ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை இணைந்து நடத்தவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தனும் வடக்கில் மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தையும் அங்கு இடம்பெறுகின்ற பொருளாதார அபிவிருத்திகளையும் முதலில் கண்களைத் திறந்து பார்வையிடுமாறு கோருகின்றோம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் க…
-
- 0 replies
- 500 views
-
-
நாம் ஐக்கியமாக வெற்றியாக எமது வேலைத் திட்டங்களை புலம்பெயர்வாழ் நாடுகளில் செய்வதற்கு உண்மை, யதார்த்தம் ஆகிய இரண்டு விடயங்களும் முக்கியமானவை. இலங்கைத் தமிழ் மக்கள் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சாத்வீகம், ஆயுதப் போராட்டம் மூலம் சந்தித்தவர்கள். ஆனால் 2009 மே மாதத்துடன், அதாவது முள்ளிவாய்க்காலுடன் யாவும் ஓர் மந்த நிலைக்கு வந்துள்ளன. அரசியல் ரீதியாக பல தடவைகள் இலங்கைத் தமிழர்கள் ஆட்சியாளனால் ஏமாற்றப்பட்ட காரணத்தினால் நாங்கள் எமது நண்பர்கள் உறவினர்கள் உட்பட எவரையும் நம்புவதற்கு தயாராகவில்லை என்பதே யதார்த்தம். இதுவே இன்று எமது தடுமாற்றத்திற்குரிய விடயம். இதனால் எம்மிடையே எந்தவித கூட்டு முயற்சி என்ற கதைக்கும் இடமில்லை. இந்தப் பலவீனத்தையே இலங்கையின் ஆட்சியாளர்கள் மிக நீ…
-
- 0 replies
- 504 views
-
-
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மொழிகள் தொடர்பான சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் சிவில் சமூக அமைப்புகள் நேற்று வலியுறுத்தின. மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்க நிறுவனங்கள் வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தின. இலங்கையில் மொழி உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பாக மாற்றுக்கொள்கைளுக்கான நிலையம் மற்றும் மொழி உரிமைகளை மேம்படுத்துவதற்கான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சிவில் சமூகக் கூட்டணி ஆகியன மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் தொடர்;பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றபோதே இக்குற்றச்சாட்டு முன்வைக்…
-
- 1 reply
- 600 views
-
-
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. புனர்வாழ்வளிக்கப்படாத எல்.ரி.ரி.ஈ. முன்னாள் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர். திருகோணமலையில் ஈபிடிபி கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இந்நடவடிக்கைள் ஆரம்பமாகின. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரக்ள் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் …
-
- 0 replies
- 500 views
-
-
வருங்கால தமிழக இளைஞர்கள், வீரம் மானம் உள்ளவர்களாக, ஈழத்தமிழர்களைக் காக்கின்றவர்களாக வருவார்கள்: வைகோ வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழினும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோவியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே, விழுமிய தலைமை ஏற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் ஆருயிர்ச் சகோதரர் காசி. ஆனந்தன் அவர்களே, தியாகத் தழும்புகளைப் பெற்ற, பொது உடைமை இயக்கத்தினுடைய புகழ் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான அன்புமிக்க அண்ணன் நல்லகண்ணு அவர்களே, படைக்கலங்கள் பயிற்சிக் கூடங்களாகத் தமிழ…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார். மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால் டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று அவரிடம் கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார். போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால் அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக முன்மவைக்கப்படும் அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் முன்னெடுத்து வரும் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பரவலாக்கலை சிங்களவர்கள் எதிர்க்கின்றனர் என கூறுவது யார்?. நான் ஜனாதிபதியாக இருந்த போது, எம்லிப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். அப்போது மேடையில் இருந்த எமது கட்சியை சேர்ந்தவர்கள் இது குறித்து அதிகம் பேசவேண்டாம் …
-
- 4 replies
- 924 views
-
-
ஜனாதிபதி தொடக்கம் இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு - அர்ஜுன குற்றச்சாட்டு அரசியல்வாதிகள் தங்களுடைய வெற்றிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதையை பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். துபாயில் இடம்பெற்ற சியாம் பாத்தியா விருது விழாவில் கலந்து கொண்டு ´கொல்ப் செய்திச் சேவை´க்கு கருத்து தெரிவித்த போதே அர்ஜுன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். "இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளமையே பிரதான விடயம். ஜனாதிபதி தொடக்கம் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு காணப்படுவது நம்பமுடியாத ஒன்றாகும். எனது கிரிக்கெட் காலத்தில் அரசியல்வாதிகளின் வெற்றிக்கு கிரிக்கெட் வீரர…
-
- 2 replies
- 960 views
-
-
தனி தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம் தமிழர் வாழும் பகுதிகளில் பொதுவாக்கெடுப்பினை விரைவில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (30.04.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில் ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது. பொது வாக்கெடுப்பு அடிப்படையில் தமிழ் ஈழம் அமைவதற்கு ஐ.நா. சபை முயற்சி மேற்கொள்ள வேண்டும். …
-
- 13 replies
- 916 views
-
-
இலங்கையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையான சில காரணிகள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் துளிர்தெழுவதை சமகாலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதுவே இனப்பிரச்சினையின் தோற்றுவாய்கள் அடைக்கப்படாமல் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதொன்று என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வதாயுள்ளது. 2009ம் ஆண்டின் ஈற்றோடு இந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் அகற்றப்பட்டுவிட்டதாக வெளிப்படையாகவே கூறப்பட்ட நிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பற்றிய பேச்சுக்களும் பேசப்பட்டன. ஆனாலும் கடந்த 3 வருடங்களில் இனங்களுக்கிடையில் ஏற்படவேண்டிய நல்லிணக்கத்திற்கு மாறாக உள்…
-
- 0 replies
- 641 views
-
-
தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுப்பதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டிருப்பதாக டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப வீரபாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். 1980களில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டெசோ என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு திடீரென மீண்டும் திமுக தலைவர் மு கருணாநிதியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எண்பதுகளில் தனி ஈழத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்கள் இலங்கைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான தமிழ்நாட்டின் ஆதரவை ஒன்…
-
- 30 replies
- 2.2k views
-
-
<p>மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்.உள்ளதாக தெரிவித்துள்ளனர்; தாம் மீளக்குடியமர்ந்த -நாளில் இருந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக மக்கள் தெரிவித்த தகவல் காணொளி . இந்த மக்கள் தொடர்பாக வன்னி பா.உ செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்ட பொழுது தான் மக்களை சந்தித்து மேலதிக தகவல்களை தருவதாகவும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=17612http://youtu.be/uIvZThisTPs
-
- 0 replies
- 506 views
-
-
இலங்கையர் 269 பேரை கனடாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி டோகோ இராஜ்ஜியத்தில் அநாதரவாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா ஜெயராஜன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து பிரதான சந்தேகத்திற்குரியவரான கந்தையா பூபாலசிங்கம் எனப்படும் மோகன் ராஜ் என்பவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வவுனியா கணேசபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை பெற்ற இவர், பமாகோ, மலேசியா, டோகோ, கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
குமார் குணரத்தினத்தின் செவ்வி சிங்களத்தில் தற்போது ஒளிபரப்பப்படுகிறது!!! http://justin.tv/adaderanatv
-
- 0 replies
- 772 views
-
-
இலங்கையர் ஒருவருக்கு 15 வருடகால சிறை தண்டனை விதிக்க கோருகின்றது அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராளிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேகநபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான, நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படாதுவிடின் சட்டத்துக்கான மதிப்பு கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் ஒரு பயங்கர…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரித்தானியா நாடு கடத்திய ஈழத்தமிழன் திருமலையில் படுகொலை! சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 28 வயது தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 18ம் திகதி இவர் திருகோணமலையில் வைத்து கொல்லப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது. இச் சம்பவத்தை அடுத்து, இலங்கை அதிரடிப்படையினர் திருகோணமலையில் பாரிய இரகசிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தனர். இதன்போது சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு இரகசியமாக அவர்கள் அனைவரையும் வெலிகந்தை முகாமுக்கு கொண்டு சென்றது அதிரடிப்படை. இச் சம்பவத்தோடு, இக்கொலையும் தொடர்புற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. குறிப்பிட்ட 28 வயது இளைஞர் சம்பவ தினம் அன்று வெளியே சென்ற…
-
- 4 replies
- 655 views
-
-
http://youtu.be/_DoM78l-zjc யாழ். குடாநாட்டில் நடைபெறவுள்ள மேதினத்தை குழப்புவதற்கு இந்த அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக ஜ.தே. கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் தென்பகுதி மக்களை யாழில் நடைபெறவுள்ள மேதினத்தில் கலந்து கொள்ளாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளவுள்ள மேதினக் செயற்பாடுகளை புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் புத்துயிர் கொடுக்கும் செயற்பாடாக இந்த அரசாங்கம் பிரச்சாரம் செய்வதுடன், தமிழ் மக்கள் அனைவரையுமு; பயங்கரவாதிகளா…
-
- 1 reply
- 946 views
-
-
சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில், சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, சிறிலங்காவில…
-
- 1 reply
- 593 views
-
-
ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர், பல்லாயிரம் யூத இனத்தவர்களை நச்சுப் புகையூட்டிக் கொன்றொழித்தார். சிறை பிடித்த பல ஆயிரக்கணக்கான யூதர்களை தடுப்பு முகாமில் வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி பின்னர் நச்சு வாயுவை பாவித்து அவர்களை கொன்றார் என்பது வரலாறு. இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எம் மின மக்களை இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்றது. இதனை நினைவு கூரும் நாளான மே மாதம், முள்ளிவாய்க்கால் தினத்தில் ... வேற்றின மக்கள் ஒன்றுகூடும், லண்டன் நகரின் மையப்பகுதியில் நினைவு தினத்தை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) முடிவெடுத்துள்ளது. இதனை நேற்றைய தினம்(29) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் முன்மொழிய, மக்கள் அதற்கான ஆதரவினை நல்கியுள்ளனர் ! தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியில், இந்…
-
- 1 reply
- 621 views
-
-
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிறுபான்மை சிங்கள மக்களுடன் சம உரிமைகள் வழங்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இலங்கையில் இரண்டாம் பட்ச மக்களாக வாழ்வதை தாம் விரும்பவில்லை. அனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடமும் இதனையே தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை …
-
- 2 replies
- 512 views
-
-
இலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில் இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார். கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திமிங்கலம் 67அடி நீளமாக வளரக்கூடியது என்றும், இவை ஆண் இனத்தை சேர்ந்தவை என…
-
- 13 replies
- 2.9k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகள் தொடர்பாக ஆராய முஸ்லிம் காங்கிரஸினால் குழு நியமனம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு குழுவை நியமித்துள்ளது. முஸ்லிம்களின் அபிலாஷைகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு ஒரு வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் அதன் கூட்டு கட்சிகளிடம் ஆலோசனைகளை கோரியிருந்தது. இந்த ஆணைக்குழு ஜனநாயக …
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி இலங்கை அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மனிதஉரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகவும் பான் கீ மூன் இந்திய ஊடகச் செவ்வியில் கூறியிருந்தார். அத்துடன் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பான் கீ மூனின் இந்தக் கருத்து இலங்கை அரசாங்கத்துக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலரின் இந்தக் கருத்து நியாயமற்றது என்றும், இதனை விடுதலைப் புலிகள் தமக்கு சார…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில், சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, சிறிலங்கா…
-
- 0 replies
- 623 views
-
-
ஐக்கிய தேசிய கட்சி இனவாத கொள்கைகளை கொண்ட கட்சியல்ல என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கட்சியின் ஆரம்ப காலத்தில் நிலவிய தோற்றப்பாட்டை அதன் தலைமைகள் செயற்படுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கான உத்தியோகபூர்வ பாடல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அது 3 மொழிகளிலும் பாடப்பட்டது. பிரதான எதிர்கட்சிகளின் மே தின நிகழ்வையொட்டி, வடபிராந்தித்தில் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், நெடுந்தீவு, நாகதீப விகாரை ஆகிய பகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றுக…
-
- 0 replies
- 335 views
-