ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
[size=4]கிழக்கு மாகாணசபைக்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 104,682 வாக்குகள் கிடைத்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட சுமார் 38,000 அதிகப்படியான வாக்குகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் 6 ஆசனங்களை வென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதனை படைத்துள்ளது. அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 64,190 வாக்குகள் கிடைத்துள்ளன. ஆளும்கட்சிக…
-
- 0 replies
- 561 views
-
-
[size=4]நடைபெற்ற கிழக்குமாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோகவெற்றியீட்டியுள்ளதாக தற்பொதைய தகவல்கள் தெரிவித்துள்ளன.[/size] [size=4]மட்டக்களப்பு மாவட்டம்:[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 104,682 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 64,190 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 23,083 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.[/size] [size=4]ஐக்கிய தேசியக் கட்சி 2,434 வாக்குகளைப் பெற்றபோதிலும் ஆசனம் எதனையும்…
-
- 0 replies
- 441 views
-
-
[size=4]புறநானுற்றுக் கருத்துக்களை மேடைதோறும் பேசிவரும் கலைஞர் தமிழ்ப் பழமொழிகளை அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசுகளினால் ஈழத் தமிழினம் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலான அகிம்சை வழிப் போராட்டங்களும், பின்னர் ஆயுதப் போராட்டமும் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலியெடுத்தது.[/size] [size=4]ஈழத் தமிழினம் கோரியது சிங்களத் தேசத்தின் பிரதேசங்களை அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் தாம் வாழ்ந்த நிலப்பரப்பைத் தாமே ஆளும்அதிகாரத்தை மட்டுமே கேட்டுப் போராடிய போது, சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் வன்முறையத் திணித்து தமிழர்களை அடக்கி ஒடுக்க முற்பட்டன.[/size] [size=4]தனது அரசியல் வாழ்க்க…
-
- 0 replies
- 773 views
-
-
கபிலவஸ்து புனிதப் பண்டத்தை அலரி மாளிகையில் காட்சிப்படுத்தும்முயற்சி தோல்வி? 09 செப்டம்பர் 2012 இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கபிலவஸ்து புனிதப் பண்டத்தை அலரிமாளிகையில் காட்சிப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல்வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், இதற்குஇந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த காரணத்தினால் இரு நாடுகளுக்கும்இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் ஊடாக, ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவிற்…
-
- 0 replies
- 437 views
-
-
மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல்:செல்வம் எம்.பி கண்டனம். By General 2012-09-09 11:10:36 மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த காடையர் குழுவொன்று குறித்த ஆலயத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு,பட்டாசுகளை கொளுத்தி குறித்த ஆராதனையினைக் குழப்ப முயற்சி செய்தமை மத அனுஸ்டானங்களையும்,இன ஒற்றுமையையும் சீர் குலைக்கும் செயலாகக் காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்…
-
- 0 replies
- 304 views
-
-
போரில் அழிந்த முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஆரம்பமானது பாடசாலை! 08 செப்டம்பர் 2012 கடந்த காலப் போர் அழிவுகளால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயம், புதுக்குடியிருப்பில் புதுக்குடியிருப்பு றோ.க.த.க. வித்தியாலயம், என்பன மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறுதிப் போரின் போது இடம்பெயர்ந்து மனிக்பாம் நலன்புரி நிலையங்கள் மற்றும் வேறு பாடசாலைகளில் பல இடர்களுக்கு மத்தியில் கல்வியைக் கற்று வந்த இவ்விரு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் தமது சொந்தப் பாடசாலைகளில் ஆர்வத்துடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு பாடசாலைகளிலும் புதுக்குடியிருப்புக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3240 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1448 முஸ்லிம் காங்கிரஸ் 463 ஐக்கிய தேசிய கட்சி 58 http://www.virakesari.lk/article/provincialelection2012.php?vid=76
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
[size=4]தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் ஜூனியர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர் செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முன்னாள் தூதுவரான ரொபர்ட் ஓ பிளெக், இறுதியாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார்.[/size] [size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48190-2012-09-07-12-28-03.html[/size]
-
- 3 replies
- 1k views
-
-
[size=4]இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு இந்திய மத்திய அரசு கொண்டுசென்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டில் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தினால் விசேட விமானம் அழைத்து வரப்பட்டதுடன் அதற்குமுன்னர் இலங்கையிலிருந்து சென்ற இரு கால்பந்தாட்ட அணிகள் தமிழக அரசினால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாத்திரிகள் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தின் பின்னரும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இந்திய மத்திய அரசாங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்தது. இந்நிலையில் இவ்விடயத்தை தமிழ்நாடு அரசாங்கத்தின் கவனத்துக்கு இந்திய மத்திய கொண்டு சென்றுள்ளத…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=4]கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்று மாகாணங்களிலும்[size=5] 45 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக[/size] நீதியான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை பொலநறுவை மாவட்டத்தில் அதிகுறைவான 40 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=525
-
- 5 replies
- 809 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச சரியாக செயற்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது. பதிலுக்கு பசில் ராஜபக்சவும் தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்கிறார் என கோபித்துக்குக் கொண்டுள்ளாராம்.[/size] [size=4]இதன் விளைவால் பசில் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பசில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கிழக்கின் நவோதயம் என்ற திட்டத்தை முன்னெடுத்து கிழக்கு அபிவிருத்தி விடயங்களுக்குத் பசிலே முழுமையா…
-
- 3 replies
- 822 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். தமிழகத்திலிருந்து நெடுமாறன் ஐயா . எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள்.-கவிஞர் காசி ஆனந்தன் . ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் அணைவரும் பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு கடலலை பொங்குவது போல் அணிதிரண்டு செல்லவேண்டும் . http://youtu.be/vsyHr2V7TLc http://thaaitamil.com/?cat=263
-
- 0 replies
- 490 views
-
-
விடுதலைப் புலிகளின் தோல்வியை புலம்பெயர் தமிழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையை சில புலம்பெயர் தமிழர்களினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அந்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட முடியும் எனவும், இலங்கைக்கு விஜயம் ச…
-
- 21 replies
- 2.2k views
-
-
[size=4]தமிழ்நாட்டு மக்களாலும், இந்த மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இந்திய மத்திய அரசாங்கமானது தவறிழைத்துள்ளது. இந்தியாவானது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தனது நாட்டில் பிரிவினை என்கின்ற விதையை தானாகவே விதைத்து வருகின்றது. இவ்வாறு எழுத்தாளரும் கவிஞருமான மீனா கந்தசாமி Tehelka ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது: இந்தியாவுக்கு வருகை தந்திருந்த சிறிலங்காவின் உதைபந்தாட்ட அணியானது 'சிறிலங்காவில் எல்லாம் நன்றாக உள்ளது' என்ற மேலெந்தவாரியான செய்தியை தெரிவித்திருந்தனர். …
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3] [size=4]தாயகத்தின் கடல் பிரதேசங்களில் அத்துமீறி சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி சிங்கள மீனவர்களால் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கையால் தமிழ்த்தேசத்து மீனவர்கள் முழுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அண்மையில் மீள்குடியேறிய கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு உட்பட வடக்கு கிழக்கு மீனவர்கள் தமது தொழிலைக் கைவிட்டு வெளியேறவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இதன் மூலம் தமிழ்த்தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை முடக்கி தமிழ்த்தேசத்தின் இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஒட்டுமொத்ததமிழ்ச் சமூகத்தினதும் பிரச்சினையாகக் கருதி அதற்கெதிராகப் போராடவேண்டும். இல்லையேல் மிகக் குறுகி…
-
- 0 replies
- 574 views
-
-
[size=3]”[size=4]மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவேண்டும் என்று முதல்வர் கடிதம் எழுதுவார்; நாங்களும்தான் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்கிறோம் ஆனாலும் தொடர்கதையாக உள்ளது- என்றார் கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கேள்வி:- நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் மீண்டும் நடைபெற்றுள்ளதே?[/size][/size] [size=3][size=4]பதில்:-நமது முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு இன்று கடிதம் எழுதி விடுவார்! அதைப் பற்றி அறிவிப்பு இன்று மாலையோ, நாளைக் காலையிலோ ஏடுகளில் வரும். நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க நாமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், அது தொடர் கதை…
-
- 0 replies
- 534 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவுகள் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் வரலாற்றுக் காலம் முதல் மிக நெருங்கிய பிணைப்பு காணப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]ஆளும் கட்சி முக்கிய அரசியல்வாதிகள், தமிழக அரசியல்வாதிகளை விடுதலைப் புலி உறுப்பினர்களாக சித்தரித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான கருத்துக்கள் இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் பல்வேறு கருத்துக்களை வெளியிட முடியும் எனினும், இந்த கொ…
-
- 0 replies
- 496 views
-
-
[size=4]இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (7-9-2012) நாடாளுமன்ற வளாகத்திற்குள் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.[/size] [size=4]'இந்திய அரசே இராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே!', 'தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதே!' 'போர்க் குற்றவாளி இராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்காதே!' ஆகிய முழக்கங்கள் தாங்கிய அட்டைகளைக் கையிலேந்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.[/size] [size=4]அதே இடத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தொல்.திருமாவளவன் தனியொருவராய் நின்று இராஜப…
-
- 2 replies
- 970 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இலங்கை ஜனாதிபதி மத்திய பிரதேசத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வரும் 20ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய அரசே இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே, தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதே, போர்க் குற்றவாளி இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் கையிலேந்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்ச…
-
- 1 reply
- 538 views
-
-
“மழை விட்டும் தூவானம் விடவில்லை“ என்று சொன்ன கலைஞருக்கும் “போர் நடந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும் ஈழப் பிரச்னை தேர்தல் நேரத்து ஊறுகாய் மட்டுமே என ஜுனியர் விகடன் தெரிவித்துள்ளது. கழுகார் கேள்வி பதில் பகுதியில், வாசகர் ஒருவர் 'பிரணாப் முகர்ஜியை நம்பித்தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்’ என்கிறாரே கருணாநிதி? எனக் கேட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு கழுகாரால் பதிலளிக்கப்பட்டிருந்தது. ” எப்படிப்பட்ட நேர்மையாளரை ஜனாதிபதி ஆக்க கருணாநிதி துடித்திருக்கிறார் பாருங்கள்! கருணாநிதியின் உண்ணாவிரதத்தின்போது, 'கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்’ என்று இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தது. உடனே, உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டார். அத…
-
- 0 replies
- 533 views
-
-
எதிர்வரும் திங்கட்கிழமை (செப் 10) ஜெனீவா- ஐக்கியா நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இக்கூட்டத் தொடர் அமர்வில் சிறிலங்கா தொடர்பில் இந்தியா வகிக்கபோகும் நிலைப்பாடு குறித்த கவனம் தமிழக மட்டத்தில் எழுந்துள்ளது. சிறிலங்காவின் தொடர்பிலான மீளாய்வு ஐ.நா மனித உரிமை அமர்வில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் சிறிலங்கா தொடர்பிலான மீளாய்வின் கடிவாளம் இந்தியா உட்டப பெல்ஜியம மற்றும் பெனின் ஆகிய நாடுகளின் கைகளில் உள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்தியா தொடர்பிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழர் தரப்பு எதிர்பார்புகள் குறித்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஜீனியர் விகடன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழுவிபரம் : இதே நாட்களில், அதாவ…
-
- 0 replies
- 716 views
-
-
எமது அனைத்து உறவுகளும் இந்திய மத்திய அரசுடனேயே தவிர, பிராந்திய அரசுடன் அல்ல. ஆகவே, எமது பிரச்சினைகளை புதுடில்லி அரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்தையர் தெரிவித்துள்ளார். இன்று சபாயநாயகர் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை யாத்திரீகர்கள் தாக்கப்பட்டமை குறித்தும் இதன் பின்னர் தமிழகம் செல்லக் கூடிய இலங்கையர் பாதுகாப்புத் தொடர்பிலும் புதுடில்லி அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கையர் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசியல் காணப்படுகிறது. இவ்வாறான வேலைகளில் சிறியதொரு குழுவினரே செயற்படுகின்றனர். இந்தச் சம்பவங்களுடன் இந்திய மத்திய அரசுக்…
-
- 0 replies
- 626 views
-
-
மன்னார் மாவட்டம் தலைமன்னார் பிரதேசத்தில் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலையத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு, பட்டாசுகளை கொழுத்தி ஆராதனையினை குழப்ப முயற்சி செய்தமையினால் கருஸல் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் கருசல் கிராமம் உள்ளது. குறித்த கிராமத்தில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்த…
-
- 0 replies
- 544 views
-
-
[size=4]Help Freedom From Torture win £5000. Have a look at their profile and cast your vote! They are doing important work on #srilanka asylum seekers being deported - (UK) vote for them so they can win £5000[/size] உங்கள் ஆதரவு தமிழருக்கு உதவும் இந்த அமைப்புக்கு உதவும். இங்கே அழுத்தி உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் [size=3]http://www.lloydsbankinggroupcommunities.com/CommunityFund/cf_org_vote_profile.asp?CFOIDS=10000344[/size] here for the good (and the bad) days: volunteer befrienders care for young torture survivors who are alone - but fast becoming adults. How we'll use the money Abdi's story shows how befriending can help a vulnerable …
-
- 3 replies
- 1.1k views
-
-
Sep 7, 2012 இலங்கையில் சீனா நிலைகொள்வதற்கு உதவும் இந்திய அரசு – செண்பகத்தார்..! முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் முச்குந்த் டுபே (Muchkund Dubey) மிக விரைவில் வெளியிடவிருக்கும் ஆய்வு நூல் பற்றிய செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பு (03.09.2012) இந்து ஒன்லைன் (Hindu Online) வெளியிட்டது. இந்த நூலின் தலைப்பு: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறிவரும் உலகத்திற்கு ஈடுகொடுத்தல் (India’s Foreign Policy Coping with the Changing World) என்பதாகும். கிட்டத்தட்ட எல்லா அயல் நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக முச்குந்த் டுபே சொல்கிறார். (India Faces Threats From Almost All Its Neighbours). இவர் இந்திய வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து …
-
- 6 replies
- 1.1k views
-