ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
ஈழத்தமிழர் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது தமிழினப்படுகொலையின் குறியீடாகிவிட்ட, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின், மூன்றாமாண்டு நினைவேந்தல் வாரம், உலகெங்கும் உணர்வுபூர்வமாக சனிக்கிழமை (12-05-2012) தொடங்குகின்றது. மே 12ம் நாள் முதல் நினைவேந்தல் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு, மே 18ம் நாள் தமிழீழத் தேசியத் துக்க நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தாண்டு பிரகடனப்படுத்தியிருந்தது. இவ் நினைவேந்தல் வாரத்தில் இரத்த தானம், கண்காட்சி , துண்டுப்பிரசுர பரப்புரை, வழிபாடுகள் என தமிழீழ இனப்படுகொiலையினை வெளிப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினையும் வலியுறுத்தியும் பல்வேறு வடிவங்களிலும் இந்நாட்களில், முன்னெடுப்புகள் அமைந்திருக்கும். அமெரிக்…
-
- 1 reply
- 555 views
-
-
மக்கள் எழுச்சியினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்கப்பு மாவட்ட பிரதேச முக்கியஸ்த்தர்களுடனான சந்திப்பிபொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சியடைய வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தை மாற்ற முடியும். அரசாங்கத்தை மாற்றும் நேரம் தற்போது வந்துள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை கிழக்கு ம…
-
- 2 replies
- 507 views
-
-
அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி 6 வயது மற்றும் 8 வயது நிரம்பிய இரு பாலகர்கள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் காலவரையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இக்குடும்பம் கடந்த 1 வருடத்துக்கு மேலாக சமூகத்தில் விடப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியா குடிவரவுத் திணைக்களத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து மெல்பேர்ணில் வசித்துவந்த தாய், மற்றும் அவருடைய இரு சிறுவர்களையும் கடந்த 10 ஆம் திகதி எவ்வித முன்னறிவித்தலுமில்லாமல் நேர்காணல் என அழைத்து கணவரிடமிருந்து பிரித்து சிட்னி வில்லாவுட் தடுப்பு முகாமுக்கு ஏற்றப்பட்டுள்ளனர். http://yout…
-
- 2 replies
- 796 views
-
-
கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். கங்கொடவில நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த இளைஞர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும் நோக்கில் அங்கு சென்ற போதே காணாமல் போயுள்ளனர். இந்த இளைஞர் பெப்ரவரி 11 ஆம் முற்பகல் 10.30 மற்றும் 10.31 அளவில் திணைக்களத்தின் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளமை பதிவாகியுள்ளது. திணைக்களத்தில் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கமாரக்களிலும் இவர்கள் சென்றது பதிவாகியுள்ளது. இதன் பின்னர், இந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி என்னவென்று தெரியவில்லை. இது குறித்து காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிங்கள இளைஞர்களே இவ்வாறு காணாம…
-
- 0 replies
- 797 views
-
-
கடந்த 14 . மார்ச். 2012 அன்று Nordrhein-Westfalen மாகாணசபை கலைக்கப்பட்டத்தை அடுத்து நாளை 13 . மே .2012 அன்று தேர்தல் நடைபெறுகின்றது . இத் தேர்தலில் இடதுசாரி கட்சியின் சார்பில் திரு Ali Atalan அவர்கள் Münster அருகில் உள்ள Coesfeld II தொகுதியில் போட்டியிடுகின்றார் . திரு Ali Atalan அவர்கள் இனவிடுதலைக்காக போராடிவரும் குர்டிஸ்தான் இனத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் தமிழீழ விடுதலைக்கு முழு ஆதரவை வழங்கி வருவதுடன் கடந்த 2011 மே 18 போர்க்குற்ற நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரை ஆற்றியதுடன் அவர்களின் கட்சி உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை விளக்கி அவர்களை இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தார் . திரு Ali Atalan அவர்கள் உயர்கல்வி …
-
- 0 replies
- 808 views
-
-
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்களாக சிறைத் தண்டணை பெற்று வந்த நபரை அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 55 வயதான கருணாகரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏவுகணைக், துப்பாக்கிகள், தொழிநுட்ப இயந்திரங்கள் மற்றும் பல மில்லியன் ரூபா பணமும் வழங்கியதாக 2009ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இவருக்கு கடூழிய தண்டணையாக 20 ஆண்டுகள் விதிக்க வெண்டும் என சட்டத்தரணி வாதாடினார். எனினும் இவர் தனது சமூகத்தின் நன்மைக்காக செயற்பட்டவர் எனக் கூறி சிறையில் இருந்த காலங்களை தண்டணைக் காலமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதன் பின்ன…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசம், ஆர்மேனிய இனப்படுகொலையினை அங்கீகரித்தது போல், தமிழீழ இனப்படுகொலையினையும் அங்கீகரிக்க கோரும், கையெழுத்துப் போராட்டம் பிரான்சில் தொடங்கியது. கடந்தாண்டு ஆர்மேனிய படுகொலையினை ஒர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் சட்ட மூலமொன்று பிரென்சு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி ,தமிழீழத்திலும் நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, பிரென்சு அரசினை அங்கீரிக்க கோரும் கையெழுத்துப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் இக்கையெழுத்துப் போராட்டம் தொடங்கியுள்ளது…
-
- 2 replies
- 536 views
-
-
அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி 6 வயது மற்றும் 8 வயது நிரம்பிய இரு பாலகர்கள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் காலவரையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இக்குடும்பம் கடந்த 1 வருடத்துக்கு மேலாக சமூகத்தில் விடப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலயா குடிவரவுத் திணைக்களத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து மெல்பேர்ணில் வசித்துவந்த தாய், மற்றும் அவருடைய இரு சிறுவர்களையும் கடந்த 10ந்திகதி எவ்வித முன்னறிவித்தலுமில்லாமல் நேர்காணல் என அழைத்து கணவரிடமிருந்து பிரித்து சிட்னி வில்லாவுட் தடுப்பு முகாமுக்கு ஏற்றப்பட்டுள்ளனர். http://youtu.be/N5G1JNNx_KI http://www.pooraayam.com/mukia…
-
- 1 reply
- 681 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கூட்டு முடிவுகளை முன்னெடுக்கும் வகையிலான அதியுயர்சபை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர்கள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே இவ்வாறு யோசிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது. பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஆர்.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் ப…
-
- 1 reply
- 572 views
-
-
இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை தேவை என்பதை வலியுறுத்த சென்னை மெரினாவில் திரள மே 17 இயக்கம் அழைப்பு சென்னை: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரளுமாறு பொதுமக்களுக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழீழம் தொடர்பான தமிழர்களின் நிலைப்ப்பாட்டை கொண்டு செல்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி பெரும் எண்ணிக்கையில் மெரினாவில் திரண்டு உணர வைத்தோம்.. ஒன்றிணைந்த இலங்கை க்குள் தீர்வை திணிப்பார்கள் என்று கடந்த ஆண்டு மே மாதம…
-
- 0 replies
- 802 views
-
-
இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு IPS செய்தி நிறுவனத்திற்காக Feizal Samath எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் இறுதியில் காணாமற் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த தமது கணவன்மார்களின் நலம் வேண்டி மே 18 அன்று சிறிலங்காவின் வடக்கில் வாழும் 800 பெண்கள் வரை இந்து மத வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். "இறுதி யுத்தத்தின் போது காணாமற் போன மற்றும் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்…
-
- 0 replies
- 688 views
-
-
தம்புள்ளையில் பிக்கு ஒருவர் சாதாரண மனிதரிலும் மிகக் கேவலமாக நடந்து கொண்டதையிட்டு முஸ்லிம் சமூகம் மிக வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ளைப் பிக்குவைப் போலவே மன்னார் ஆயரும் முஸ்லிகளுக்கு எதிராக மதவாதப் போக்கில் செயற்பட்டு வருகின்றார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். இடம்பெயர்ந்த முஸ்லிம்களை எனது உயிரைக் கொடுத்தேனும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவேன். இதற்கு கூட்டமைப்பிடமிருந்து இடையூறுகள் வரின் 20 இலட்சம் முஸ்லிம்களை வீதியில் இறக்கி புலிகள் இழைத்த அநீதிகளுக்காக தனியானதொரு ஆணைக்குழுவை நிறுவுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிர…
-
- 1 reply
- 518 views
-
-
இஸ்ரேல் என்றோர் நாட்டையே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ஒன்று நிலைகொள்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும் என்று நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வினாவெழுப்பினார். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் கருத்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், "இலங்கை எமது தாய்நாடு, முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடையவர்கள். உலகில் எமது இனத்திற்கு எதிராக செயற்படும் இஸ்ரேலை எமது நாட்டுக்குள் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களின் நிலங்களை பலாத்காரமாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்…
-
- 0 replies
- 596 views
-
-
வவுனியா பம்பைமடுப் பகுதியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமானப்படைத் தளம் ஒன்றை நிறுவும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வவுனியா நகரில் பல ஏக்கர் விஸ்தீரமான நிலப்பரப்பில் விமானப்படை முகாம் ஒன்று இயங்கி வரும் நிலையில் இராணுவத்தினர் மேலும் ஒரு விமானப்படைத்தளத்தை அமைக்கும் முயற்சியானது பலதரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.சிவலிங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது; “வவுனியா தெற்குப் பிரதேசத்திலுள்ள பம்பைமடு எல்லைக்குள் உத்தேச விமானப் படைத் தளம் அமைந்திருப்பதால் தமது அனுமதியைக் கேட்டிருந்தனர். ஆனால் பிரதேச சபை அனுமதியை வழங்கவில்லை. …
-
- 0 replies
- 463 views
-
-
2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2011ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதன் இறுதிகட்ட அச்சிடல் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர். இர…
-
- 0 replies
- 529 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஆணையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு மாதாந்தப் பரிசோதனைகளுக்காக சென்ற சமயம் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையின்போது யாழ். பொலிஸாரினால் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையின் இணைப்பாளர் மற்றும் சக ஊழியர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு கடமையிலிருந்த பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் யாழ். பிராந்திய கிளையின் ஆணையாளரால், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக…
-
- 0 replies
- 509 views
-
-
கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.ஆர்.எல்.எப். முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கிழக்குமாகாணசபையைக் கலைக்க எடுக்கும் முடிவு பாசிச ஜனநாயக கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டமே எனத் தலைப்பிட்டு, கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படுவது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிட…
-
- 0 replies
- 522 views
-
-
சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார். ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விட…
-
- 24 replies
- 2.9k views
-
-
சிறிலங்காவில் தமிழர்கள் மீதான கொடுமைகள் நிறுத்தப்படும் வரை இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சகோதர உறவு இருக்க முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், தாம் எடுத்துக் கூறியுள்ளதாக பாஜகவின் தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த பாஜக மாநில மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “போருக்குப் பிந்திய தமிழர்களின் நிலையை அறிந்து வர நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழு சிறிலங்கா சென்றிருந்தது. அப்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த உரையாடலின் போது இந்தியாவும், சிறிலங்காவும் சகோதரத்துவ நாடுகள்…
-
- 0 replies
- 753 views
-
-
சிறீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பொராளிகள் 672 பேர், கொழும்பிலுள்ள முக்கிய ஸ்தானங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்துவரப்பட்டனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வின் போது, காலி முகத்திடல் பகுதிக்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் போராளிகளையும் அவர்களை அழைத்து வந்த படைத்தரப்பினரையும் படங்களில் காணலாம். படங்கள்.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4521:2012-05-11-13-29-45&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 1.4k views
-
-
மட்டக்களப்பு நகரில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக் கிழமை மாலை கலந்து கொள்ளும் நிகழ்வோன்று ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியில் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் தனித் தனியாக சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். மாலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் மற்றுமொரு சந்திப்பொன்றில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகவும் , அவ்விடுதியின் கட்டிடத் தொகுதயிலேயே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவ…
-
- 0 replies
- 663 views
-
-
பிரான்சின் புதிய அரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரான்சுவா ஹொலண்ட் அவர்களுக்கு, பிரான்ஸ் தமிழ் சமூகத்தின் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகள், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் அரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள பிரான்சுவா ஹொலண்ட் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடித்தில் : பிரான்ஸ் வாழ் தமிழ் சமூகம், பிரென்சு அரசியலை ஆர்வத்தோடு அணுகிவருவதோடு, நடந்து முடிந்த அதிபர் தேர்தலிலும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைக்குள், இருந்து தப்பித்து,அகதிகளாக பிரான்சில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கொண்ட, பிரென்சு மண்ணை நன்றியோடு நெஞ்சில் இருத்த…
-
- 0 replies
- 538 views
-
-
தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி அகதியாக தாய்லாந்தில் ஈழத் தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியவர்களை சிங்கள கைகூலிகள்களான சஞ்சி , பிரபா என்கிற கைகூலிகள் ஐநா அதிகாரிகளுடன் தாய்லாந்தில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளை சந்தித்து இலங்கையில் இப்போது நிலைமை நன்றாக இருக்கிறது. உங்களிற்கு அங்கு சகலவிதமான உதவிகள் மற்றும் காசுகள் வழங்கப்படும் என்று அனைவருக்கு ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர் .இலங்கை போவதற்கு தங்கள் சிலவுகளை ஏற்பதாகவும் தாய்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் அனைவரையும் நாடு திரும்பு மாறு வற்புறித்தி உள்ளனர். ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறி . அங்கு அவர்களை புகைப்படம் எடுத்த போது உடனே புகைப்படம் எடுக்க கூடாது என்று தடுத்து விட்டன…
-
- 2 replies
- 778 views
-
-
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியில் இன்று ஸ்ரீலங்கா படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என செய்தியாளர் தெரிவிக்கின்றார். மானிப்பாய் வீதியூடாகவும் வட்டுக்கோட்டை வீதியூடாகவும் யாழ்.நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் இங்கு நிலை கொண்டுள்ள படையினரால் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்இ முச்சக்கர வண்டி உட்பட நகருக்குள் நுழைகின்ற அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு அதில் பயணிக்கும் பொது மக்கள் இறக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அவர்களின் அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்கள் உடற்பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என தெரிவிக்கின்றார். இவ்விடத்தில்…
-
- 0 replies
- 801 views
-
-
அரசியல் அவலத்தின் பெரும் பரப்பை யாரும் எளிதிற் கடந்து விடமுடியாது என்பதற்கு ஈழப்போர் மட்டுமல்ல அதற்கு பின்னான நாட்களும் மிகத் தெளிவாகவே காட்டுகின்றன. போர்க்கால நிகழ்ச்சிகள் ஒருவிதமான அவலத்தையும் வாழ்க்கைச் சிதைவுகளையும் ஏற்படுத்தின என்றால், போருக்குப் பின்னான கால நிலவரங்கள் இன்னொரு விதமான அவலத்தையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக கல்வியில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது சிதைவு மிகப் பெரிது. போர் நடந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கு, மன்னார் கிழக்குப் போன்ற இடங்களின் நிலை மிகப் பிந்தங்கியுள்ளது. அதிலும் கிளிநொச்சியின் நிலை இன்னும் மோசமானது. வடமாகாணத்தில் கடைசி நிலையில் கிளிநொச்சியே உள்ளது. ஒன்பது பாடங்களிலும் சிறப்புச் சித்தியைப் பெற…
-
- 2 replies
- 979 views
-