Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலி உறுப்பினர் என்பதால் ஒருவருக்கு கனடாவில் அகதி அந்தஸ்த்து [size=2]Tuesday, August 14, 2012, 4:50[/size] [size=3][size=4]புகலிடம் கோரி இலங்கையில் இருந்து எம்.வீ.ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடா சென்றவருக்கு கனேடிய அரசாங்கம்[/size][/size] [size=4]அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது. புகலிடம் கோரியுள்ள 24 வயது இளைஞன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதால் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு கனேடிய அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இருந்த போதும் கனடாவின் குடிவரவு சபை அதிகாரிகள் கனேடிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எம்.வீ. ஓசியன் லேடி மற்றும் எம்.வீ.சன் சீ கப்பலில் புகலிடம் கோரி கனடா வந்த…

  2. [size=4]இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது.[/size] [size=2][size=4]இந்த படங்களை பெறுவதற்காக எனது நண்பர் ஜீவன் அவர்கள் தனது உந்துருளியையே தந்திருந்தார். நேற்று முழுதும் சாவகச்சேரிப் பகுதியில் அலைந்து பெற முடியாமல் போனதை இன்று பருத்தித்துறை பகுதியில் பாடசாலையில் சமையல் வேலை செய்பவர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறமுடிந்தது.[/size][/size] [size=4]அவர்கள் வழங்கிய செய்தியென்னவென்றால் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட விட்டமின்களை புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இணையத்தளத்துக்…

  3. அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை பசுபிக் பிராந்திய நாடுகளான நாயுரு மற்றும் பபுவா நியூகினியா தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை ௭டுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பெருந்தொகைக் கட்டணத்தைச் செலுத்தி படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்கு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்த வேண்டும் ௭ன முன்னாள் பாதுகாப்புத் தலைவர் அன்கஸ் ஹுஸ்டன் தலைமையிலான நிபுணரகள் குழு தெரிவித்ததை தொடர்ந்தே ஜூலியா கில்லார்ட் மேற்படி தீர்மானத்தை ௭டுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜூலியா கில்லார்ட் தனது தேர்தல் பிரசாரங்களின் போது நாயுரு மற்றும் பபுவா நியூகினியாவிலுள்ள புகலிடக் க…

  4. [size=3] [size=4]எல்லாம் முடிந்து விட்டது. என்ற ஒற்றை வார்த்தைக்குள் அனைத்தையும் உள்ளடக்கி குப்பைக் கூடைக்குள் கசக்கிப் போடும் கடதாசியாக தமிழினத்தின் விடுதலைக்கான வேள்வியை அற்ப விடயமாக கருதும் தமிழர்களே இதனையும் ஒருதடவை நேரமொதுக்கி படியுங்கள்.[/size] [size=4]ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல…

    • 6 replies
    • 1.5k views
  5. [size=5]பரிந்துரைகளை அமுலாக்க 24அமைச்சுக்களின் செயற்பாடு ஆரம்பம்: ஜனாதிபதி செயலாளர் [/size] [size=4] [/size] [size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள 285 பரிந்துரைகளை அமுலாக்க 24 முக்கிய அமைச்சுக்களும் ஏனைய சில அரச நிறுவனங்களும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இந் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். போரின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படை உதவிகளும் தேவைகளும் கடந்த மூன்றாண்டில் முழுமையாக பூர்த்தியாகி விட்டுள்ளன. இதனை அனைத்து தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஜனாதிபத…

  6. கடத்தப்பட்டு காணாமல்ப்போன லலித், குகன் இராணுவ முகாமில் உள்ளனர்! முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவிப்பு [size=2] [Tuesday, 2012-08-14 23:11:55][/size] யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரும் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது. லலித் மற்றும் குகன் உயிருடன் உள்ளனர். அவர்கள் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக நேற்றிரவு இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குக…

    • 0 replies
    • 661 views
  7. சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மின்சக்தி ஆலையில் தொடர்ச்சியாக தொழினுட்ப பிரச்சினைகள் காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதும் நாள் தோறும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டை மேலும் நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக சிறிலங்கா அரசால் நடாத்தப்படும் மின்சார சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நிலவும் வறட்சி நிலை காரணமாக நீர் மின்சக்தி உற்பத்தியின் 85 சதவீதமானவை இழக்கப்பட்டுள்ளதாலேயே நாள்தோறும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2001ல் சீன அரசின் நிதியுதவியுடன் நுரைச்சோலையில் அனல் மின்னாலை அமைக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக சிறிலங்காவில் கடந்த யூலையில் மின்வெட்டு நடைமுறைக்கு வந்தது. சிறிலங்கா மின்சார சபையானது நுரைச்சோலை மின்னாலையில் உள்ள 300 மெகாவற் மின் உற்பத…

  8. [size=2]இரனைமடு குளத்தின் நீரினை பயன்படுத்தி சிறுபோக நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குளத்தில் நீர் வற்றியதால் விவசாயத்துக்கு நீர் இன்றி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடா[/size][size="2"]ளு[/size][size=1]மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.[/size][size=1] [/size] [size=2]இன்று (14.08.12) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாவிலாற்றை விடுதலைப்புலிகள் பூட்டியதனால் அவ் நீரை நம்பியிருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டதாலும், அவர்கள் வயல் நிலம் நீரின்றி காய்ந்தாலும், அதனால் அவ் விவசாயிகளுக்கு நீரினை பெற்றுக…

  9. [size=4][size=5]நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன் கோர வேண்டும் [/size]என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக தெரிவித்தார். வவுனியா சிறையில் நடைபெற்ற கலவரத்தையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நானும் ஒரு முன்னாள் அரசியல் கைதி தான். நானும் MP தான்.…

    • 6 replies
    • 1.4k views
  10. [size=6]மன்னாரில் மேல் நீதிமன்றம் திறப்பு[/size] [size=4]இலங்கையின் வடமேற்கே மன்னாரில் மேல் நீதிமன்றம் ஒன்று புதிதாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் அவர்கள் இந்த நீதிமன்றக் கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள பலதரப்பட்ட சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். எனினும், இவர்களில் பலருக்கு எதிராக இன்னும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் வருடக்கணக்காக நீதிமன்றங்களில் தாமதமடைந்த…

    • 0 replies
    • 512 views
  11. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளதாகத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்தால் எதிர்காலத்தில் எனது வாக்கைக்கூட அவர்களுக்கு அளித்திருப்பேன் என்றார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ருத்திரமலர் ஞானபாஸ்கரனை ஆதரித்து கோவில்போரதீவில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கோவில்போரதீவு பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மண்முனைப்பற்று இளைஞர் பாராளுமன…

  12. நாட்டைவிட்டு தப்பியோடாமல் எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். இது எங்களுடைய மண் எங்களுக்குச் சொந்தமான மண் இங்கிருந்து ஓடிவிடாமல் தமிழினம் வாழ போராட வேண்டும். இதனை ஒவ்வொரு தமிழ் இளைஞர்களும் தமது கடமையாக கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், மிகக் குறைந்தளவு காசில் நாட்டை விட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். மீன்பிடிக்குப் பயன்படுத்தும் இழுவைப்படகுகளில் சென்று கடலில் உயிரைப் பறிகொடுக்க…

  13. யாழ்.மாவட்டத்தில் இந்த வருடம் முதல் ஆறுமாத காலப்பகுதிகளில் 62 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரமே முதல் ஆறு மாத காலப்பகுதியில் 62 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள பதிவாகியுள்ளன. இதில் பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு 22 சிறுவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு 13 சிறுவர்களும் உளரீதியான துஷ்பிரயோகத்துக்கு 2 சிறுவர்களும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். கவனிப்பாரற்று 8 சிறுவர்களும், சட்டத்தை குழப்பிய 11 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நெருக்கீட்டுக்கு ஆளாகிய நிலையில் ஒரு சிறுவரும் மற்றும் ஒரு சிறுவர் தற்க…

  14. அமைச்சர்கள் மற்றும் பிரதிஅமைச்சர்களுக்கு அரச உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கொழும்புபம்பலப்பிட்டியில் 20 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட தொடர் மாடிக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 42 கோடி 50 லட்சம் ரூபா செலுத்தி இந்த தொடர்மாடிக் கட்டடத்தை அரசுடைமையாக்கிக் கொள்வது தொடர்பாக அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அந்த தொடர்மாடிக் கட்டடத்தை சொகுசு வசதிகள் கொண்டதாக நவீனமயப்படுத்துவதற்கு மேலும் 11 கோடி ரூபா வரையில் தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் அல்லது அதைச் சூழவோ வீடுகளைக் கொண்டிராத அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ விடுதிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவே …

  15. யாழ்ப்பாணத்தில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, அங்குள்ளவர்களுக்கு அதன் பாதிப்புகள் குறித்து தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அபாகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லேஷா டி சில்வா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மாத்திரமல்லாது, யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பினருக்கும் இது பற்றி தெளிவுப்படுத்த அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் கட்டுப்பாட்டுச் சபையின் அலுலகங்கள் இல்லை என்பதால், நீதிமன்றம், பிரதேச சபை மற்றும் அரச நிறுவனங்களில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லேஷா டி சில்வா கூறியுள்ளார். www.Globaltamilnews.net

  16. முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுக் கிராமத்தில் பெரியமுறிப்புக் குளத்திற்கு அண்மித்த பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுடன் சிவன் கோவில் அர்ச்சகரையும் படையினர் மிரட்டியிருக்கின்றனர். பெரியமுறிப்புக்குளத்திற்கு அருகாமையில் உள்ள அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் கோவிலில் மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் போர் மூலம் குறித்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அரச மரத்தின் கீழ் சிறிய பௌத்த கோவில் அமைத்து அதில் புத்தரின் சிலையும் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து குறித்த சிவன் கோவிலின் அர்ச்சகரை அணுகிய படையினர் புத்தவிகாரை விவகாரத்தினை யார் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது? என்று கேட்டு மிரட்டியதுடன், குறித்…

  17. சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் இருந்து கனரக வாகனங்கள் வரை இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டு வருகின்றன. சில கிழமைகள் முதல் இராணுவத்தினர் யாழில் ஒரு வீட்டை சுற்றிவளைத்து ஆயுதங்களை கைப்பற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யபட்ட நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவு விசாரணை நடார்த்தி வருகின்றது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டி மற்றும் எள்ளங்குளம் பகுதிகளில் 15 நிமிடங்கள் துப்பாக்கி சூட்டுச்சத்தம் கேட்டதாக பிரதேசவாசிகள் கூறினர். மேலும் இது இடம்பெற்ற சமயம் வல்வெட்டித்துறை பகுதியில் சிலர் நான்கு மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் சென்றதாக நேரில் கண்ட ஒர…

    • 0 replies
    • 593 views
  18. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில் தமிழ் உணர்வாளர்கள் த.சீனுவாசராவ், இரா.ஞானசேகரன் ஆகியோரினால் எழுதப்பட்ட “இருப்பாய் தமிழா நெருப்பாய் உலகத்தமிழினம் அழிந்திடுமா” எனும் தலைப்பிலான புத்தகம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 7:30 மணியளவில் வெளியிடப்பட்டது, இப்புத்தகத்தில் உலகத் தமிழினத்தின் வரலாறு மற்றும் ஈழ விடுதலை முள்ளிவாய்க்கால் படுகொலை, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் ஈழ விடுதலைப்போர் உலக நாடுகளின் அரசியல் கீழ்த்தரமான சுய நோக்கங்களுக்காக பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன. மற்றும் பல இப்போதைய இன உணர்வுள்ள தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் த.சீனுவாசராவ், இரா.ஞானசேகரன் கிட்டத்தட்ட 120 நாடுகளுக்கு ம…

    • 0 replies
    • 408 views
  19. இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட முக்கிய காணிச் சொத்தொன்றை சீன நிறுவனத்திற்கு சிறிலங்கா வழங்க உடன்பட்டமை தொடர்பில் இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் கொழும்பு தூதரகம் மற்றும் புதுடெல்லியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சக வட்டார தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் சிறிலங்கா வெளியுறவு அமைச்சு வட்டாரம் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவலையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பாத நிலையில், இத்தகவலைத் தெரிவித்தவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. காலி வீதி மற்றும் Duplication வீதி சந்திக்கும் இடத்தில் காணப்படும் 287 பேர்ஜ் நிலமானது முன்னர் Shaw Wallace and H…

  20. [size=2][size=4]இலங்கையில் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் உருவாகியிருக்கும் "காவியுடைப் பயங்கரவாதம்" பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ராவூப் ஹக்கீம், பின்னர் அதற்காக பகிரங்கமாகவே மன்னிப்பக் கோரியிருக்கின்றார். அல்லது மன்னிப்புக் கோர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]சிறுபான்மையினம் ஒன்றின் தலைவர் அந்த இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற கொடூரங்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்காக பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பது சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இனவாதிகளின் அச்சுத்தல் காரணமாகத்தான் ஹக்கீம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் …

  21. முல்லைத்தீவு முள்ளியவளையில் வெள்ளை ஊர்தியில் வந்த இனம்தெரியதோரினால் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.கடத்தப்பட்டவர் ஒரு குழந்தையின் தந்தையான சின்னத்துரை சதீஸ்வரன் என தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான இவர் சிறீலங்காவின் இன அழிப்பு போரின் இறுதியில் படையிரால் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு இவ் வருடமே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர் இனம்தெரியதோரினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். தனியார் வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வீடு திரும்பிய நிலையில் கடத்தப்பட்ட அவர் பற்றிய தகவல் எதுவும் இன்னும் தெரியாது உள்ளதாகதெரிவித்துள்ள குடும்பத்தினர் உரிய தரப்புகள் தலையிட்டு விடுதலைக்கு உதவவேண்டும் எனக் கோரிக்கை…

  22. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணியுடன் எதிர்வரும் 24ம் நாள் நடத்தவிருந்த சந்திப்பை இந்திய அரசாங்கம் திடீரென- காரணம் ஏதுமின்றி இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபரோ அல்லது அமைச்சர்களோ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் இந்தியாவுடனான சிக்கலைத் தீர்ப்பதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி …

  23. சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் ஜே சிசன், அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை முதல்முறையாகச் சந்தித்துப் பேசியுள்ளார். வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கடந்த 9ம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்தும், தொடர்ந்து சுமுகமான உறவுகளை பேணிக் கொள்வது குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். 10 நாடுகளில் 30 ஆண்டுகளாக இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ள மைக்கல் ஜே சிசன், சிறிலங்காவுக்கான தூதுவராக அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் இன்னமும் கொழும்பில் தமது கடமையை பொறு…

  24. (கெலும் பண்டார) நவம்பரில் நடக்கவுள்ள அனைத்துலக மனித உரிமை ஆவர்த்தன மதிப்பீட்டில் சமர்பிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிப்பதற்கு இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நியமித்துள்ளார். இந்த நாடுகள் இலங்கை மீது கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் என்பதனால் நவநீதம்பிள்ளையின் தீர்மானத்தையிட்டு இலங்கை அரசாங்கம் கிலேசமடைந்துள்ளது. இந்த நாடுகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் இலங்கை பற்றி அறிக்கை தயாரித்து நவநீதம்பிள்ளையிடம் வழங்கும். பிரதானமாக ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டபடி இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…

  25. ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா.) இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சியான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணரத்ன தெரிவித்தார். டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியது: இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும். உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண முடிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.