ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143433 topics in this forum
-
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமல்ல என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. நிலையியற் கட்டளை 78(ஏ) ஒரு சட்டமல்ல ஆதலால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரமோ அல்லது வலுவோ இல்லை என்ற உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பு தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனுவை ஜனவரி 15ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த ரீட் மனு இன்று வியாழக்கிழமை பர…
-
- 1 reply
- 491 views
-
-
பொதுநலவாய மாநாட்டை வைத்து எம்மை எவரும் அச்சுறுத்த முடியாது உள்நாட்டு பிரச்சினையில் எந்தவொரு நாடும் தலையிட இயலாது எம்.எஸ். பாஹிம் இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டை பணயக் கைதி போல வைத்து எமது நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிட எந்த நாட்டிற்கும் இடமளிக்க முடியாது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநல வாய மாநாடு பெரும் பாலான நாட் டுத் தலைவர்களின் பங்களிப் புடன் சிறப்பாக நடைபெறும் எனவும் ஓரிரு நாடுகள் பங்கேற்காமல் இருப் பதால் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். சு.க. ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாட்டில் உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார…
-
- 0 replies
- 490 views
-
-
நிறைவேற்று,நீதி,சட்டவாக்க துறைகளுக்கிடையே முரண்பாடுகள் இருந்தன: அரசாங்கம் (அழகன் கனகராஜ்) நிறைவேற்று, நீதி, சட்டவாக்கம் ஆகிய துறைகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்பாடுகள் தற்போது நிறைவடைந்துவிட்டன. என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. நீதிமன்றத்தை நாம் மதிக்கின்றோம். நீதித்துறையில் இருக்கின்ற சிலரே அதன்மீது நம்பிக்கையிழக்க செய்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், நாடாளுமன்ற…
-
- 0 replies
- 387 views
-
-
2013-01-03 உறவினரான இளம் பெண் ஒருவரை இரகசியமான முறையில் வீடியோ படமெடுத்துவிட்டு அதனை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக கோரிய குடும்ஸ்தரொருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கணினி பயிற்சி நிலையமொன்றினை நடத்தி வரும் குடும்பஸ்தரொருவர் புத்தளத்திலுள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு அண்மையில் சென்றுள்ளார். அங்கு அந்த வீட்டு உரிமையாளரின் மகளது அறைக்குள் வீடியோ கமராவினை வைத்து இவர் படம் பிடித்துள்ளார். இதனை வெளியே காண்பிக்கப்போவதாக மிரட்டி குறித்த நபர் 10 இலட்சம் ரூபா கப்பத்தினை குறித்த யுவதியி…
-
- 0 replies
- 540 views
-
-
நேபாளத்தில் 2005ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரின்போது சித்ரவதைகளைச் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிழக்கு சஸ்ஸெக்ஸ் கவுண்டியில் செயிண்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ என்ற கடலோரத்து ஊரில் 46 வயதான இந்த நேபாளி வியாயழனன்று மெட்ரொபாலிடன் பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் முன்னாள் அரசாங்கத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர் இவர் என்றும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இவருக்கெதிராக கொடுக்கப்பட்டிருந்த ஒரு புகாரின் பேரில் பொலிசார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனின் கிரிமினல் ஜஸ்டிஸ் சட்டம் 1988ல் பிரிவு 134ஐ மீறும் வகையில் சித்ரவதைகளை செய்தார் என்ற சந்தேகம் …
-
- 1 reply
- 637 views
-
-
நேற்று ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட சிரிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 60,000 எனும் தொகையை இன்னெர் சிட்டி பிரெஸ் கேள்வி கேட்டிருக்கிறது. ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலினால் பணத்திற்கு அமர்த்தப்பட்ட பெனிடெக் எனும் தனியார் நிறுவனமே இந்தக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது தெரியவந்திருக்கிறது. இந்த தனியார் நிறுவனத்தின் நிதி உதவியாளர்களாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், அமெரிக்கா எயிட் எனும் அமைப்பும் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவ்வாறு அமெரிக்க நிதி உதவியுடன் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் இழப்புக் கணக்கெடுப்பைப் போல சிறிலங்கா உள்நாட்டு யுத்தத்திலும் ஒரு கணக்கெடுப்பை ஏன் பெனிடெக் நடத்தவில்லை என்றும் இன்னெர் சிட்டி…
-
- 1 reply
- 914 views
-
-
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 9 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களில் 9 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கியூப்பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீனியர்கள் உட்பட 41 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தங்களை திறந்தவெளி முகாமிற்கு விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் 45 நாட்களுள் தங்களை விடுதலை செய்வதாக கூறிச்சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள…
-
- 2 replies
- 603 views
-
-
புலிக் கொடி ஏற்றியவர்களை துரத்திப் பிடித்தவர்களுக்கு பாலியல் வன் கொடுமையாளர்களை தெரிவதில்லையா? தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கோரி ஈபிடிபியின் அனுசரணையுடன் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை மண்டைதீவில் நடத்தப்பட்டுள்ளது. ரோஜா சிறுவர் அமைப்பு எனும் பேரில் நடத்தப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டம் அண்மையில் நான்கு வயதேயான சிறுமி மீதான பாலியல் வன்முறை மற்றும் படுகொலையை கண்டித்து நடத்தப்பட்டிருந்தது. சுமார் முந்நூறிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் கூடிய அளவில் அரச பணியாளர்களும் கலந்து கொண்டனர். வேலணையிலுள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை கூட்டுறவு அமைப்புக்களது அங்கத்தவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர…
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பு நகரில் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதென்ற செய்தி தவறானது - 03 ஜனவரி 2013 புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நகரில் வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள், சிங்களவர்கள் என்ற போதிலும் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம், 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய கொழும்பில் 36. 8 வீதமான சிங்களவர்களும், 31.8 வீதமான தமிழர்களும் (இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள்), 29 வீதமான இலங்கை சோனகர்களும் வசித்து வருகின்றனர் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம், கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்டதாகவும் இந்த நகரில் 24 வீதமான சிங்களவர…
-
- 5 replies
- 1.3k views
-
-
(எஸ்.கே.பிரசாத்) யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருத்து தெரிவிக்கையில், 'யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கிய நிலையில் உள்ளது. ஏனைய மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட…
-
- 1 reply
- 513 views
-
-
வியாழக்கிழமை, 03 ஜனவரி 2013 12:22 -கே.சஞ்சயன் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய இராணுவத் தளபதியாக ஜெனரல் பிக்ரம் சிங் பதவியேற்ற பின்னர், சுமார் ஆறு மாதங்கள் கழித்து, அண்மையில் அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த டிசெம்பர் மூன்றாவது வாரத்தில் கொழும்பு வந்திருந்த அவரது பயணத்தின் நோக்கம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதேயாகும். பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளது போன்று, இந்தியாவுடனான உறவுகளில் அரசியல் ரீதியான குழப்பநிலை இருந்தாலும், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளில் அது பெரிதாக எதிரொலித்ததில்லை. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள் இருந்தாலும் சரி, அல்லது விடுதலைப் புலிகளை பழிதீர்க்க வேண்டிய எதிர…
-
- 1 reply
- 1k views
-
-
வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று அவசரமாக அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவக் காவலரண் நேற்று அவசரமாக அமைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்துக்குச் சென்ற மக்கள் அவசரமாக இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவத்தினர் பெருமளவுக்கு அங்கு காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆலய முன்றலில் இவ்வாறு திடீரென இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் நல்லூர் பகுதியில் பொலிஸாரே பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்…
-
- 4 replies
- 816 views
-
-
வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக இந்த ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். இரட்டைக் குடியுரிமையைப் பெறவிரும்புவோர் இது தொடர்பில் விசாரணை செய்யும் இடத்திற்கு நேரில் வருகை தருவதுடன், விசாரணையின் போது இரட்டைக் குடியுரிமையைப் பெறவிரும்புவோரின் தனிப்பட்ட விபரங்கள் அவர்களது பின்னணி போன்றன முற்றுமுழுதாக ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இரட்டைக் குடியுரிமை பெறும் போது இவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 'பெருமளவான சிறிலங்கர்கள் 1980களில் கனடா, பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இவர்கள் தம…
-
- 5 replies
- 745 views
-
-
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கடந்த டிசம்பர் 30, 2012 அன்று நடைபெற்ற தனது Top Talents விருது விழாவில் 'இளவாகை' என்னும் விருதினை அறிவித்திருந்தது. இவ்விருது இளையோர் மத்தியில் அதியுயர் விருதாக கருதப்படும் என்றும், இளையவர் ஒருவரால் மிகவும் முக்கியமான சாதனையோ அல்லது செயலோ தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழர் தேசத்திற்கும் நிகழ்த்தப்படும் வகையில் மட்டுமே இவ்விருது வழங்கப்படும் என்றும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. "வாகை" என்னும் சொல் தமிழர் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் மிகவும் ஒன்றிப் பிணைந்த சொல்லாகவே காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு வெற்றி என்றும் ஒரு பொருள் உள்ளது. சங்ககால இலக்கிய நூல்கள் பல, பாலை நில மக்கள் தமது வெற்றியை …
-
- 0 replies
- 809 views
-
-
By General 2013-01-03 16:48:10 எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அரசாங்கத்தை கலக்கமடையச் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 117 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதேவேளை பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் திட்டமில்லை எனவும் தெரிவித்தார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலா…
-
- 0 replies
- 440 views
-
-
By Robert Antony 2013-01-03 17:52:20 பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றம் கூடும் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரை நாங்கள் எதுவும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதுவரை காலமும் பதவி விலக்குவது தொடர்பில் ஒரு முறைமை பின்பற்றப்பட்டு வந்தது. அந்த முறைமை குறித்து தற்போது புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஆராயவேண்டியுள்ளது. சிலவேளை எட்டாம் திகதிக்கு முன்னரே பாராளுமன்றம் அவசரமாக கூடக்கூடிய சாத்தியம் உள்ளது…
-
- 0 replies
- 380 views
-
-
பயங்கரவாதிகள் பட்டியலில் மருத்துவர் சிவசங்கர்!? மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் கொழும்புத் தாய்ச் சங்கம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக் கோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ். கிளைத் தலைவர் மருத்துவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். அநுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மர…
-
- 21 replies
- 1.7k views
-
-
திருக்கோவில் வட்டமடுவில் தமிழ் பெண்கள் மீது சிங்களவர்கள் பாலியல் பலாத்காரம் Published on January 2, 2013-4:29 pm · திருக்கோவில் வட்டமடு பகுதி வயலில் களை பிடுங்கிகொண்டிருந்த மூன்று தமிழ் பெண்கள் மீது சிங்களவர் குழு ஒன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இந்த மூன்று பெண்களும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அந்த பெண்கள் மூவரும் அபாய குரல் எழுப்பியதை கேட்ட அப்பகுதி பிரதேச மக்கள் அங்கு வந்த போது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் குழு தப்பி சென்றுள்ளது ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான இந்த மூன்று பெண்களும் வயலில் களை பிடுங்கி கொண்…
-
- 2 replies
- 1k views
-
-
2ஆம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளது வியாழக்கிழமை, 03 ஜனவரி 2013 18:10 கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள இரண்டாம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளமையினால் கோட்டை பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/56120-2-.html
-
- 1 reply
- 606 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்குமா இல்லையா என்பதனை இப்போதே தெரிவிக்க முடியாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய பண்புகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்ற…
-
- 1 reply
- 528 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி கொழும்பில் துண்டுப்பிரசுர விநியோகம்! குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புன்ரவாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கை தேசிய மாணவர் சங்கம் இந்த துண்டுப்பிரசுர பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது. இன்று (02) காலை கொழும்பு, பறக்கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்னால் இத்துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது. கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சித்ததாக எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து இம்மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்குள் …
-
- 2 replies
- 810 views
-
-
THURSDAY, 03 JANUARY 2013 04:11 SYDNEY எந்தவொரு வெள்ளைக்காரனுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடிபணியத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை பணயம் வைத்து எமது நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிடுவதற்கு எந்த நாட்டுக்கும் இடமளிக்க முடியாது. கொமன்வெல்த் மாநாடு பெரும்பாலான நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெறும். ஓரிரு நாடுகள் பங்கேற்காமல் இருப்பதால் எமக்குப் பாதிப்பு ஏற்படாது. எமது நாட்டின் சட்டங்களுக்கு அமையவே தலைமை நீதியரசருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின்…
-
- 4 replies
- 512 views
-
-
2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலி By M.D.Lucias 2013-01-03 14:37:41 2012 ஆம் ஆண்டில் 40 ஆயிரத்து 460 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 160 விபத்துக்களில் 2 ஆயிரத்து 263 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துக்கள் மூலம் 6 ஆயிரத்து 635 பேர் படுகாயமடைந்ததுடன் 14 ஆயிரத்து 66 பேர் சாதாரன காயமடைந்துள்ளனர். இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 450 விபத்துக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2372
-
- 0 replies
- 299 views
-
-
சிறுவர் போராளிகள் குறித்து ஐ.நாவின் தீர்மானம வரவேற்கப்பட வேண்டியது – கோதபாய ராஜபக்ஷ 03 ஜனவரி 2013 சிறுவர் போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தால் சிறுவர் போராளிகளை இல்லாதொழித்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர் போராளிகள் உள்ள நாடுகளின் வரிசையிலிருந்து இலங்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட போதிலும், இறுதிக் கட்ட யுத்தம் வரையிலும் புல…
-
- 0 replies
- 409 views
-
-
இன்றில் இருந்து கோதபாய சரத்பொன்சேகா உட்பட அனைவரையும் உளவு பார்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை TUESDAY, 01 JANUARY 2013 11:38 SYDNEY அமெரிக்காவில் புதிய சட்டம் ஒன்றை அன்நாட்டு அரசு அமுல்படுத்தி உள்ளது. அமெரிக்க பிரிஜையாக அல்லது அமெரிக்க வதிவிட உரிமை அல்லது கிறீன்காட் உள்ளவர்கள் வெளிநாடுகளில் அல்லது வெளிநாட்டு உளவுத்துறையுடன் தொடர்பு வைத்திருத்தல் ( கோதபாய பொன்சேகா போன்ற அமெரிக்க பிரஜா உரிமை உடையவர்களின்) தொலைபேசி உரையாடல் மின்அஞ்சல்கள் நடமாட்டங்கள் போக்குவரத்துகளை அமெரிக்க உளவுத்துறையோ அல்லது அமெரிக்க உளவுத்துறையின் முகவர்களோ எந்தவிட சட்ட முன் அனுமதியும் இல்லாமல் கவனிக்கவும் கண்காணிக்கவும் பின்தொடருவும் உளவுபாக்கவம் முடியும். இது தண்டனைக்குரிய குற்றமாகாது , இதனூ…
-
- 0 replies
- 567 views
-