Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம். [Tuesday, 2012-12-18 17:12:29] கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார். 2011ம் …

    • 4 replies
    • 2.7k views
  2. அதனால் அரசாங்கத்தின் தவறான உத்தரவுகளை படையினர் பின்பற்றக் கூடாது எனக் கோருகிறது UNP அரசாங்கத்தின் தவறான உத்தரவுளை படையினர் பின்பற்றக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் தவறான உத்தரவுகளை பின்பற்றுவதனால் படைவீரர்கள் என்ற ரீதியில் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் நன்மதிப்பு வீழ்;ச்சியடைக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணி குணரட்ன வன்னிநாயக்க மீதான தாக்குதல்களை ஒர் வழமையாக சம்பவமாக அரசாங்கம் கருதக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிரமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புப் படையினரே இந்தத் தாக்குதலை மேற…

  3. இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிழந்துள்ளார்கள். சுமார் 12 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிற அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமையுமும் இன்று செவ்வாய்க்கிழமையுமாக கிழக்கு, மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆட்கள் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சம்பவ ங்களைப் பொறுத்தவரை அநேகமானவை மண் சரிவினாலேயே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி வழிவதால் குளங்க…

  4. வரலாற்று சின்னங்களை அழித்து பணத் தாள்களுக்கு சுருளும் காலம் தற்போது உருப்பெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இன்று புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பணத்திற்காக சுருளுபவர்கள் எமது நாட்டின் வரலாற்றை விடுத்து டொலர் தாள்களைக் கொண்டு நாட்டின் வரலாற்றை மீண்டும் புதிதாக எழுதி வருகின்றனர். எனவே இவர்களது திரிவுபடுத்தப்பட்ட செயற்பாட்டிறங்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. சில பிரதேசங்களில் உள்ள வரலாற்றுச் சான்றுகளை புள்டோசர் கொண்டு அழித்து நாட்டின் வரலாற்றை அழிப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். எனினும் இத்தகைய செயற்பாடுகளை அனுமதிக்…

  5. பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கபே 18 டிசம்பர் 2012 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86680/lang…

  6. தமிழ்த் தாயகத்தில் இலங்கை இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம் பெற்ற வருகின்றது. இது குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறது. இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது. எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பமாகும். இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர் தமிழ் மக்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம் தமிழ்த் தாயகத்தில் நிலை கொ…

  7. By Hafeez 2012-12-18 19:15:38 முன்னாள் இரானுவ தளபதி சரத் பொன்சேகா தனது 62ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அவரது மனைவி அனோமா பொன்சேகா உட்பட இன்னும் பலர் இதில் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/local.php?vid=2149

  8. முல்லை, கிளி மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை கட்டாய திருமணம் சிறீலங்கா | ADMIN | DECEMBER 15, 2012 AT 22:38 முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்பகுதியிலுள்ள சில கிராமங்களில் கட்டாயப்படுத்தி இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை திருமணம் செய்து கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரியவருகின்றது. மிகவும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் அறிந்திருக்காமை மிகவும் ஆபத்தானது என சமுக ஆர் வலர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். குறிப்பாக இவ்விரு மாவட்டங்களினதும் எல்லைப்பகுதியிலுள்ள விசுவமடு, பிரமந்தனாறு, குமாரசாமிபுரம், போன்ற கிராமங்களில் சுமார் 100பேருக்கு ஒரு பெண் இராணுவச் சிப்பாயை திருமணம் …

  9. பல்கலையில் இடம்பெற்ற சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் நேரடியாக எமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். வடக்குக்கான பயணத்தை கடந்த 12 ஆம் திகதி மேற் கொண்ட, இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரீட் லொட்சன் யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். இதன்போது யாழ்ப் பாணத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், யாழ். ஆயர் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தார். பின்னர் கொழும்பு திரும…

    • 10 replies
    • 928 views
  10. பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பான வாக்கெடுப்பு: 10,610 இணைய முகவரிகளிலிருந்து 12,753 வாக்குகள் பதிவாகின! கனடாவின் தற்போதைய அரசு இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பான கருத்தாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்றும் தங்களையும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இதே விடயத்தில் அணுகியுள்ளதாகவும் தெரிவித்த கனடிய மனிதவுரிமை மையத்தினர் எனவே இருவரும் இணைந்து செய்தால் என்ன என்ற விணாவை எம்மிடம் தொடுத்தனர்.ஆமோதித்தோம். அடுத்தநாளே வாக்கெடுப்பை அறிவித்தோம் அதற்கான விடைதான் இவ்வளவு பெரியதொரு வாக்கெடுப்பு. நாங்கள் எதிர்பாராத அளவிற்கு மக்களின் ஆதரவு குவிந்தது. தமிழ்வின், லங்காசிறி உள்ளிட்ட சகோதர ஊடகங்கள் மக்களிடம் இந்த விடயத்தை எடுத்துச் சென்றன. கனடியப் பிரதமர் சிறீல…

  11. சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012 18:53 கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய நீதியரசருக்கு வரவேற்பு அளிப்பதில்லை என்ற தீர்மானமும் அதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார். குற்றப்பிரேரணையின் மூலமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு அவர் பதவிவிலக்கப்பட்டு புதிய ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் அவருக்கு உத்தியோகபூர்வமான வரவேற்பு அளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன்,பிரதம நீதியரசர் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்…

  12. தெற்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி. பிரிக்க போராட்டம் நடத்தினார்கள் அத்துடன் ஜே.வி.பி. இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. யுத்தம் முடிந்து சில ஆண்டுகளேயான நிலையில் புலிகள் இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். http…

  13. கொடூரமான இரசாயன ஆயுதங்கள் வன்னியில் பயன்படுத்தப்பட்டுள்ளன: பிரான்சிஸ் ஹரிசன் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில், இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத கொடூரமான இரசாயன ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தி யுள்ளது. ஆனால், இலங்கை அரசு இறுதிப்போர் குறித்த எந்தப் புள்ளிவிவரங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. . இதனால், குறைந்த பட்ச உண்மைகளைக்கூட ஏற்க மறுப்பதால் இலங்கையின் வாக்குறுதியை சர்வதேச சமூகம் நம்பமறுக்கிறது. . என்று பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹாரிசன் தெரிவித்துள்ளார். . இலங்கையில் நடந்த நான்காம் கட்டபோர் குறித்து "Still Counting the Dead என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கம், "ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்' என்ற தல…

  14. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி, இது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் என்பதன் சுருக்கமான 'யாழ்' என்று கூறினாலே சிங்களவர்கள் கோபப்படுகின்றனர். யாழ்ப்பாணம் உலக தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் தாக்கப்பட்டனர். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது …

  15. வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: கோத்தபாய [Tuesday, 2012-12-18 08:39:36] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராணுவத்தை குறைக்கவோ அல்லது கலைக்கவோ மாட்டார் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிநாடொன்று இராணுவத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதன் போது இராணுவத்தை குறைக்கவோ அல்லது கலைக்கோ தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரை ஆக்கப்பூர்மான முறையில் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியம் என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வது முப்படையினரின் பிரதான கடமை என்ற போதிலும், முடிந்தளவு நாட்டின் அபிவிருத்திக்காக உதவி…

  16. மட்டக்களப்பு கல்லடி வாவியில் படை எடுத்து வந்திருக்கும் பாம்புக்கள்- சுனாமி வருமா? Published on December 18, 2012-7:05 am · No Comments மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருந்தொகையான பாம்புகள் குவிந்துள்ளன. கல்லடிப்பாலத்தின் கீழ் பெருமளவிளான பாம்புகள் நேற்று திங்கட்கிழமை மாலை முதல் காணப்படுகின்றன. இந்த பாம்புகள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று அல்லது நான்கு அடி நீளமானவைகளாக காணப்பட்டன. 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு கல்லடிப்பாலத்தில் பெருந்தொகையான பாம்புகள் காணப்பட்டன. இந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரும் கல்லடிப்பாலம் இருக்கும் வாவியில் பெருந்தொகையான பாம்புகள் காணப்பட்டன. http://www.thina…

  17. இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வரை படங்கள் முருகனிடம் இருந்ததாம்.. :சிங்கள ஊடகம் [Tuesday, 2012-12-18 09:35:21] இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான முருகனிடம் இலங்கை வரைபடங்கள் காணப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்தில் நடத்திய சோதனையின் போது இந்த வரைபடங்கள் மீட்கப்பட்டுள்ளனவாம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய சில வரைபடங்கள் முருகனிடம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு முருகன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாற்றி வருவதாகவும் அது குறழப்பிட்டுள்ளத…

  18. தமிழீழம் மற்றும் சிறிலங்காவை அச்சுறுத்தும் இயற்கைக்கு முரணான நடவடிக்கைகள்! - அழிவுக்கான அறிகுறியா? December 18, 2012, 6:13 am|views: 244 தமிழீழம் மற்றும் சிறிலங்காவின் பல பகுதிகளில் மனித வாழ்வுக்கு எச்சரிக்கை விடும் வகையில், இயற்கையை மீறிய செயற்பாடுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படும் மர்மபொருள், சிவப்பு மழை என்பது முக்கியமானதாகும். அத்துடன் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பல நில அதிர்வுகளும் உள்ளடங்கும். உலக அழியப் போவதாக பரவலாக செய்திகள் பரவி வரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் இதற்கான அறிகுறிகளாக இருக்குமா என மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை காணப்பட்டு வருவதாக பாரிஸ்தமிழ் கொழும்பு நிருபர் தெரிவிக்கிறார். குறிப்…

  19. பல்கலைக்கழக செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முயற்சி; படைத் தளபதியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு; எதிர்ப்பும் கிளம்பியது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இது தொடர்பான முயற்சிகள் குறித்து விசனங்களும் எழுப்பப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பில் இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியுடன் பேச்சு நடத்த பலாலிக்கு வருமாறு துறைத் தலைவர்களுக்குப் பதிவாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் இது தொடர்பிலான அறிவி…

  20. இலங்கைக்கு 950,000 சுற்றுலாப் பயணிகள் வருகை By Kapila 2012-12-18 11:44:32 இவ் வாண்டில் இது வரை 9 இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இது வரை 949,998 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த போதிலும் இறுதியாக போலந்து நாட்டிலிருந்து இன்று வருகைதந்த ரஷ்ய ஜோடியுடன் இது 950,000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2142

  21. கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் இராணுவத்துக்கும், நிரந்தர முகாம் அமைக்க காணி வழங்க அனுமதி 18 டிசம்பர் 2012 கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் இராணுவத்துக்கும், காவற்துறையினருக்கும் நிரந்தர முகாம் அமைக்க வவுனியா மாவட்ட காணி வழங்கல் அபிவிருத்திக் குழு காணி வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. புளியங்குளத்தில் பொலிஸாருக்கு 5 ஏக்கர் காணியும்27ஆவது படைப் பிரிவுக்கு 5 ஏக்கர் காணியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன் குளத்தில் பொலிஸ் நிலையத்துக்கு 2 ஏக்கர் காணியும் 56 ஆவது படைப்பிரிவு…

  22. பிறையன் செனவிரட்ன சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். “An 81-year-old Brisbane doctor was locked in a small cell without food, water or toilet access for more than five hours yesterday before being deported back to Australia from Singapore. Dr Brian Senewiratne, a Sri Lankan-born Australian who has been a long-time critic of the Sri Lankan Government over its treatment of Tamils, was on his way to Malaysia and Indonesia to speak at forums on the Tamil refugee issue.” says Tamil Refugee Council. Brian_Senewiratne_ colombotelegraph Dr. Brian Senewiratne He said yesterday he was locked up during his Singapore airport stop-over after being told he was not…

  23. மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனிடம் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத…

  24. அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நான்கு அம்சத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் கடற்படை அதிகாரிகளும் ஆராயவிருக்கின்றனர் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேல…

    • 3 replies
    • 763 views
  25. ராஜபக்ஷ புதல்வர்கள் பந்தய கார்கள் வாங்குவதற்கு 993 லட்சம் ரூபா எவ்வாறு கிடைத்தது? :ஜே.வி.பி கேள்வி [Monday, 2012-12-17 18:13:10] ராஜபக்ஷ புதல்வர்களுக்கு றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் ரூபா கிடைத்தது எவ்வாறு என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, றேசிங் கார்களை வரி இன்றி இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டிற்கு 2000 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள விடயங்கள் ஏற்கனவே ராஜபக்ஷ புதல்வர்களுக்கு தெரிவிக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.