ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது. தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக அமையுமென்பதனை குறித்த நாடுகளு…
-
- 167 replies
- 7.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொதுவான யாப்பின் அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட கட்சியாகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி நீண்டகாலமாக உள்ளார்ந்த கருத்தாடல்களை முன்னர் அதன் அங்கத்துவக் கட்சிகளாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ) ஆகியன தங்களுடன் மேற்கொண்டு வந்தமையை நீங்கள் அறிவீர்கள். இதனடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டு தை மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டமையும் தாங்கள் அறிந்ததே. இப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையகம் அங்கத்துவக் கட்சிகளின் ஒப்புதல் கடிதத்தைக் கோரியிருந்தமையும் பதினைந்து மாதங்களாகத் தமிழரசுக்கட்சி அத்தகைய ஒப்புதல் கடிதத்தினை வழங…
-
- 3 replies
- 833 views
-
-
தமிழர் தாயகத்தின் மீதான சுரண்டல் பல்வேறு வடிவங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் அவை தொடர்பில் கேள்வி எழுப்பியர்களை இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கமுற்பட்ட சம்பவம் ஒன்றும் அதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகவே எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமும் முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பெறக்கூடிய அனைத்து வளங்களையும் வாரிச்சுருட்டிக்கட்டிக் கொண்டு தென்னிலங்கைக்கு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கமும் இராணுவமும் பெரும்பான்மை இன மக்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்கு உதாரணமாக முக்கியமான போக்குவரத்து வீதிகள், வழிபாட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி விற்பனை நிலையங்களை நிறுவுதல் அந்தப் …
-
- 0 replies
- 623 views
-
-
இந்திய வீட்டுத்திட்டம் நிறைவு பெற இன்னும் மூன்று வருடங்கள் தேவையாம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 4, 2012 AT 10:22 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புப் பணிகள் முழுமை பெற மூன்று வருட காலம் தேவை என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இரண்டாம் கட்டப் பணிகளின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வீடமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான பணம் சம்பந்தப்பட்ட வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். http://thaaitamil.com/?p=34269
-
- 0 replies
- 265 views
-
-
இந்தியப் பயணத்துக்குப் பின்னர் மகிந்தவுக்கு வந்த ஞானோதயம். கட்டுரைகள் | ADMIN | OCTOBER 4, 2012 AT 09:58 இந்த நூற்றாண்டின் மகா புத்திசாலியென்று தன்னைக் கருதும் மகிந்த தானொரு முட்டாள் என்பதனை மறந்துவிட்டுச் செயற்படும் செயல் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகத் தமிழினத்தை அழிக்க ஏவிய மகிந்த அரசு இராஜதந்திர வலையில் சிக்கித் தவிக்கிறது என்பதே யதார்த்தமான நிலை. செய்யும் அனைத்து முட்டாள்த் தனமான வேலைகளையும் செய்துவிட்டு பகிரங்கமாகவே தப்பிக்க எண்ணும் அனைத்துத் திட்டங்களும் தவிடுபொடியாக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கோரப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் கிடப்பிலேய…
-
- 3 replies
- 520 views
-
-
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 800 பேர் வருடாந்தம் இந்தியாவில் பயிற்சி பெறுகின்றனர் - இராணுவத் தளபதி 04 அக்டோபர் 2012 இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 800 பேர் வருடாந்தம் இந்தியாவில் உள்ள பயற்சி கல்லூரிகளில் பயிற்சி பெற்று வருவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு காரணமாக இலங்கை இரihணுவத்தினருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளில் எந்த குறைவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அனுராதபுரத்தில் அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார். இதனடிப்படையில், இந்திய - இலஙகை இருதரப்பு இராணுவ பயிற்சிகளுக்காக இராணுவத்தின் விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ படைப்ப…
-
- 0 replies
- 297 views
-
-
வவுனியா வடக்கில் தமிழ் கிராமங்களில் சிங்களவர்கள் குடியேற்றம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 4, 2012 AT 10:27 வவுனியா வடக்கிலுள்ள பல தமிழ்க் கிராமங்களில் பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தனிக்கல், டொலர் பாம், கென்ற் பாம் ஆகிய பாரம்பரிய தமிழ்க் கிராமங்களே இவ்வாறு சிங்களக் கிராமங்களாக உருமாறி விட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா வடக்கிலுள்ள நெடுங்கேணிப் பிரதேசத்தின் வெடிவைத்தகல்லுக் கிராமத்துக்கு அப்பால் எந்தவொரு தமிழ் அதிகாரிகளோ அல்லது மக்களோ செல்ல முடியாத அவல நிலையே நீடிப்பதாகத் தெரிய வருகின்றது. மேலும் 1984 ஆம் ஆண்டு வவுனியா வடக்கின் பல கிராமங்களிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த இடங…
-
- 0 replies
- 435 views
-
-
பாகிஸ்தான் உளவுப் பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா இலங்கையுடன் பேச்சுவார்த்தை 04 அக்டோபர் 2012 பாகிஸ்தான் உளவுப் பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் முக்கிய உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டு வருவதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தமாங இந்திய வெளிவிவகார அமைச்சு க்யூ காவல்துறையினருக்கு அறிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உளவுப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனரா என்பது குறித்து ஆராய்ந்த…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட சபைத் தலைவர் ஆனந்தராஜிற்குஎதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இன்று இடம்பெற்ற சபையின் மாதாந்த கூட்டத்தின்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு, ஆதரவாக 4பேரும், எதிராக 3 பேரும் வாக்களித்திருந்தனர். எனவே சபைத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேலதிக வாக்கால் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை, ஈ.பி.டி.பியின் 2 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. …
-
- 0 replies
- 765 views
-
-
[size=3]வருத்தப்பட்டு கருத்து சொல்லும் பிரணாப் முகர்ஜி ..! உழவன் மகன் உழவனாக வரவில்லையாம்..? ஈழதேசம் பார்வையில்..![/size] [size=3]விவசாயிகள் விதர்பாவில் லட்சக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள். எப்பொழுது பத்து வருடங்களுக்கு முன்பு அல்ல..வருடம் தோறும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? மகராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் அல்ல. பீகாரில் ஜார்கண்டில், ம.பி.யில், உ.பி.யில், க.பி.யில், ஆ.பி.,யில் விவசாய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் இன்று இந்தியா முழுதும் விபச்சாரத்தில் இறங்கி, தங்களின் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு..? [/size] [size=3]இந்த உ.பி. ம.பி. க.பி.ஆ.பி. இவர்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டார்கள் வட கிழக்கு மாநிலத்தின் பெண்கள் எ…
-
- 0 replies
- 725 views
-
-
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ச்சியாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவரை உடனடியாக விடுவிக்கும்படி உயர்நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்தது. திகன பிரதேசத்தைச் சேர்ந்த தங்கராசா ரமேஷ்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பாகவே இந்த கட்டளையை மூவர் கொண்ட நீதியரசர் குழுமம் பிறப்பித்தது. சந்தேகநபர் மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கண்டி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 7 வருடங்களுக்கு ஒத…
-
- 0 replies
- 639 views
-
-
கர்நாடக மக்கள் போராடினால் வேடிக்கைப் பார்க்கும் போலீசு...தமிழக மக்கள் போராடினால் இந்தியாவின் எதிரியைப் போல அடக்கி ஒடுக்குவதா..? ஈழதேசம் பார்வையில்..! காவிரி நதி நீர் ஆணையம்,தமிழகத்திற்கு தினமும் இரண்டு டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மண் மோகன் சிங் அவர்கள் உத்தரவு போட்டுள்ளார் திராவிட இனமான கர்நாடக அரசுக்கு..! . என்ன மாயமோ..என்ன அதிசயமோ..! சத்தமே போடாமல் ஒரு இரண்டு நாளாக காவிரியில் தண்ணீர் விட்டது கர்நாடக அரசு. பார்த்தார் நம்ம தேவ கவுடா அவர்கள். அவரின் கட்சியான மத சார்பற்ற ஜனதா தளம் ஒரு எம்.பி.மற்றும் நான்கு ச.ம.உ. காரர்கள் அவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். நம்ம உலகத் தமிழ் தலைவர் மு.க., வைப் பின்பற்றி இந்த ஐந்து பேரிடமும் சும்மா ஒரு பேச்சுக்கு…
-
- 1 reply
- 952 views
-
-
தீர்வுக்கு அல்ல; மீள்குடியமர்வுக்கே இந்தியா வழங்குகிறது முன்னுரிமை; மன்மோகன் சிங் தெரிவிப்பு ஈழத் தமிழர்கள் விடயத்தில், போருக்குப் பின்னர், அவர்களின் மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கே இந்தியா கூடுதல் முன்னுரிமை கொடுத்து வருகின்றது; அரசியல் தீர்வுக்கல்ல என்ற சாரப்பட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த மாதம் 20 ஆம் திகதி ஈழத் தமிழர் விவகாரம் குறித்து மன்மோகனுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு அவர் பதிலளித்துள்ளார். தனது கடிதத்தில் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாணிக்கம் பண்ணை (மனிக் பாம்) முகாமை பலாத்காரமாக மூடி அங்கு எஞ்சியிருந்த மந்துவில்,கேப்பாபிலவு மக்களை தற்காலிகமாக சிங்கள அரசு மீள்குடியமர்த்தியுள்ளது.கேப்பாபிலவை சேர்ந்த 110 குடும்பங்கள் தற்காலிகமாக சூரியபுரம் காட்டுப்பகுதியில் தனியார் காணி ஒன்றில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிதண்ணீர்வசதிகளை அமைத்து கொடுக்கவென 5 குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து அந்த மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது குறித்து கவலை தெரிவித்த பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர், எங்களுக்கு இதுபோன்ற வசதிகளை அமைத்து தந்து இவர்கள் இங்கேயே நிரந்தரமாகக் குடியமர்த்த திட்டமிட்டு வருகின்றனர். எங்களை எங்கள் சொந்த காணியில் குடியமர அனுமதித்தாலே போதும். நாங்கள் எங்…
-
- 0 replies
- 722 views
-
-
சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் பல பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர்களைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அனைத்திலங்கைப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளன ஒருங்கிணைப்பாபளர் சஞ்ஜீவ பண்டார, கொழும்பு கோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்துகளுக்குச் சேதமேற்படுத்தினார் என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலேயே மேலும் பல பல்கலைக்கழக மாணவர் சங்க முக்கியஸ்தர்களைக் கைது செய்யத் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சிக்கின்றனர்.சஞ்ஜீவ பண்டாரவுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். இதேவேளை, அனைத்த…
-
- 0 replies
- 633 views
-
-
சிறீலங்கா பொலீசாரின் அடாவடி; புதுக்குடியிருப்பில் நடுவீதியில் வைத்து இருவர் தாக்குதல் தொடர்கிறது தமிழரின் அவலம் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை மேட்டார் சைக்கிலில் பயணித்த இருவரை வழி மறித்த சிறீலங்கா காவல்துறையினர் நடுத் தெருவில் வைத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை புதுக்குடியிருப்பு குழந்தை யேசு வீதியில் மேட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரு சகோதரர்களை வழி மறிந்த சிறீலங்கா காவல்துறையினர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக நடுத் தெரிவில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேட்டார் சைக்கிள் ஓட்டுனருடன் சென்ற அவரது சகோதரி என…
-
- 1 reply
- 664 views
-
-
[size=3][size=4]இந்திய அரசாங்கம் இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சீனா அல்லது வேறு நாடுகளில் படையினருக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவை விடவும் இந்தியா மீது இலங்கையின் பார்வை விசாலமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]அண்மையில் தமிழகத்தில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருத்தமளித்த போதிலும், இந்தியாவையோ அந்நாட்டு மக்களையோ இலங்கையர்கள் எதிர்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா அல்லது பாகிஸ்தானிலேயே படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதா…
-
- 0 replies
- 517 views
-
-
[size=4][/size] [size=4]கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை மீறி அங்கு ஜனநாயக முறைக்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு என்னென்ன இணக்கப்பாடுகளைச் செய்துள்ளது என்பதை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தற்கொலைக் குண்டுத் தாக்குதலை எவ்வாறு நடத்துவது, வாகனங்களையும் ஆட்களையும் எவ்வாறு கடத்துவது என தெரிந்துகொள்வதற்காகவா பிள்ளையானுக்கு அரசுத்தலைவருக்கான ஆலோசகர் பதவி� வழங்கப்பட்டது என்று கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார்.[/size] [size=4]எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அ…
-
- 0 replies
- 543 views
-
-
[size=4]குரோதத்தை வெளிப்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக குரோத வெளிப்பாடுகள் இடம்பெற்றால் அதனை தடுக்க தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.[/size] [size=4]கலாச்சாரம், மத நம்பிக்கை மற்றும் மரபுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]தொலைதொடர்பு சேவை வழங்குனர் மற்றும் கட்டுப்பாட்டாளர் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போமே சிறிலங்கா ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 321 views
-
-
[size=4][/size] [size=4]இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டும் நோக்கில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டார்கள் இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.[/size] [size=4]இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளை தோண்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது. படையினர் இரசாயன ஆயுத…
-
- 0 replies
- 444 views
-
-
முருகன் கோயில் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்: தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி விகாரை அமைக்கும் சூழ்ச்சியா? தாண்டியடி ஆலய நிர்வாகத்தினர் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் விகாரை அமைக்கும் நடவடிக்கைக்காகவா திருக்கோவில், தாண்டியடி, சங்கமன்கண்டிமலை முருகன் ஆலய நிர்மாணப் பணிகள் நடைபெற்று முடிவுறும் நேரத்தில் நிர்மாணப் பணிகளை தொல் பொருள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது என்று ஆலய நிர்வாகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக இந்து கலாசார திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பல நூற்றாண்டுகளாக கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் தங்கித் த…
-
- 1 reply
- 557 views
-
-
[size=4]மத்திய அரசுக்கு மு.க. மற்றும் ஜெ எழுதும் கடித லட்சணம்..! மக்களை மாங்காய் மடையர்கள் என்று நினைக்கிறார்கள்..?! ஈழதேசம் செய்தி..![/size] [size=4] 2009 - ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து தான் பதவி விலகிய 2011 - ம் ஆண்டு வரை சோனியா தலைமையில் மன்மோகன் சிங் பிரதமர் அவர்களுக்கு எத்துனை கடிதம் எழுதியிருக்கிறார். எதைக் கேட்டாலும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்பது, கடிதம் எழுதினாலே கோரிக்கை எல்லாம் முடிந்து விட்டது போன்ற மாயையை பித்தலாட்டத்தை மோசடித்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும், இவர்கள் எழுதும் கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் யாரும் பார்ப்பதில்லை என்பது போல் தான் இருக்கிறது. அண்மையில் முதல்வர் ஜெ அம்மையார் காவிரி குறித்து க…
-
- 0 replies
- 478 views
-
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல : அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல எனவும் வேறு இடம் ஒன்றில் வைத்து தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் கொண்டு சென்று போட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மட் ஆகியவற்றையும் விபத்தில் சேதமடைந்தாக தெரியும் வகையில் சேதப்படுத்தி அந்த இடத்தில் போட்டுள்ளதாகவும் இது பாரதூரமான படுகொலை சம்பவம் எனவும் காவற்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மரணங்கள் தொடர்பாக வீதியில் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் முதலில், கம்பஹா தலைமையக காவற்துறையின்…
-
- 0 replies
- 447 views
-
-
[size=4]இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் எழுதப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்றப் பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழர்களின் மற…
-
- 3 replies
- 849 views
-
-
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு ம.வி பாடசாலையில் இடம் பெற்றது. மகாத்மா காந்தியின் 143 ஆவது பிறந்த நாளான இன்று குறித்த வீட்டுத் திட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 43 ஆயிரம் வீடுகள் வடக்கில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கும் ஏணைய 7 ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாண மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை பெரிய மடு ம.வி பாடசாலையில் இடம் பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வின் போது பொருளாதா…
-
- 0 replies
- 480 views
-