Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் போருக்குப் பிந்திய நிலைமைகள் மற்றும், அரசியல்தீர்வு காண்பதற்கான சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசுக்கு விளக்கமளிக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் கூறியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழு இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், இந்திய அரச தலைவர்களையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் சிறில…

  2. தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன: இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர். இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் …

  3. கடமைக்கு சமுகமளிக்கவோ அல்லது மன்னிப்பு காலத்தில் முகாம்களில் ஆஜராகவோ தவறிய 29,092 இராணுவ உத்தியோகஸ்தர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இராணுவத்தைவிட்டு தப்பியோடிய 36,308 பேர் இவ்வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரையான மூன்றுவருட காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு அவர்கள் விரும்பினால் சரணடையலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், நாம் பொலிஸ் அறிக்கைகளைப் பெற்று, அவர்கள் ஏதேனும் சட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்களா என ஆராய்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்டநடவடிக்கை மேற்கொள்கிறோம்' என அவர…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி நிலைமைகள் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவிற்கு, கூட்டமைப்பு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் அவசியம் குறித்து இந்திய உயரதிகாரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

  5. வடக்கில் என்றுமில்லாதளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ள வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இடம்பெறும் கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்களெனவும் தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; வட மாகாணத்தினைப் பொறுத்தவரை என்றுமே இல்லாத அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றுள் பாலியல் வன்புணர்வு தொடர்பான குற்றங்கள் மிக மோசமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. அதிலும் அதிகமாக சிறுவர்களே பாதிப்புகளை எதிர் நோக்குகின்றார்கள். …

  6. ... வட கிழக்கில் 60% ஆன மக்களை முடிச்சாச்சாம், 40%ஆனவர்கள் மீதியாக எஞ்சியிருக்கிறார்களாம்? ...

  7. இலங்கை இனப் பிரச்சினைக்கு “தனி ஈழம்' ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமைய முடியும். இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்தை பா.ஜ.க. முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது போன்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கையில்தான் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் மற்றும் இலங்கையின் தமிழர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வலியுறுத்தி வருவதை எனது தலைமையிலான குழுவால் இலங்கையில் காண முடிந்தது. எதிர்க்கட்சித்தலைவர்சுஷ்மாசுவராஜுடன்ஸ்ரீரங்காஎம்.பி. சந்திப்பு இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீரங்கா மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜ…

  8. பரந்தன் பகுதியில் கனேடியப் பிரஜை ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார். இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர…

  9. அண்மையில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் சார்பில் கருத்துக்களை முன்வைத்த ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம், தன்னை ஐநாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகளை உண்மை என்று உறுதி செய்துள்ளார். தன்னை வேறு இடத்துக்கு மாற்றுவதை, இலங்கைக்கு எதிரான சக்திகள், தமிழர் ஒருவருக்கு எதிரான பழிவாங்கலாக தவறாக அர்த்தப்படுத்தி கூற முற்படலாம் என்றும் அவர் வெளியுறவு அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் எச்சரித்திருக்கிறார். தன்னை பிரசிலுக்கு அல்லது கியூபாவுக்கு மாற்றலாகிச் செல்லுமாறு கேட்கப்பட்டதாகக் கூறும் தமரா, அது தற…

  10. திருகோணமலை மாவட்டத்தில் புலனாய்வுப் பிரிவினரால் பரவலாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் தொடர்பாக திங்கட்கிழமை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவிருக்கின்றது. கோதாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலே அவரை திங்கட்கிழமை சம்பந்தன் சந்தித்து உரையாடவிருப்பதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். கடந்த மாத இறுதி வாரத்திலிருந்து கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியிலிருந்து வெருகல் வரையான பகுதிகளில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கைது செய்தனர். ஆரம்பத்தில் இக்கைதுகள் தொட…

  11. யாழ்.மாவட்டம் உட்பட தமிழர்; தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் இழந்த பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப்பெறுவதற்கு வழி தெரியாமல் சிறீலங்கா பொலிஸ் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் நாடிச்செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்;படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென்…

  12. கொழும்பில் சிறிலங்காவுக்கான இஸ்ரேல் தூதரகமா? - முஸ்லிம் மக்கள் கொந்தளிப்பு! - அரசுக்கும் கண்டனம்!! சிறிலங்காவுக்கான இஸ்ரேல் தூதரகம் கொழும்பில் அமைக்கப்பட்டமைக்கும், அதற்கான தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் கண்டனத்தையும், விசனத்தையும் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவில் இஸ்ரேல் தூதுவரைக் காலூன்ற இடமளிப்பதில்லை. அதேபோன்று இஸ்ரேலுக்கு சிறிலங்காத் தூதுவரை நியமிப்பதில்லை என்று காலங்காலமாக முஸ்லிம் சமூகத்தைக் கௌரவப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த கொள்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மீறியுள்ளது என முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கடுமையான முறையில் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து கொண்டு ம…

    • 5 replies
    • 1.5k views
  13. இலங்கைத் தமிழர்களின் புகலிடம் கோரும் நாட்டம் இன்னமும் குறைவடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவுறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் சட்டவிரோத வழிகளில் வெளிநாடுகளில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரச்சாரம் செய்த போதிலும், உண்மையில் தமிழ் மக்கள் நிலைமைகள் குறித்து திருப்தி அடையவில்லை. இலங்கைக் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், தமிழர்கள் மேற்குலக நாடுகளில் புகலிடம் கோரும் நாட்டத்தை கைவிடவில்லை. இதேவேளை, தமி…

    • 1 reply
    • 770 views
  14. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறுவதாக முதலில் செய்தி வந்தது. அரச ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி, நவசமசமாஜக் கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவை கலந்து கொள்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது. ஆனால் வெளிவந்த கானொளிகளைப் பார்க்கும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணைந்தது போன்றதான தோற்றப்பாட்டை அந்நிகழ்வு உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது. கூட்டமைப்போடு சேர்ந்து மேதின நிகழ்வினை நடத்துவதால் சிங்கள மக்களின் வாக்கு வங்கியில் சேதம் ஏற்படும் என்கிற அபாயத்தை உணர்ந்தும், ஐ.தே.க. இந்த விஷப் பரீட்சையில் ஏன் ஈடுபட்டது என்கிற கேள்வியும் எழ…

  15. அண்மையில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் சார்பில் கருத்துக்களை முன்வைத்த ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம், தன்னை ஐநாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகளை உண்மை என்று உறுதி செய்துள்ளார். தன்னை வேறு இடத்துக்கு மாற்றுவதை, இலங்கைக்கு எதிரான சக்திகள், தமிழர் ஒருவருக்கு எதிரான பழிவாங்கலாக தவறாக அர்த்தப்படுத்தி கூற முற்படலாம் என்றும் அவர் வெளியுறவு அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் எச்சரித்திருக்கிறார். தன்னை பிரசிலுக்கு அல்லது கியூபாவுக்கு மாற்றலாகிச் செல்லுமாறு கேட்கப்பட்டதாகக் கூறும் தமரா, அது தற…

  16. 'இரத்தின துவீபம்', 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று 'இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்' என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது. வரலாற்றில் கறைபடிந்த, அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள். நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி, ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோர் துல்லியமாக பரிசோதனைசெய்த பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த 'கெலம் மெக்ரே' கூறுகின்றார். உலகத்தி…

  17. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 10,000 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 80,000 பேர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 10,000 பேர் தொடர்ந்தும் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். போதியளவு வசதிகள் இல்லாத காரணத்தினால் சிலர் சுய விருப்பின் அடிப்படையில் தற்காலிக முகாம்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும், சிலர் உறவினர்களுடன் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாவதற்கு எதிர்பார்த்ததனை விடவும் அதிகளவான கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எ…

  18. ஈகைச்சுடர் முருகதாசனுக்கு நினைவுக் கல்லறை ஈகைச்சுடர் முருகதாசனின் ஈகமும் தன்னையே ஆகுதி ஆக்கியபடி சர்வதேசசமூகத்திடம் அவன்‘எனது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று கோரியதும் என்றென்றும் மனதைவிட்டு அகன்றுவிடப்போவதில்லை. ஒரு பெரும் இனப்படுகொலைக்கும் அதனூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தைசிதைப்பதற்கும் சிங்கள பேரினவாத படைகளும் வல்லாதிக்ககூட்டும் தனது இரும்புப்பிடியை இறுக்கி இறுக்கி எமது மக்களை கொலைவலையத்துள் நகர்த்தியபடி இருந்த பொழுதில்தான்‘எமது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று சர்வதேச மனச்சாட்சியை உலுப்பியபடி ஈகைச்சுடர்முருகதாசனின் தியாகம் உலகமுன்றலில் நிகழ்ந்தேறியது. அவனது தியாகமும் அவன் தனதுதாயகவிடுதலைமீது காட்டிய அளவற்ற தாகமும் வார்த்தைகளாலும் ஒப்பீடுகளாலும் வர்ணிக்க முடியாதவை. ஒரு …

    • 0 replies
    • 529 views
  19. ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுதலை செய்யக…

    • 0 replies
    • 418 views
  20. முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – CPI – மகேந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வி.

    • 0 replies
    • 464 views
  21. இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது.புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர், அது தற்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்க…

    • 0 replies
    • 365 views
  22. இலங்கை தமிழர் நலனை நான் யாருக்கும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை பிரச்னையில் திமுக நிலை கெலிடாஸ்கோப் மாதிரி ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும், டிசைன் மாறும் என்று துக்ளக் சோ எழுதியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள விடுதலை ஏடு, ஈழ பிரச்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்து வந்திருக்கிற முரண்பாடுகள் பற்றி சோ ஒரு வரி கூட எழுத அஞ்சுவது ஏன் என்று கேட்டுள்ளது. இலங்கை பிரச்னை பற்றி ஜெயலலிதா முதன் முதலாக கூறியது என்ன? சிங்கள ராணுவமும், காவல் துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புல…

  23. முன்னாள் போராளிகளின் தற்கொலைகள் காரணம் நாங்களா ? Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, May 5, 2012 நேற்று (04.05.2012) பொலிகண்டியைச் சேர்ந்த 38வயதான சுகந்தி சிவலிங்கம் என்ற முன்னாள் பெண்போராளியின் தற்கொலை பற்றிய செய்தி இந்த நிடமிடம் வரை சூடு தணியாமல் நமது செய்திகளில் நிற்கிறது. இந்தப் போராளியின் தற்கொலைக்கான இரங்கல்கள் , வீரவணக்கங்கள் , இவற்றையும் தாண்டிய அரசியல் சிந்தனைகள் என சுகந்தியின் மரணம் பல்வேறு வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இனிவரும் சிலநாட்களில் சுகந்தியின் தற்கொலை பற்றிய தமிழ் ஊடகப்புலனாய்வு பரபரப்புச் செய்திகளும் வரும். இன்னும் சில வாரங்களில் சுகந்தியென்ற ஒருத்தியையும் மறந்துவிடுவோம். எத்தனையோ மரணங்கள் மனித வலிகள…

    • 0 replies
    • 754 views
  24. லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் இருவர், தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. லிவிங்ஸ்டனின் எதிர் வேட்பாளரான கொன்சவேட்டிவ்வின் போரிஸ் ஜோன்ஸனும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்க குற்றம் சுமத்தியுள்ளது. லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே வெற்றிபெற…

    • 9 replies
    • 1.4k views
  25. தமிழர் விடுதலைப் போராட்டத்தை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்வது அப்பட்டமான பொய் என விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராகச் செயற்பட்டுவந்தவரும் தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். யாழ் உதயனின் சகோதரப் பத்திரிகையான "சுடர்ஒளிக்கு' வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறினார். அந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் இங்கே கே: தமிழ் மக்கள் மனங்களில் உள்ள முக்கியமான கேள்வியொன்றை நான் கேட்க விரும்புகிறேன். அதை பகிரங்கமாக கேட்டு உங்கள் பதிலையும் பகிரங்கப்படுத்த வேண்டியது எனது ஒரு பொறுப்பு என்றும் கருதுகின்றேன். தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட…

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.