ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
[size=3][size=4]தமிழ்நாட்டுக்கு மதவழிபாட்டுக்காக சென்றிருந்த இலங்கையர்கள் வன்முறையான முறையில் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்து இலங்கை தலைநகர் கொழும்பு வர்த்தகர்கள் வியாழன்று கண்டனப் பேரணி நடத்தினார்கள். இதன் ஒருபகுதியாக தங்கள் வர்த்தக நிறுவனங்களையும் இவர்கள் திறக்கவில்லை.[/size][/size] [size=3][size=4]பேரணியின் முடிவில் இலங்கைக்கான இந்திய தூதரிடம் வர்த்தகர்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அந்த மனுவில் இலங்கையிலிருந்து சென்ற விளையாட்டு அணியினர் தமிழ்நாட்டிலிருந்து பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டதையும், இலங்கையிலிருந்து மத வழிபாட்டுக்காக சென்ற 184 யாத்திரிகள் வன்முறை கலந்த ஆர்பாட்டங்கள் காரணமாக பலவந்தமாக …
-
- 10 replies
- 863 views
-
-
[size=4]தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக 1008 தேங்காய்களை உடைப்பதை தவிர்த்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என தமிழ் கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.[/size] [size=4]அவர் மேலும் தெரிவித்ததாவது:[/size] [size=4]இன்று தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. சிறைகாவலர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த சில கைதிகளின் நடவடிக்கை காரணமாக ஏனைய கைதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=4]தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக நடிவடிக்கை எடுக்கபடவிருந்த சமயத்தில் இந்நடவடிக்கை…
-
- 0 replies
- 712 views
-
-
முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள் 1. போராட்டத்திற்காகவும்இ அதன் பின்பு அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் புனர்வாழ்வு முகாமிலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்திருக்கிறது. நீங்கள் எதற்காகப் போராடினீர்களோ அந்த நோக்கம் எய்தப்படாமல் வலுக்கட்டாயமாக வல்லரசுகளின் துணையோடு இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்களது மற்றும் ஏனைய போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா? ஆ: இல்லை. நிச்சயமாக இல்லை.கடந்த முப்பது வருட கால ஆயுதப் போராட்டமே தமிழர்களுக்கென ஒருதனி நிலம் தேவையென்ற யதார்த்தத்தை உலகிற்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் தமிழர்களின் போராட்டமானது வேறு வடிவங்களி…
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=4]இந்தியாவில் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசிய இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் விசாரணை நடத்த வேணடும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இருளாண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,"நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு கடந்த 18.4.2012 அன்று இலங்கை சென்றது. இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.[/size] [size=4]இவர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற…
-
- 2 replies
- 790 views
-
-
[size=2][/size] (ஜெ.டானியல், நவரத்தினம்) [size=2][size=4]தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் காணாமல் போனவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டியும் 1008 தேங்காய் உடைத்து காளியிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சர்வதேச கைதிகள் தினமான செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் காணாமல் போனவர்கள் வீடு திரும்புவதற்கும் வவுனியா, குருமன்காட்டில் உள்ள காளிகோவிலில் காலை 10 மணிக்கு 1008 சிதறு தேங்காய் உடைத்துச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்…
-
- 13 replies
- 649 views
-
-
ஜனாதிபதி மஹிந்த தமிழகம் சென்றுஜெயலலிதாவை சந்தித்து பேச வேண்டும்: ஐ.தே.க. 2012-09-07 09:26:58 டில்லியை விடவும் இலங்கைக்கு தமிழகமே மிகவும் முக்கியமாகும். இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கைக்கு ௭திராக தமிழகத்தில் காணப்படுகின்ற முரண்பாடுகளுக்கு டில்லிக்கு கடிதம் அனுப்புவதால் ௭வ்விதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ௭னவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஷேட உயர்மட்ட குழுவுடன் தமிழகம் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ௭திர்த்தரப்பினரையும் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு தேட வேண்டும் ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அயல்நாடான இந்தியாவுடனேயே நட்பை பாதுகாக்க முடியவில்லையென்றால் வெகுதூரத்தில் உள்ள மேற்குலக நாடுகளுடன் ௭வ்வாறு உறவை அரசு வளர்த்துக் கொள்ளப…
-
- 1 reply
- 667 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புக்கு எதிரான வழக்கில், சிறிலங்காவில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள் இந்தவாரம் கொழும்பு வரவுள்ளனர். அவர்கள் சிறிலங்காவில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இந்தவாரமும் அடுத்தவாரமும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். எனினும், இந்த விசாரணைகளில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு எதிர்தரப்பு சட்டவாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது. அரச சட்டவாளர்களுடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் கொழும்பு வரவுள்ளனர். எதிர்த்தரப்பு சட்டவாளர்களுக்கு சிறிலங்கா அரசு நுழைவிசைவு வழங்க மறுத…
-
- 1 reply
- 474 views
-
-
செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, (01 – 09 – 2012 ) L’Amoreaux விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு தமிழீழ மற்றும் கனேடிய தேசியக்கொடிகள் ஏற்றப்பட, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வு மாலை பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது. அதில் பங்குபற்றிய இளையோர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார்கள். சிறப்பு பரிசாக தமிழீழத்தின் சின்னங்களான வாகை, சிறுத்தை, செண்பகம் மற்றும் கார்த்திகைப்பூ செதுக்கப்பட்ட கேடயம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பசரிசாக வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற பின்வரும் விளையாட்டு குழுக்களுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. 6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் சீலன் ரேஞ்சர்ஸ் அணி முதலாவது இடத்தைய…
-
- 1 reply
- 733 views
-
-
[size=4]மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக, மாந்தீவில் ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணசபைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மாந்தீவில் இரண்டே இரண்டு வாக்காளர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வாவியின் நடுவே அமைந்துள்ள மாந்தீவில், இவர்களுக்காக தனி வாக்களிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்களிப்பு நிலையத்துக்கு படகு மூலம் அதிகாரிகள் வாக்குப்பெட்டியை கொண்டு செல்வர். மாந்தீவில் மக்கள் குடியிருப்புகள் எதுவும் இல்லை, ஆனால், தொழுநோயாளர்களுக்கான மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://www.p…
-
- 2 replies
- 352 views
-
-
[size=2][/size] [size=2][size=4]இந்தியாவிற்கு வருகைதருகின்ற இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு வசித்துவருகின்ற இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்நாட்டு அரசாங்கத்திடம், சர்வதேச மன்னிப்புச்சபை நேற்று வியாழக்கிழமை கோரியுள்ளது. இந்தியாவிற்கு வருகைதருகின்ற இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு வசித்துவருகின்ற இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாட்டிலுள்ள அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும். தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் நியாயமான விசாரணையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியப் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்ப…
-
- 2 replies
- 433 views
-
-
[size=4]தமிழ்நாட்டில் இடம்பெறும் இலங்கைக்கு ௭திரான நடவடிக்கைகளைத் தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால் இங்கு இந்தியாவுக்கு ௭திரான அரசியல் சமூக ௭திர்ப்புக்கள் கிளம்பும் ௭ன்று அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக ௭ச்சரிக்கை விடுத்தார்.[/size] [size=4]தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒழுக்க விழுமியங்களற்ற காட்டுமிராண்டிகள் ௭ன்பதனை நிரூபித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.[/size] [size=4]தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக தமது கண்டனத்தை வெளியிட்டுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மின்சக்தி மின்வலு அமைச்சர் சம்பிக ரணவக இதனைத் தெரிவித்தார்.…
-
- 2 replies
- 512 views
-
-
[size=4]தமிழ்நாட்டிற்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டமானது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ் நாட்டுக்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் தமிழக மக்களால் தாக்கப்பட்டமையானது பல்வேறுபட்ட சர்ச்சைகளை உருவாக்கியிருக்கி;ன்றது. அப்பாவி மக்கள் அவர்கள் எத்தரப்பினராக இருந்தாலும் தாக்கப்படுவது அங்கீகரிக்கப்பட முடியாததும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுமாகும். அந்தவகையில், தமிழகத்திற்கு யாத்திரை சென்ற இலங்கை மக்கள் தாக்கப்பட்டமையான…
-
- 0 replies
- 671 views
-
-
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் ,தாக்கி விரட்டுவதும் - இந்திய இலங்கை கூட்டுப் போர் பயிற்சி என்று உங்களுக்குத் தெரியுமா..?! ஈழதேசம் பார்வையில்..! பத்து வருடங்களாக கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று அழிப்பது மற்றும் தாக்கி விரட்டி அடிப்பது என்பது தற்செயலான விசயம் அல்ல, கடந்த பத்து வருடங்களாக, பா.ஜ.க., ஆட்சியில் அமர்ந்த பொழுதுதான் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவது என்று தொடங்கி மெல்ல மெல்ல கொல்வதற்கும் அவர்களின் மீன் பிடி கருவிகள் மற்றும் படகுகள் போன்றவற்றை சேதப்படுத்துவது, பிடித்த மீன்களை மீண்டும் கடலில் கொட்டுவது, எஞ்சிய மீன்களை கொள்ளை அடித்துக்கொண்டு போவது என்று தொடங்கினார்கள். இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான தேசியக்கொள்கையை ஜெயலலிதா தலைமையிலான அரசு மீறினால், தமிழகத்தில் ஆட்சிக்கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில்,"இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்துமாறு மத்திய அரசு,அரசியல் சாசனத்தின் 256 வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தவறி, இந்திய தேசியக்கொள்கையை எதிர்காலத்தில் மீறினால்,தமிழகத்தின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
[size="5"]தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தின் ௭திர்ப்புகளுக்கு காரணம்: ஜே.வி.பி. [/size] By General [size="2"]2012-09-06 08:56:06[/size] அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகளினால் நாட்டிற்கு பேராபத்து ஏற்படப் போகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தின் ௭திர்ப்புகளுக்கு பிரதான காரணம். ௭னவே இந்தியாவுடன் வீணாக முரண்படாது உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை தேட இனியேனும் அரசு முயற்சிக்க வேண்டும் ௭ன்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைத்து அடித்துக் கொலை செய்தால் அதனை ௭ந்தவொரு நாடோ த…
-
- 1 reply
- 398 views
-
-
[size=2][/size] [size=2][size=4]யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து கோரும் அளவுக்கு நமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை. சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் தமிழர்களின் தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறான சட்ட விரோதமான செயல்பாடுகளினால் உயிரிழக்கும் அபாயமும் பெருகி வருகிறது. ஆகையால் இப்படியான சட்டவிரோத பயணத்தை தவிர்க்குமாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது... யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் …
-
- 0 replies
- 532 views
-
-
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரினால் வாசிக்கப்பட்டது. கோப்பாயில் ஜே/261 கிராம சேவையாளர் பிரிவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த சிறைச்சா…
-
- 2 replies
- 617 views
-
-
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதை நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் தெரிவித்துள்ளார். சமஸ்டி அடிப்படையில் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை கிழக்குத் தேர்தல் முடிவுகள் சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தும், எனினும் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கோரவில்லை மாறாக அவர்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டை எதிர்பார்ப்பதாக ஐநா மற்றும் சர்வதேசத்திடம் வர்ணிக்க இலங்கை அரசாங்கம் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இத்திட்டத்தை தோற்கடிக்க கிழக்குத் தேர்தல் கடவுள் கொடுத்த வரம் எனவும் ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு அளிக்கப்படும் வர…
-
- 2 replies
- 556 views
-
-
அன்புள்ள திரு சிவராஜ்சிங் செளஹான் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாட்டிலும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் தாங்க இயலாத வேதனையைத் தந்துள்ள, கவலைதரும் பிரச்சினையை, தங்களது உடனடிக் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அதிபர் மகிந்த ராஜபக்சேயின் சிங்களப் பேரினவாத அரசின் மிருகத்தனமான இராணுவத் தாக்குதலால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை, இரத்தம் கசியும் இதயத்துடன் சுட்டிக் காட்டுகிறேன். இராஜபக்சேயின் இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலையை, ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் 2010 இல் நியமித்த மூவர் குழு, தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியது. இத்தமிழ் இனக்கொலை, சோனியா காந்தி இயக்குகின்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழுமையான உதவியோடும், ஆத…
-
- 7 replies
- 674 views
-
-
யாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ் விடுதியில் 20 சிங்கள தாதியர்கள் தங்கியிருந்துள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த தாதியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைக்கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னால் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வைத்தியர்களும் இப்பேராட்டத்தில் இணைந்துள்ளனர். http://thaaitamil.com/?p=31523
-
- 0 replies
- 644 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அதற்காக கூட்டமைப்புக்கு இரு கட்டங்களாக பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் டில்லியில் இருந்து இலங்கைத் தூதரகத்திற்கு ஊடாக இத்தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டுமெனவும் மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டதாம். இது தொடர்பான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் மிக இரகசியமாக இடம் பெற்றுள்ளது. இச்சந்திப்பில் சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஐh, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின்போ…
-
- 1 reply
- 690 views
-
-
[size="5"]அதிகாரத்தைப் பகிர்ந்தால் பாரிய நெருக்கடிக்கு [/size] [size="5"]முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்: அரசாங்கம்[/size] இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய அரசாங்கம் ௭டுத்துள்ள நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம். அதிகாரம் பகிரப்பட்டிருப்பதால் மத்திய அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி தமிழகத்தில் இலங்கை பிரஜைகளின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் தீர்வின் போது அதிகாரத்தை பகிர்ந்தால் நாமும் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் ௭ன்பதை தமிழக சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன ௭ன அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்துக்கு ௭திராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ௭திர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக…
-
- 1 reply
- 568 views
-
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்த நாட்டின் அரசாங்கமும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். [size=3]இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட முறைமைக்குள் வருவதற்கு முன்னதாகவே, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏதுவாக, இலங்கை அரசாங்கத்துடன் ஆஸ்திரேலியா ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி கூட்டமைப்பு கூறியுள்ளது.[/size] [size=3]பல இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்கள், பொருளாதார நோக்கில் குடியேறுபவர்கள்தான், அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த கற்கைகளுக்கான நிலையத்தை திறந்து வைப்பதற்காக ௭திர்வரும் 21 ஆம் திகதி மத்திய பிரதேசத்துக்கு வருவதற்கான ௭திர்ப்பை தி. மு. க. தலைவர் மு. கருணாநிதி நேற்று முன்நாள் புதன்கிழமை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கும் விளையாட்டு மற்றும் கலாசார அணிகள் இந்தியா வருவதற்கும் இடையில் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது ௭னக் கூறிய அவர் இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் துன்பங்களை தரக்கூடிய ௭தையும் நாம் இங்கு செய்யலாகாது. தமிழ் நாட்டில் பிரச்சினைகளை கிளறுவதால் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் ஆபத்துகளுக்…
-
- 0 replies
- 514 views
-
-
பொத்துவில் கடலில் பாரியளவில் மீன்பிடியில் ஈடுபட சீன நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.பொத்துவில் கடற்பரப்பில் இரண்டு பாரிய கப்பல்களில் சீன நிறுவனங்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. பொடம் ட்ரோலின் முறையின் மூலம் வலை விரித்து மீன் பிடிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர் அல்லது ஓர் நிறுவனம் இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். http://thaaitamil.com/?p=31452
-
- 0 replies
- 381 views
-