ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றியோர், சித்தியடைந்தோர் வீதத்தை நோக்கும்போது முதல் இடத்தில் மேற்கு மாகாணமும் இரண்டாம் இடத்தில் தெற்கு மாகாணமும் மூன்றாமிடத்தில் வடமேற்கு மாகாணமும் உள்ளன. சப்பிரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழ…
-
- 21 replies
- 2.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் மாற்றம் தென்படுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் தொடர்பில் திறந்த மனப்பாங்கு, ஒத்துப்போகும் தன்மை, நல்லபிப்பிராயம் என்பனவற்றை வெளிப்படுத்துவதாகவும் காலமாகும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புறவுக் கழகத்தின் ஸ்தாபகரான நேஸ்பி பிரபு மைக்கல் மொரிஸ் கூறியுள்ளார்.‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் சில நல்ல வேலைகள் செய்யப்படுவதாக அவர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். அவர், 13 ஆவது திருத்தத்தை தனது இலக்காக வைத்திருப்பதாகவும் எனக்கு மிகத் தெளிவாக கூறினார்’ என நேஸ்பி பிரபு தெரிவித்தார். சகல கட்சிகளும் 13 ஆவது…
-
- 5 replies
- 1.2k views
-
-
அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர். என்னை அவரிடம் அனுப்பிய நண்பர் “அவர் வன்முறை போராட்டங்களுக்கு எதிரானவர், எமது போராட்டம், புலிகள் தொடர்பாக ஏதாவது பேசி போன காரியத்தை கெடுத்து விடாதே” என்று எச்சரித்திருந்தார். நானும் நமக்கு ஏன் வீண் சோலி என்று முன்னெச்சரிக்கையுடனேயே அவருடன் உரையாடினேன். பல்கலைக்கழகத்தில்தான் சந்திப்பு நடந்தது. நான் விடைபெற ஆயத்தமாகும்போது வீட்டுக்கு உணவருந்த வருமாறு வற்புறுத்தி அழைத்தார். சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை சிரித்தபடி தலைவர் பிரபாகரனின் படம் வரவேற்றது. அதிர்ந்து போய் நண்பர் அவர…
-
- 6 replies
- 2.3k views
-
-
இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சியா?: பிரதமர்-பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு புதன்கிழமை, ஏப்ரல் 4, 2012, ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர் டெல்லியில் குவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்ததாகவும், அதன் பிறகு அந்த ராணுவப் பிரிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை இதனை பிரதமர் மன்மோகன் சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனியும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ராணுவ தளபதியின் பதவியை யாரும் கொச்சைப்படுத்த முயலக் கூடாது என்றார். ஆண்டனி கூறுகையில், ராணுவத்தின் இதுபோன்ற நடமாட்டம் ஒன்ற…
-
- 15 replies
- 1.2k views
-
-
“இச்சிலைகள் உடைப்பினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கண்டனங்களையும் கவலைiயும் தெரிவிக்கின்றோம். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபருடன் இன்று காலையில் உடனடியாக தொடர்புகொண்டு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மேலோங்கி மக்கள் மகிழ்ச்சியாக தத்தமது வாழ்க்கையினை அச்சரீதியின்றி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இவ்வாறாக திட்டமிட்ட சில விசமிகளின் செயற்பாடு ஒட்டுமொத்த மக்களினையும் மீண்டும் குழப்ப நினைக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம். இச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய விஷமிகள் எந்த நோக்கத்திற்காக திட்டமிட்டு செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் பொதுமக்கள் பொறுமை காத்து குற்றவாளிகளை கண்ட…
-
- 1 reply
- 854 views
-
-
விடுதலைப்புலி பயங்கரவாதிகள் மேற்கொண்ட செயற்பாடகளை நியாயப்படுத்த சில சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் விடுதலைப் புலிகள் அமைப்பு செய்த குற்றச் செயல்களை மறக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேவின் நினைவு தினத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பெருபாலான மக்கள் கொடூரமான பயங்கரவாத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை மறைக்கது இருப்பதை மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை அப்பாவி பொதும…
-
- 0 replies
- 858 views
-
-
எந்த நாடு தலையிடாது வாழவேண்டுமாயின் நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் எனவும் இதில் மக்களுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் வரலாற்றில், நடைபெற்ற பல சம்பவங்களையும் அச்சுறுத்தல்களையும் இலங்கை எதிர்கொண்டது, நாடு தன்னிறைவு அடைந்திருந்தன் மூலம் பண்டைய காலத்தில் அவற்றை வெற்றிக்கொள்ள முடிந்தது. எனினும் பிளவுப்பட்ட சமூகமாக இலங்கை சமூகம் இருந்த போது, இலங்கை பல்வேறு வகையில் வெளிநாடுகளுக்கு அடிபணிந்திருந்தது. இதனால் அனைத்து குடும்பங்களும், கிராமங்களும், பிரதேசங்களுக்கு, மாகாணங்களும் நாடு என்…
-
- 5 replies
- 478 views
-
-
சன் சீ கப்பல் அகதியை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டது கனடா அரசியல் தஞ்சம் கோரி எம்வி சன் சீ கப்பல் மூலமாக கனடாவிவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் முயற்சிகளில் கனேடிய குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அது முறியடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு குறித்த இலங்கையர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என கனடா அறிவித்துள்ளது. 492 பேருடன் கனடாவை அடைந்த சன் சீ கப்பலில் பயணித்த 35 வயதுடைய சந்தீசன் அழகேந்திரன் என்பவர் கனடாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளதாக கனடா அற…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மார்ச் 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட ‘EXPO 2012′ கண்காட்சி எவ்விதத்தில் பயனற்றுப் போனதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவிக்கின்றது. ஊடகங்களில் பிரமாண்டமாக காண்பிக்கப்பட்ட போதிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டதன் ஊடாக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கோ, ஏற்றுமதிக்கோ எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. இந்தக் காண்காட்சியைப் பார்வையிடுவதற்காக உலகின் பல நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் வருகைதந்ததாக அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக கூவி வந்தன. எனினும், குறித்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள், வழங்கிய இலவச விமானப் பயணச் சீட்டு, இலவச தங்குமிட வசதிகள் ஆகியன …
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க 'உலகத்தை அணிதிரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உ…
-
- 9 replies
- 1.1k views
-
-
17 தொண்டர் நிறுவன ஊழியர் கொலை விசாரணையில் பிரான்ஸின் புதிய முன்னெடுப்புகள் பட்டினிக்கு எதிரான இயக்கம் என அழைக்கப்படும் சர்வதேச உதவி முகவரகத்தின்; பிரெஞ்சுக் கிளையுடன் இணைந்து வேலை செய்த 17 ஊழியர்கள் மூதூரில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதில் புதிய இராஜதந்திர முன்னெடுப்புகளை பிரெஞ்சு தூதரகம் ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கொலைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலைபற்றி பேசுவதற்காக பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்ரைன் றொபிக்கொன், சட்ட மா அதிபரை சந்தித்தாக டெய்லி மிரருக்கு தெரிய வந்துள்ளது. மாவிலாறு துருசுகளை தமிழீழ விடுலை புலிகள் மூடியதை தொடர்ந்து ஆரம்பித்த யுத்தத்தின் ஆரம்பக்கட்டத்தில் இந்…
-
- 0 replies
- 761 views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கும், அரசியற் செயற்பாடுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி பாராட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு, மலேசிய ஆதரவளிக்காது என்ற நிலைப்பாட்டினை, மலேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்த போது, அதறக்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி , தொடர்சியான போராட்டங்களையும் அரசியற் செயற்பாடுகளையும் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர். ஈழத்தமிழினத்தின் மீது இனவழிப்பினை மேற்கொண்ட சிறிலங்காவுக்கு, மலேசியா அரசு ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்துப்பட்டதோடு, 20 லட்சம் மலேசி…
-
- 4 replies
- 631 views
-
-
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்கனவே நாட்டில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளினால் விடுக்கப்படும் கோரிக்கைகைளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் சில அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அரசியல் ரீதியான காரணிகளைத் தவிர்ந்த ஏனையவற்றை அமுல்படுத்துவதில் சிக்கல் கிடையாது என அவர் சுட்டி;காட்டியுள்ளார். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 865 views
-
-
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி மற்றும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேர்டன் பவல் ஆகியயோரின் உருவச் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உருவச் சிலைகள் இரண்டும் இன்று (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை உடைத்து சேதப்படுத்தப்பட்டள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார் மட்டக்களப்பு நகரில் மிகவும் நீண்ட காலமாக இருந்து வந்த இந்த இரண்டு சிலைகளும் இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி மற்றும் பேர்டன் பவல் ஆகியோரின் உருவச் சிலைகள் சுமார் 20 மீற்றர் தூரத்திலேயே அமைய பெற்றுள்ளன. இந்த உருவச் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். படங்களை பார்க்க.. http://akkinikkunchu.com…
-
- 3 replies
- 861 views
-
-
கருநாடகாவில் விரைவில் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ் 2012" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். "பொங்கு தமிழ்" நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறித்தரப்படும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 474 views
-
-
Sri Lankan diplomat may avoid questioning on war crimes claims The Global Tamil Forum pressed for a judicial review after William Hague refused to strip de Silva of his diplomatic immunity. Photograph: Giorgio Cosulich/Getty Images The Foreign Office has been warned it is running out of time to take action against a senior London-based Sri Lankan diplomat who is facing allegations of complicity in crimes against humanity. Last week, the Guardian revealed that an organisation representing the Tamil diaspora was launching legal action against the FCO over its failure to confront Major General Prasanna de Silva - the defence adviser at the Sri Lanka high…
-
- 3 replies
- 972 views
-
-
இந்தியாவுடன் கோபமோ, பகையோ எமக்கு இல்லை - இலங்கை இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், இலங்கை - இந்திய உறவுகளில் விரிசல் இன்றி சுமூக நிலை காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்பதை அவதானித்து அதற்கு ஏற்றாற்போல் பரிமாணமாக நகர விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான உறவு குறித்து பாராளுமன்றில் இன்று (05) எதிர்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், இந்தியாவுடன் இலங்கைக்கு கோபமோ, பகையோ இல்லை என கூறியுள்ளார். மேலும் இலங்கை - இந்திய உறவை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்து கட்சி பாராளுமன்ற உறு…
-
- 5 replies
- 724 views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவர் ரத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலி;த் தலைவர்கள் மீண்டும் இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்களை புலித் தலைவர்கள் சீர்குலைக்கு முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் அவர்களுக்கு…
-
- 8 replies
- 669 views
-
-
அரசாங்கத்தின் பலவீனமான வெளிநாட்டுக் கொள்கையே அமெரிக்காவின் பகையை சம்பாதித்துக் கொள்வதற்கும் இந்தியாவினால் கைவிடப்படுவதற்கும் முக்கியமான காரணமாகும் என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமை விவகாரங்களையும் பாதுகாக்க முடியாது என்பதுடன், ஜெனீவா குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு மூன்று மாத கட்டாய விடுமுறை வழங்கியது ஏன் என்றும் வினவினார். பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஜெனீவா பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனீவா தீர்மானம் நிறைவேற்ற…
-
- 3 replies
- 1.4k views
-
-
2009ம் ஆண்டு மே17ல், தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் இனி சனநாயக வழிமுறைப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆயுதபயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள், மீண்டும் இலங்கையில் களமிறங்கியுள்ளனர் என சிங்கள தேசத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள செய்தி, இந்திய-இலங்கை முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டின் மூன்று முகாம்களில் பயிற்ச்சியளிக்கப்பட்ட 150 வரையிலான போராளிகளை, இந்தியா இலங்கையில் களமிறக்கியுள்ளதாக, சிங்கள தரப்பினால் தீவீரமாக பரப்பபட்ட செய்தியானது, தென்னிலங்கை ஊடகங்களையும் தாண்டி, சர்வதேச ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது. …
-
- 5 replies
- 908 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற- ஜெனிவா தீர்மானம் குறித்த இரண்டு நாள் விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா அதற்கு ஆதரவு வழங்கியதாலும், பாதிப்புக்கள் ஏற்பட்டன. அதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எமக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பதற்காகவும், எமக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காகவும் இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் நாம் பகைமை பாராட்டவில்லை. அவர்களும் எம்…
-
- 2 replies
- 796 views
-
-
http://naathamnews.com/?p=4867 அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், சர்வதேச போர்குற்ற விவகாரங்களுக்கான உயர்நிலை அதிகாரி stephen rapp அவர்களின், சிறிலங்கா தொடர்பிலான அறிக்கை, அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் புதிய அறிக்கையொன்று வெளிவரவுள்ளதென்ற செய்தி , ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில், நேற்று புதன்கிழமை மதியம் செனற்சபைக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை, சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையா…
-
- 9 replies
- 791 views
-
-
சிறிலங்காவில் போர்குற்ற விசாரணையை வலியுறுத்தி புதுடெல்லியில் பேரணி! காவற்துறை இடைமறிப்பு!! டெல்லியைத் மையமாக கொண்டு இயங்கி வரும் Human Rights Defence International எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு அமைப்பு, சிறிலங்காவின் போர்குற்றங்களை விசாரிக்க கோரி போராட்டமொன்றினை இன்று வியாழக்கிழமை இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் நடத்தியுள்ளதாக நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணியாக சென்ற இப் போராட்டத்தில் பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர். எனினும் சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணி சென்ற நிலையில், டெல்லிக் காவல்துறையினரால் பேரணி இடையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், Human Rights Defence International …
-
- 4 replies
- 560 views
-
-
கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு சீனா மிரட்டல் _ சீனாவின் தென்கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சீனாவின் தென்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நடந்த ஆசியான் உச்சி மாநாட்டின் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்தியா, எண்ணெய் ,இயற்கை எரிவாயு விதேஷ் (ஓ.என்.ஜி.சி) நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே நேற்று கம்போடியாவில் ஆசியான் நாடுகளின் அரசியல் விவகாரம் தொடர்பாக நடந்த மாநாடு நிறைவுபெற்றது.இது குறித்து தென்சீனா தேசிய இன்ஸ்டியூட் தலைவர் ஷூசிஹூன் கூறுகையில், இந்தியாவுடன் சீனா எந்த வகையிலும் சர்வதேச கடல் பகுதி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.சர்ச்சைக்குர…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இலங்கை அதிக ஆர்வம் கொண்டுள்ளதென பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜயலத் வீரகொடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அரசியல் ரீதியில் சிறந்த நட்புறவைக் கொண்டு இயங்கி வருவதாகவும் வர்த்தக நடவடிக்கையிலும் இதனை கடைபிடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் ராவல்பண்டியில் புதன்கிழமை (04.04.2012) இடம்பெற்ற பாகிஸ்தான் வர்த்தக சங்கத் தலைவர் ஜவாத் அக்தார் பாத்தியுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய வலயத்தில் உள்ள பெரிய நாடுகளான பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவுகள் வலய மட்டத்தில் நன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஜயலத் வீரகொடி கூறியுள்ளார். இலங்கை பாகிஸ்தானில்…
-
- 1 reply
- 597 views
-