ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=4]முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ நேற்று (24) உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]இந்தப் பணம் மற்றும் இதனுடன் இருந்த பல நிலம் தொடர்பான ஆவணங்கள் ரத்வத்தைக்கு சொந்தமானது அல்ல அதாவது கறுப்பு பணம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவனங்களைப் பார்க்கும் போது அவை குடா நாட்டு மக்களிற்கு சொந்தமானவை என அறியமுடிகின்றது. ஆகவே ஒட்டுமொத்த பணத்தினையும், ஆவணங்களையும் உரிய வங்கியிடமே திருப்பி கொடுக்குமாறு நீதிமன்றம் இரகசியப் பொலிசாருக்கு பணித்துள்ள…
-
- 1 reply
- 513 views
-
-
[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் ஆலையடி வேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]இன்றைக்கு தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினை …
-
- 1 reply
- 501 views
-
-
இனிமேல் இரணைமடு யாருக்கு? – வன்னிமகன் Saturday, August 25, 2012, 4:56தமிழீழம் இரணைமடு யாருக்கு? ஏழை விவசாயிகளுக்கா? சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளுக்கா? இத்தகைய கேள்விகள்தான் தற்போது தமிழ் மக்கள் மனங்களெங்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மக்களுடைய சொத்தில் யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்களுடைய சொத்தை யார் யாரோ தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சொத்துக்குரியவர்கள் மட்டும் வயிற்றில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு படுக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இரணைமடுக் குளத்தினதும், குளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி விவசாயக் குடும்பங்களினதும் பரிதாபகரமான நிதர்சனம். இரணைமடுக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள்ளே…
-
- 2 replies
- 628 views
-
-
[size=4][/size] [size=4]ஒற்றுமை இல்லாததாலேயே ஈழப் போராளிகளுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். "ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு� மாநாடு சென்னையில் ஒகஸ்ட் 12-ம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.[/size] [size=4]கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:[/size] [size=4]ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்பதற்காக டெசோ மாநாட்டை திமுக நடத்தியபோது சிலர் கண்டனம் தெரிவித்தனர். ஓர் இனத்தின் இழிவைத் துடைப்பதற்கான பணியில் ஈடுபடும்போது இதுபோன்ற கண்டனங்களைச் சந்திப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.[/size] [size=4]1956-ம் ஆண்டு சிதம்பரத்த…
-
- 0 replies
- 484 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ச ஆவேசமாக தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிகள் என்று கூறுகின்றது. ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பலத்தை பெற முடியவில்லை.[/size] [size=4]அப்படியானால் அவர்கள் ௭வ்வாறு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. ௭னவே அர்த்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு நேரத்தை கூ…
-
- 0 replies
- 401 views
-
-
[size=4]எனக்கு சிறையில் காணப்பட்ட சுதந்திரம் கூட நாட்டுக்கு மக்களுக்கு கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதி நேர்மையற்ற நாட்டில் மக்கள் வெளியே வாழ்ந்தாலும், சிறையில் வாழ்வதனைப் போன்றே இருக்கும்.[/size] [size=4]இரண்டரை வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் எனக்கு இருந்த சுதந்திரம் கூட உங்களுக்கு கிடையாது. சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில் சுதந்திரமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டேன்.[/size] [size=4]எனினும், உங்களினால் அவ்வாறு சுயாதீனமாக கருத்துக்களை வெளியிட முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கல்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [si…
-
- 0 replies
- 265 views
-
-
[size=4]எனதருமை உடன் பிறப்புகளுக்கு அன்பு வணக்கம். தீராத துன்பத்தை தங்கள் தலைவிதியாகக் கொண்ட ஈழத் தமிழ்ச் சகோதரர்கள் எழுதும் கடிதம் இது. மிகப் பெரும் சூறாவளியின் தாக்குதலுக்கு உட்பட்ட விருட்சம் எங்ஙனம் இலையுதிர்ந்து கிளைஒடிந்து தன் அங்கங்களில் கீறலும் கிழி சலுமாக நின்று கொள்ளுமோ அத்தகைய தொரு அவலத்தில் இருக்கக்கூடிய நாம் கடிதம் எழுதும் சக்தியையும் உரிமையையும் கொண்ட வர்கள் அல்ல. இருந்தும் எங்கள் உடன் பிறப்புகள் ஆகிய நீங்கள் கடற்றொழில் ஈடுபடும்போதெல்லாம் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின் றீர்கள் என்ற செய்தியை அறியும்போது எங்கள் உள்ளத்து வெம்பல் இதயத்தை மேலும் இறுக் கிக் கொள்கிறது. நாங்கள்தான் அடிபட்டு; உதைபட்டு; மிதிபட்டு வாழ்கிறோம் என்றால் உங்களுக்கும் அதே கதிதானா என்ற…
-
- 0 replies
- 500 views
-
-
அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு ! [Friday, 2012-08-24 22:24:46] - மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகுமா ! - களத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமகிய விசுவநாதன் உருத்திரகுமாரன் ! - மகிந்த ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் விசாரணைக்கு வந்துள்ள வழக்கு ! வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23-08-2012) இடம்பெற்றுள்ளது. சிங்கள படைகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்த விடுதலைப் ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் உண்ணாவிரதமிருக்கும் செந்தூரனின் உறவினர் அதிர்ச்சியால் மரணம்! [saturday, 2012-08-25 08:55:16] விடுதலைக் கோரி, கடந்த, 19 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை வாலிபரை காண வந்த உறவினர், அதிர்ச்சியில் இறந்தார். இலங்கையில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல், தமிழகம் வந்தோரை, போலீசார் பல்வேறு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அதுபோல் வந்த செந்தூரன், பூந்தமல்லி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்ட போதிலும், விசாரணையை விரைந்து முடித்து, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த 6ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளூர் மாவட்ட ஆர்.டி.ஓ., ரவிக்குமார் பேச்சு நடத்தியும், அவர் போராட்டதை கைவிடவில்லை. இந்நிலையில், இலங்கையிலிரு…
-
- 0 replies
- 694 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சி 25 ஆகஸ்ட் 2012 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடரமுயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிராகவழக்குத் n;தாடர முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரானரமேஸின் மனைவி வத்சலாதேவி என்பவரே இவ்வாறு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல்செய்துள்ளார். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ராஜதந்திரவரப்பிரசாதம் காணப்படுவதாகவும் வழக்குத் தொடர முடியாது எனவும் ஏற்கனவே நியூயோர்க்நீதிமன்றம் அறிவித்திருந்தது. முப்படைகளின் சேனாதிபதி என்ற ரீதியில் யுத்தம் இடம்பெற்றகாலத்தில…
-
- 1 reply
- 309 views
-
-
ஹோட்டலில் விபச்சார விடுதி வைத்து நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழகி கைது! [size=3]Published: சனிக்கிழமை, ஆகஸ்ட் 25, 2012, 10:45 [iST][/size] [size=1][size=3]மொறாட்டுவா: கடந்த 1995ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டம் வென்ற சுமுந்திரா, தனது ஹோட்டலில் ரகசியமாக விபச்சார விடுதி நடத்தி வந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.[/size][/size] [size=3]கடந்த 1995ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டம் வென்றவர் சுமுந்திரா லியானாகே. இவர் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இலங்கையில் உள்ள மொறாட்டுவா பகுதியில் சொகுசு ஹோட்டல் ஒன்றை சுமுந்திரா நடத்தி வருகிறார்.[/size] [size=3]இந்த ஹோட்டலில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கின்ந்தார் போலீசாருக்கு ரகசிய…
-
- 0 replies
- 756 views
-
-
பேராதனை பண்டார நாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாள்களேயான சிசுவொன்றின் கை விரல்கள் வைத்தியசாலை தாதி ஒருவரால் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் ஆகியவற்றினால் இருவேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சம்பத் ரணவீர தெரிவித்தார். வெட்டப்பட்ட சிசுவின் விரல் சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அது வெற்றியளிக்கவில்லை. அதனால் இன்னும் சில தினங்களில் மீண்டும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறித்த சிசுவுக்கு ஊசி மருந்தேற்றும் போது தற்செயலாக விரல் துண்டிக்கப்பட்டு விட்…
-
- 0 replies
- 334 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் தெற்கு தொடருந்துப் பாதை அமைப்பு ஆகியவற்றுக்காக சீனா மேலும் 1.12 பில்லியன் டொலர் நிதியை சிறிலங்காவுக்கு கடனாக வழங்கவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின் எக்சிம் வங்கி 878.2 மில்லியன் டொலரை கடனாக வழங்கவுள்ளது. தெற்கு தொடருந்துப் பாதை அமைப்புக்காக மேலும் 237.35 மில்லியன் டொலரை சீனா கடனாக வழங்கவுள்ளது. இந்தக்கடன் 7 ஆண்டு விலக்குடன் 20 ஆண்டுகளில் 2 வீத வட்டி, முகாமைத்துவ கட்டணம் 0.5 வீதம், பொறுப்புக் கட்டணம் 0.5 வீதம் ஆகியவற்றுடன் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். முன்னதாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு சீனா 400 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது. …
-
- 0 replies
- 525 views
-
-
புத்தரை முத்தமிட்ட மூவர் கைது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஆகஸ்ட், 2012 - 13:59 ஜிஎம்டி புத்தர் சிலை புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடைக்காரர் முறையிட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்த மதம் சம்பந்தப்பட்ட வணக்கத்துக்குரிய விஷயங்களை தவறாகக் கையாள்வதற்கு பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் கடுமையான தடைகள் உண்டு. புகைப்பட …
-
- 21 replies
- 1.8k views
-
-
[size=3] [size=4]சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை பிரித்தானியா மீண்டும் புதுப்பித்துள்ளது.[/size] [size=4]ஆனால், சிறிலங்கா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கோரியிருந்த போதிலும் – பிரித்தானியா அதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. புதுப்பிக்கப்பட்ட இந்த பயண எச்சரிக்கை அறிவிப்பை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நேற்று வெளியிட்டது. புத்தர்சிலைகளின் ஒளிப்படங்களின் முகப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பயண எச்சரிக்கை குறிப்பில் உள்ளூர் சட்டங்கள், சுங்கப் பிரிவு குறித்த மேலதிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் ஒட்டுமொத்த பயண எச்சரிக்கை அறிவுரையில் எந்த மாற்…
-
- 2 replies
- 849 views
-
-
[size=2][/size] [size=2][size=4]அறிக்கைகள் மூலம் தன்னை அவமானப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியை அவமானப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவமானப்படுத்தும் செயற்படுகளை முதிர்ந்த அரசியல்வாதி புறக்கணிப்பார் எனவும் ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சாதாரண மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் தொழில் முயற்சியா…
-
- 6 replies
- 671 views
-
-
[size=2][size=4] (றிப்தி அலி) இலங்கையிடமிருந்து தனது நாடு அதிக விடயங்களைக் கற்க வேண்டியுள்ளது என இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹம்மட் வாஹிட் ஹஸன் தெரிவித்தார். இந்தியா மற்று சீனா ஆகிய இரு நாடுகளை இராஜதந்திர ரீதியாக சிறந்த முறையில் கையாள்வது உள்ளிட்ட பல விடயங்களை இலங்கையிடமிருந்து கற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு முதற் தடவையாக இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹம்மட் வாஹிட் ஹஸன், கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "மாலைதீவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற…
-
- 9 replies
- 1k views
-
-
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக அன்டார்டிக்காவில் மாநாடு நடத்துவோம், ஐநாவிடம் கோரிக்கை வைப்போம் என்னும் கோஷங்கள். ஐந்தாம் கட்ட ஈழப்போர் நடக்கும், அம்பாந்தோட்டையில் கரும்புலிகள் பாய்வார்கள் என்னும் வீரவசனங்கள். இவையெல்லாம் ஒலிக்கும் தமிழக மண்ணில் ஈழத்தமிழர்களைச் சிறைவைப்பதற்காகவே இந்திய மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு முகாம் ஒன்றின் படங்கள் இவை. இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலைவழக்கின் போது உருவான இந்தச் சிறப்பு முகாம்கள், இன்னமும் மூடபடவில்லை. இன்றளவும் இந்த முகாம்களில் விசாரணைகளின்றி ஈழத் தமிழர் பலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலை குறித்தோ, இந்தச் சிறப்புமுகாம்களை மூடுவது குறித்தோ, ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்க மு…
-
- 1 reply
- 910 views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. 22 பேரைக் கொண்ட புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளே இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். யுத்த வலய தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமான விவகாரங்கள், வடக்கு கிழக்கு புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிட்சர்லா…
-
- 26 replies
- 3.2k views
-
-
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியுள்ளது.இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரச பல்கலைக்கழக முறைமையை பாதுகாப்போம்’, உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களா அல்லது துதிபாடும் பயிற்சிநிலையங்களா? பல்கலைக்கழக சுயாதீனத்திற்கும் கல்வியியல் சுதந்திரத்திற்கும் மதிப்பளி’, பல்கலைக்கழகங்களை இராணுவமயப்படுத்துவதை நிறுத்து, எமது நாட்டிற்கான எதிர்காலத்தை நாம் கோருகிறோம்’ இதில் கலந்த…
-
- 2 replies
- 492 views
-
-
ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி இன்று (24) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவர் சமாதானத்திற்கும் நல்லிணத்துக்குமான குழுவினரை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஓர் அரசியல் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. வடமாகாண தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. மீள் குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. உயர் பாதுக்காப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. LLRC யில் உள்ள பரிந்துரைகள் குறைந்த பட்சம் கூட அமுல்படுத்தப்படவில்லை என சமாதனத்திக்கான நல்லிணக்க குழுவினர் யசூஷி அகாஷியிடம் கூறினர். அதற்கு பதிலளிக்கும் முக…
-
- 2 replies
- 701 views
-
-
[size=2][/size] [size=2][size=4]மக்களுக்கிடையில் இன முறுகலை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். எட்டு பிரதேசங்களிலுள்ள மக்களுடன் சட்டர்லைட் தொலைத்தொடர்பின் மூலம் நேரடியாக உரையாடும் நிகழ்வு இன்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி கூறினார். “மாகாணசபை தேர்தல் என்பது இன்று வரும், நாளை செல்லும். இச்சந்தர்ப்பத்தில் மக்களுக்கிடையில் ஜாதி, பேதங்களை தூண்டிவிட்டு அரசியல்செய்ய யாரும் முன்வர வேண்டாம். இப்படி இனமுறுகலை தூண்டி விட்டதனால்தான் நாங்கள் 30 வருடங்களாக கஷ்டங்களை அனுபவித்தோம். இனியும் அப்ப…
-
- 0 replies
- 443 views
-
-
[size=4]அடுத்து நடத்தப்பட உள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில், தனது மனைவியான அனோமா பொன்சேகாவை, முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பிரதான எதிர்க்கட்சிகளின் உதவியை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]எதிர்க்கட்சி கூட்டணியின் கீழ் அனோமா பொன்சேகாவை தேர்தலில் நிறுத்த சரத் பொன்சேகா உத்தேசித்துள்ளார். பொன்சேகா இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருடன் மறைமுகமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். எனினும் எவரும் தெளிவான பதிலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.[/size] [size=4]நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தேர்தலில் போட்டியிட முடியாது போயுள்ளதால், சரத் பொன்சேகா, தனது மனைவிய…
-
- 1 reply
- 426 views
-
-
[size=3] [size=4]இலங்கையின் அரசாங்க படைகள் வன்னி யுத்த முனைகளில் கொத்துக் குண்டுகள் எனப்படும் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியமையை வெளிக்கொணர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அவசர அவசரமாக கண்ணி வெடியகற்றல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு ஆரம்பித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடியகற்றல் பணிகள் அனைத்தையும் ஜ.நாவினது ஒருங்கிணைப்பின் மூலம் மேற்பார்வை செய்து வருகின்றது. குறித்த மேற்பார்வை அலுவலகம் திருப்திகரமாக கண்ணிவெடியகற்றல் பணிகள் நடந்திருப்பதாக சிபார்சுகளை செய்தாலே மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறான அதிகாரிகளாலேயே வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டெனப்படும் கிளஸ்ரர் குண்டுகளை பயன…
-
- 1 reply
- 726 views
-
-
[size=4]தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி![/size] [size=2] [size=4]பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன்…[/size] [size=4]…நேற்றோடு 18 வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ தமிழக அரசு விரும்பவில்லை.[/size] [size=4]அவரையும் அவரோடு இருக்கும் அனைத்து முகாம் வாசிகளையும் அரசு விடுதலை செய்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்பதே செந்தூரனின் கோரிக்கை.[/size] [size=4]நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிட…
-
- 2 replies
- 848 views
-