Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த, 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தனி ஈழம்' என்பது, தன் நிறைவேறாத ஆசை என்றும், "தனி ஈழம்' வழங்க, தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறி, தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இலங்கையில், தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து, தனி நாடு உருவாக்குவதே தனி ஈழம். கடந்த, 1986ல், மதுரையில் நடந்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ) மாநாடு, கருணாநிதி, வீரமணி, நெடுமாறன் தலைமையில் நடந்தது. இம்மாநாடு, இலங்கை இனப் பிரச்னையை மையமாக வைத்து போராடிய அமைப்புகளான, விடுதலைப் புலிகள் இயக்கம், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட…

  2. வீட்டில் தனியாக இருந்த 12 வயதுச் சிறுமியை 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் பிலியல்துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று சாவகச்சேரி கெருடாவில்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. தந்தை இல்லாத காரணத்தினால் மேற்டி சிறுமியும் தாயும் தனியாக ஒரு வீட்டில்வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ தினம் வெளி வேலை ஒன்றினை முடிப்பதற்காக மேற்படிச் சிறுமியை வீட்டில்விட்டு விட்டு தாய் வெளியில் சென்றுள்ளார். இச் சமயம் பார்த்து அங்கு வந்த அவ்விடத்தினைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர்மேற்படிச் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு சிறுமியை அழைத்து தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டுள்ளார்.அச் சிறுமியும் பல தடவைகள் தண…

    • 2 replies
    • 650 views
  3. இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை எமது நோக்கம் நிறைவேறாது - சுஷ்மா சுவராஜ் 7:46 PM Share உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை தமது இலங்கை விஜயத்தின் நோக்கம் நிறைவேறாது என இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 427 views
  4. இந்தியக்குழு கிழக்கு மக்களை சந்திக்காதமை கவலைக்குரியது : பொன். செல்வராசா _ இந்தியாவில் இருந்து வருகைதந்த இந்திய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிற்கு வந்து பாதிக்கப்பட்ட எந்தப் பொதுமக்களையும் சந்திக்காது இரண்டு வைபவங்களில் மட்டும் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றமை கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். இந்திய குழுவினர் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது 'வடக்கு , கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களையும் மீளக்குடியேற்றப்படாதவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகின்றோம்" என அறிவித்து இங்கு வந்தனர். ஆனால் கிழக்கிற்கு விஜயம…

    • 0 replies
    • 346 views
  5. பங்காளிக் கட்சியின் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்கிறார். வராவிட்டால் தீர்வு இல்லை என்கிற விடயத்தையும் அழுத்தமாகக் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை வந்தாலும் அரசின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணனும் அரசின் சார்பில் பேசுகின்றார். அதேவேளை, அதிகார பகிர்வின் நீட்சி, மலையக…

    • 2 replies
    • 404 views
  6. தமிழினத்தின் இனப்படுகொலையை பார்த்தும் அமைதி காக்கும் பிரித்தானிய அரசிடம் ,அமைதி காப்பதற்கான காரணம் என்ன என்று கேள்விகேட்டு ஒன்றுகூடல் பிரித்தானிய தூதகரத்திற்கு அருகாமையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்படுகிறது. 1833 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கை 3 ராஜ்யங்கள் கொண்ட நாடாக எல்லா இன மக்களும் சுதந்திரமாக வாழும் நாடாக இருந்தது. ஆங்கிலேய காலனித்துவதிற்கு முன் சுதந்திர இனங்கள் ஆக வாழ்ந்த நாட்டை ஒரே ராஜ்ஜியதிற்குள் கொண்டு வந்து, அதன்பின் டோநோமூர் யாப்பில் தமிழ் மக்களை தேசிய இனமற்றவர்களாக்கி சோல்பரி யாப்பின் மூலம் சிங்கள அரசிடம் தமிழர்களின் உரிமைகளை கையளித்து விட்டு சென்று விட்டனர். தமிழர்களை இரண்டாம் பிரஜைக…

    • 0 replies
    • 395 views
  7. சிறிலங்காவிற்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயண முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என டில்லி பல்கலைக்கழக அரசியல் பிரிவு தெற்காசிய விவகாரங்களுக்கான பேராசிரியர் சகாதேவன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும் அவர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் எதைச் சொன்னார்களோ அதனையே திரும்ப திரும்ப சொல்கின்றார்கள் ஆனால் எதுவுமே நடந்தபாடில்லை. சிறிலங்கா சென்ற இந்தியக்குழுவினரும் சிறிலங்கா எதைக்கூறினார்களோ அதனையே செய்யுங்கள் எனக்கூறி வந்துள்ளார்கள். அதாவது நல்லிணக்கம், ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு,பதின் மூன்றாவது சீர்திருத்தம் என கூறியுள்ளனர். …

    • 0 replies
    • 559 views
  8. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், இந்தியக்குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் நழுவியுள்ளனர். இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமாலை சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அச்சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனர்வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதேபோல போரின்போது நடந்த மனிதஉரிமை மீறல்களும் முக்கிய பிரச்சினை. இதுகுறித்து, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்று செய்தி…

    • 0 replies
    • 463 views
  9. அரசியல் காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எதிர்வரும் மே மாதம் விடுதலை செய்யப்படடலாம் என அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிக்கும் டிரான் அலஸூக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் பலனாக பொன்சேக்கா விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தொடர்ந்தும் அமுலில் உள்ள போதும், அவர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட…

    • 4 replies
    • 1k views
  10. கொழும்பு மாநகர சபையினட எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொரகொட அந்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி தனது ராஜினாமா கடிதத்தை கொழும்பு மாநகர சபையில் கையளிக்க உள்ளதாகவும் தெரிவருகிறது. உலக வங்கியில் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதை அடுத்தே மிலிந்த மொரகொட இந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொரகொட பதவியை ராஜினாமா செய்ய உள்ளதை அடுத்து, அந்த பதவியில், அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்ருப் நியமிக்கப்பட உள்ளார். http://www.globaltam...IN/article.aspx

  11. பாதுகாப்பு தரப்பினர் கொழும்பு பொரல்லை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் ஒன்றில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 33 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5.30 முதல், காலை8 மணி வரை இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என 33 பேர் இதன் போது கைதுசெய்யப்பட்டனர். காவற்துறையினரும்,அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தேடுதல் வேட்;டையை நடத்தியதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை தெமட்டக்கொட பகுதியில் பதற்ற நிலைமை தெமட்டகொட பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்…

  12. தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக் குறித்து சிறிலங்காவுக்கு சென்றுள்ள இந்தியத்தூதுக்குழுவின் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கருத்துக்கூற மறுத்துள்ளார். சிறிலங்காவுக்கான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் பயண இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் சிறிலங்காவில் உல்லாசப்பயணமாக இந்தியத்தூதுக்குழுவின் பயணம் அமைகின்றதென் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இது ஓர் உல்லாச பயணம் அல்லவென நான் ஜெயலலிதாவுக்கு கூறியுள்ளேன். தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 11.30 மண…

    • 1 reply
    • 879 views
  13. தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர். பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது. தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாச…

    • 33 replies
    • 3.4k views
  14. இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அதிகரித்திருந்த போது ஜெயவர்த்தன அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற பெயரிலான அமைச்சு ஒன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்டது. லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியும், ஐ.தே.க.வில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தவருமான லலித் அத்துலத்முதலி முதலாவது தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அதுவரைகாலமும் ஒரு அமைச்சராகவும் புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்த லலித் அத்துலத் முதலியை அரசியலின் உச்சத்துக்கு உயர்த்தியது இந்த நியமனம்தான். அதே…

  15. இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி இவ்வாரம் விடுத்திருக்கும் கோரிக்கை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் சிலுசிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை நிலைவரங்களை நேரில் பார்வையிடுவதற்காக இந்தியப் பாராளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழுவொன்று இங்கு வந்திருக்கும் வேளையில் இத்தகைய கோரிக்கையை கலைஞர் முன்வைத்திருக்கிறார். தனது வாழ்வில் நிறைவேறாமல் இதுவரையில் இருக்கக்கூடிய ஒரு ஆசையென்றால் அத…

  16. இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் வீணாகி விட்டதாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் மாலை நாளிதழான மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது. இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்யவே இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. இந்திய எம்.பி.க்கள் குழு தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு எதையும் செய்து விடக்கூடாது என்பதில் சிங்கள ராணுவம் தீவிரமாக இருந்தது. தமிழர்கள் மறு குடியேற்றம் செய்த பகுதிகள் மற்றும் தமிழர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்திய எம்.பி…

  17. தமிழர் குரலை ஐ.நா.அங்கீகரித்த இத்தருணத்தில் புத்திசாலித்தனமாக அரசின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்: இரா.சம்பந்தன் 'இலங்கை தமிழ் பேசும் மக்களின் குரலை ஐ.நா முதல் தடவையாக அங்கீகரித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கின்றது. இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அரசாங்கத்தின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்' என்று த.தே.கூ.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் இனி எவ்வித சாக்கும் போக்கும் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. தமிழ்ப்பேசும் மக்களுக்கென ஒரு அரசி…

  18. இந்தியாவில் தனித் தமிழ்நாடு கேளுங்கள் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இந்திய மத்திய அரசு இலங்கையில் இருக்கும் அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் தம்பி கோத்தபாய, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறார். தமிழ் ஈழம் கேட்கும் போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது எனும் கருத்து உடையவன் நான். திமுகவினுடைய கருத்தும் இதுதான். நாங்கள் பயங்கரவாதத்துக்குத் தயாராக இல்லை. தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்…

  19. இந்தியக் குழுவினரை நாம் அணுகிய முறை சரியானதா? இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு வந்திருந்தல்லவா?இலங்கை வந்த அந்தக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி உட்பட தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்னர் இந்திய நாடாளுமன்றக் குழு அவசரமாக இலங்கைக்கு விஜயம் செய்தது எதற்காக? அதன் நோக்கம் யாது? அதிமுக,திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் குழுவில் இருந்து விலகியமை , அதற்காக அவர்கள் முன்வைத்த காரணங்கள் தொடர்பில் நாம் சிந்தித்து இருக்க வேண்டும். அந்தச் சிந்தனை ஆரோக்கியமானதாக இருந்திருக்குமாயின் இரண்டு தீர்மானங்களுக்கு நாம் வந்திருக்க முடியும். அதில் ஒன்று: …

  20. அமைச்சர் பதவி வழக்குமாறு சனத் ஜயசூரிய உட்பட நான்கு எம்.பிகள் கோரிக்கை தமக்கு அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சனத் ஜயசூரிய உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கோரியுள்ளனர். மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் வசந்த பெரேரா ஆகியோர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அமைச்சர் பதவிக்காக தாம் நீண்டகாலமாக காத்திருப்பதாகவும் தமது செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் பெற்ற வாக…

    • 0 replies
    • 474 views
  21. யாழ் குடாநாடு உட்பட தமிழர் தாயகப் பிரதேசங்களில் படையினரும் பொது மக்களும் ஒன்றாக கலந்துள்ளனரென்றும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்றும் சர்வதேசத்திற்கு காட்டுவதன் மூலம் தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தக்கவைப்பதற்கு சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் மூலமாக தமிழ் மக்களிடையே இராணுவம் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது என தீவகத்தின் சங்கதி செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதன் ஒரு கட்டமாக அண்மைக்காலத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒவ்வொரு பண்டிகைகளின் போதும் படையினர் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர். இதன்போது விதிமுறைகள் பின்பற்றப்படாமையால் விளையாட்டு அணிகளுக்கு இடையிலும் ஆதரவாளர்களுக்கிடையிலும் அடிக்கடி முரண்பாடுகள…

  22. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத காரணத்தால் (சிறீலங்கா)அரசியல் தீர்வுப் பேச்சு தாமதமடைவதாக அரச தரப்புப் பிரதிநிதிகள் கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். இந் நிலையில் “தெரிவுக்குழுவுக்கு வரமாட்டோமென நாங்கள் அடம்பிடிக்கவில்லை. பேச்சுக்களை ஆரம்பிக்க முன்னர் அரசும், நாங்களும் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி செயற்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கை” எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தீர்வுப்பேச்சில் உண்மையான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான ஆக்கபூர்வ அக்கறை இலங்கை அரசிடம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேல…

  23. 'சுற்றுலா' முடித்து திரும்பினர் எம்பிக்கள் - இன்று மாலை சென்னையில் விளக்கம்! இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு இன்று காலை சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் 4 பேரும் இன்று மதியம் சென்னை திரும்புகிறார்கள். மாலை 4 மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தங்கள் இலங்கைப் பயண அனுபவங்கள், அங்கு பார்த்தவற்றை கூற உள்ளனர். போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்க…

  24. செங்கல்பட்டில் ஈழத் தமிழர்களின் அகதி முகாம் உள்ளது. இந்த முகாமில் பல ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.மூன்று மாதங்களில் விடுதலை அடையவேண்டிய இவர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் வெளியே வர அரசு சம்மதிக்க வில்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் , வெளியுலக தொடர்பும் இல்லாமல் வாழும் இவர்களுக்கு விடுதலை வேண்டி பலமுறை உண்ணாநிலை போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால் இவர்கள் போராட்டத்திற்கு இது வரை பலன் கிடைக்க வில்லை. அதனால் விரக்கதியின் விளிம்பிற்கு சென்றுள்ள இவர்கள் இப்போது சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில் குதித்து உள்ளனர். இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இந்த அரசு அவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் மேலும் மூன்று தமிழர்கள் இந்த ப…

    • 0 replies
    • 411 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.