Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராஜீவ் கொலை குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது - இந்தியா 01 நவம்பர் 2012 முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனி…

    • 2 replies
    • 486 views
  2. For Immediate Release November 1, 2012 [size="4"][size="4"]Sri Lanka Must Abide By International Human Rights Standards:[/size][/size] [size="4"][size="4"]Gross Human Rights Violations to be Scrutinized by Peers[/size][/size] Geneva, SWITZERLAND – The United Nations Human Rights Council (UNHRC) is set to review Sri Lanka’s Human Rights record today as part of its Universal Periodic Review. This will be the second cycle of a peer review process of the UNHRC, which was instituted in 2008. A total of 46 Non-Governmental Organizations have submitted reports on all aspects of human rights violations in the country. Sri Lanka’s response, contained in its Natio…

  3. [size=2][size=4](சந்துன் ஏ. ஜயசேகர)[/size][/size] ஈரானிடமிருந்து குறைந்தளவான மசகெண்ணெய்யை வாங்க அமெரிக்கா இலங்கையை அனுமதித்த போதிலும் ஈரானிய அரசாங்கத்துக்கு சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி மீதான தடை இவ்வாறான இறக்குமதியை செய்ய முடியாது தடுக்கின்றது. [size=2][size=4]இதனால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 135,000 மெட்ரிக் தொன் கொண்ட 10 இறக்குமதிகள் இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்த முடியாதுள்ளது என பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஈரானிய மசகெண்ணெயை கொண்டு வருவதற்காக கடந்த மாதம் ஈரானுக்கு அனுப்பிய கப்பல் வெறுமனே திரும்பியுள்ளது என அவர் குறிப்பிட்டார். ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப…

  4. [size=4][/size] [size=4]ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாருக்கும் இடையில் காரசாரமான விவாதத்தினையடுத்து தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார். பதிலுக்கு சிறீதரன் உங்களிடம் மட்டுமா தண்ணீர் போத்தல் இருக்கிறது நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என அவர் பதிலளித்தார். இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தினை அடுத்து …

  5. கேப்பாபிலவு, சீனியா மோட்டையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் உணவு சமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தனர். இதுவரை எந்தவித உதவிகளும் வந்துசேரவில்லை எனவும் அவர்கள் கூறினர். மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த சுமார் 178 குடும்பங்கள் கேப்பாப்பிலவு சீனியாமோட்டைப் பகுதியில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தன. தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையாலும், காற்றாலும் தற்காலிகக் கொட்டகைகளின் தகரங்கள் தூக்கி வீசப்பட்டன. தூவாணமும், மழைநீரும் கொட்டகைகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் நாளாந்த சமையல் வேலைகளைச் செய்யமுடியாதுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இதுவரை சமைத்த உணவுகளோ வேறு எந்தவித உதவிகளோ மதமக்கு வழங்கப்படவில்லை எ…

  6. வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012 16:53 [size=2][size=4] இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகும். எனினும் அந்த பெயரில் இருக்கும் ஜனநாயகமும் சோஷலிசமும் நாட்டுக்குள்ளே கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். "ஆனால் நாட்டில் ஜனநாயகத்திற்கும் சோஷலிசத்திற்கும் பதிலாக சிங்களமும் பெளத்தமும் நடைமுறையில் தலைவிரித்தாடுவது எல்லோருக்கும் தெரியும். இந்த நடைமுறை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கிறது. அதுதான் ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசு என்பதாகும்" என அவர் குறிப்பிட்டார். "அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இயக்கத்தின்…

  7. இலங்கை தமிழர்களை காப்பாற்றும் பணியை தொடரப் போகிறாராம் கருணாநிதி! [Thursday, 2012-11-01 06:57:05] இலங்கை தமிழர்களையும் உலகத் தமிழர்களையும் காப்பாற்றும் பணியை தொடருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் 31ம் தேதி விடியற்காலையில் அமெரிக்காவுக்கு டெசோ இயக்கம் சார்பாக திமுக தூதுவர்களாக புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஐ.நா. சபையில் அவர்கள் அளித்திட இருக்கிற அறிக்கை நகல்களையும், சி.டி. போன்றவற்றில் எனக்கு ஒரு பிரதியை அளித்து சென்றார்கள். இரவு முழுவதும் திரும்ப திரும்ப அதைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். நானு…

  8. செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 1, 2012 AT 10:28 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவரை கடந்த 30 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கடந்த 30 ஆம் திகதி காலை 6.15 மணியளவில் குறித்த நபர் தனது வீட்டில் இருந்து, தான் வேலை செய்யும் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடைக்குச் சென்ற பின் மனைவ…

  9. இலங்கையின் மனித உரிமைகள் என்ன ? வியாழனன்று ஐநாவில் தெரியும் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்ட போதிலும் – இலங்கையின் மனித உரிமைகள் நிலை மோசமாகவே இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ என்ற பொறிமுறையின் கீழ் ஐ நா மனித உரிமை பேரைவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனித உரிமை சூழ்நிலைகளும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. மனித உரிமைக…

  10. புதிய இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை 01 நவம்பர் 2012 புதிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிடிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஈரான், இலங்கை, ஓமான், கென்யா, மடகஸ்கர் மற்றும் ஷிசில்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் புதிய இந்திய வெளிவிவகார அமைச்சர் விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு துரித கதியில் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, யுத்த நிறைவின் பின்னர் இலங்கையில் ஏற்பட்…

  11. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 48 பேர் இன்று விடுதலை. [Thursday, 2012-11-01 07:42:02] இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் 48பேர் முழுமையான புனர்வாழ்வுக்குப் பின் இன்று புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 7 பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், 782 முன்னாள் போராளிகள் இன்னமும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களில் 19 பெண்கள் உள்ளடங்குவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.இவர்கள், மன்னாரிலுள்ள மருதன்காடு, பூந்தோட்டம் ஆகிய புனர்வாழ்வ…

  12. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது இலங்கை வாகன வர்த்தகம்.. [Thursday, 2012-11-01 09:33:53] இலங்கையில் வாகன வர்த்தகச் சந்தையை முறியடிக்கும் வகையில் சீனா தனது வாகனச் சந்தையை இங்கு ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி இலங்கையில் வாகன இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையை முற்றாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளது. இதன் முதற்கட்டமாகத் தற்போது இலங்கையில் செயற்படும் சுவீடன் நாட்டுக்குச் சொந்தமான "வொல்வோ" மோட்டார் நிறுவனத்தின் முழுமையான ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் சீனாவின் ஜீலி என்ற நிறுவனம் கொழும்பில் பாரிய வாகனச் சந்தை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அத்துடன் தற்போது இலங்கையில் செயற்படும் மைக்ரோ வாகன நிறுவனத்தையும் சீனா நீண்ட கால குத்தகைக்கு…

  13. [size=4]ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.[/size] [size=4]நடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.[/size] [size=4]இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். [/size] [size=4]அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,[/size] [size=4]எமது மாணவர்களது கல்வி முன்னேற்றத்தினைப் பாராட்டுவதற்கு…

  14. இந்தியா எவ்வாறு இலங்கைக்கு உதவி செய்கின்றதோ அதேபோன்று சீன அரசாங்கமும் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது என யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த சீனத்தூதுவர் வூ ஜியாங்கோ தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கைக்கு மிக அண்மையாகவே இந்தியா உள்ளது. இது புவியியல் ரீதியானது என்பதுடன் வட பகுதி மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கமான உறவுகளையும் தோற்றுவிக்கின்றது. அத்தகைய உறவில் இந்தியாவின் உதவி வடபகுதி மக்களுக்குத் தேவையான ஒன்றாகவேயுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். இத்தகைய உதவி…

    • 50 replies
    • 3.1k views
  15. நிலம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கியது வியட்னாம் கப்பல் By General 2012-10-31 19:53:01 நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச் சென்ற சாய்கோன் குயின் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. அதிகாலை 12.15 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஆபத்தில் சிக்கியுள்ளதாக இந்தக் கப்பலில் இருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. நிலம் புயலில் சிக்கியதால…

  16. மனிதநேயம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்..! - இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து ஒரு யுவதியின் உதவி கோரிய குரல்...! [Wednesday, 2012-10-31 21:53:46] யுத்தம் இந்த நாட்டின் ஏராளமான மக்களது உறவுகளது உயிர்கள் காவு கொள்ளப்பட காரணமாகியது. அந்த வகையில் சிவசோதிநாதனும் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரோ ஒரு ஆண் பிள்ளையையும் பறிகொடுத்தார். அவரது மூத்த மகள் சுயானா (வயது 27) குண்டுத்தாக்குதலுக்கு இழக்காகி இரு கால்களையும் வலது கையையும் இடது கையில் 3 விரல்களையும் இழந்தார். அத்தோடு ஒரு கண் பார்வையையும் முற்றாக இழந்து மற்றைய கண் பார்வையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அன்றிலிருந்து சுயானாவின் வாழ்வு முற்றிலும் மாறிப்போனது. தனது வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையிலிருந்த சுய…

  17. தம்புள்ளையில் தொடங்கி இது வரை 20 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. இது வரையில் எவரும் கைது செய்யப்படவும் இல்லை, விசாரணை செய்யப்படவும் இல்லை. அரசாங்கத்தினுள் இருக்கும் அடிப்படைவாத சகதிகள் நாட்டில் மீண்டும் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் சதியை முன்னெடுக்கின்றன. அதன் ஒரு அங்கமே பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் என்று என மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார் . நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அனைத்து மதங்களும் தமது மதக் கடமையை சுதந்திரமாக செய்யமுடியும் என்று அரசியல்யாப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் அமைப்பு மீறப்படுகிறது. இன்று தம்மை தேசப் பற்றாளர்கள…

  18. [size=2][size=4]'சண்டி' சூறாவளியால் பாரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 'சண்டி' சூறாவளி காரணமாக நியூயோர்க் உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...1-08-22-53.html[/size][/size]

  19. முஸ்லிம் தலைவர்களின் சரணாகதி அரசியல் செயற்பாட்டால் நாம் இந்த துயரத்தை அனுபவிக்கிறோம் - முஸ்லிம் இடதுசாரி முன்னணி 31 அக்டோபர் 2012 அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் புனித நாளான ஹஜ்ஜுப் பெருநாளன்று பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூதாயம் முழுவதற்கும் இச் சம்பவம் அதிர்ச்சியையும் மிகப் பெரியசோகத்தையும் உருவாக்கியுள்ளது. இன்று வரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை அரசாங்கத்தில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் வெட்கமில்லாமல் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என வழமைபோல் கூறத் தொடங்கியுள்ளனர்;. மேற்படி சம்பவம் தொடர்பாக தமது கண்டனங்களையோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களையோ இவர்கள் வழங்காமல் இருந்து வருகின்றனர் ஒன்றல்ல இரண்டல்ல இருபதுக்கு…

  20. [size=4][/size] [size=4]யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர் இதனால் ஒரு நிர்வாகக் கட்டமைப்புடன் எமது வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது என யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். [/size] [size=4]2012ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 26 மாணவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். [/size] [size=4]அவர் தொடர்ந்து தெரிவிக்கைய…

  21. [size=4]13 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அண்மையில் டில்லி சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் எனத் தெரியவருகிறது. கடந்தவாரம் புதுடில்லி சென்ற கோத்தபாய அங்கு உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார். இதன்போது ரஞ்சன் மத்தாயுடனான சந்திப்பில் 13 ஆவது திருத்த ஒழிப்புக் கோஷ விவகாரம் குறித்து சூடாக விவாதிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியையும் கோட்டாபய சந்தித்திருந்தார். இந்நிலையில், கொழும்பு திரும்பிய க…

  22. முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் ஐந்து ஆட்லறி குண்டுகள் மற்றும் அதி குதிரை வலு கொண்ட இரண்டு படகுகள் ஆகியவற்றை இன்று புதன்கிழமை படையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிமீழ விடுதலைப்புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர். 152 மில்லிமீற்றர் வகையான 4 செலுத்திகளும், 130 மீற்றர் வகையான ஒரு செலுத்தியும், படகு உதிரிப்பாகங்களும் அவற்றுள் உள்ளடங்குகின்றன. இதுதவிர, 120 குதிரை வலுகொண்ட 2 இயந்திரங்கள் கொண்ட படகொன்றும் இன்று மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil

  23. [size=4]ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பூகோள கால மீளாய்வில் - இலங்கை நிலை குறித்து நவம்பர் 1ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. நவம்பர் 1ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையிடம் கேள்விகளை எழுப்ப 99 நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு நாட்டுக்கும் 72 செக்கன்கள் மட்டுமே உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. பல நாடுகள் எற்கனவே கேள்விகளைக் கையில் கொடுத்தும் விட்டன. இதனால், இந்த கூட்டத்தில் இலங்கைக்குப் பலத்த சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், பல்வேறு நாடுகளும் எழுப்பவுள்ள கேள்விகள் சிக்கலானவை. இதில் அமெரிக்கா தான் அதிகள…

    • 2 replies
    • 1k views
  24. [size=3]2008 ஆம் ஆண்டு வெளிவந்து, அடுத்த வருடம் ஒஸ்கார் விருதுகளை வென்று குவித்த பிரித்தானிய திரைப்படம்தான் சிலாம்டாக் மில்லியனயர்.[/size] [size=3] பிரித்தானிய நாட்டு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். இந்திய கலைஞர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் மிகவும் காத்திரமானது.[/size][size=3] இந்திய நடிகர்கள் நடித்தனர். இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து இருந்தார்.[/size][size=3] முதலில் கோல்டன் குளோப் விருதும், பின்பு ஒஸ்கார் விருதும் இத்திரைப்படத்துக்கு கிடைக்கப் பெற்றன.[/size][size=3] குறிப்பாக இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு ஒஸ்கார் விருதுகள் இரண்டு கிடைக்கப் பெற்றன. ரசூல் பூக்குட்டி, குல்லார் ஆகிய இந்தியர்களுக்கும் இ…

    • 8 replies
    • 868 views
  25. இலங்கை அரசின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபா: இலங்கை மத்திய வங்கி [Wednesday, 2012-10-31 10:37:22] அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை ஆறு ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 2012ம் ஆண்டு ஜூலை மாதமளவில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை மூன்று ட்ரில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அதிகளவில் சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்தக் கடன் தொகை அபிவிருத்தித் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http:/…

    • 3 replies
    • 704 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.