிறிலங்க இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் விடுமுறை விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு விடுதி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலராலும் திறந்து வைக்கப்பட்டது. "உங்களது விடுமுறையை மனதிற்கு இதமாக களியுங்கள். நந்திக்க…

    • 5 replies
    • 527 views
  9. பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம்! - கனடா எச்சரிக்கை!! http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=852626ab-1b6a-4738-af4a-0c8a6d9c21a6

  10. சிங்களம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தம்! [sunday, 2013-01-06 18:59:11] வன்னிப் பிரதேச தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆளுநரிடமும் வடமாகாண கல்வி அமைச்சுச் செயலாளரிடமும் தொடர்புகொண்டு நிலைமைகளை விளக்கியிருந்தது. வடமாகாணத்தில் தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்க இராணுவத்தினரை நியமித்தது வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை மூடிமறைக்கும் செயலெனவும், பாடசாலைகளை இராணுவமயப்படுத்தும் செயலெனவும், தமிழ்பேசும் கல்வித்துறை அதிகாரிகளை சமூகம் தூற்றவைக்கும் செய…

  11. யாழ் மாணவர்கள் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுதலை? இலங்கை உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை(7.1.13) முதல் முழுமையாக செயற்படத் தொடங்கும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் உயர்கல்வி அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் திங்கட்கிழமை அப்பல்கலைக்கழகம் முழுமையாக செயற்பட ஆரம்பிக்காவிட்டால், அதை மூடுவது என்றும் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் எஸ் பி திஸாநயக்கா கூறினார். அங்கு எவ்விதத் தடங்கலுமின்றி சித்தமருத்துவத்துறை, நுண்கலைத்துறை போன்ற துறைகள் கல்விப் பணிகளை முன்னெடுத்து வந்தன என்றும், கலைத…

  12. http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/01/06/n-5.jpg இராணுவத்திற்கு தமிழ் யுவதிகளை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை : ந.கீதாஞ்சலி Published by News on January 5, 2013 | Comments Off இராணுவத்திற்கு தமிழ் யுவதிகளை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை : ந.கீதாஞ்சலி பெண்களின் சுய மரியாதையை களங்கப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொய்ப் பரப்புரை செய்வதை உடனடி யாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ந.கீதாஞ்சலி இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். பிறரின் அரசியல் தேவைகளுக்காகப் பெண்களின் கெளரவத்தை மலிவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய கீதாஞ்சலி, பெண்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்த வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.…

    • 18 replies
    • 1.5k views
  13. கனடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனை கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர கொட்டேலில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இதன் போது இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக நடைபெறும் பேச்சுக்கள் குறித்து திரு. சுமந்திரனிடம் கனடிய குடிவரவு அமைச்சர் விரிவாகவும் விளக்கமாகவும் விபரங்களைக் கேட்டறிந்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இனங்கள் மீள ஒண்றினைதல், தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வகுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசு இழுத்தடிப்பை மேற்கொள்வதாக சந்திப்பின் போது அமைச்சரிடம் திரு. எம். ஏ. சுமந்திரன் தெரிவித்ததோடு, பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சரிடம் பிரஸ்தாபித்த பாராளுமன்…

    • 0 replies
    • 560 views
  14. வடக்கின் நிலைமைகள் மோசமடைந்து செல்கிறது - குமரகுருபரன் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வடக்கின் நிலைமைகள் மோசமடைந்து செல்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டவர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வெள்ளை வான்களின் மூலம் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளி…

    • 0 replies
    • 542 views
  15. ஈழத்தமிழர்கள் 11 பேரின் உண்ணாவிரதம் வாபஸ்: ஏனைய 12 பேர் தொடர்கின்றனர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில், உண்ணாவிரதம் இருந்தவர்களில், 11 பேர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஒன்பது பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் .செங்கல்பட்டு சிறப்பு முகாமில், தற்போது, 36 பேர் உள்ளனர். இதில், 23 பேர் தங்களை, திறந்தவெளி முகாமிற்கு அனுப்பக்கோரி, உண்ணாவிரதம் இருந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட 20 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முகாமில், மூன்று பேர் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று முன்தினம் அவர்களிடம், ஆட்சியர் சித்ரசேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று, காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மர…

    • 0 replies
    • 334 views
  16. பாரிய மக்கள் போராட்டமொன்று நடாத்தப்படும் - ஜே.வி.பி. பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.அரசியல் சாசனத்திற்கு எதிராக செயற்பட்டால் சபாநாயகர், அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமை நாட்டின் பொது மக்களுக்கு காணப்படுவதாகக் ஜே.வி.வி. சுட்டிக் காட்டியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சட்ட விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றிற்கு காணப்படுவதாக அரசியல் சாசனத்தின் 125ம் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப…

    • 0 replies
    • 431 views
  17. மீதமுள்ள கண்ணிவெடிகளை அகற்ற குறைந்தது 5 வருடங்கள் தேவை யாழ் மாவட்டத்தில் மீதமுள்ள கண்ணிவெடிகளை அகற்ற ஆகக் குறைந்தது 5 வருடங்களாவது வேண்டும் என வடக்கு, கிழக்கு மிதிவெடி செயற்பாட்டலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்துள்ளார். எனினும் இறுதிவரையில் இனங்காணப்பட்ட பகுதிகளில் 90.54 சதவீதம் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் பல்வேறு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் யாழ். மாவட்டத்தில் பணியாற்றிய போதும், நிதிப்பற்றாக்குறை காரணமாக அவை வெளியேறி விட்டன. இந்நிலையில் 4 லட்சத்து 149 ஆயிரத்து 740 சதுர மீற்றர் பரப்பில் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டி உள்ளது…

  18. பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கு முத்துக்குமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்ந்தும் இழுபட்டுக் கொண்டே செல்கின்றது. உலகளாவிய வகையில் பல்வேறு தரப்புகள் கண்டனங்களைத் தெரிவித்தபோதும் அரசு அசைவதாகத் தெரியவில்லை. அது புனர்வாழ்வு முடிந்த பின்னரே மாணவர்களை விடுதலை செய்வதாகக் கூறுகின்றது. அதேவேளை விரிவுரைகளை ஆரம்பிக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பீடமாக தனித்தனியாக இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கலைப்பீடம் ஜனவரி 14ம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கலைப்பீட மாணவர்கள் கைது செய்யப்பட்ட சக மாணவர்கள் விட…

  19. கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது 5 வயதுடைய ஆண் பிள்ளையுடன் குளத்தில் குதித்து மரணமடைந்துள்ளார்.குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி என்ற பெண்ணே தனது பிள்ளையை அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.குறித்த இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://kalaiyadi.org/?p=24967

  20. ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி புதிய கட்டடத்தை திறப்பு விழாவிற்கான அதிதியாக கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த புதிய கட்டம் ஆனது ஜப்பான் அரசாங்கத்தின் 2.9 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது. அத்துடன் இந்த புதிய கட்டடத் தொகுதியில் கதிர் இயக்கப் பிரிவு, ஈ.சி.ஜி, சத்திரசிகிச்சைக்கூடம் என்பன இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.…

  21. கிளிநொச்சி, முல்லை தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சக்கட்டம். இந்த நடவடிக்கை இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற சிபார்சையே அப்பட்டமாக மீறுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக சர்வதேச சமுகத்தின் கவனத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐ.நா. அமைப்பின் கீழ் வரும் யுனெஸ்கோ என்ற ஐ.நா. கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும…

  22. ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கோரிப் போராடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் [மதிமுக] தலைவர் வைகோவின் போராட்டத்திற்கு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் மேல் சபை உறுப்பினருமான றாம் ஜெத்மலானி கடந்த சனிக்கிழமை அன்று தனது ஆதரவை வழங்கியுள்ளார். "கடந்த பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் இனப்படுகொலைகள் என்பனவற்றை கானொலிகளிலும் ஒளிப்படங்களிலும் பார்க்கும் போது மனதை உருகவைக்கின்றன. இவ்வாறான சித்திரவதைகள் மற்றும் இனப்படுகொலைகள் என்பன மனிதாபிமானத்திற்கு எதிரானவையாகும்" எனவும் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். மும்பாய் தமிழர் பாதுகாப்பு அமைப்பால் ஒழுங்குபடுத்…

  23. அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பள்ளிவாயலை அங்கிருந்து அகற்றுமாறும் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோரி இன்று சனிக்கிழமை பௌத்த பிக்குமார்களினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பகுதியில் தக்கியாப் பள்ளிவாயலொன்று அமைந்துள்ளதோடு இப்பள்ளிவாசல் கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது. அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இப்பள்ளிவாசலுக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/56255…

  24. By General 2013-01-06 16:26:17 கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது 5 வயதுடைய ஆண் பிள்ளையுடன் குளத்தில் குதித்து மரணமடைந்துள்ளார். குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி என்ற பெண்ணே தனது பிள்ளையை அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார். குறித்த இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=2412

  25. யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எப்போது ஆரம்பாகும் என்பதை இப்போதைக்கு என்னால் கூற முடியாது. பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் மீண்டும் ஒரு தடவை கலந்துரையாடிய பின்னர்தான் இது குறித்துக் கூறமுடியும். இவ்வாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். அத்துடன் தடுப்பில் உள்ள மாணவர்களின் விடுதலை குறித்து கருத்து எதனையும் கூறமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ். சொலமன் ஆகிய நான்கு மாணவர்களும் வெலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.