ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
நாளை வவுனியாவிற்கு மகிந்தறாஜபக்ச செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்பகுதியின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வவுனியாவிற்கு செல்லும் மகிந்த நாளை நடைபெறவுள்ள வவுனியா நகரசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் வவுனியா தெற்கு பகுதியில் பிரதேச சபைக்கான கட்டடத்தினையும் மகிந்த திறந்துவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மகிந்தவின் வவுனியா பயணத்தினை முன்னிட்டு வவுனியாவில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=29021
-
- 1 reply
- 558 views
-
-
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு இங்கு கூறினார். இங்கு தொடாந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லி…
-
- 10 replies
- 1.1k views
-
-
சப்ரகமுவ தமிழர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும்: யோகராஜன் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத் தமிழ் மக்களை பணத்தினாலும், அச்சுறுத்தல்களினாலும் அடக்குவதற்கு முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்பதை எச்சரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சப்ரகமுவ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். ராஜாவை ஆதரித்து காவத்தை நகரில் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யோகராஜன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், “இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் 60 ஆயிரம் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்று வழிகாட்ட மு…
-
- 0 replies
- 499 views
-
-
[size=3] பங்குச்சந்தையின் பொறிமுறை மாபியாவிடம் கைமாறும் ஆபத்து: ஐ. தே. க. [/size][size=3] [/size][size=3] [size=3] ‘பங்குச் சந்தையின் பொறிமுறை மாபியாக்களிடம் கைமாறும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மைத் தகவல்களைப் பொது மக்களுக்குக் கூறுவதில்லை. பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் ஊடாக அரசாங்கத்தின் தோல்வியும் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது’ என்று ஐ. தே. க.வின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.[/size][size=3] அபிவிருத்தியின் சின்னமாக அரசினால் வர்ணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்று தோல்வியடைந்த வேலைத் திட்டமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நூ…
-
- 0 replies
- 481 views
-
-
சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன் அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம் திருஞானமூர்த்தியின் அக்கரைப்பற்று இல்லத்தில் கூட்டமைப்பு …
-
- 1 reply
- 459 views
-
-
[size=4]இலங்கை மின்சார சபையில் தற்போது இடம்பெறும் பணிப்பகிஷ்கரிப்பு ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்குமுன் கைவிடப்பட்டாவிட்டால், இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக பொறியியல் பீடங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்கும் மின்சார சபையின் ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களுக்கும் மின்சார சபையின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம அழைப்பு விடுத்துள்ளார். பொறியியலாளர்கள் உட்பட 200 பேர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் ஏனையோர் தற்காலிக அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ள விரும்பும் ஓய்வூதியர்கள் தமது விண்ணப்பங்களை அருகிலுள்ள இலங்கை மின்சார சபை உப நிலையங்களில…
-
- 5 replies
- 710 views
-
-
தென் ஆபிரிக்காவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்திருந்தது. எனினும், மூன்றாம் தரப்பின் தலையீட்டுக்கு அனுமதியில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தென் ஆபிரிக்க ராஜதந்திரிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என அறிவித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் உந்துதலினால் தென் ஆபிரிக்க இராஜதந்திரிகள் இவ்வாறான யோசனைத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளத…
-
- 1 reply
- 618 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் வெள்ளை பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த புறக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று, 50 லட்சம் ரூபா கப்பம் கோரி, 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்ற, வர்த்தகராக தன்னை இனங்காட்டிக் கொண்ட பாதாள உலக தலைவர் உள்ளிட்ட குழுவொன்றை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துறைமுகத்தில், கடந்த 14 ஆம் திகதி ஏறவிற்பனை நடைபெற்றதுடன் அன்று மாலை வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனையில் 15 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாவுக்கு, வர்த்தகர் வெள்ளை பூண்டு கொள்லனை வாங்கியுள்ளார். துறைமுகத்தில் நடைபெறும் ஏல விற்பனையில் எவ்வளவு பணத்தை செலுத்தி பொர…
-
- 1 reply
- 735 views
-
-
நல்லூர் திருவிழாவில் பொதுமகனின் தலையை உடைத்த பொலிஸ் யாழ். நல்லூர் முருகன் கோயில் திருவிழாவில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிசார் ஒருவர் வாகனச் சாரதியை தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து திருவிழாவிற்கு சென்ற மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கந்தர்மடம் சந்தியில் 'வடி' ரக வாகனம் ஒன்றை மறித்த பொலிசார் ஒருவர், அவ் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியை தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த சாரதி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியும் பொலிசாரினால் அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இன்று மதியம் 2.00 மணியளவில் நல்லூர் கோவிலிலிருந்து கந்தர்மடம் …
-
- 0 replies
- 566 views
-
-
[size=3] [size=4]பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட போதும் நமது செயல்பாடுகள் நிறுத்தப்பட முடியாதது. வட்டுக்கோட்டைத் தனிநாடு கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார்.[/size] [size=4]அண்மையில் நடந்த ஈழக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி; அந்த மாநாட்டின் பின்னணி தனியான ஈழ இராச்சியக் கொள்கையே எனவும் …
-
- 3 replies
- 468 views
-
-
தமிழக தலைவர்களின் சுதந்திர தின வாழ்த்தும் - செய்தியும்..! யாருக்கு..? தமிழக மக்களுக்குத் தான்..! ஈழதேசம் செய்தி..! தமிழர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன என்று சுதந்திர தினத்தில் சொன்னார்கள் தமிழக தலைவர்கள், கூடவே வாழ்த்துச் செய்தியும் சொன்னார்கள். பல குட்டித் தலைவர்கள் இந்திய திரு நாடு எப்படியாவது வல்லரசு நாடாக வேண்டும் என்று தங்களது தணியாத ஆசையை வாழ்த்துச் செய்தியாக சொன்னார்கள். இந்தியா வல்லரசு நாடாக வளர வேண்டுமெனில் திராவிட, காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க போன்ற சங் பரிவார் கட்சிகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே முடியும் என்ற உண்மையை மறைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை சொன்னார்கள். இதோ தலைவர்களின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். விஜயகாந்த், தே.தி.மு.க., தீவிரவாத…
-
- 0 replies
- 578 views
-
-
[size=4]சுவாஸிலாந்து மன்னர் மும்ஸ்வதி III மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 3 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறப்பு விமானமொன்றில் சுவாஸிலாந்து மன்னருடன் 40 பிரதிநிதிகள் வருகை தந்ததாகவும் இவர்களை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றதாகவும் தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=157
-
- 16 replies
- 1.1k views
-
-
[size=3]பழுத்த அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியுமான திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் சுதந்திர தின உரை ..! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] ஊழல் என்பது தொற்று நோய் போன்றது. நாட்டின் ஆற்றலை அரித்தெடுக்கும் 'பிளேக் நோய்' போன்றது. அதற்கு எதிரான கோபம் நியாயமானது தான். மக்கள் பொறுமையை இழந்து விடும் தருணங்களும் உள்ளன. ஆனால் அதற்காக ஜனநாயக அமைப்புகளை தாக்குவதற்கு இதை ஒரு சாக்காக கொள்ளக்கூடாது. அதாவது ஊழல் என்பது பிளேக் நோய் - யைப் போன்றது. இந்த நோய் மக்களை அரித்தெடுக்கும். அதாவது கொத்து கொத்தாக கொன்றொழிக்கும். கொத்து கொத்தாக என்றால்..? 2009 - ல் லட்சம் பேரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து கொல்லப்பட்டார்களே அது போன்று என்றும் கொள்ளலாம். [/size] [size=3] பாராளுமன்றம் போன…
-
- 0 replies
- 736 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரநிதிநிதிகளுடன், நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “கிழக்கு மாகாணசபையில் 35 ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால், 17 ஆசனங்களை வெல்ல வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், திருகோணமலையில் 4 ஆசனங்களையும், அம்பாறையில் 2 ஆசனங்களையும் கைப்பற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம். இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன்மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும். …
-
- 2 replies
- 382 views
-
-
[size=3]அரசியல் கருத்து ஒற்றுமை இல்லை - சுதந்திர கொடியேற்றி பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு..! ஈழதேசம் செய்தி..! [/size] [size=3] அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று 65 வது சுதந்திர விழாவில் கூறினார். மேலும் கூறுகையில் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா சார்பில் விண்கலம் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுவது குறித்து ஒருவர் பின்னூட்டம் இவ்வாறு போட்டுள்ளார். " ஏழை மக்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள். பிறகு செவ்வாய் போவது, ஆராய்ச்சி செய்வது பற்றி சிந்தியுங்கள். உண்ண வழியின்றி பல்லாயிரக்கணக்கில் மக்கள் வாடுகின்றனரே, தகுந்த கழிவறைகள் இன்றி மக்கள் துன்பப்…
-
- 0 replies
- 642 views
-
-
[size=4][/size] [size=4]தென் ஆபிரிக்காவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்திருந்தது.[/size] [size=4]எனினும், மூன்றாம் தரப்பின் தலையீட்டுக்கு அனுமதியில்லை என சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தென் ஆபிரிக்க ராஜதந்திரிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என அறிவித்திருந்தனர்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் உந்துதலினால் தென் ஆபிரிக்க இராஜதந்திரிகள் இவ்வா…
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கைத் தமிழருக்கு சம உரிமை: ஜெ. வலியுறுத்தல் [size=2] [size=4][/size] இ[size=4]லங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி,நேன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.[/size] [size=4]‘நம் உறவுகளாகிய, இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அ…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் வண் தொலைக்காட்சியில் நல்லூர் தேர் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கிறது
-
- 2 replies
- 731 views
-
-
கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் கவிழ்ந்து கிடக்கும் தனது ஆதரவுத்தளத்தை மீளக்கட்டியெழுப்ப ஈழத்தமிழர் விவகாரத்தினை கையில் எடுத்திருக்கிறார். எத்தனையோ பேர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக ஈழத்தமிழர் விவகாரத்தினை கையில் எடுக்கவில்லையா? கலைஞர் கையில் எடுத்திருப்பதுதான் தப்பானதா? என்ற கேள்வி எழலாம். ஆனால் தனது குடும்ப நலனுக்காக இனத்தையே காவு கொடுத்த கலைஞரின் பரிவாரங்கள் உலகெங்கும் தமிழினத்தின் முகவரியாக கொள்ளப்படுகின்ற தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி மகிந்த ராஜபக்சவை விடவும் கொரூரமான ஒருவராகச் சித்தரித்து கருத்து வெளியிட்டிருப்பது தமிழின உணர்வாளர்களை கொதிப்படைய வைத்திருக்கின்றது. அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் சொந்தச் சகோதர்களே தத்தமது ஆதரவாளர்…
-
- 0 replies
- 657 views
-
-
[size=4]அபூர்வமாக நாம் சந்திக்கும் ஒரே தருணத்து மனிதர்கள் ஒத்த தொடர்பூட்டலை எப்போதாவது கொண்டிருக்கின்றார்கள். கடந்த நாள்களின் இணைய உலாவுகையில் பார்வையில் பட்ட நான்கு நல்லாத்மாக்களுக்கிடையேயான கண்ணுக்குத் தெரியாத தளை இவ்வாரத்துக்கான பேசுபொருளாகின்றது எம்மோடு! * * *[/size] [size=2] [size=4]செந்தூரி [/size][/size] [size=2] [size=4]புலம்பெயர்ந்த எம்மக்களினை தம்மில் ஓர் அங்கமாக கொண்டுள்ள சுவிஸ் தேசத்தின் பகல் பொழுதுகள் கூட கடுமையான குளிரில் பல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. உலகத் தமிழர்களின் சர்வதேசங்களுக்கான கோரிக்கைகளுக்கான கவனயீர்ப்பினை அதீதப்படுத்தும் நோக்கில் தன் விடுதலை நோக்கிய பயணத்தினை மிதிவண்டிப் பயணமாக தெரிவு செய்து விரைகின்றான். வைகுந்தன். [/size][/size] [si…
-
- 3 replies
- 469 views
-
-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றோரின் முயற்சிகளை முழு இலங்கையர்களும் இணைந்து முறியடிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது. டோசோ போன்ற மாநாடுகளின் மூலம் இலங்கைக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை தோற்கடிக்க அனைவரும் அணி திரள வேண்டும். புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் தோல்வியடைந்த ஈழக் கோரிக்கை மீளவும் எழத் தொடங்கியுள்ளது. மீண்டும் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மச்சான் என்று சொல்லக் கூடிய பாதுகாப்புச் செயலாளர் ஒருவரையே இலங்கையில் நியமிக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் கூறியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வ…
-
- 4 replies
- 540 views
-
-
கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம் கருணாநிதியின் துரோகமெனும் முழுப்பூசணி "TESO"...முற்றாக சரிந்த அரசியல் செல்வாக்கை சரிப்படுத்த மீண்டும் தூசுத் தட்டி எடுக்கப்பட்ட வாத்தியம் "teso"..கொட்டும் மழையில் சங்கிலிப்போராட்ட நாடகம்..அதைத் தொடர்ந்து "உண்ணாவிரத" நாடகம்..இப்பொழுது கருணாநிதியின் இயக்கத்தில் உச்சக்கட்டமாக ஒரு "டெசோ" நாடகம்..புஸ்வானம். தமிழினத்தைக் கொன்றொழித்து அதன் மேல் நின்று செம்மொழி "மாநாடு" (மானாட மயிலாட) நடத்திய பெருமைக்குரிய "பெரியவர்" நீங்கள்!.. http://www.eeladhesam.com/ நன்றி - ஈழதேசம்
-
- 8 replies
- 834 views
-
-
தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான "டெசோ"வின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் நடத்தலாமா என்பது குறித்து திமுக ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த 12-ந் தேதி நடத்தப்பட்ட டெசோ மாநாட்டையொட்டி ஆய்வரங்கத்தில் வெளிநாட்டில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் திமுக கருதுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆய்வரங்கில் கலந்து கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து கருத்தும் பெறப்பட்டிருக்கிறது பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அர்ஜெண்டினா போன்ற ஒரு நாட்டில் நடத்தலாம் எனக் கூறியிரு…
-
- 10 replies
- 1.2k views
-
-
சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவு மக்கள் திரண்டனர் [size=3]சர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள் முன்வைத்து இருபத்தியிரண்டு தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த திரு. சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை நிறைவு செய்தார். பன்னாட்டு மக்களினதும் கவனத்தையீர்ந்த அவரது போராட்டத்தின் நிறைவுநாளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்று வந்த ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய அருகாமையில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்த முர்த்தி அவர்கள் ஆரம்பித…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷை அழைத்து விழா நடத்தும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் Published on July 3, 2012-1:28 pm · No Comments ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷ் பிரமுகர்களை பிரதம அதிதிகளாக அழைத்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் என்று சொல்லிக்கொள்பவர்கள் கல்வி மகாநாடு நடத்துகிறார்கள். உலகத்தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி வரும் ஆவணி மாதம் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்றதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற கல்வி மாநாடு யாருக்காக? யாரால்? யார்? தலமையில் நடைபெற இருக்கின்றது. ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்களின் கொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாவின் தலமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த புதுச்சேரி முதலமைச்சர் ந.அரங்கசாமி தலைமையில் நடைபெற உள்ள…
-
- 1 reply
- 811 views
-