ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143426 topics in this forum
-
[size=2][size=4]யாழில் 'கட்டின பிங்கும' பெரஹரா இன்று ஞாயிறுக்கிழமை ஆரம்பமானது. யாழ். நாக விகாரை நாயக்க தேரர் தலைமையில் நடைபெறும் இந்த பெரஹராவை தமிழ், பௌத்த சங்கம் மற்றும் நந்தாராம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் யாழ். மாவட்ட பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். பெரஹராவில் பிள்ளையார், சிவன், முருகன், விஷ்ணு மற்றும் முத்தேவியர்கள் ஒன்றிணைந்த ஒரு சொரூபம் ஆகியன ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வு, தெடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று, செவ்வாய்கிழமை மதிய போசனத்துடன் முடிவடையவுள்ளது. 'கட்டின பிங்கும' என்பது யாழ். நாக விகாரை கட்டப்பட்ட தினத்தின் நினைவாக நடைபெறும் நிகழ்வாகும். [/size][/size][size=2][size=4](படங்கள்: சுமித்தி, எ…
-
- 4 replies
- 480 views
-
-
[size=4]திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இவ்வாறான அச்சுறுத்தல் என்பது கட்சித்தலைமையால் விடுக்கப்பட்டதா அல்லது இல்லாது போன புலிகளால் விடுக்கப்பட்டதா? அல்லது அரச தரப்பால் விடுக்கப்பட்டதா? அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்குப் பயந்து ஆதரவாக வாக்களிக்கும் உலகமகா கோழைப் போராளிகள்தான் முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களா என்ற கேள்விகள் எழுகின…
-
- 0 replies
- 569 views
-
-
[size=4]பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்கும் ஆளும் கட்சியின் முயற்சி குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை மீதான குற்றவியல் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் தெளிவாக இல்லை. நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டியவை. இவ்வாறு தனித்துவம் மிக்க துறைகளில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திரம் அரசின் அண்மைய நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை கண்டிக்கப்பட வேண்டியது. அமைச்சர் பசில் ராஜப…
-
- 0 replies
- 430 views
-
-
[size=4][/size] [size=4]By General 2012-11-25 12:28:35[/size] [size=4]சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் 200 பேரை சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் சமீபத்தில் இடம்பெற்ற மோதலையடுத்தும் நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதியும் மேற்படி ஊழியர்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது வெளிநாட்டு கைதிகள் யாரும் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பதை அறிய ஒவ்வொரு வெளிநாட்டு தூதரங்களினால் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. 27 கைதிகள் உயிரிழந்துள்ளதையடுத்து இரவ…
-
- 1 reply
- 203 views
-
-
தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். குறித்த நபர் 2010 ஆண்டு காலப்பகுதியிலேயே இவ்வாறு போலி நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். அது குறித்து தகவல் வங்களின் ஊடக நெல்லியடிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமுகமளிக்காத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியாண…
-
- 1 reply
- 495 views
-
-
இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் பயிற்சி கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா. "இந்தியாவின் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கொள்கை" என்ற தொனிப் பொருளில் அவர் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு பிராந்திய வல் லரசாகும் எண்ணம் இல்லை என்பதைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ந…
-
- 1 reply
- 338 views
-
-
[size=4]கஸகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோக பூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவரும் பிரதமர் டி.எம்.ஜயரத்னவையும் பார்வையிடுவார் என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.[/size] http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53275-2012-11-23-02-35-45.html
-
- 9 replies
- 903 views
-
-
வழமையாக மே 18 இற்கு முன்பு மாவீரர் வாரத்தின்போது தாயகத்தில் பாடசாலைகளிலும் மாவீரர் நிகழ்வுகள் நடைபெறுவது வழமை. நேற்று வடமராட்சியில் உள்ள ஒரு பாடசாலையில் இறைவணக்கம் முடிந்த பின்பு 5ம்வகும்பு தர மாணவன் ஒருவன் தான் ஒரு கவிதை படிக்க போகிறேன் என்று திடீரென்று கேட்டிருக்கிறான். ஆசிரியர்கள் அனுமதிக்கவும் அவன் படிக்க தொடங்க முதலில் ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் அதிர்ச்சி.. பின்பு ஆனந்த கண்ணீர்.. கூடவே அச்சமும். ஒரு பெண் போராளியின் மகன் அந்த மாணவன்.. அவன் படித்த கவிதை இதுதான்.. ஈழத்துகவி சண்முனம் சிவலிங்கம் அவர்களுடைய கவி அது. //எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன. எங்கள் இமைகள் கவிந்துள்ளன. எங்கள் உதடுகள் அண்டியுள்ளன. எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன. நாங்கள…
-
- 7 replies
- 1k views
-
-
டி.பி.எஸ். ஜெயராஜ் மற்றும் ரொஹான் குணவர்த்தன ஆகிய கற்பனை எழுத்தாளர்களின் கதைகளில் மயங்கி தமிழ்நெட்டைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது சர்வதேச பிணக்குகள் குழு. தமிழ்நெட் நெடியவனின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தமிழ்க் கூட்டமைப்பை இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் கைப்பாவைகள் என்று தமிழ்நெட் விமர்சனம் செய்வதாகவும், ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு இன்னும் பணம் சேர்க்கப்படுவதாகவும் தனது இணையத்தில் கட்டுரை வரைந்திருக்கிறது. அக்கட்டுரையின் பதிப்பும், தமிழ்நெட்டின் எதிர்வினையும் கீழே தரப்படுகின்றன. http://www.crisisgro...l-solution.aspx ICG plays mischief with TamilNet [size=2][TamilNet, Friday, 23 November 2012, 08:40 GMT][/size] The Inte…
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=4][/size] [size=4]By V.Priyatharshan 2012-11-25 16:09:19[/size] [size=4]இலங்கையில் தாய்ப்பால் வங்கி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலக தாய்ப்பாலூட்டல் தொடர்பான ஆய்வின் இலங்கை அறிக்கை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோதே இத் தகவலை அவர் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், தொழில்புரியும் தாய்மார் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே தான் இலங்கையிலும் தாய்ப்பால் வங்கி ஒன்றை அமைப்பது குறித்து சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 426 views
-
-
[size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size][/size] பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளினால் கடந்த ஒன்பது மாதங்களில் 9414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4414 பேர் சிறுவர்களாவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். [size=2][size=4]எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பெண்கள்,சிறுவர்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தி மதிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் வறுமை 0.1 வீதமே இருக்…
-
- 0 replies
- 670 views
-
-
வவுனியா செல்வபுரத்தில் 6 பேர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி செல்வபுரம் பகுதியில் உள்ள காட்டிற்குள் வைத்தே இந்த அறுவரும் கைது செய்ப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டிற்குள் புராதன காலத்து பொருட்கள் இருப்பதாகவும் அதனை தோண்டும் நடவடிக்கையில் குறித்த அறுவரும் இருந்துள்ளனர். இதன் போது குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரும், பதுளையைச் சேர்ந்த ஒருவரும் காதிர்காமத்தைச் சேர்ந்த ஒருவமே கைது செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையில் படுகொலைகளுக்குப் பிரபலமான வெலிக்கடைச் சிறையில் தற்போது ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக தற்போது ஓர் புதுக்கதை உலாவி வருகின்றது. ஆவிகளை அடக்கும் வல்லமை பிக்குகளின் பிரித்(து) ஓதும் வல்லமைக்கு இருப்பதாகவும் எனவே உடனடியாக சமயச் சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் படியும் சிறைச் சாலையின் கடைநிலை அதிகாரிகள் தமக்கு மேலான அதிகாரிகளை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுமளவுக்கு ஆவிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் பேசப்படுகின்றது. [size=3][size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக உணரப்படுவது ஆவிகள் பற்றிய செய்திகளையும் சம்பவங்களையும் நம்பும் மக்கள் மத்தியில் சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் பல சம்பவங்களின் அடிப்படையில் உண்மைத் தன்மை பெ…
-
- 0 replies
- 582 views
-
-
பெண்ணினத்தின் அவல நிலை.. [sunday, 2012-11-25 11:12:59] கார்த்திகை 25 மாவீரர் வாரத்தில் வரும் ஒரு நாள் மற்றும் அல்ல, மாறாக உலகத்துக்கு பெண்களின் முக்கியத்துவவத்தையும் பாதுகாப்பையும் உணர் த்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையினால் வருஷம் தோறும் கார்த்திகை 25 பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பத்ற்கான சர்வதேச தினமாக ( ஆங்கிலத்தில்: International Day for the Elimination of Violence against Women) நியமிக்க பட்டது . http://seithy.com/breifNews.php?newsID=70802&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 364 views
-
-
BBC ஊடகவியலாளர்கள் சிலர் அரசின் வட்டியில்லா கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர் :விசாரணை செய்யுமாறு ரணில் கோரிக்கை! [size=2] [sunday, 2012-11-25 08:05:49][/size] பி.பி.சீ ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த ஊடக நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பி.பி.சீ ஊடகத்திற்காக பணியாற்றி வரும் சந்தன கீர்த்தி பண்டார மற்றும் எல்மோ பெர்னாண்டோ ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தமாறு, ரணில் விக்ரமசிங்க பி.பி.சீ.யின் தலைவர் கிறிஸ்டோபர் பெட்டன் பிரபுவிடம் கோரியுள்ளார். குறித்த இரண்டு ஊடகவியலாளர்களும் பி.பி.சீயின் ஊடக ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டு;ள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 0 replies
- 260 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழங்கில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தது, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்ற சமையற்கூடத்தில் சமைக்கப்பட்ட கோஹிலா கிழங்கு கறி, வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தது. இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத கிழங்கு மாதிரிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையிலேயே, நாடாளுமன்ற சமையற்…
-
- 0 replies
- 434 views
-
-
அவசியமற்ற கேள்விகளை எழுப்பினால் சபைக்கு வெளியே அனுப்பப்படுவீர்கள்; அஸ்வருக்கு சபாநாயகர் எச்சரிக்கை நாடாளுமன்றில் அநாவசியமான முறையில் பிரச்சினைகளை கேள்விகளாக எழுப்பும் நபர்களை சபைக்கு வெளியில் அனுப்ப வேண்டிவருமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க உரையாற்றிய வேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை கேள்வியாக எழுப்பினார். அந்த சமயத்தில் கேள்வி ஒழுங்கு பிரச்சினையோடு தொடர்புடையதல்ல என தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றில் அநாவசியமான ஒழுங்கு பிரச்சினைகளை கே…
-
- 0 replies
- 338 views
-
-
2013 பட்ஜெட் இன்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் இலங்கை அரசின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பள உயர்வையும், நிவாரணங்களையும் மக்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் பரவலாக எதிர்பார்த் திருக்கும் நிலையில், பிற்பகல் 12.50 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் என்ற வகையில் இந்த வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றார். இதையொட்டி நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியே யும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் நேற்று முதல் நாடாளுமன்றத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும் பாதுகாப்பை பொறுப்பேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நாட…
-
- 168 replies
- 8.9k views
-
-
இலங்கை மீது ஐ.நாவில் மீண்டும் அமெ.தீர்மானம்; மார்ச்சில் வருகிறது; நிறைவேற்றியதும் பாதுகாப்புச் சபைக்கும் போகும் அடுத்த வருடம் மார்ச் மாதம் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றொரு முக்கிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது என இராஜதந்திர வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகைக்குத் தெரிவித்தன. சர்வதேச சமூகத்திற்கு கடந்த கூட்டத் தொடரில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் விடயத்தில் இலங்கை அரசு அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதன் காரணமாகவே அமெரிக்கா மீண்டும் களத்தில் குதிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காகத் தனது இராஜதந…
-
- 3 replies
- 973 views
-
-
'இராணுவத்தில் இருந்து 6 பெண்கள் விலகினர்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 நவம்பர், 2012 - 13:27 ஜிஎம்டி இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக…
-
- 3 replies
- 848 views
-
-
பிரபாகரனே நிராகரித்த 13 ஐ கூட்டமைப்பு ஏன் கேட்கிறது?; இந்தியாவில் கோத்தபாய உதயனுக்கு கருத்து 13ஆவது திருத்தத்தை பிரபாகரனே நிராகரித்திருந்தார், ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு இதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏன் ஆடுகிறது என்பது மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். உத்தியோக பூர்வமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள பாதுகாப்புச் செயலர் அங்கிருந்து "உதயனு'க்கு குறுகிய செவ்வியொன்றை வழங்கியுள்ளார். அந்தச் செவ்வியின் விவரம் வருமாறு: கேள்வி: இந்தியாவுக்கான உங்கள் பயணத்தின் போது 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றி ஏதாவது பேசப்பட்டதா? கோத்தபாய: இல்லை. அப்படி எதுவுமே பேசப்படவில்லை. கேள்வி: 13 ஆவது தி…
-
- 4 replies
- 574 views
-
-
[size=5]மதமாற்ற குற்றச்சாட்டு: அதிபர் பிணையில் விடுதலை[/size] [size=4]மாணவர்களை மதமாற்றம் செய்யமுற்றபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மாத்தறை புனித சேர்வடியஸ் கல்லூரி அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.[/size] [size=4]குறித்த அதிபர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 'பொது பல சென' என்ற பௌளத்த அமைப்புடன் தொடர்புபட்ட பிக்கு ஒருவர் மேற்கொண்ட குற்றச்சாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=1802
-
- 1 reply
- 471 views
-
-
[size=5]இலங்கை தேயிலை தோட்ட தமிழர்களின் நியாயமான சம்பளத்திற்கான போராட்டம் : [/size][size=6]THEPRIC€ OF TEA[/size] [size=1][size=4]இலங்கை நாட்டின் மிக முக்கிய வெளிநாட்டு பணம் பெற்று தரும் ஒரு துறை - தேயிலை. ஆனால் நீண்ட காலமாக அவர்கள் வாழ்வாதார [/size][size=4]அடிப்படைக்கே அவதிப்பட்டு வாழ்கின்றனர். [/size][/size] [size=1][size=4]அவர்களின் இந்த நிலையை போக்க போராட்டம் ஒன்றை புலம்பெயர் அமைப்பு ஆரம்பித்துள்ளது. [/size][/size] http://www.youtube.com/watch?v=llWaTGJEy0c http://www.priceoftea.com/
-
- 6 replies
- 544 views
-
-
முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட 2000 உழவு இயந்திரங்கள் எங்கே? - சிவசக்தி ஆனந்தன் கேள்வி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னி மாவட்ட விவசாயிகளால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டுச் சென்ற இரண்டாயிரம் உழவு இயந்திரங்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாகப் பகிரங்க விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நட்டஈடுகளை வழங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். கமநல சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வன்னி மாவட்ட விவசாயி…
-
- 0 replies
- 532 views
-
-
மகிந்தருக்கு இந்தியர்கள் சிவப்பு கம்பளம்- மலேசிய தமிழர்கள் போர்க்கொடி Published on November 24, 2012-10:10 am · No Comments இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டால், வருகின்ற 4-ஆம் திகதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை எதிர்த்து பெரும் அளவிலான முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இப்போராட்டத்திற்கு உணர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கான போக்குவரத…
-
- 1 reply
- 740 views
-