ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
[size=3]சீனாவின் முற்றுகையில் இந்தியா... ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின் இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்தி[/size] [size=2][size=3]ரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும் நேரடி யுத்தம் இன்றி வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சிந்திக்கிறார். அப்போது அவரது மனக்கண் முன்னே வந்து நிற்கிறார் முந்தைய ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. ‘தமிழன் தொடை…
-
- 0 replies
- 807 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களின் 25 வது நினைவு தினம் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன்போது 21 பணியாளர்கள் இந்தியப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்நினைவு பிரார்த்தனை இடம்பெறும். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, பொது மக்களால் ஈகைச் சுடருடம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.போதனா வை…
-
- 13 replies
- 725 views
-
-
[size=3][size=4]இந்தியாவில் தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் பிரஜாவுரிமை வழங்கியுள்ளது. ராமேஸ்வரம் முகாமில் தங்கியிருந்த 130 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. 50 பிறப்புச் சான்றிதழ்கள், 60 கடவுச் சீட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாகக் காணப்படவில்லை என இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் எம்.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். எனினும், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்க…
-
- 1 reply
- 430 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் மெய்யாகவே விரும்பினால், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென விரும்பினால், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலகுவில் தீர்வினை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆ…
-
- 4 replies
- 563 views
-
-
தமிழர்களின் அவலங்களை வெளிக்கொணர எனது புத்தகம் உதவும் என்ற நம்பிக்கையிலேயே எனது புத்தகத்தை எழுதினேன். இது நான் தமிழர்களிற்குச் செய்யும் ஒரு கடமையாக நினைக்கிறேன். ஆனால் சர்வதேச சமூகம் ஈழப்பிரச்சினை முற்றாகவே மறந்து வருவதை தமிழர்களாகிய நீங்கள் உணர வேண்டும் என ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ்மிரர் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். இன்னமும் எண்ணப்படும் சாவுகள் என்ற புத்தகத்தை எழுதிய முன்னைநாள் பி.பி.சி.யின் சிறீலங்காவிற்கான நிருபரான பிரான்ஸஸ் ஹரிசன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான தனது முதல் விஜயம் அவர்களுடனான தொடர்பு குறிப்பாக சமாதானச் செயலகப் பணிப்பாளரான புலித்தேவனுடனான தனது தொடர்பு குறித்து விரிவாக விபரித்தார். …
-
- 0 replies
- 443 views
-
-
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர். அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது. யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன. வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் …
-
- 9 replies
- 1.4k views
-
-
[size="2"]கரையை நோக்கி தொடர்ந்தும் படையெடுக்கும் மீன்கள்.[/size] [size="2"] [/size] மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபடுகின்ற நிலையில் ஓந்தாச்சிமடம் கடற்கரையிலும் இந்நிலை தொடர்கின்றது. மீன்கள் கரையொதுங்குவதை நேரடியாகக் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். கரை ஒதுங்கும் மீன்கள் ஒருபுறம் இருக்க, கரைவலை மூலம் ஏராளமான மீன்கள் பிடிபடுகின்றன. அளவுக்கு மிஞ்சிய மீன்கள் பிடிபடுவதனால் சந்தைப்படுத்தலில் சிக்கல் நிலையை மீனவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி.
-
- 16 replies
- 2.1k views
-
-
இதுவரை 9 லட்சம் கண்ணி வெடிகள் இலங்கையில் அகற்றப்பட்டன - டி.கே.என்.ரோகன் தலைமையிலான இந்தியர்களும் ஈடுபட்டனர்! [Monday, 2012-10-22 08:36:07] இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான சண்டை ஓய்ந்த பிறகு, ஒன்பது லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உள்ளன.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிந்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டையின் போது, விடுதலைப் புலிகள், ராணுவத்தை தடுக்க, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், கண்ணி வெடிகளை புதைத்தனர். சண்டை ஓய்ந்து விட்ட நிலையில், தற்போது இந்த கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, 5,000 சதுர கி.மீ., பரப்பளவில், 80 சதவீத கண்ணி வெடிகள்,…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 240 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை. சிறீலங்கா | ADMIN | OCTOBER 22, 2012 AT 09:44 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் நாட்டைவிட்டுச் சென்று தமிழகத்தில் தங்கியுள்ள சிலருக்கே இந்த பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த அகதிகள் நாடு திரும்புவதற்கு பல தடை விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இலங்கையர்களா என உறுதிப்படுத்த முடியாமையால் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் குறித்த அகதிகள் முறையிட்டுள்ளனர். இது குறித்து ஆராயப்பட்டு 240 இலங்கை அகதிகளுக்கு பிறப்பு அத்தாட்சிப்த்திரம், பிரஜ…
-
- 0 replies
- 275 views
-
-
மீள் குடியேறிய மக்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம்: மீண்டும் இடம்பெயரும் வன்னி மக்கள். சிறீலங்கா | ADMIN | OCTOBER 22, 2012 AT 09:48 வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை யையடுத்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வரட்சியால் ௭ரிந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மக்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீருக்கு அல்லாடிய மக்கள் பல கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரை ௭டுத்தனர். அத்துடன் பல இடங்களில் பணம் கொடுத்தும் வாங்கிக் குடித…
-
- 0 replies
- 313 views
-
-
21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட…
-
- 14 replies
- 1.8k views
-
-
[size=4]வழிபாட்டுத் தலங்கள் அமைக்க விசேட அனுமதி பெறும் சட்டம் தேவை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-10-19 10:38:24| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1] [size=4]மதமாற்றங்கள், அரச மரங்களிலும் தரை யிலும் கடலிலும் சுருவ நிர்மாணங்கள், புதுப்புது ஆலய அமைப்புக்கள் என யுத்தத்திற்கு பின் னான கால ஓட்டம் நகர்கின்றது. வீடின்றி, உறங்க இடமின்றி, உண்ண உண வின்றி இருப்போர் மீது இரக்கம் கொள்ள ஆளில்லை. மனிதனை மனிதன் நேசிக்கும் பொருட்டு ஆலய வழிபாட்டுத் தலங்கள் தோற்ற பெற்றன வாயினும் இன்று அந் நிலைமை மாறி மதமாற் றத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய அறியாமைகள் நீண்டு செல் வதை தடுத்து நிறுத்த வேண்டுமாயின், எந்தச் சமயமாயினும் புதித…
-
- 2 replies
- 684 views
-
-
13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த ரத்து! மக்கள் வாக்கெடுப்பிற்கு கோரிக்கை 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை அடிப்படையாக வைத்து நாடு அரசியல் அழிவை நோக்கிச் செல்வதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். திவி நெகும திட்டம் முதன்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது காணப்பட்ட எதிர்ப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்வைப் பார்க்கும் போது இதன் ஆபத்தான நிலை தெரிகிறது. எனவே, உடனடியாக இதனை பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்து மக்கள் த…
-
- 3 replies
- 731 views
-
-
அரசாங்கத்தை ஆதரிப்பது பிழை என்றால் எது சரி - பிரபா கேள்வி October 21, 2012 03:14 pm அரசாங்கத்தை ஆதரித்து நின்று இன்று பல தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முடிந்துள்ளது. ஏதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து இதனை செய்திருக்க முடியுமா என முகத்துவாரம் இந்து கல்லூரியின் கணித விழாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கேள்வி எழுப்பினார். மேலும் தனது உரையில், இன்று கொழும்பு மாவட்டத்தில் பல தமிழ் பாடசாலைகளின் கட்டிடங்கள் என் மூலம் கட்டப்பட்டு தளபாட பற்றாக்குறை நீக்கப்பட்டு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு அபிவிருத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தையும் செய்யக் கூடியதற்கான காரணம் நான் அரசாங்கத்த…
-
- 0 replies
- 393 views
-
-
புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு நாட்டின் ஜனாதிபதியே தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிக நீண்ட காலமாக …
-
- 24 replies
- 1.8k views
-
-
[size=2] Oct 21, 2012[/size] வரலாற்றுத் தவறிழைத்தது யார்? பிரபாகரனா? சொல்யஹய்மா? - தாயகத்தில் இருந்து வீரமணி. [size=4] [size=4] அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல அமெரிக்காவின் அன்பு முகத்தை நோர்வேயின் சிறீலங்காவிற்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் த…
-
- 6 replies
- 998 views
-
-
மாகாணசபைகளை உருவாக்கிய 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது. இதன்காரணமாக சிறிலங்கா அமைச்சரவை இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் முறைமைக்கு ஒருதரப்பு ஆதரவளிக்கின்ற அதேவேளை, ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கூட்டணிக் கட்சிகள் 13வது திருத்தத்தை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக, சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாணசபை முறையை ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார். அதேவேளை, சிறிலங்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய உடனடியாகவே அதிரடியான சில நகர்வுகளை கொழும்பு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டும் என என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோதாபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த அறிவித்தலின் மூலம் தமிழர்களுக்கு எதனையும் வழங்க அரசாங்கம் தயாராகவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான ஒரு தாக்குதலாகவே இது நோக்கப்படுகின்றது.[/size] [size=4]சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கும் நிலையில், கோதாபாயவிடமிருந்து வெளிவந…
-
- 0 replies
- 751 views
-
-
கிழக்கு விடுதியில் சிறிலங்கா இராஜதந்திரி நிர்வாண நடனம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 21, 2012 AT 22:13 அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த முன்னணி நாடு ஒன்றின் பிரதிநிதியுடன் இணைந்து, சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் நிர்வாண நடனம் ஆடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னிரவு வரை, விருந்தில் பங்கேற்ற அவர்கள், பின்னர் தமது அறைக்கு வெளியே ஆடைகளை அவிழ்த்து விட்டு நடனமாடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டப்பட்டதால், அந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து யாரிடமும் கூறவில்லை. எனினும் சி…
-
- 2 replies
- 858 views
-
-
[size=5]புலி எதிர்ப்பும் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் போர்க்கொடியும் - தயாளன்[/size] கூட்டமைப்பிற்குள் இடம்பெற்றுவரும் அதிகார அரசியலில் சுரேஷ் பிரேமசந்திரனை குற்றஞ்சாட்டும் இக்கட்டுரையை ஆழமான விவாதங்களின் பின்னரே வெளியிடுவதெனத் தீர்மானித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் ஜனநாயகப்படுதலின் அவசியம் பற்றி கடந்த காலங்களில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். இக்கட்டுரையின் ஊடாக கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது எமது நோக்கமல்ல. கூட்டமைப்பு தொடர்பான விவாதத்தின் ஒரு பகுதியாகவே இக்கட்டுரையைக் கருதுகிறோம். இது தொடர்பான மாற்றுக் கருத்துகளுக்கு நிச்சயம் பொங்குதமிழ் இடம்தரும் அன்னை திரேசாவின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு இது. இவர் யுவதியாக இருந்தபோது இவரின் ந…
-
- 0 replies
- 842 views
-
-
யாழில் ஒரு வாரத்தில் 140 பேர் கைது யாழ். மாவட்டத்தில் கடந்த கிழமை பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 140 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ். மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். நீதிமன்றங்களினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலை மறைவாக இருந்த 42 பேர், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேர், குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த 12 பேர், சட்டவிரோதமாக மிருகங்களை ஏற்றிச்சென்ற 6 பேர், இடையூறு உண்டாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 37 பேர், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற 3 பேர், சட்டவிரோதமான முறையில் சாரய விற்பனையில் ஈடுபட்ட 14 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 748 views
-
-
[size=4]நாட்டின் பொலன்னறுவை பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் 15 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 15 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் ௭ன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை கூறுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். [size=5]இரசாயன உர வகைகளின் பாவனை காரணமாகவே [/size]இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன ௭னினும் இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிருமி நாசினி மற்றும் களை நாசினிதொடர்பில் மேலும் ஆய்வுகளை நடத்த ௭திர்பார்க்கின்றோம். ஆய்வில் அவை ஆபத்தானவை ௭ன்பது நிரூபிக்கப்பட்டால் அவற்றின் கொள்வனவை தடுப்போம…
-
- 0 replies
- 714 views
-
-
[size=4]ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வரும் 1ம் நாள் இடம்பெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்காக, சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. ஸ்பெய்ன், கனடா, மெக்சிகோ, பிரித்தானியா, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே சிறிலங்காவின் அறிக்கை தொடர்பாக ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, உயர் பாதுகாப்பு வலயங்கள், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2006இல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின்…
-
- 0 replies
- 680 views
-
-
இலங்கையின் நிலைமைகளை ஆராய்ந்து அந்த நாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதில் ரஸ்யாவும் சீனாவும் தோல்விக்கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட இந்தக் கண்காணிப்பகம், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் ஆராயப்படும் போதெல்லாம் ரஸ்யாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவளித்து வந்துள்ளன. குறிப்பாக போர்குற்றங்களை இரண்டுதரப்புகளும் மேற்கொண்டவேளைகளில் கூட அதனை தடுக்கும் நடவடிக்கைகளை இந்த இரண்டு நாடுகளும் மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக இரண்டு நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கின. இதன்காரணமாக போர்க்குற்றங்களை தடுக்கமுடியாத நிலை ஏற்பட்ட…
-
- 1 reply
- 825 views
-
-
யாழ்ப்பாணத்தினிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என பெருமளவினில் கடத்தி செல்ல தயாராக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வன்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள்; ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பஸ் மற்றும் அதன் சாரதி நடத்துனர்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த பஸ்ஸில் பயணிதது கொண்ருந்த பெருமளவிலான படையினர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த பேருந்து பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்.நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. கிளி …
-
- 0 replies
- 427 views
-