ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
இன்றைய அரசின் தூர நோக்கற்ற தன்மை காரணமாக எதிர்காலத்தில் உலக வரைபடத்தில் இலங்கை என்ற பெயர் அழிக்கப்பட்டு அந்தப் பெயருக்குப் பதிலாக சீனாவின் “யங்கிங்“ மாகாணம் என அந்த இடத்தில் எழுதப்படும் என வடமேல் மாகாண சபை உறுப்பினரான ஜயந்த கன்னங்கர தெரிவித்துள்ளார். சீனாவின் இன்றைய தேவையானது இலங்கைக்கு உண்மையாக உதவ வேண்டும் என்பது அல்ல.. தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி அதன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதேயாகும். இன்றைய அரசாங்கம் இன்று சீனாவை முழுமையாக நம்பியே தனது ஒவ்வாரு அடியையும் முன்வைக்கிறது. இதேவேளை, மேற்குலக நாடுகள் இன்று இலங்கையைப் புறந்தள்ளி விட்டன. இவற்றுக்கு எல்லாம் காரணம் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையே என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=35676
-
- 1 reply
- 725 views
-
-
[size=4]தமிழகத்தில் பிறந்து ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களில் ஒருவராக எழுச்சி முழக்க உரைகள் மூலம் உணர்வின் எல்லைவரை சென்றுவரும் சீமான் அவர்களுக்கு வணக்கம்![/size] [size=4]தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞராக விளங்குகின்ற இசைஞானி இளையராஜா அவர்களது இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற ஏற்பாடாகி இருப்பது தொடர்பிலும் அதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தெரிவித்து நீங்கள் வெளியிட்டிருந்த காணொலியினை நாங்களும் பார்வையிட்டோம்.[/size] [size=4]கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற உங்களுக்கு அந்த உரிமை இன்னும் சிறப்பாக இருக்கின்றது என்றே கொள்ள…
-
- 12 replies
- 1.2k views
-
-
இனிமேல் யுத்தம் வராது வருவதற்கும் நாங்கள் இடமளிக்கக் கூடாது என மக்கள் முன்னிலையில் முழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று நடைபெற்ற திவிநெகும சட்டத்தை அமூல்படுத்த கோரி நேற்று யாழ். மணிக்கூட்டு வீதியில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவுபெற்றது. அதன் போது ஆயிரக் கணக்கான மக்கள் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நான் உங்களுக்கு பிறம்பாகவோ வெளியிலோ இருந்து கொண்டு எதனையும் செய்யவோ சொல்லவோ இல்லை. உங்களுடன் இருந்து கொண்டு தான் உங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் நான் என்னுடைய கருத்துக்களையும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றேன். இங…
-
- 0 replies
- 694 views
-
-
பிரபாகரனே விரும்பாத 13 ஆவது திருத்தச்சட்டத்தை, அரசு இல்லாதொழிக்க வேண்டும்: பியசிறி தெரிவிப்பு [Thursday, 2012-10-18 08:41:06] விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட 13 ஆவது திருத்தச்சட்டத்தை விரும்பவில்லை. ௭னவே மாகாண சபை முறைமையைக் கைவிட்டு புதிய மாவட்ட மற்றும் பிரதேசங்களை மையப்படுத்திய மக்கள் சபைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்க வேண்டும். குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டியது ஜனாதிபதியின் தார்மீக கடமையாகும் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. வட மாகாண சபை தேர்தலை நடத்தி அங்கு மாகாண சபை அமைக்கப்பட்டால் மத்தியரசு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரும். மாகாண சபைகள் பாராளுமன்றத்தை குழப்பியடிக்கும் நிலையங்களாக…
-
- 2 replies
- 346 views
-
-
[size=4]தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பு இருந்தாலும், சிறிலங்காப் படையினருக்கு இந்தியா மிகச்சிறந்த பயிற்சிகளை வழங்கி வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “சிறிலங்கா படையினருக்கு இந்தியா மிகச்சிறந்த பயிற்சிகளை வழங்குகிறது. நவீன பயிற்சி முறைகளுடன் கூடிய இந்தப் பயிற்சி, அவர்களின் நிபுணத்துவத்தை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கு உதவுகிறது. இந்த ஆண்டுமுதல், இந்தியாவில் பயிற்சி பெறும் சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாம் அங்கு தொடர்ந்து பயிற்சிக்குச் செல்வோம். சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பயிற்சி…
-
- 0 replies
- 355 views
-
-
[size=3][size=4]யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.[/size] [size=4]இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துவருகின்ற மக்களுக்கு ஆதரவளித்து வருகின்ற மூன்று அமைப்புக்களுக்கு அமெரிக்க அரசாங்கமானது அண்மையில் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதிஉதவியை வழங்கியுள்ளது. இலங்கையர்கள் பலருக்கு அவசரமாக தேவைப்படுகின்ற அடிப்படை உதவிகளை வழங்குவதற்காகவே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) அமெரிக்க வெளிநாட்டு அனர்த்த உதவி அலுவலகமானது ஷோவா ரிஃப்யுஜிகெயார் (ZOA) ச…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கைக்கெதிராக UNல் யோசனையை நிறைவேற்ற புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு 40 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது:- 18 அக்டோபர் 2012 திவயின இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யோசனையை நிறைவேற்றி கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு 40 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. கனடாவின் உள்ள புலிகளின் ஆதரவாளரான சட்டத்தரணி கெரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட 7 பேரும், பிரித்தானியாவில் செயற்படும் உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் உட்பட 8 பேரும், பிரான்ஸில் உள்ள புலிகளின் சர்வதே வலைமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான வீ. கிருபாகரன், றொபர்ட் ஈவன்ஸ் தலைமையிலான 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே உ…
-
- 0 replies
- 454 views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இந்த நான்கு அறிக்கைகளும் பேரவையினால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 30 அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்கா அரசாங்கம், மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆகியன தயாரித்த அறிக்கைகளே இவையாகும். இந்த நான்கு அறிக்கைகளும் ஜெனிவா கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒரு அறிக்கையாகத் தயாரிக்கப்படும். இந்தப் பணியை இந்திய, பெனின், ஸ்பெய்ன் நாட்டுப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவுள்ளனர். இதன் அடிப்படையிலேயே வரும் 1ம் நாள் பூகோள கால மீளாய்வுக் கூட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.…
-
- 0 replies
- 493 views
-
-
திருக்கேதீஸ்வரம், எள்ளுப்பிட்டி கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடி By Lambert 2012-10-18 10:51:47 மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள திருக்கேதீஸ்வரம் மற்றும் எள்ளுப்பிட்டி முதலிய கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரதேச செயலக அதிகாரிகளும் கிராம அலுவர்களுமே இவ்வாறு வீட்டுத் திட்டத்தில் மோசடி ஈடுபடுவதாக மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வருமானமற்ற வறிய குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிப்பு நிகழ்வதாகவும் வீட்டுத் திட்டத்திற்காக காலம் காலமாக வாழ்ந்த மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு தமக்கு வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்கி வீட்டுத் திட்…
-
- 0 replies
- 373 views
-
-
[size=4]அண்மையில் வெளியிடப்பட்ட 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூலில் அதன் ஆசிரியரான பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவிலிருந்து வெளியேறிய பெண்கள் இன்னமும் அச்சத்துடன் வாழ்வது தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அதன் விபரமாவது, சிறிலங்காவிலிருந்து பிரித்தானியாவில் புகலிடம் கோரி தஞ்சம் புகுந்துள்ள கிழக்கு இலண்டனில் வதிகின்ற தமிழ்ப் பெண்மணி ஒருவரைச் சந்தித்து நேர்காணல் ஒன்றை நான் மேற்கொண்டிருந்தேன். சில சட்டவாளர்கள், மதகுருமார்கள் போன்றோரால் இந்த நேர்காணல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. குறித்த தமிழ்ப் பெண்ணின் உண்மையான பெயரைக் கூட நான் அறியவில்லை. ஆனாலும் நான் இங்கு அவரை மணிமொழி என அழைக்கிறேன். இப்பெண் தனது தாயாரிடமோ அல்லது கணவனிடமோ ஒருபோதும் கூறாத சம்ப…
-
- 2 replies
- 501 views
-
-
ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய நிலைப் போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ் மாணவன் தெரிவாகி சாதனை படைத்துள்ளான். இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் கிழக்கின் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவரே இச்சாதனைக்குச் சொந்தக்காரன். கிழக்கில் முதலிடம் பெற்ற சோமசுந்தரம் வினோஜ்குமார் சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்க…
-
- 10 replies
- 1.2k views
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35 சிங்களவர்கள் இன்று அதிகாலை கடற்பபடையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இசுறு புத்தா என்ற படகின் மூலமாக தமது சட்டவிரோத பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.இவ் 35 பேரும் ஹந்தர கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=727751523717525632
-
- 2 replies
- 596 views
-
-
ஜேர்மன் மொழியில் தமிழினப் படுகொலைகள் - எதிர்வரும் 14ம் திகதி வெளியீடு! [Monday, 2012-10-08 21:33:01] வடகிழக்கு மனித உரிமை செயலகம் தொகுத்து வெளியிட்ட தமிழினப் படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன் மொழியில் Damit wir nicht vergessen��. Massaker an Tamilen 1956�2008. எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூல் எதிர்வரும் 14ம் திகதியன்று பிறாங்பேட் நகரில் இடம்பெறவுள்ள புத்தக கண்காட்சி விழாவில் வெளியிடப்படவுள்ளது. கிளிநொச்சியை தலைமையகமாக கொண்டு இயங்கிய வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் 1956- 2008 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழின படுகொலை விபரங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் தலைவராக இருந்த வணபிதா மாரியம் சேவியர் கருணரட்ணம், முன்னாள்…
-
- 1 reply
- 515 views
-
-
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் சிறிலங்காவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
உலக வரைப்படத்தில் இலங்கை என்ற பெயர் அழிவதற்கு நீண்ட நாட்கள் இல்லை: ஜ.தே.க எச்சரிக்கை! நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கை காரணமாக வெகு நாள் செல்லும் முன்னர், உலக வரைப்படத்தில் இலங்கை என்ற பெயர் அழிந்து, இலங்கை சீனாவின் யங்ஹிங் மாகாணமாக மாறிவிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் மஹியாங்கனை தொகுதி அமைப்பாளரும் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஜயந்த கன்னங்கர தெரிவித்துள்ளார். மஹியாங்கனை ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் முழுமையாக சீனாவை தங்கி வாழ்கிறது. மேற்குலக நாடுகள் இலங்கையுடன் இருந்து விலகியுள்ளனர். அரசாங்கத்திடம் நிலையான வெளிநாட்டு கொள்கை இல்லாததே இதற்கா…
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=2][size=4]எங்கள் செல்வத்தையும் இயற்கை மற்றும் மனித வளங்களையும் எதிர்ப்பார்த்திருக்கும் மாற்று சக்திகளுக்கு ஆசியாக் கண்டமானது விளையாட்டு மைதானமாக ஒருபோதும் காணப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆசியா அதன் வலையத்தின் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படும். அது, பல எல்லைகளைக் கொண்டிருப்பது போல சவால்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாங்கள் ஆசியாவின் விடியலுக்காக காத்திருக்கின்றோம். சர்வதேச சக்திகளின் தேவையற்ற தலையீடுகளுக்கு முகங்கொடுத்து ஆசியாவின் புதிய ஒளியாக திகழ்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாடு இன்று செவ்…
-
- 14 replies
- 819 views
-
-
[size=4][/size] [size=4]தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனை அரசாங்கத்திடம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.[/size] [size=4] [/size] [size=4]அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:[/size] [size=4]"தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வரலாற்றுப் பூமியில் ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிறிய ஒரு அலகைக்கொண்ட ஆட்சி முறையைக் கூட நடத்த முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் பயங்காரவாத செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.[/size] [size=4]மஹிந்த சிந்தனை, …
-
- 0 replies
- 644 views
-
-
[size=3][size=1][size=4]மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 1035 குடும்பங்கள் வசித்து வருகின்றன.[/size][/size] [size=1][size=4]இவர்களுக்கு மாதம் தோறும் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையாக ஆண்களுக்கு ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு 750 ரூபாயும், குழந்தைகளுக்கு 400 ரூபாயையும் கணக்கிட்டு திருமங்கலம் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்கினர்.[/size][/size] [size=1][size=4]இந்த பணத்தை பெற்று கொண்ட அகதி ஒருவர், கூத்தியார்குண்டு விலக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு 500 ரூபாயை கொடுத்து சாப்பாடு வாங்கியபோது, கடைக்காரர் அது போலி நாணயதாள் என கூறி உள்ளார்.[/size][/size] [size=1][size=…
-
- 1 reply
- 643 views
-
-
[size=4]இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் புதுடெல்லி வரவும் இல்லை, சிறிலங்கா அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசு எம்முடன் பேசி சில இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், தெரிவுக்குழுவுக்கு போகலாம் என்று நாம் கூறினோம். ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு உடன்படவில்லை. தெரிவுக்குழுவின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதன்மூலம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது குறி…
-
- 1 reply
- 614 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகம் 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் செயற்படும் என யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார். யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு பணிகள் ஆறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதுவரை மூன்று கட்ட வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. துறைமுக பகுதியில் மூழ்கியிருந்த கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் காங்கேசன்துறை துறைமுக பகுதியை ஆழமாக்கும…
-
- 0 replies
- 502 views
-
-
[size=3][size=4]யாழ்.நல்லூர் பிரதேச சபை தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ப.வசந்தகுமார் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ்.பஸ் நிலையத்தில் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.[/size] [size=4]ஜனநாயக வழியில் மக்களின் உரிமைப் பெற்றுக் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழ் பேசும் மக்களையும் தமிழ் அரசியல் வாதிகளையும், பிரதேச மற்றும் திணைக்கள ஊழியர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த தமிழ் இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு வி…
-
- 6 replies
- 756 views
-
-
திவிநெகும சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்ற பஸ்களில் அழைத்து வந்து இப்போராட்டத்தை ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யினரும் சமுர்த்தி யாழ்.உதவி ஆணையாளரும் இணைந்து நடாத்தியுள்ளனர். யாழ்.மணிக்கூடு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணியானது யாழ்.மாவட்டச் செயலகத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட பொது மக்கள் தாம் என்னத்திற்கு பேரணியாகச் செல்லுகின்றோம் என்பதையே அறியாமல் கலந்து கொண்டனர். குறிப்பாக இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வாசகங்களை பொது மக்கள் பலர் ஏந…
-
- 2 replies
- 456 views
-
-
தமிழக காவல்துறையினரால் தமக்கு போதியளவு பாதுகாப்பினை வழங்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் n;தாடர்பான விசாரணைகளின் போது தமிழக காவல்துறையினர், ஸ்கொட்லன்யாட் காவல்துறையப் போன்று காத்திரமான திறமை படைத்தவர்கள் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். எனினும், பாதுகாப்பு என வரும்போது தமிழக காவல்துறையினரின் செயற்திறன் மிகவும் பலவீனமானது என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் நேரடியாக ஆஜராகத் தயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1991ம் ஆண்டு தமிழகத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக சென்னைய…
-
- 0 replies
- 895 views
-
-
இராணுவப் பிடியில் சிக்கியுள்ள கட்டடங்களுடன் 875 ஏக்கர் நிலம்; புதுக்குடியிருப்பில் ஆக்கிரமிப்பு நீடிப்பு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய காணியும், அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணிகள் மற்றும் வர்த்…
-
- 0 replies
- 562 views
-
-
காத்தான்குடி கடற்கரையில் மீன்கள் கரையொதுங்கல்: மக்கள் முண்டியடித்துக்கொண்டு மீன்கள் சேகரிப்பு By Farhan 2012-10-17 12:36:47 மட்டக்களப்பு காத்தான்குடி வங்களா விரிகுடா கடலில் என்றும் இல்லாதவாறு அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதோடு மக்கள் முண்டி அடித்துக்கொண்டு மீன்களை அல்லி எடுத்துக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுனாமிக்குப் பின்னர் காத்தான்குடி - கடற்கரையில் இவ்வாறு அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை காலநிலை மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதோடு மாத்திரமன்றி காத்தான்குடி கடற்கரையில் கடல் அலை பெருவாரியாக எழுவது வழக்கம். ஆனால், இன்று அமைதியான முறை…
-
- 0 replies
- 492 views
-