Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2][size=4]தெவிநுவர கரைக்கு அப்பால் சென்றுகொண்டிருந்த 5 இலங்கை மீனவர்கள் கடற்கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு கடலில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வணிகக் கப்பலொன்றில் சென்றவர்களினால் 2 மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இவ்விரு மீனவர்களிடமும் விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடலில் வீசப்பட்டதாகக் கூறப்படும் ஏனைய 3 மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் இவர்களுக்கு தெரியவில்லையெனவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...6-06-07-17.html[/size][/size]

  2. [size=2][size=4]கற்பிட்டி உல்லாசப் பயணத்துறை வலயத்துக்குட்பட்ட உச்சிமுனைத் தீவின் சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் நட்சத்திர ஹோட்டலொன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த நிலப்பரப்பினை 107 கோடி ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரையறுக்கப்பட்ட செபயர் பே ரிசோர்ட் (தனியார்) நிறுவனத்தினால் மேற்படி ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த ஹோட்டல் நிர்மாணத்துக்காக மேற்படி நிறுவனத்தினால் 16 கோடி அமெரிக்க டொலர்களை செலவிட அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சுமார் 810 உல்லாசப் பயண அறைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அந்தவகையில் 150 அறைகள் கொண்ட ஸ்பா ஹோட்டலொன்றும், அதிசொகுசு வாய்ந்த அறைகள்…

  3. சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிலேச்சனத்தனமான கொடுமைகளை சிங்கள இணையம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. 2009 ஆம் வருடம் மே மாதம் அக்கரைப்பற்றில் கைது செய்யப்பட்ட கபிலன் என்வர் மீது மொனராகலைச் சிறைச்சாலை அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .இந்தத் தாக்குதல் காரணமாக குறித்த கைதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அந்தக் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் கூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரது தலைப் பகுதியில் தொடர்ந்தும் இரத்தக் கசிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. 2009 ஆம் ஆண்டு மார்ச…

  4. [size=4]மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நவம்பர் 01ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை வலுவாக எதிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையானது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான தனது சொந்த அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. "நாங்கள…

    • 2 replies
    • 477 views
  5. [size=3][size=4]அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய 44 கிராமங்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்ஸிங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான முஸ்ஸிம் கிராமங்களுக்கு அருகில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற சலவைத் தொழில், சிகை அலங்காரம் செய்பவர்கள் போன்றவர்கள் வாழ்ந்த பகுதியே கூடுதலாக முஸ்ஸிங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் பகுதிகளின் எல்லையில் மதம் மாற்றப்பட்ட தமிழர்களை குடியமர்த்தி தமிழர்க்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்புக்கான நடவடிக்கைகளை முஸ்ஸிங்கள் மேற்கொண்டுவருவதாக அம்பாறை மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் தமிழர்களின் சமய வழிபாட்டுத் தளங்கள்…

  6. Started by கரும்பு,

    நிமிடம் 9:36 இலிருந்து பாருங்கள். http://youtu.be/nr9UAibdM6A

  7. திங்கட்கிழமை, 15, அக்டோபர் 2012 (23:50 IST) தமிழர்களுக்கு பெருமை அளிக்கின்ற செய்தி : கலைஞர் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை: தமிழக மீனவர்கள் ஈரான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலே உள்ள சிறைச்சாலைகளில் பல நாட்களாக வாடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே? ஈரான் நாட்டு அதிகாரிகளால் தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டின் ஒரு தீவிலே உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குக் கூட இது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதைப் போலவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டிலிருந்து கத்தார் நாட்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது…

  8. இலங்கை உயர் அதிகாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்காவிடம் நோர்வே கேள்வி – 16 அக்டோபர் 2012 விக்கிலீக்ஸ் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்- இலங்கை உயர் அதிகாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கியமை தொடர்பில் அமெரிக்காவிடம் நோர்வே அரசாங்கம் கேள்வி எழுப்பியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கு குடியுரிமை மற்றும் கிரீன் கார்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த அதிகாரிகளின் மீது அழுத்தங்களை பிரயோகித்து யுத்தத்தில் பாதிக்கப்படும் சிவிலியன்களை பாதுகாக்க முடியுமா என நோர்வே அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். நோ…

  9. பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் சிங்கள உளவாளிகள்!- அதிர்ச்சியில் உறைந்துள்ள சட்டத்தரணிகள் PHOTOS, சிறீலங்கா | ADMIN | OCTOBER 6, 2012 AT 08:59 பிரித்தானியாவை மையமாக வைத்து இலங்கை சிங்கள அரசினால் திட்டமிடப்பட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் அங்கு அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர் . இவ்விதம் கருணா, டக்ளஸ் மற்றும் சிங்களவர்கள் அகதி தஞ்சம் கோரியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள தமிழ் தேசிய விடுதலை போராட்டத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த சில முக்கிய சட்டத்தரணிகளை இல்லாதொழிக்கும் நோக்குடன் இந்த திட்டமிடபட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சசின் கீழ் இயங்கும் சிறப்பு உளவுப் பிரிவினாரால் அவர்கள் இயக்கப்பட்டு வருகினறனர். இலங்கையின் சட்ட வல்லுனர்களினா…

  10. தமிழீழம் ஒன்றை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது பற்றிய யோசனை அடங்கிய மகஜரை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக மு. கருணாநிதி தெரிவித்துள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலினால் குறித்த யோசனைத் திட்டம் கையளிக்கவுள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற டெசோ கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 9 ஆலோசனைகள் அடங்கிய தீர்மானத்தில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்பட்டுள்ளது. http://www.paristami...jIyODAyNTYw.htm

    • 5 replies
    • 1.2k views
  11. சிங்கள அரசு ஈழமக்களுக்கு எதிரான யுத்தத்தை ஒரு விழாவைப்போல கொண்டாடியது. யுத்தம் பற்றிய அறிவிலிருந்து நகரங்களும் கிராமங்களும் வீழ்ந்ததிலிருந்து மக்கள் வகை தொகையாய் கொல்லப்பட்டதிலிருந்து எல்லாவற்றையும் பிரமாண்டமான விழாவாகவே தொடர்ந்து கொண்டாடியது. சிங்களப் பேரினவாத அரசின் ஆட்சியை இந்த உலகிற்கு நியாயப்படுத்தவும் ஈழத் தமிழனம் மீதான இனப்படுகொலையை நியாயப்படுத்தவும் மனிதாபிமான யுத்தம் என்று அறிவித்துக்கொண்டு மனிதாபிமானமற்ற வகையில் ஈழ மக்களை கொன்று அதை விழாவாக கொண்டாடியது. அப்படித்;தான் அண்மையில் மெனிக்பாம் முள்ளிவேலி முகாங்கள் மூடப்பட்டது என்ற அறிவிப்பையும் விடுத்திருக்கிறது சிங்கள அரசு. இலங்கையில் வடக்கில் வவுனியாவில் இருக்கிறது மெனிக்பாம்முகாம். 2009 மே மாத்தில் முள்ளிவாய…

  12. இந்தியாவில் ஜனாதிபதியினால் நாட்டி வைக்கப்பட்ட அரச மரம் வேறு இடத்திற்கு இடமாற்றம்? 15 அக்டோபர் 2012 இந்தியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் நாட்டி வைக்கப்பட்ட அரச மரக் கிளை வேறும் இடத்திற்கு நகர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்படம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சாஞ்சி பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சர்வதேச பௌத்த மதக் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி, நேபாள மன்னர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின் போது சாஞ்சிக்கு எட்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்கெடா பகுதியில் ஜனாதிபதி அரச மரக் கிளையொன்றை நாட்டி வைத்தா…

  13. [size=2][size=4]அதிகாரப் பகிர்வுக்கான முன்மொழிவுகள் அடங்கியதும் முன்பு ஆக்கப்பட்டுள்ளதுமான ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி பேச்சுக்களை தொடர வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன், இரு பக்கப் பேச்சுக்களைத் தொடர அரசு சம்மதித்தால் மட்டுமே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குகொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.[/size][/size] [size=2][size=4]இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரிடம் பேசியபின், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதற்கான காரணங்களை இந்திய தலைவர்களுக்கு…

  14. தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் பெயரில் சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவமுகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. நாம் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம் முகாமை அவ் அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடங்கி வைத்தார். பொது மருத்துவம், சர்க்கரை மருத்துவம், இயன்முறை மருத்துவம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட இம் மருத்துவ முகாமில் இருநூறுக்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் நாள் திலீபனின் 25ம் ஆண்டு நினைவு கொண்டாடப்பட்டது. அதனையொட்டியே இம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக நாம் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.seithy.co...&language=tamil

  15. [size=3][size=4]மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர். அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக…

  16. [size=4]அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள 13 ம் திருத்தத்தை தமிழர்கள் அனுபவிக்க தடை போடுவதன்மூலம், அரசாங்க ஊழியரான பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தனது வரம்பை மீறி பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் லண்டன் பிபிசியின் சந்தேசிய சிங்கள வானொலி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். [/size] [size=4]இந்த பேட்டியில் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டதாவது, நீங்கள் உள்ளூராட்சி தேர்தல் முறைமை மாற்றம் பற்றி கேட்கின்றீர்கள். புதிய சட்டங்களை பற்றி கேட்கின்றீர்கள். எமக்கு இன்றுள்ள முதன்மை பிரச்சினை இதுவல்ல. ஜனாதிபதியின் சகோதரரான கோத்தாபய ராஜபக்ச 13ம் திருத்தத்தை அகற்ற வேண்டும் என்றும், மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்றும் பேசுகிறார். இ…

  17. [size=5]மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்க முடியாதுள்ளது. - ஐ.நா.[/size] [size=4]முல்லைத்தீவில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குமாறு உள்ளுர் தொண்டு நிறுவனங்களும், பொது அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்குரிய அனுமதி தங்களுக்கு இல்லையென அதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஜோன் பிறையன், எமது கொழும்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உதவிகளை வழங்க முடியுமென்றாலும், அதற்கு தேவையான நிதி தற்போது இல்லையெனவும் எதிர்காலத்தில் உதவிகளை வழங்குவத…

  18. புதுடில்லியில் எரிக்..! இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாராம். [Monday, 2012-10-15 09:46:33] இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன் தினம் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார். இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ௭ரிக் சொல்ஹெய்மும் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற சமயம் சமாதானத் …

  19. "பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது.? - தோழர் கொளத்தூர் மணி செவ்வி [Monday, 2012-10-15 10:03:50] இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். "நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?" "கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுக…

  20. தமிழர் நிலங்களைபறிப்பது தமிழினத்தை அடியோடு அழிக்கும் திட்டமிட்ட செயல்: மன்னார் ஆயர் சிறீலங்கா | ADMIN | OCTOBER 15, 2012 AT 10:47 எமது பரம்பரைக் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவது தனிநபர் பிரச்சினை அல்ல. இது பெரும் சமூகப் பிரச்சினையுமாகும். எமது சமூகமே இதனால் அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை. உணவு, தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காகவும் மக்கள் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்குடன் காணி கொள்கைக்கு எதிரான தேசிய எதிர்ப்பு வாரம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மன்னார் ஞானோதயத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர…

  21. [size=4]ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வுக்கு விற்கு அறிக்கைக்கு முன்னதாக இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்திப்புக்களை நடத்தி வருகிறார்.[/size] [size=4]இதன் ஒரு கட்டமாக அவர் சுமார் 35 சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் குடியியல் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.[/size] [size=4]இதன்போது, போருக்குப் பின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றமான நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.[/size] [size=4]இந்த நிலையில், ஜெனீவாவில் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நொவம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறும் சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வு நடைபெறவுள்ளது.[/size] [size=4]இலங்கை தொடர்பான மீளாய்வு நொவம்பர் 1ஆம…

    • 0 replies
    • 516 views
  22. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் இராணுவப் புலனாய்வு மற்றும் துணை இராணுவக் குழு உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச்' செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் கொக்குவில் பொற்பதிக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த எஸ் வசந்தகுமாரை வழிமறித்த இனம்தெரியாதநபர்கள் அவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் காணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை பலாத்காரமாக ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கே படைமுகாமை அமைப்பதற்கு எதிராக நாளை வழக்குத் தாக்கல் செய்வதற்கான தயாரிப்புகளி…

  23. http://passionparade...s-at-wheel.html [size=5]It’s a rare scene in the Jaffna peninsula. These 10 women in Jaffna have come forward to take up a different and challenging livelihood option, and became tuk tuk drivers!The Women’s Education and Research Centre (WERC) opened a new avenue for the women who were in constant search for a sustainable source of livelihood, and driving tuk tuk was a novel option. “The programme comprised two parts. The first part entailed gender sensitisation, building leadership qualities, personality development and understanding women’s rights and development. The second component was to provide training in trishaw driving” ex…

  24. [size=4] [/size] [size=4]இலங்கை .lk ஆள்களப் பதிவகம் நடத்திய 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத் தெரிவுப்போட்டியில் சிறந்த தமிழ் இணையத்தள விருது வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. [/size] [size=4]அத்துடன் இணையச் செய்தியாக்கத்துக்கான வெண்கல விருதினையும் வீரகேசரி தனதாக்கிக்கொண்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கையில் .lk ஆள்களப் பதிவகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களுக்கிடையில் கடந்த மாதம் இறுதி மூன்று வாரங்கள் போட்டி நடைபெற்றது. உள்ளடக்கத் தகவல்களின் தரம், இணையத்தள மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் துறைசார் நிபுணர்…

    • 0 replies
    • 565 views
  25. (from twitter DushiYanthini KGD ‏[size=3]) [/size]"We need water"~written on clay pot and carried along at today's protest. [size=5]Don't grab our land&sea to build hotels&military camps"~protesters chant in Colombo. [/size]#SriLanka[size=1]http://[/size]twitpic.com/b4brps "Ensure food sovereignty for all (Sinhalese,Tamils,Muslims&Burghers)"~protesters demand.#SriLanka

    • 3 replies
    • 514 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.