ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
அரசியல் கட்சியுமல்ல பொது ௭திர்க்கட்சியும் அல்ல - ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு பொன்சேகாவின் புதிய அமைப்பு! [Tuesday, 2012-10-02 11:22:44] நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும் 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச்செய்து 17 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தும் வகையிலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் வகையிலும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் பொது அமைப்பு ஒன்றை ௭திர்வரும் 18 ஆம் திகதி உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த பொது மேடையானது அரசியல் கட்சியுமல்ல. பொது ௭திர்க்கட்சியும் அல்ல. தேர்தல்களில் போட்டியிடும் ௭ண்ணமும் ௭மக்க…
-
- 0 replies
- 322 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த பின்னர், பான் கீ மூன் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. இதற்காக சில கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன்னதாகவே சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும் பான் கீ மூன் உரையாற்றும் போது, கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பிற்பகல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச்செயலாளரது ஊடக சந்திப்பும் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன் வழமையாக இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகளின் பேச்சாளர…
-
- 0 replies
- 512 views
-
-
கொழும்பு-2, கொம்பனி வீதியில் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள ஏழு ஏக்கர் காணியை இந்திய டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறித்த காணிகளில் அங்கு வாழும் மக்கள் வீடுகளை அமைத்துள்ளனர் என்றும் அவற்றுக்கான உறுதிப்பத்திரங்களை அவர்கள் வைத்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் வாதம் புரிந்த பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தோன்றிய சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, அரசாங்கம் இந்தக் காணிகளைச் சுவீகரித்து இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதன் மூலம் அதில் வாழந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த காணிகளைச் சுவீகரிப்பதற்…
-
- 0 replies
- 512 views
-
-
இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான கே.எஸ்.பிரார் லண்டன் நகரின் பிரதான வணிக வீதியான ஆக்ஸ்போர்ட் சர்க்கஸில் ஞாயிறு இரவு அடையாளந்தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனெரலான குல்திப் சிங் பிரார், 1984ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதம் ஓங்கியிருந்தபோது, அந்த அமைப்பிற்கு உத்வேகமளித்த ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலே தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்ற இந்திய ராணுவ நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர் ஆவார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய உயிராபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல என்று இந்திய தூதரக வட்டாரங்கள் கூறின. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. http://thaait…
-
- 0 replies
- 493 views
-
-
இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் கோரிக்கைக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்நாட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர்கள். அவர்கள் மீண்டும் தமது தாய்நாடு திரும்பும் சூழலை இந்நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கை திரும்புவது தொடர்பில் இந்தியாவில் உள்ள இலங்கையர்களது விருப்பங்கள் அறியப்பட வேண்டும். இந்த நடவடிக்கைக்களையே முதலில் செய்யப்பட வேண்டும். எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இவைகளை செய்யாமல், இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அனைத்து இலங்கை தமிழர்களுக்கும், இந்திய குடியுரிம…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டும் - பான் கீ மூன் 02 அக்டோபர் 2012 இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். http://www.globaltamilnews.net…
-
- 0 replies
- 309 views
-
-
நோர்வேயில் 25 தமிழ் குடும்பங்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம் 02 அக்டோபர் 2012 நோர்வேயில் சுமார் 25 தமிழ் குடும்பங்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நோர்வே நலன்புரி அதிகாரிகளினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீள ஒப்படைக்குமாறு கோரி இந்தத் தமிழ்க் குடும்பங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. ஒஸ்லோவின் டொம் கிர்கன் பகுதியில் தமிழ் குடும்பங்கள் இந்த உண்ணாவிராதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஈராக்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் பெற்றோரின் போராட்டத்திற்கு ஆதரவளித்த…
-
- 0 replies
- 358 views
-
-
கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று இடம்பெற்றது கடந்த மாதம் தேர்தல் நடைபெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றுள்ளது. சபை கூட்டுவதற்கான அனுமதியளிக்கப்பட்ட ஆளுநரின் கடிதம் சபைச் செயலாளரினால் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, சபைக்கான தலைவர் தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் முன்மொழிய முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிந்தார். அதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் …
-
- 0 replies
- 827 views
-
-
உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள கரவெட்டிப் பிரதேச சபைத் தலைவர் திரு வியாகேசு என்பவரது வீட்டின் முன்பாக அதிகாலை சுமார் 50இற்கும் மேற்பட்ட பவுத்த பேரினவாதத்தின் சிங்கக்கொடிகள் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யினரால் ஏற்றப்பட்டுள்ளது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற விளையாட்டுக் கழகம் ஒன்றின் உதைபந்தாட்ட போட்டி தொடக்க நிகழ்வில் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார். அதன் பின்னரே இவரது வீட்டில் இவ்வாறு சிங்க கொடிகள் ஏற்றப்பட்டன. செய்தி :தமிழ்ச் செல்வன் http://thaaitamil.com/?p=34039
-
- 4 replies
- 893 views
-
-
இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றியவர் தேசிய தலைவர் பிரபாகரன் ! 01 October, 2012 by admin உரிமைக் குரல் என்னும் நிகழ்சியில் நடபெற்ற நேர்காணல் ஒன்றை இங்கே தருகிறோம். வின் தொலைக்காட்சியில் நடந்த உரிமைக்குரல் நிகழ்சியில் சி.பாஸ்கரன் அவர்கள் சீனிவாச ராவ் அவர்களையும், பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை நேர்காணல் கண்டுள்ளார். நிச்சயம் பார்க்கப்படவேண்டிய காணொளி ! http://www.athirvu.c...ments=1&id=3722
-
- 1 reply
- 670 views
-
-
மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள் [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012, 02:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 2000 பேர் இன்று சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக, இந்த ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5000 பேரை, சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதற…
-
- 3 replies
- 1.6k views
-
-
புலிகளின் "பிஎப்எல்டி" என்ற தனிநாடு கோரும் அமைப்பு செயல்படுகிறது... தமிழக அரசு புது குண்டு! Published: திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2012, 10:58 [iST] சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான் தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு சரியானது என்பதற்கான ஆதாரங்களாக 2 வால்யூம் ஆவணங்களை இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது. கியூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரி சம்பத்குமார் இட்ந்ஹ ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக…
-
- 1 reply
- 719 views
-
-
TNA பிளவடையக் கூடிய சாத்தியம் - இந்திய ஊடகம் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 01 அக்டோபர் 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனிக்கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தனிக்கட்சியாக பதிவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டுமென வலிறுயுத்தி வருவதாக குறித்த இந்த…
-
- 3 replies
- 763 views
-
-
[size=4]இலங்கையர்களுக்கு குடியுரிமை[/size] [size=4]தமிழ் நாட்டின் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]வாழும் கலைப் பயிற்சி குரு, ஸ்ரீ ரவி சங்கர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.[/size] [size=4]25 – 30 வருடங்களாக தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.[/size] [size=4]அவர்கள் அடிப்படை வசதிகளும், குடியுரிமையும் இன்றி வாழ்ந்து வருவதைக் கொண்டு, தமிழ்நாடு பெருமையடைய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]அவர்களை மனிதாபிமான ரீதியாக நோக்குவது இந்தியாவின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். [/size] [size=4]http://www.hirunews.lk/tamil/443…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்தியாக ஒரு வலுவான இயக்கமாக செயற்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்பமாக உள்ளது. கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் பல நடவடிக்கைகள் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில் இது குறித்து தமிழ்லீடர் கேள்வி எழுப்பியது. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவை இன்று அதிகமாக உள்ளதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களுக்கான தீர்வு, மக்களுக்கான உதவி, முன்னாள் போராளிகளின் விடுதலை, நிதிப்பங்கீடு, தமிழ் மக்களின் பலம் உட்பட பல விடயங்கள் குறித்து தமிழ்லீடரிடம் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் பெயர…
-
- 2 replies
- 914 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை - மனோ கணேசன் சரியான திசையில் செல்கிறாரா..? ஈழதேசம் பார்வையில்..! இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து சரியானது அல்ல என்று இன்று மனோ கணேசன் அவர்கள் கூறியுள்ளார் . இந்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர்கள் மீண்டும் தமது தாய்நாடு திரும்பும் சூழல் இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும். இலங்கை திரும்புவது தொடர்பில் இந்தியாவில் உள்ள இலங்கையர்களது விருப்பங்கள் அறியப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் முதலில் செய்யப்பட வேண்டும். இவைகளை செய்யாமல், இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அணைத்து இலங்கை தமிழர்களுக்கும், இந்திய குடியுரிமை வழங்க வே…
-
- 0 replies
- 688 views
-
-
தாய், தகப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் தனித்திருந்த எட்டு வயது தமிழ்ச்சிறுமி கடத்தப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை வடக்குப் பிரதேசத்தில் உள்ள திரியாய் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சமாதானப் பாதை, திரியாய் ௭ன்ற இடத்தில் உள்ள புலேந்திரன் ௭ன்பவரது புதல்வியான புலேந்திரன் திலக்ஷா (8) ௭ன்ற சிறுமியே இவ்வாறு மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்திலும் ஒரு கையிலும் வெட்டப்பட்ட நிலையில் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் காணப்பட்டதாக தந்தை புலேந்திரன் தெரிவித்தார். தாயார் வெளிநாடு சென்ற நிலையில் தந்தையும் தொழிலுக்காக வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பிள்ளைகளில் சிறிய பிள்ளையான இச் சிறுமி கொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உயர்மட்டத் தளபதிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படைகளின் தளபதியான றியர் அட்மிரல் துசித வீரசேகர முன்கூட்டியே ஓய்வுபெற்றுச் செல்கிறார். வைஸ் அட்மிரல் கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், இவர் ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தள்ளார். இவர் ஒய்வுபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், புதிய தளபதி நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் முன்கூட்டியே ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். முன்னதாக இவர் வடக்கு கடற்படைத் தளபதியாகவும், பிரதித் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய போது, சிறிலங்கா கடற்படையின் மு…
-
- 0 replies
- 438 views
-
-
சுருங்கிய தோல்கள், மங்கிய கண்கள், நரைத்த முடி ஆகியவற்றுடன் அனைவரது குடும்பத்திலும் இருக்கின்றனர் முதியோர். வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் பெற்ற குழந்தைகளுக்காக உழைத்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி நிற்கின்றனர். இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஒக்டோபர் 1ம் திகதி, சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன…
-
- 0 replies
- 2k views
-
-
[size=3]பராக்...! பராக்..! விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி...( PFLT ) தமிழகத்தில் .? சொல்கிறது கியூ பிரிவு..! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பு, இந்த அமைப்பின் நோக்கம் ' தமிழ் நாட்டையும் இலங்கையில் உள்ள ஈழத்தையும் ஒன்றாக இணைத்து தனி நாடு பெறுவதே ' என்று தமிழக உளவுத் துறையின் எஸ்.பி.சம்பத் குமார் இன்று தெரிவித்தார். சட்ட விரோத நடவடிக்கைகள் [/size][size=3] ( தடுப்பு ) தீர்ப்பாயம் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிக்கும் விசாரணை அமைப்பின் நீதிபதி வி.கே.ஜெயின் அவர்களிடம் இவ்வாறு கூறியுள்ளது தமிழ் நாட்டின் கியூ பிரிவு போலீஸ். [/size] [siz…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=3]ரியல்எஸ்டேட் புரோக்கர்களின் அட்டூழியம்..! ஆறு பேர் எரித்துக் கொலை..! குடிசை தீ வைப்பு..! உச்சிபுளியின் தோப்புவளசை கிராமத்தில்..! ராமநாதபுர மாவட்டமே பெரும் சோகத்தில்..! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] காளிமுத்து என்ற 30 வயதுடைய திருமணமான பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் மற்றும் தந்தை கருப்பையா என்பவர்கள் அனைவரும் இரவில் தூங்கிக் கொண்டிருக்கையில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். ஒரு குடும்பமே தீ வைத்து எரித்து கொல்லப்படுவது நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுர மாவட்டத்தில்..! மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தங்களது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனியாக வசித்து வந்த காளிமுத்துவின் கணவர் கள்ளழகர் சவுதி அரேபியாவி…
-
- 1 reply
- 1.7k views
-
-
டெசோ தீர்மானத்தை எடுத்துக் கொண்டு எதிர்வரும் 6ம் திகதி நியூயோர்க் செல்கிறார் மு.க.ஸ்டாலின்! September 29, 2012 01:01 pm தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்தது. இதில் இலங்கை தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததால். ஐ.நா சபையிடம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தி.மு.க சார்பில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் வருகிற 3-ந் திகதி தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்ன…
-
- 2 replies
- 558 views
-
-
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சீனப்பிரஜை - பொலிஸார் உள்ளிட்ட நால்வர் பலி! [Monday, 2012-10-01 07:31:52] புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அத்துறுகிரிய அதிவேக நெடுஞ்சாலையின் துன்ஹந்தஹேன பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். துன்ஹந்தஹேன பிரதேசத்தில் பயணித்த கப் ரக வாகனமொன்று தடம்புரண்டதிலேயே அதில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். சீனப்பிரஜை ஒருவரும், இரு பொலிஸாரும் (அசங்க, தனுக), வாகனத்தின் சாரதியுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://seithy.com/breifNews.php?newsID=67618&category=TamilNews&la…
-
- 1 reply
- 308 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு தெரிவாகிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வீட்டில் பாரிய வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனுக்கு சொந்தமான வீட்டிலிருந்தே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குண்டுகளை இனங்கண்ட பொலிஸார் - குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் அக்குண்டுகளை மீட்டுள்ளனர். மாகாணசபை உறுப்பினர் இன்று திருகோணமலையில் ஆரம்பிக்கவுள்ள கூட்டத்தொடரில் பங்குபற்றச் சென்றுள்ளதால் அவரை விசாரணைக்குட்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸார் மேலும் தொரிவித்தனர்.[/size] http:…
-
- 2 replies
- 514 views
-
-
[size=2] [size=4]அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை. [/size][/size] [size=2] [size=4]இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=2] [size=4] இந்தச் சூழ்நிலையில் இந்த மக…
-
- 7 replies
- 529 views
-