Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்பு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிய ஒருவர் எனக்கு மிக்க நண்பர். அவரிடம் ஒருமுறை சிங்கள ராணுவத் தளபதி ஒருவர் இவ்வாறு கூறினாராம்: ""இந்த நாட்டின் ராணுவத்திற்கு தலைமைத் தளபதியாக இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் ஒரே ஒரு மனிதருக்குத்தான் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் தமிழராகப் பிறந்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் மட்டும் சிங்களராகப் பிறந்திருந்தால் இந்த நாடே வியக்கும் மகத்தான தளபதியாக கொண்டாடப்பட்டிருப்பார். அதுபோலத்தான் ஆனையிறவில் சந்தித்த படுதோல்வியை வெகு வேகமாகச் சரிசெய்ய வேண்டும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் பெரியதொரு ராணுவ வெற்றியைக் காட்டவேண்டுமென்ற வெறியோடு அப்போதைய அதிபர் சந்திரிகா கு…

    • 2 replies
    • 2.3k views
  2. பிரபாகரனின் கொலைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் சம்பந்தன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். “எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்…

    • 4 replies
    • 1.2k views
  3. மஹிந்தவை தனியே சுஷமா சந்திப்பு; தமிழகத்தில் சர்ச்சை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சவை தனிமையில் சந்தித்துப் பேசியது தொடர்பில் தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. சுஷ்மா சுவராஜ் இவ்வாறு சந்தித்திருப்பதானது, குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமையில் சந்திப்பதை ஏற்கலாம். ஆனால் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்சவை சுஷ்மா தனிமையில் சந்தித்தார் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒன்றுபட்ட இலங்கையை…

  4. இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

    • 13 replies
    • 904 views
  5. வடக்கின் கல்வி நிலைமை பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வன்னிப் பிரதேச கல்வி தரம் n;தாடர்பில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு மாவட்டங்களிலும் மிகவும் குறைந்தளவான மாணவர்களே உயர்தரத்திற்காக தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் 35.39 வீதமான மாணவ மாணவியரும், முல்லைத்தீவில் 4016 வீதமான மாணவ மாணவியரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 71.62 வீதமான மாணவ மாண…

  6. மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! இவ்வாறு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வின்போது தெரிவித்தார். கேள்வி: இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்? பதில்: 1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்…

    • 24 replies
    • 2.6k views
  7. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்டும் வகையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்குரிய நியமன அவை உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 13ம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பட்ட தகமைகளும் நல்ல அனுபவமும் படைத்தவர்கள். இவர்கள் தமிழர்கள் அனுபவித்து வரும் மனித உரிமைப் பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்து, அவை தொடர்பான முன்னெடுப்பு களில் ஈடுபாடு கொண்டு தம் பங்களிப்பை வழங்கி வருபவர்களாவர். இந்திய நாட்டுக்குரிய நியமன உறுப்பினர்கள்: (1) பேராசிரியர் திருமதி சரஸ்வதி ராஜேந்திரன் – தமிழ் நாட்டின் ஓர் சிறந்த கல்விமான். பட்டப்படிப்ப…

  8. தனது அனுமதி இன்றி சிறிலங்கா ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை சந்திக்க கூடாது என சோனியா கடுமையான கட்டுப்பாட்டினை விதித்துள்ளார்.இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியல் வாதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்திய உயர்மட்டத் தலைவர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கையில் நடைமுறைக்கு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் போன்றோரைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்படு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அர…

  9. இலங்கை வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவைச் சேர்ந்த எம்.பி சுதர்சன நாச்சியப்பன் இலங்கை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என்று அழைத்திருக்கிறார். யாழ்ப்பாண நகரத்தில் வந்திறங்கிய எம்.பிக்களை வரவேற்கச் சென்ற அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவுக்கு இப்படியொரு அடை மொழியுடன் புகழ்ந்தது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்து விட்டது. நாச்சியப்பன் சொன்னதைக் கேட்டு டக்கிளஸ் தேவானந்தா மெய்மறந்து சிரித்துக் கொண்டு நின்றார். தொடர்ச்சியாக சர்ச்சiயாக பேசிவரும் இந்திய எம்.பி சுதர்சன நாச்சியப்பன் ஏன் இவ்வாறு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவை சொன்னார் என்ற பெரிய சந்தேகம் எழவே செய்யும். எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை ஒரு நடிகராக …

  10. எதிர்வரும் மூன்று நாட்களிலும் கியூபெக்கில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என வானிலை அவதானிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 20 சென்றிமீட்டர்கள் அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கியூபெக் நகர வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு ஒன்றோரோரியோவின் அனைத்து பகுதிகளிலும் உணரக் கூடும் என்பதால் ஒன்றோரியோவைச் சேர்ந்தவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிறு இரவு கிழக்கு , தெற்கு , மற்றும் மத்திய ஒன்ரோறியோ பகுதிகளில் துவங்கும் இந்த பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை நீடிக்கக் கூடும். ஒட்டவா, கிங்க்ஸ்டன், பீட்டர்போரோ, ரொறொன்ரோ, ஹமில்டன் பகுதிகளில் பல வா…

  11. ஜெனிவாவில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நின்ற வேளையில் மகிந்த ராசபக்சவினதும் இலங்கை அரசாங்கத்தினதும் மானத்தையம் மரியாதையையும் காக்க துணிந்து நின்று செயற்பட்ட முஸ்லிம்களுக்கு கைமாறாக தம்புள்ள நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் பேரினவாதிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் உடனடியாக விழித்தெழுமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தம்புள்ள நகரில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம்களின் ஜும் ஆ பள்ளிவாசலை உடைப்பதற்கு கடந்த சில தினங்களாக முயற்சித்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச்சேர்ந்த சிலர் இன்று வெள்ளிக்கிழமை அங்கு ஒன்று கூடி பள்ளிவாயலை உடைத்…

    • 2 replies
    • 1.1k views
  12. கடந்த வன்னி யுத்தத்தின் பின் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாத்து வழி பாதையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சோதனைச்சாவடியினால் பொது மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியூடாக விடத்தல் தீவு,சன்னார்,ஈச்சலவக்கை,பெரிய மடு,கோவில் குளம் ஆகிய கிராமங்களுக்கும் சங்குப்பிட்டி வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறுகின்றமை வழமை. இந்த நிலையில் குறித்த நாயாத்து வழி பாதையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடியினால் பயணிகள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். ஈதே சமயம் குறித்த சோதனைச்சாவடிக்கு முன்ப…

    • 0 replies
    • 621 views
  13. Kumar Gunaratnam alias ‘Gemunu’ led JVP in guerilla war against Indian Army in 1989 Premakumaran Gunaratnam-pic courtesy: SBS.com.au by D.B.S. Jeyaraj The enforced “disappearance” and dramatic “re-appearance” of Premakumar Gunaratnam alias Kumar/Kumara Mahathaya a.k.a. Noel Mudalige has evoked much interest into the revolutionary antecedents of this colourful personality who was at one time a key leader of the Janatha Vimukthi Peramuna (JVP) or People’s Liberation Front. Even though Gunaratnam alias Mudalige has now broken away from the JVP and together with comrades of a similar mindset, formed a new political party known as the Frontline Soc…

    • 1 reply
    • 3.4k views
  14. 22 april 2012 அவுஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை Geelong தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப் பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார். நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்க…

  15. தமிழர் பகுதியில் 45 ஆயிரம் போர் விதவைகளைப் பார்த்து கண்ணீர் விட்டோம் என்று இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பிய இந்திய மார்க்சிஸ்ட் எம்.பி. டிகே ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு இன்று (22) அவர் அளித்த பேட்டியில், கடந்த 16ம் திகதி முதல் 21ம் திகதி மதியம் வரை இலங்கையில் இந்திய எம்.பி.க்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும் குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்…

  16. தமிழினத்தின் இனப்படுகொலையை பார்த்தும் அமைதி காக்கும் பிரித்தானிய அரசிடம் அமைதி காப்பதற்கான காரணம் என்ன என்று கேள்விகேட்டு ஒன்றுகூடல் பிரித்தானிய தூதகரத்திற்கு அருகாமையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்படுகிறது. ... 1833 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கை 3 ராஜ்யங்கள் கொண்ட நாடாக எல்லா இன மக்களும் சுதந்திரமாக வாழும் நாடாக இருந்தது. ஆங்கிலேய காலனித்துவதிற்கு முன் சுதந்திர இனங்கள் ஆக வாழ்ந்த நாட்டை ஒரே ராஜ்ஜியதிற்குள் கொண்டு வந்து, அதன்பின் டோநோமூர் யாப்பில் தமிழ் மக்களை தேசிய இனமற்றவர்களாக்கி சோல்பரி யாப்பின் மூலம் சிங்கள அரசிடம் தமிழர்களின் உரிமைகளை கையளித்து விட்டு சென்று விட்டனர். தமிழர்களை இரண்டா…

  17. திருகோணமலை குச்சவெளிக் கிராமத்தினைச் சேர்ந்த பதினொரு பேர் கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் திருகோணமலையில் உள்ள இராணுவத்தினர், கடற்படையினர் பொலிஸாரின் துணையுடன் குச்சவெளிக் கிராமத்திற்கு நேற்று முற்பகல் 9மணியளவில் சென்று அதே கிராமத்தினைச் சேர்ந்த பதினொரு இளைஞர்களையும் யுவதிகளையும் அழைத்துத் தனித்தனியாக தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யதாகத் தெரிவித்தே இவர்கள் மீது விசாரணை நடத்தப்…

    • 0 replies
    • 519 views
  18. போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சுப்பிரமணியம் சுவாமி, சோ, ஹிந்து ராம் போன்றவர்கள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளுக்கும் ஈழப்போராட்டத்துக்கும் எதிர்த்திசையில் நின்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் முன்னணிப்போராளியாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களாற் கொண்டாடப்படுகிறார். நெடுமாறன், சீமான், திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி போன்ற நீண்டநாள் ஈழப் போராட்ட ஆதரவாளர்களையெல்லாம் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார் ஜெயலலிதா. ஈழப் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் மட்டுமல்ல, தமி…

  19. வவுனியா உக்கிளாம் குளம் பகுதியில் அரசசார்பற்ற நிறுவன அதிகாரியொருவரின் ஜீப் வாகனம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் எவ்.எஸ்.டி. எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரியான பி.ரொஷான் கிருஷ்டி என்பவரின் வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் வருமாறு கூறியதாகவும் தான் வீட்டிலிருந்து வெளியே செல்லாத நிலையில், ஜீப் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தீக்கிரையாக்கியதாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=16645

    • 0 replies
    • 807 views
  20. சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது. 1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர். 1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் …

    • 3 replies
    • 841 views
  21. விடுதலை வேண்டி 7ம் உண்ணாநிலை மேற்கொள்ளும் செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளுக்கு ஆதரவாக 55 வயது முகாம் தலைவர் 90 அடி உயரமுள்ள மரத்தின் மீதேறி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தெரியவருவதாவது: இன்றுடன் 7ம் நாளாக உண்ணாநிலையை மேற்கொள்ளும் செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளுக்கு ஆதரவாக 55 வயதுடையவரும், முகாமின் தலைவருமான திரு. விக்கிரமசிங்கம், இதுவரை அரசு தீர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லையென்பதால், பொறுமையிழந்து காலை 10 மணிக்கு தன்னிச்சையாக முகாமினுள் அமைந்துள்ள 100 அடி உயரமுள்ள மரத்தில், 90 அடி வரை ஏறிக் கொண்டு, முகாம்வாசிகளின் விடுதலைக்கு அரசு தீர்வு எட்டப்படவில்லையெனில், தான் மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து போராட்டம் ந…

  22. யாழ். இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி வேதநாயகி பேரின்பநாதன் திடீரென யாழ். கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் இந்த இடமாற்ற உத்தரவை வழங்கியுள்ளார். எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இரு மாதங்களுக்கு முன்னர் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் கல்லூரி அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்து மகளிர் கல்லூரி வாளகத்தில் அமைந்திருந்த நல்லூர் கோட்டக் கல்வி அலுவலகத்தை அகற்றுமாறு கோரியே மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்று ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விசா…

    • 2 replies
    • 644 views
  23. அன்பான மக்களே, நம் இனம் இனி இன்னொரு மே 18 ஆம் நாளை சந்திக்கக் கூடாது. சந்திக்கும் நிலையிலும் நாம் இல்லை. ஆனாலும் துயர் படிந்த, இரத்தம் படிந்த அந்நாளின் கோர முகத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக் கூருவதோடு, இவ்வுலகிற்கு எடுத்து உரைப்பது கடமையும் நம் முன் இருக்கிறது என்பதை என்றும் மறந்துவிடக் கூடாது. எமது போராட்டம் மக்கள் போராட்டம். மக்களின் வழிக்காட்டலும் ஆதரவும் எம்முடன் ஒருங்கிணைந்து வரும் வரை எந்தவொரு சக்தியும் எம்மை வெல்ல முடியாது. ஆகவே, வாருங்கள் உறவுகளே! இவ்வருடம் ஒன்றுக்கூடி நம் சோகத்தைப் பகிர்வோம்! நம் துயரத்தை இவ்வுலகிற்கு தெரியப்படுத்துவோம். குரல் வடிவம் : அந்தணன்

    • 0 replies
    • 467 views
  24. சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வீட்டின் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது .சாவகச்சேரி நகர சபைத் தலைவரான இ.தேவசகாயம்பிள்ளை வீட்டின் மீது நேற்று நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் வந்த குழுவென்று வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியன சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நான்கு மோட்டார் சைக்கிளில் பெற்றோல் மற்றும் கற்கள், பொல்லுகளுடன் வருகைதந்த குழு ஒன்று நகரசபைத் தலைவரது வீட்டின் வெளிக்கதவால் உள் நுழைந்து வீட்டிக் கண்ணாடிகளை அடித்து நொரு…

    • 0 replies
    • 370 views
  25. வடக்கில் இருந்து சிறிலங்காப் படைகளை வெளியேற்றக் கோருவது நியாயமற்றது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியக் குழுவினரிடம் கூறியுள்ளார். சிறிலங்காவில் தமிழர்களின் நிலை குறித்து ஆராய வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்றுக்காலை சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசியது. இதன்போது வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் எடுத்துக் கூறினர். அதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார். "நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம். வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாக இருக்கப் போவதில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.